Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. விசேட படப்பிடிப்பு நிகழ்வுடன் விவாகரத்தை கொண்டாடிய யுவதி 2016-06-16 12:21:58 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்களின் போது மணமக்கள் விதவிதமாக படம் பிடித்துக் கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது விவா கரத்தை யொட்டி விசேடமான படப்பிடிப்பு நிகழ்வொன்றை (போட்டோ ஷொட்) நடத்தியுள்ளார். 24 வயதான கெத்தரின் மேய்சன்பர்க் எனும் யுவதியே இந்த விநோத நிகழ்வை நடத்தியுள்ளார். தனது பதின்மர் பருவத்திலிருந்தே இவர் தனது காதலனுடன் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதனை…

  2. ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், கடன் கேட்கும் பெண்களிடம் நிர்வாண போட்டோக்களை கேரண்டியாக கேட்கும் பகீர் தகவல் வெளியே தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் இல்லை. சீனாவில்தான், ஆன்லைன் மூலம் லோன் கொடுக்கும் சில நிறுவனங்கள், பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேரண்டியாக கேட்கிறார்கள். இதுபற்றி ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைனில் லோன் கொடுக்கும் நிறுவனங்கள், பெண்களிடம், அவர்களின் நிர்வாண புகைப்படங்களுடன், அவர்களின் அடையாள அட்டையையும் வாங்கிக் கொள்கிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திர்குள் பணம் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில் அவர்களின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அந்த நிறுவனங்கள் மிரட்டுவதாகவும் கூறியு…

  3. சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…

  4. மோனிக் என்ற கோழி, தனது நண்பருடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக கடல் மூலம் உலகைச் சுற்றி வருகிறது. பிரான்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கியூரக் சவுடீ என்பவர், தனது சிறிய படகில் உலகைச் சுற்றத் திட்டமிட்டார். இதற்காக அவர் துணையாகத் தேர்ந்தெடுத்தது மோனிக் என்ற கோழியை. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த கோழியுடன் உலகை அவர் சுற்றி வருகிறார். உலகின் மிகவும் வெப்பமான கடல்பகுதிகள் முதல், சூரியனே பல மாதங்கள் உதிக்காத கடல் பகுதி வரை பல பகுதிகளைச் சுற்றி வந்துவிட்டனர். பிரான்ஸின் கேனேரி தீவுகளில் தொடங்கிய அவர்களது கடல் பயணம், ஸ்பெயின் கடல்பகுதி கடந்து கரீபியக் கடற்பகுதி வழியாக ஆர்டிக் கடலுக்குள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். மோனிக் உடனான பயணம்…

  5. விசித்திரமான கோழி முட்டை ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில், இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டடையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார். http://www.virakesari.lk/article/7540

  6. உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…

    • 0 replies
    • 340 views
  7. தோல் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை நாக்பூர் வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்று தோல் இல்லாமல் பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. நாக்பூர் லதா மங்கேஷ்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று அதிகாலை 12.30க்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதில், அதிசயம் என்னவென்றால் அந்த குழந்தை வெளிப்புற தோல் இன்றி, கண்கள் சிவந்து காணப்பட்டது. கருவிழியும் இல்லை. இருந்தாலும், அந்த குழந்தை சராசரி குழந்தையை போல், அழுது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பராமரிப்பு கருதி, பிரத்யேக வார்டில் வைக்கப்ப…

  8. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மிக புதுமையான ஓட்டல் ஒன்று நாளை (11-ந்தேதி) திறக்கப்பட உள்ளது. செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில்தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது. உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உடைகள் எதுவும் அணியாமல் நிர்வாணமாக அமர்ந்து பொழுதை கழிக்கலாம். அல்லது பாதி உடை அணிந்து அரை நிர்வாணமாகவும் உணவு அருந்தலாம்.இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்பட…

  9. சென்னை ராயபுரம் பணமரத்துப்பட்டி கிழக்கு மாதா கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. கப்பலில் பணிபுரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நந்தினி.அதே பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் கவாஸ்கர் (29). திருமணம் ஆகாத இவர் புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்ததால் ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.அப்போது அன்புவின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நந்தினி குளிக்கும் காட்சியை கவாஸ்கர் ரகசியமாக தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை நந்தினியிடம் காட்டி செக்ஸ் தொல்லை கொடுத்த…

  10. தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…

  11. பெங்களூரு: திருமணத்திற்கு நாள் குறித்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயம் நர்ஸிங் மாணவி ஒருவர், தனது விருப்பத்தின்படி திருமணம் குறிக்கப்பட்ட அதே நேரத்தில் தனது காதலனை ஆம்புலன்ஸில் படுத்தபடுக்கையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நர்ஸிங் டிப்ளமோ படித்து வந்தவர் நேத்ராவதி. இவர், குருசாமி என்ற இளைஞரை காதலித்து வந்தார். சித்ரதுர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் என்ற மடத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு தாங்களும் திருமணம் செய்ய நேத்ராவதியும், குருசாமியும் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடியான நேத்ராவதியும், …

  12. நியூயார்க், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதனை மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்துள்ளார் அந்த கல் மனது படைத்த தாய். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அலேக்சாண்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி (வயது 22) அவருக்கு கடந்த மாதம் 20-தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23-தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை சமா்தானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மேரி குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தையை தனது நெஞ்ச்சோடு வைத்து இறுக்கி அணைத்துள்ளார். இதனால் குழந்தை இறந்து போனது. மேரியின் செயலை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார்…

  13. கடும் குளிரில் நிர்வாண கோலத்தில் 6,000 பேர் சமாதானத்தை வலியுறுத்தி ஒன்றுகூடல் கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பொகோட்டாவில் கடந்த 6 வருடங்களில் இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது. …

  14. இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. www.hirunews.lk/.

  15. ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழி­வறைக் கட­தாசி­கள்; அமெ­ரிக்காவில் அதிகம் விற்­ப­­னை 2016-06-08 10:01:53 அமெ­ரிக்க குடி­ய­ர­சுக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழி­வறைக் கடதாசி கள் அமெ­ரிக்­காவில் அதிகம் விற்­ப­னை­யாகி வரு­கின்­றன. சீனா­வில் ட்ரம்பின் பல்­வேறு உரு­வங்­க­ளுடன், இந்த கட­தா­சிகள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இவை அனைத்தும், அமெ­ரிக்­காவில் உள்ள இணைய வர்த்தக நிறு­வ­னங்கள் வாயி­லாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. ஏரா­ள­மான அமெ­ரிக்க விற்­பனை நிறு­வ­னங்கள், ட்ரம்ப் கழி­வறை கட­தா­சி­களை வாங்க முன்­ப­திவு செய்­துள்­ளன. அமெ­ரிக்­காவில் 50 நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து முன்­ப­த…

    • 2 replies
    • 258 views
  16. அரசியலுக்கு வருகிறாரா கோத்தா? நான் அரசியலுக்கு வந்தால், இரண்டாவதாக (பிரதமர்) என்ன, முதலாவதாயே (ஜனாதிபதி) வர முடியும் என்றார் கோத்தா. சுதந்திர கட்சியின், கருணா அம்மான் வகித்த, உபதலைவர் பதவிக்கு, நாட்டைக் காத்த, கோத்தா ஏன் வரக் கூடாது என சில சு.க காரர்கள், தேரை இழுத்து தெருவில விட்டதோட வெடி கொளுத்திப் போட்டுள்ளனர். அக மகிழ்ந்து போன கோத்தா, தேசப்பற்று வசனங்களுடன் மேலே சொன்னதையும் உதிர்த்தார். அதே வேளை, இவர் எல்லாம், சு.கட்சிக்குள் வந்தால், தாம் வெளியேறுவேன் என்று சொன்னார் சந்திரிக்கா. தம்பியின் பதவி ஆசை பற்றி, அண்ணர் மகிந்த இன்னும் ஒண்டும் சொல்லேல்லை. முலம்: டெயிலி மிரர் (மோபைலில, லிங் பிடிச்சப் போடேலாம இருக்குது, கண்டியளோ)

  17. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் ஒரு விதமான பாலியல் பேய் செய்தி பரவி வருகிறது. அதாவது பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போன பெண்கள் பேயாக வந்து தங்கள் ஆசையை நிறைவேற்ற அந்த பகுதிகளில் சுற்றுவதாக கூறப்படுகிறது. பாலியல் ஆசைகள் நிறைவேறாமல் இறந்து போகும் பெண்கள், பேயாக வந்து இரவு நேரத்தில் ஆண்களிடம் ரா ரா என அழைக்கின்றனவாம். ரா ரா என்றால் தமிழில் வா என்று அர்த்தம். இந்த பேய்கள் அழகாக இருப்பதாக இதனை நேரில் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். பேய் என்று தெரியாமல் கூப்பிட்ட உடன் போனால் அந்த பேய் கொன்றுவிடுமாம். அதனால் ரேப்பு ஒஸ்தா அதாவது நாளைக்கு வா என கூறினால் அந்த பாலியல் ஆசை நிறைவேறாத பெண் பேய்கள் சென்று விடுமாம். இந்த செய்தி ஆந்திரா மற்றும்…

  18. பிள்ளையார் உருவத்தில் பலா June 6, 2016 கொட்டகலை பகுதியில் உள்ள, பி.ஜெகநாதன் என்பவரின் வீட்டில் உள்ள பலாமரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இந்த செய்தி அப் பிரதேசத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்து வருவதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=2167&mode=head

  19. கொய்யாப்பழத்தை வீசிவிட்டு, நகைக் கடை கல்லாவில் இருந்து ரூ.10,000 பணத்தை திருடிய திருட்டு குரங்கு! ஆந்திராவில் நகைக்கடை ஒன்றிற்குள் நுழைந்த குரங்கு ஒன்று, கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்தது. குரங்கு பழங்களைத் தானே திருடிச் செல்லும் என நினைத்து கடை ஊழியர்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அப்போது கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கொய்யாப்பழத்தை நகைக்கடைக்குள் வீசிய குரங்கு, சுமார் 20 நிமிடங்கள் வரை கடையில் உள்ள கவுண்ட்டர்கள் மீது தாவி குதித்து, சேஷ்டைகளை செய்தது. பின்னர் இறுதியாக பில் போடும் இடத்திற்க…

    • 11 replies
    • 658 views
  20. ஜிம்பாவே நாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் யானை ஒன்று மருத்துவ உதவிக்காக மனிதர்கள் இருக்கும் விடுதிக்கு சென்றுள்ளது. ஜிம்பாவே நாட்டின் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் அமைந்துள்ள மஷோனாலேண்ட் சுற்றுலா பகுதியில் ஏராளமான ஓய்வு விடுதிகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று துப்பாகி குண்டு அடிப்பட்டு மலை மீதுள்ள ஓய்வு விடுதி ஒன்றுக்கு சென்று மருத்துவ உதவிக்காக கதவை தட்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் என ஒய்வு விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது யானை பரிதாபமான நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. உடனே அந்த ஊழியர்கள் கால்நடை மருத்துவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஒய்வு விடுதியில் இருந்து 200 மைல் தொலைவில…

    • 2 replies
    • 524 views
  21. 35 குழந்தைகளை பெற்றெடுத்த தந்தைக்கு 100-ஐ எட்டுவது தான் லட்சியமாம்: பாகிஸ்தானியரின் வினோத ஆசை குழந்தைகளுடன் சர்தார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 100 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் லட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே 35 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள அவர், லட்சியத்தை அடைய 4-வது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கில்ஜி (46). மருத்துவ துறையில் பணியாற்றி வரும் சர்தாருக்கு ஏற்கெனவே 3 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் மூத்த குழந்தைக்கு 15 வயதும், கடைக்குட்டிக்கு 2 வாரங்களும் வயது ஆகிறது. இந்நிலையில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது…

    • 6 replies
    • 414 views
  22. இறுதிப்போரில் 220,000 மக்களுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்(படங்கள்) வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை பரம்பல் விகிதம் கடந்த 1981ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றத்தினை 2012ஆம் ஆண்டு நிலை காட்டுகின்றது. 2007ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 220,117ஆக இருந்த மக்கள் தொகை 2012ஆம் ஆண்டில் 81,263ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் 195,386 ஆக இருந்த மக்கள் தொகை 111,210ஆக குறைந்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணிப்பீடுகளுக்கும் 2012இல…

    • 2 replies
    • 1.1k views
  23. கர்பப்பை பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம்தவறுதலாக சிறுநீர் பையை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவரின் மனைவி சித்ரா(45). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கு கடந்த சில வருடமாக வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து திருப்போரூரை அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார் சித்ரா. அப்போது அவரது கர்பப்பையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். …

  24. ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல் அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது. 1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.