செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
பார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகாசிக்கும் தையல்காரர் தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார். நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார். http://www.virakesari.lk/article/898
-
- 6 replies
- 690 views
-
-
உலகில் முதல் முறையாக செயற்கை கறுவூட்டல் மூலம் நாய் ஒன்று 7 குட்டிகளை பிரசவித்து, அதிசயத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பல ஆண்டு முயற்சியின் பின்னரே இந்த செயற்கை கறுவூட்டல் வெற்றியளித்துள்ளதாக குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றின் மூலம் இவ்வாறு செயற்கை கறுவூட்டலில், கடந்த ஜுலை மாதம் பிறந்த இந்த நாய் குட்டிகள், உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=146653&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 333 views
-
-
பூமியின் சுற்று பாதையில் மாற்றம் வரும்! 2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை! கண் தெரியாத பல்கேரிய நாஸ்டர்டாம் கணிப்பு [ புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015, 12:03.46 PM GMT ] பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த ந…
-
- 2 replies
- 553 views
-
-
23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் சேமிக்கப்பட்ட தந்தையின் விந்தணுக்களைப் பயன்படுத்தி பிறந்த குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் பேணப்பட்ட தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையான அதிசய சம்பவம் அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழந்தையானது உலகின் மிகவும் பழைமையான குழந்தையாக விளங்குகிறது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்படி நபருக்கு அவரது 15 ஆவ…
-
- 0 replies
- 315 views
-
-
கணவனின் தேனிலவு : சிவபூசைக்குள் புகுந்த முதல் மனைவி இளம் பெண்ணை ஏமாற்றி திருமணமுடித்து தேனிலவில் இருந்த போது மனைவியால் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பிடிபட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் திருமணம் செய்யவில்லை என்று தெரிவித்து 24வயதான பெண் ஒருவரை திருமணம் முடித்து தேன்நிலவில் இருக்கும் போது அவரது முதல் மனைவியால் பிடிக்கப்பட்டார். வேறு ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய 24 வயது பெண்ணை ஏமாற்றி, தனியார் நிறுவன அதிகாரி திருமணம் செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். …
-
- 1 reply
- 443 views
-
-
காம்புடன் முட்டை.. அவிசாவளைப் பகுதியில் பீ.அனுலா நில்மினி என்பவர் நடத்திவரும் கோழிப் பண்ணையிலுள்ள கோழியொன்று காம்புடன் முட்டை இட்டுள்ளது. 500ற்கும் மேற்பட்ட கோழிகளை உடைய குறித்த பண்ணையில் கடந்த வாரம் முட்டைகளை சேகரிக்கும் போதே இந்த முட்டை காணப்பட்டுள்ளது. சுமார் 7 சென்ரிமீற்றர் அளவு நீளமான இந்த காம்புப் பகுதி முட்டையுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த முட்டையை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர், இதை அயலவர்களுக்கும் காண்பித்து வருகின்றார். - See more at: http://www.tamilmirror.lk/159499/%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.3yMXcPyy.dpuf
-
- 3 replies
- 671 views
-
-
இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி இலங்கையில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து சம்பவமொன்று நடந்து இன்றுடன் சரியாக 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேஷியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் சகிதம் மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் பிளைட் 138 பயணிகள் “சப்த கன்னிய” என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதிச் சிதறியது. இச்சம்பவத்தில் விமானிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் பலியாகினர். இலங்கையில் அதுவரையிலான மிக மோச…
-
- 1 reply
- 1.2k views
-
-
முதலிரவில் எப்படி செயற்பட வேண்டும்– மனைவி உபதேசித்ததால் ஆத்திரமடைந்த கணவர் விவாகரத்து செய்தார் குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம். அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இயன் ஆப்ரஹாம்ஸ் எனும் இந்த ஊடகவியலாளர் 24 வருடங்களாக விளையாட்டுத்துறை நிருபராக விளங்குபவர். பிரேஸிலின் டோக் ஸ்பேர்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர், நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி …
-
- 1 reply
- 561 views
-
-
வெள்ளத்தில் இருந்து தன்னுயிர் காக்க சென்னை மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கோயில் பாம்பொன்று கோயிலின் வளாகத்தில் இருந்த பெருமாள் சாமி சிலையின் மேல் ஏறி தன்னுயிரை காத்துக்கொண்ட பட இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, மகாபலிபுரம் பகுதியில் பெருமாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய பெருமாள் சாமி சிலையின் கழுத்தளவுக்கு நீர் நிறைந்துள்ளது. இதனால் அந்தக் கோயில் பாம்பு வெள்ளத்தில் இருந்து தன்னுயிரை காக்க சாமி சிலையின் தலைப்பகுதிக்கு ஏறி அமர்ந்திருப்பதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப் பிரதேசத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரால் எடுக்க…
-
- 1 reply
- 455 views
-
-
A 56-year-old Toronto photographer is being accused of using his job to prey on teenage girls during shoots. Toronto police say the man owned a business called Y2K Studios, which was located in a plaza in Scarborough in the 2000s. It also went by the name of Siva’s Studio. During that time, police allege the accused sexually assaulted teenaged girls who paid for his services as a photographer. PHOTOS Sinnarajah Sivasubramaniam, 56, of Toronto, pictured in a Toronto police handout photo. …
-
- 1 reply
- 1.3k views
-
-
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. சில பெண்கள் சில செண்ட்விச்சுகளுக்காகவும் சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக எதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பே…
-
- 1 reply
- 429 views
-
-
இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர் (வீடியோ) தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து கொண்டார். போட்டியின் போது, எதிர்பாராத விதமாக அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து அவசரமாக மீண்டெழுந்தார். அப்போது கூட்டத்தில் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால், மீண்டும் குதிரை மீதேறிய ஹரி திரும்பவும் கீழே விழுந்ததும், கூட்டத்தில் சிரிப்பு சத்தம் சற்று பலமாகவே கேட்டது. இந்நிலையில், இளவரசர் குதிரையிலிருந்து கீழே விழுந்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருக…
-
- 0 replies
- 434 views
-
-
பெண் எம்.பி. கணவருடன் காரில் சில்மிசம் : வெடித்தது குண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது. அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்…
-
- 0 replies
- 635 views
-
-
உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஆடை பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம் எடையுடையது. இந்த ஆடையானது முழுமையாக உண்ணப்படக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது, உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஸ்வெட்டர் ஆடை இதுவென வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆடையை தயாரிப்பதற்கு 50 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக ஜூலியட் சியர் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 834 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்டர் போட்டு ஒட்டிய பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளோரிடா மாகாணம் கனெடிக்ட் பகுதியை சேர்ந்தவர், கேத்தி பிரவுன். இவர் 3 நாட்களுக்கு முன், தனது வளர்ப்பு நாயின் வாயில் பிளாஸ்திரி போட்டு ஓட்டி, ஒரு படத்தை எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் கீழே' நீ அமைதியாக இல்லையென்றால் இப்படிதான் நடக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் 3 லட்சத்து 61 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த மிருகவதை தடுப்பு அமைப்பினர் கொதித்தெழுந்தனர். அவர்கள் கேத்திக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். மேலும் டாரிங்டன் மிருக வதை தடுப்பு அமைப்புக்கும் இமெயி…
-
- 0 replies
- 395 views
-
-
சிட்னி வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர். வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர…
-
- 0 replies
- 285 views
-
-
குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவீடன் மன்னர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்து சுவீடன் மன்னரான கார்ல் 16 ஆம் கஸ்டப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சுவீடன் பத்திரிகையான சவென்ஸ்கா டக்பிளேடட் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் 69 வயதான மன்னர் கஸ்டப், குளியலின் போது பெருமளவு நீரும் சக்தியும் விரயமாவது தனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அனைத்த…
-
- 2 replies
- 428 views
-
-
(படம் முகநூலில் இருந்து பெறப்பட்டது. செய்தியின் உண்மைத் தன்மைக்கு உறுதியான ஆதாரம் கிட்டவில்லை. கிட்டியதும் இணைக்கப்படும்.)
-
- 0 replies
- 445 views
-
-
முட்டைக்குள் மற்றொரு முட்டை பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் முட்டையொன்றை உடைத்தபோது அம்முட்டைக்குள் மற்றொரு சிறிய முட்டையொன்று இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளார். ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமையலுக்காக முட்டையொன்றை உடைத்து சட்டியில் ஊற்றியபோது, மற்றொரு முட்டை உருண்டு ஓடியதாம். இது குறித்து தனது மனைவி ஜேன் தன்னிடம் கூறியபோது அவர் ஜோக்காக அப்படி கூறுகிறார் என தான் எண்ணியதாக கிறிஸ் கீஸ்ட் என்பவர் தெரிவித்துள்ளார். பின்னர் இம்முட்டையை பார்த்தவுடன் தனது தொலைபேசியிலிருந்த கெமரா மூலம் அதை தான் படம்பிடித்துக்கொண்ட…
-
- 0 replies
- 572 views
-
-
திருச்செங்கோடு அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நான்கு மாணவிகள் மது அருந்திவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழகத்தின் குடிப்பவரின் எண்னிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான இளைஞர்களும் மதுப் பழக்கத்திற்கு பழகிவிட்டனர். போதாது என்று, நான்கு வயது சிறுவன் மது அருந்தும் வீடியோ, மற்றும் இளம்பெண்கள் மது அருந்தும் வீடியோக்கள் என்று சமூக வலைத்தளங்கள் களை கட்டிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவி நன்றாக குடித்துவிட்டு, மது போதையில், சாலையில் மயங்கி கிடந்த சம்பவம், எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்தது. …
-
- 0 replies
- 227 views
-
-
உலகின் மிகப் பெரிய பொய்யர் உலகின் மிகப் பெரிய பொய்யராக பிரிட்டனைச் சேர்ந்த மைக் நெய்லர் என்பவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். ஆனால், இதற்காக அவர் கவலையடையவில்லை. மாறாக, அதை பெருமையாகக் கருதுகிறார். காரணம், பொய் கூறுவதற்கான போட்டியொன்றில் முதலிடம் பெற்றதன் மூலமே உலகின் மிகப் பெரிய பொய்யாக மைக் நெய்லர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய பொய்யர் போட்டி (World's Biggest Liar competition ) வருடாந்தம் பிரிட்டனில் நடத்தப்படுகிறது. எழுதி வைத்து வாசிக்காமல் பொய்யான கதையொன்றை நம்பும்படி கூறுவதுதான் போட்டி. இங்கிலாந்தின் மேற்கு கம்பிரியா…
-
- 0 replies
- 394 views
-
-
லண்டனில் இருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் வரையில் பறந்து இலங்கை வந்த குருவி புத்தளம் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட உபாதையினால் இந்தக் குருவி விழுந்து கிடந்ததாக இதனை மீட்ட மீனவர் தெரிவித்துள்ளார். இந்த குருவியின் ஒரு காலில் lesser Erestedtedterh என்று பொறிக்கப்பட்ட அடையாளம் ஒன்றும் இருந்துள்ளது. இந்தத் தகவலுக்கமைய இந்த குருவி, இங்கிலாந்தின் இலண்டன் குருவிகள் சரணாலயத்தில் பரிசோதனைக்காக இருந்தே வந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குருவிக்கு 06 அங்குல வாலும், 10 அங்குல நீளமான சிறகுகளும் உள்ளது என்றும் இந்தக் குருவி 300 கிராம் எடையுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி, லிபியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்த குருவ…
-
- 3 replies
- 482 views
-
-
பாப்ரபரசர் முத்தமிட்டு ஆசீர்வதித்ததையடுத்து மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை குணமடைந்த அதிசயம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையொன்றுக்கு ஏற்பட்டிருந்த உயிராபத்தான மூளைக் கட்டி பாப்பரசர் பிரான்சிஸ் தலையில் முத்தமிட்டு ஆசீர்வாதமளித்ததையடுத்து அதிசயிக்கத்தக்க வகையில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்துக்கு விஜயம் செய்து ஊர்வலமாக சென்ற போது குறிப்பிட்ட கியன்னா என்ற சிறுமியின் தலையில் முத்தமிட்டு ஆசீர்வ…
-
- 1 reply
- 331 views
-
-
நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடிய பெண் நிறை மாதக் கர்ப்பிணியான தனது நண்பியை கழுத்தை வெட்டி படுகொலை செய்த பின்னர், அவரது வயிற்றைக் கத்தியால் கிழித்து அவரது கருப்பபையிலிருந்த குழந்தையைக் களவாடி அதனைத் தனது குழந்தையென உரிமை கோரிய பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற…
-
- 0 replies
- 405 views
-