செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கல்லாக மாறும் சிறுவன் : வெறுக்கும் சமூகத்தவர்கள் (காணொளி இணைப்பு) உடலில் முகப்பகுதி தவிர்த்த தோல் பகுதிகள் அனைத்தும் கல்லை போன்று இறுகியதாகவும், தோல்கள் வெடித்த படைகளாக மாறிவரும் அரிய நோய் தொற்றை, பங்களாதேஷில் உள்ள சிறுவன் எதிர் கொண்டுள்ளார். பங்களாதேஷின் நாஹாவொன் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மெஹந்தி ஹஸன் எனும் 8 வயது சிறுவன், மிகவும் அரிதான தோல் நோயிற்கு உட்பட்டுள்ளார். இதனால் அவரது தோல் கரு நிறமானதாக மாறுவதோடு, ஒரு கற்படிக்கையின் தோற்றத்தை போல் மாறி வருகின்றது. மேலும் சிறுவனின் முகம் தவிர்த்த ஏனைய பகுதிகளிலுள்ள தோல்கள் வெடிப்புற்று, அவரை வேதனைப்படுத்தி வருகின்றது. இதனால் சமூகத்தவர்கள் வெறுப்பத…
-
- 0 replies
- 336 views
-
-
ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் …
-
- 0 replies
- 326 views
-
-
மட்டு. வவுணதீவில்... 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர் . குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாத…
-
- 0 replies
- 213 views
-
-
கள்ளகாதலுக்கு தொல்லையாக இருந்த கணவன் நாக்கை அறுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியாயி (35). இவர்களுக்கு இரணடு பெண் மற்றும் ஒரு ஆண் உள்ளனர். இந்த நிலையில், மாரியாயிக்கும், களத்துப்பட்டியை சேர்ந்த நல்லசாமி என்பவருக்கும் இடையே கடந்த மூன்று வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. நல்லசாமிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கர்நாடகாவில் போர்வெல் வண்டி ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். அடிக்கடி களத்துப்பட்டிக்கு வரும் நல்லசாமி மாரியாயியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து…
-
- 0 replies
- 741 views
-
-
குழந்தைக்கு நிகரான எடையில் பிரமாண்ட ‘கோலியாத் தவளை’ – காப்பாற்ற போராடும் தன்னார்வலர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஹெலன் ப்ரிக்ஸ் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEANNE D'ARC PETNGA செட்ரிக் ஃபோக்வான் கோலியாத் தவளையை முதன்முதலில் பார்த்தபோது அதன் அளவைக் கண்டு ஆச்சர்யப்பட்டார், ஈர்க்கப்பட்டார். ஒரு பூனையின் அளவுக்குப் பெரிதாக வளர்ந்திருந்த அதுதான் உலகின் மிகப்பெரிய தவளை. ஏறக்குறைய ஒரு குழந்தையை வைத்திருப்பதைப் போல, ஒரு மீட்புப் பணியில் தவளை ஒன்றைத் தான் கையாண்டதாக அவர் கூறுகிறார். கேமரூனிய காட்டுயிர் பா…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 DEC, 2023 | 03:40 PM இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் - கட்ச் அதிவேக வீதியில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர். அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர். …
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
யுத்தகளத்தில் முன்னணியில் நின்று போர்புரிவதில் ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 381 ஆண்கள் மற்றும் 19 பெண்களுடன், ராணுவ ரேஞ்ஜர்களுக்கான தலைமைப் பயிற்சி ப்ளோரிடா மாகாணத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த பயிற்சியின் போது, வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்! ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார். மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ…
-
- 0 replies
- 473 views
-
-
ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று. தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும். இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ …
-
- 0 replies
- 422 views
-
-
பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…
-
- 0 replies
- 751 views
-
-
மறக்காது.. டபாய்க்க முடியாது வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ் வாஷிங்டன்: ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியு…
-
- 0 replies
- 347 views
-
-
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன் பட மூலாதாரம்,Rohini Bhosale படக்குறிப்பு,மருத்துவமனை ஊழியர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 'சிவம்' கட்டுரை தகவல் துஷார் குல்கர்னி, பிபிசி மராத்தி, பிராச்சி குல்கர்னி, பிபிசி மராத்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும். ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது. தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நின…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார். இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது. முன்னாச…
-
- 0 replies
- 279 views
-
-
புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!
-
- 0 replies
- 497 views
-
-
பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த, கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார். பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது. இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை, இதையடுத்து வலியால் துடித்த கோர்ட்னி முகத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கொண்டபின் நண்பருக்கு தெரிவித்ததையடுத்து, வைத்தியசாலைக்கு விரைந்துள்ளனர். அங்கு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 651 views
-
-
23 JUN, 2024 | 12:21 PM பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் இந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186758
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
கனடா நாட்டை சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சந்தித்துக்கொண்ட உருக்கமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்தவர் டோன்னா ஹார்ட்டி. இவர் அதே மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 1960ம் ஆண்டில் பிறந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் லெஸ் கான் என்ற நபரிடமிருந்து இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில், அந்த நபர் தன்னுடைய குடும்பத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதாகவும் அதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு டோன்னாவும் சம்மதித்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, லெஸ் கானிடமிருந்து மற்றொரு மின்னஞ்சல் வந்துள்ளது. அ…
-
- 0 replies
- 775 views
-
-
சனல்-4 தொலைக்காட்சி மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஈழமனிதப்படுகொலை காணொளி காட்சிகளால், பன்னாட்டு மட்டத்தில் எழுந்துவரும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஐநா மனித உரிமைகள் மாநாடு, பெப்,27,2012 ஜெனீவாவில் கூட இருக்கிறது. மாநாட்டு அமர்வில் இலங்கைக்கு எதிராக (இந்தியா தவிர்ந்த) அனேக நாடுகள் எதிர்நிலையெடுக்க இருப்பதாக சர்வதேச மட்டத்தில் கருதப்படுகிறது. அப்படி ஏற்படாமல் தடுப்பதற்கு இலங்கை அரசும் தன்னாலான தந்திரங்கள் அனைத்தையும் பலமாதங்களாக செய்துவருகிறது. அதற்கான அறிவுறுத்தல்களையும் திசை திருப்புதலுக்கான உத்திகளையும் நண்பன் இந்தியா சிரமேற்கொண்டு பொறுப்புடன் உதவிவருவதாக தெரிகிறது. இருந்தும் சர்வதேசநாடுகள் பலவும், ராஜபக்க்ஷ மீது பெருத்த …
-
- 0 replies
- 327 views
-
-
வேண்டாம் கைகள் . . பெய்ஜிங், ஏப். 4: லாரி ஓட்டுவதற்கு மனத்தில் தைரியம் இருந்தால் போதும், கைகள் தேவையில்லை என்கிறாராம் சீனாவை சேர்ந்த டிரைவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சீன நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததாம். . அதை வழிமறித்த சீன போலீசார் டிரைவரைக் கண்டு திடுக்கிட்டு விட்டார்களாம். இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்றவர் ஒருவர் ஸ்டம்புகளின் உதவியுடன் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தாராம். லாரி ஓட்டுவதற்கான உரிமம் கூட அவரிடம் இல்லையாம். சிறுவயதில் விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துவிட்ட அவர் லாரி ஓட்ட உரிமம் பெற எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லையாம். தன் மீது கருணை காட்டுமாறு ஜங் என்ற அந்த ஓட்டுனர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டனில் இயங்குவதற்கான உரிமத்தை ஊபெர் இழக்கிறது லண்டனில் இயங்கும் ஊபெர் ரக்ஸி சேவைக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று லண்டன் போக்குவரத்துத் துறை (TFL) தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும் ஊபெர் நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் 2017 ஆம் ஆண்டில் ஊபெர் ரக்ஸி சேவை அதன் உரிமத்தை இழந்தது. எனினும் அதன் செயற்பாடுகளுக்கு 15 மாத கால நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த செப்ரெம்பர் மாதத்தில் மேலதிகமாக இரண்டு மாத கால நீடிப்பை ஊபெர் நிறுவனம் பெற்றிருந்தது. இந்தக்கால நீடிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியானது. பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கிய ஊபெர் ரக்ஸி சேவை பல நாடுகளி…
-
- 0 replies
- 352 views
-
-
பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்ல…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
[size=4]ஜப்பானிய அசையும் ஓவிய (கார்ட்டூன்) திரைப்படத்தின் தீவிர ரசிகையான உக்ரேனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்தக் கார்ட்டூன் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அனஸ்டாஸியா ஷபகினா ௭ன்ற மேற்படி யுவதி தனது கண் மற்றும் சிகை ௭ன்பவற்றை கார்ட்டூன் கதாபாத்திரத்தின் நிறத்திற்கும் தோற்றத்துக்கும் மாற்றியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் அவர் தனது பெயரையும் புகாகுமி ௭ன ஜப்பானியப் பெயராக மாற்றியுள்ளார். இவரது புகைப்படங்கள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து அவற்றை 1,50,000 பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]http://www.vira…
-
- 0 replies
- 559 views
-
-
கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 11, 2020 14:02 PM புதுடெல்லி உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்ச…
-
- 0 replies
- 247 views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
-
- 0 replies
- 390 views
-
-
முக்கிய செய்திகள். · இந்திய நாட்டு ரூபாயின் மதிப்பு இன்னும் அடி பாதாளம் வரை செல்லும். இதை சரி செய்வதற்கு மானம் கெட்ட இந்திய நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த பிரச்சனை 2009 தை மாதத்தில் தொடங்கியது, ஆனால் இதை, இந்திய நடுவண் அரசு 2009 வைகாசி தேர்தலை கருத்தில் கொண்டு மூடி மறைத்தது. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு கீழே..... எங்கே போனது 120 பில்லியன் அமெரிக்க டாலர்...? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அன்னிய செலாவணி இருப்பு "141.5 பில்லியன் டாலர்" என்ற அளவிற்கு உபரியாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குள் "24 பில்லியன் டாலராக" அது குறைந்தது..... 120 பில்லியன் அமெரிக்க டாலரின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடி(இந்திய மதிப்புக்கு ) ஏன் அருமை மக்களே நாம் ஒரு வீ…
-
- 0 replies
- 1.1k views
-