Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் தொடர்பான தாக்குதல்கள்: 100இற்கும் மேற்பட்டோர் கைது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக, 100இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் உமிழ்நீர் துப்புவது மற்றும் வேண்டுமென்றே இருமுதல் ஆகியன அடங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் முன் வரிசை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வேண்டுமென்றே கடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் இவற்றில் அடங்கும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று வாரங்களி…

  2. கடந்த பதினைந்து வருடங்களாக யாழ்ப்பாணத்து மக்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரதப் பாதையை அமைத்து எங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைநகருக்கு செல்வதற்கு வசதி செய்யும்படி அரசாங்கத்தை மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்க மந்திரிகள் அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவையைத் திறப்பதற்கு கட்டளையிட்டுள்ளனர். அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவை திறக்கப்பட்டால் தமிழராகிய எம்மால் என்ன செய்ய முடியும்? மேலும் இலங்கையை நிர்வகித்த முன்னாள் தேசாதிபதி ஒருவர் ஒரு தடவை இந்தத் தமிழர் ஏன்தான் கொழும்புக்கு வரவேண்டும் என வினவியதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்த அளவுக்குத் தமிழரை வெறுத்தால் ஏன் எம்மை இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஒழ…

  3. இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (18) காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர், பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத…

  4. இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யாஹூ நிறுவனத்திற்கு தான் கண்டுபிடித்த சம்லி என்னும் அப்ளிகேஷனை பல கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். இவரது திறமையை பார்த்து, பள்ளி படிப்பு முடியும் முன்னே இச்சிறுவனுக்கு யாஹூ நிறுவனம் வேலையும் அளித்துள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் நிக் டிஅலோய்சியோ (17). உயர் நிலைப் பள்ளி மாணவர். மொபைல் அப்ளிகேஷன்களை தயாரிப்பதில் அதீத ஆர்வமுடைய இச்சிறுவன், சிறுவயது முதலே இதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டுள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி தந்தது இவரின் சம்லி என்னும் மொபைல் அப்ளிகேஷன்.பெரிய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மொபைலில் பார்க்க ஏற்றவாறு சிறிய பத்திகளாக மாற்றியமைக்கும் இந்த அப்ளிகேஷன் வெளியான 4 மாதங்களில் யாஹூவிற்கு விற்கப்பட்டது. …

  5. நமது நாட்டில் வசதிக்காகவும், சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு. ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள். வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள். இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இயற்கையான கூந்தல் என்…

  6. R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 10:01 - 0 - 413 FacebookTwitterWhatsApp எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் சிறிய லொறியொன்றில் இளநீர் விற்கும் ஒருவர் என்றும் மற்றையவர் சிறிய லொறியொன்றின் சாரதி என்றும் தெரியவந்துள்ளது. பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்…

  7. கொடிய விஷம் கொண்ட நாகத்துக்கு சத்திரசிகிச்சை செய்த சம்பவம் ஒன்று நாட்டில் பதிவாகியுள்ளது. நாக பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட வலி காரணமாக இந்த நாகப்பாம்பு இரண்டரை மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய பீடத்திலுள்ள வனஜீவராசிகள் பிரிவு வைத்தியர்களுடன் இணைந்து இந்த நாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/256287

  8. 08 MAR, 2024 | 10:50 AM வர்த்தகரான தனது நண்பன் உறக்கத்தில் இருக்கும்போது அவரது பையில் இருந்த 50 இலட்சம் ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற நபர் ஒருவர் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணத்தை திருடி தப்பிச் சென்றவர் கொஸ்கொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். …

  9. 2005ம் ஆண்டு சிறீலங்கா ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் என்ற நிலையிருந்தது. இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் எடுக்கின்ற முடிவையே அனைத்துத் தமிழ் மக்களும் எடுப்பார்கள் என்பதால், விடுதலைப் புலிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதை சிங்களத் தலைமைகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தன. இதில் தமிழ் மக்களின் வாக்குகளே ரணிலின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையும் இருந்தது. இதனால், மகிந்தவின் வருகையைவிட மேற்குலகிற்கு சார்பானவராகக் கருதப்பட்ட ரணிலின் வருகையை விரும்பியது மேற்குலகம். ஆனால், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பினால் ரணில் மட்டுமல்ல மேற்குலகமும் பெரும் ஏமாற்றம் அடைந்தது. தமிழ் மக்களு…

  10. கையடக்கத்தொலைபேசிகளிற்கு வரும் அழைப்புகளிற்கு பதிலளித்தால் உங்கள் தொலைபேசிகள் வெடிக்கும் என வெளியாகியுள்ள வீடியோ செய்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என இலங்கையின் கணிணி அவசர தயார் நிலை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தவிடயம் குறித்து தங்களுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர் என கணிணி அவசர தயார் நிலை குழுவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 13 அல்லது 4 என்ற இலக்கங்களிலிருந்து அழைப்பு வந்தால் அவற்றிற்கு பதில் அளிக்கவேண்டாம். அதற்கு பதில் அளித்தால் உங்கள் கையடக்க தொலைபேசி உடனடியாக வெடித்துச்சிதறும், இது ஏற்கனவே இடம்பெற்றுள்ளது சிங…

  11. மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில்…

  12. யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294

  13. வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது. ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூ…

  14. ஆற்றுக்குள் கைபேசியை தேடிய பொலிஸ் அதிகாரியை இழுத்து சென்ற முதலை! மாத்தறை – நடுகல, நில்வல ஆற்றில் விழுந்த பொலிஸ் அதிகாரியை முதலை இழுத்துச் சென்றுள்ளது. ஆற்றில் விழுந்த தனது கைபேசியை தேடிய போது தவறி ஆற்றுக்குள் விழுந்த குறித்த அதிகாரையை முதலை இழுத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றுக்குள்-கைபேசியை-தேட/

  15. மொண்ட்டே கார்லோ சர்வதேச சேர்கஸ் விழா மொனாக்கோவின் மொன்ட் கார்லோ நகரில் நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய சேர்கஸ் விழாக்களில் ஒன்றான மொன்ட் கார்லோ சேர்கஸ் விழா 38 ஆவது வருடமாக நடைபெறுகின்றது. சேர்க்கஸ் சாகசங்களுக்குப் பெயர்பெற்ற ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து சேர்க்கஸ் கலைஞர்கள் இதில் பங்குபற்றுகின்றனர். 5 யானைகள், 30 குதிரைகளும் இதில் பங்குபற்றுகின்றன. ஜோ கார்ட்னர் எனும் கலைஞர் தரையில் படுத்துக்கொண்டு கண்கள் கட்டப்பட்ட யானையொன்றை தன்மீது கடக்கச்செய்யும் திகில் சாகசக் காட்சியும் இதில் இடம்பெற்றது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=3934#sthash.wRaNE3eE.dpuf

  16. அமெரிக்கா: கழிவறையை அசிங்கம் செய்த பயணியால் பாதியில் தரை இறங்கிய விமானம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 245 பயணிகளுடன் ஹாங்காங் நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, அதில் பயணித்த நபர் ஒருவர் அவ்விமானத்தின் இரு கழிவறைகளையும் தனது கழிவுகளால் அசிங்கம் செய்ததால் பாதி வழியிலேயே தரை இறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மலத்தின் துர்நாற்றம் வீசியதாகக் கூறியதால் அலாஸ்காவில் உள்ள ஆன்கரேஜ் விமான நிலையத்தில், வியாழன்று அது தரை இறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணியால் வேறு பிரச்சனை எது…

  17. இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மாகொல ஞான மௌலி மாவத்தையை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கு ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து உறவினர்களிடம் அப்பெண் தெரியப்படுத்தியதையடுத்து, அவரின் மருமகன் மற்றுமொரு யுவதியின் போலியான நிழற்படத்தை பயன்படுத்தி, WhatsApp கணக்கை உருவாக்கி குறித்த இளைஞருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த இளை…

  18. பிரதமராக்க கோரி கோபுரத்தில் ஏறி, நூதனமாக போராடிய பாகிஸ்தானியர் – சாதுரியமாக கீழே இறக்கிய பொலிஸார்! தன்னை பிரதமராக்கினால் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன், அடுத்த 6 மாதத்தில் அனைத்து கடன்களையும் அடைத்து விடுவேன் என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். பாகிஸ்தான் கொடியை கையில் ஏந்தியபடியே அவர் தொலைபேசி அலைவரிசை கோபுரத்தின் மீது இவ்வாறு கூச்சலிட்டுள்ளார். கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாகிஸ்தான் பொலிஸார் குறித்த நபரிடம் கீழே இறங்கி வருமாறு கோரினர். தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் பேசுவேன் அல்லது உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவரது பேச்சை கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர் பொலிஸார் சாதுரியமாக ஒரு காரி…

  19. 21 NOV, 2023 | 11:03 AM புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமானநிலையம் அருகே பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. வழக்கமாக வானத்தில் பறக்கும்தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தெரிவதாகத் தகவல் வெளியாகும். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவை பறக்கும் தட்டுகள், வேற்று கிரகங்களில் இருந்து வரும் வேற்று கிரக வாசிகளின் விமானங்கள் என்ற தகவல்களும் வெளியாகும். ஆனால், இவை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில்தான் நடைபெறும். இந்நிலையில் இதேபோன்ற தொரு சம்பவம் மணிப்பூர் மா…

  20. ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அமன் அகூவா என்ற தனியார் நிறுவனம் 20 தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருந்தது. அந்த குடிதண்ணீர் பாட்டில்கள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று நெளிவதை …

  21. யெமன் தலைநகர் சானாவில் மூன்று வயது சிறுமியை கற்பழித்து கொலைசெய்த ஒருவருக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட 41 வயது முஹமது அல் மொக்ரபி மீதேமுன் தினம் திங்கட்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களின் விடுமுறை தினமான நோன்புப் பெருநாளன்று இடம்பெற்ற இந்த குற்றச்செயல் பொதுமக்களிடம் கோபத்தை ஏற்ப டுத்தி இருந்தது. இந்நிலையில் பொலிஸாரால் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அழைத்துவரப்பட்ட மொக்ரபிக்கு ஆரம்பத்தில் 100 கசையடிகள் வழங்கப்பட்டு பின்னர் தலைகுப்புற படுக்கவைத்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை நிற…

    • 0 replies
    • 4k views
  22. எரிச்சலூட்டும் வகையில் பாடல்களை பாடி கடத்தல் காரர்களிடமிருந்து சிறுவன் ஒருவன் தப்பிய சம்பவமொன்று ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவின் அட்லாண்டா பிரதேசத்தில் வசித்து வரும் வில்லி மிரிக் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளைக்காரர் கும்பலொன்று மேற்படி சிறுவனை கடத்தி 3 மணித்தியாலங்கள் காரொன்றினுள் அடைத்து வைத்துள்ளனர். இதேவேளை, குறித்த சிறுவனின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு சிறுவனை கடத்தி விட்டதாகவும் ஒருதொகை பணத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவனை உயிருடன் விடுவிக்க முடியுமென்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் கடத்தப்பட்டதை பொருட்படுத்தாத அச்சிறுவன் எரிச்சலூட்டும் வகையில் தொடர்ந்து 3 மணித்தியா…

  23. மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு! யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ…

  24. மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர். ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார். உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார். இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள். இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது இந்த நாடகம், அம்பலமாகியுள்ளது. அவர் சாப்பிட்ட உணவி…

  25. யாழ்.பொலிஸ் நிலையமருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் இன்று வீடு சென்றுள்ளது. அதன் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியதையடுத்தே மோட்டார் சைக்கிள் வீடு சென்றுள்ளது. நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரம் காற்று போயுள்ளது. அதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டுவிட்டு சில்லினை கழற்றி காற்று அடிப்பதற்கு கடைக்கு சென்றுள்ளார். அவ் வேளையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 130 பேர் கைதாகியிருந்த நிலையினில் அவர்களுடன் மோட்டார் சைக்கிள் சி…

    • 0 replies
    • 297 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.