Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கதிரையில் இருந்து... தவறி விழுந்து, கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ள நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து உடனடியாக குறித்த குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…

  2. தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர். புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர். உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய…

  3. அமெரிக்க ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில்! அதிசய தகவல் Ca.Thamil Cathamil November 14, 2014 Canada அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான். லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/34010.html#sth…

  4. இந்தோனேசியாவிலிருந்து க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றும் இலங்கை மாணவன் நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சென். பீற்றர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அகலங்க பீரிஸ் என்ற நீச்சல் வீரரான குறித்த மாணவன், ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா செல்லவுள்ள நிலையில், இம் முறை உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களுக்கு அவர் அங்கிருந்தே தோற்றவுள்ளார் என அறிய முடிகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொ…

  5. மைதானத்துக்கு சிங்கக் குட்டியுடன் வந்த ரசிகரால் பரபரப்பு.! பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் மைதானத்தில் அமர்ந்து, விளையாட்டை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தில் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும். இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், அரங்கில் ந…

  6. 08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் …

  7. தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் ச…

  8. கண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் என்று மெக்ஸிக்கோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. மெக்ஸிக்கோ - புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரையில் டொல்பின் போன்ற தலை அமைப்புடைய குறித்த உயிரினத்துக்கு கண்கள் இல்லாமல், கொடிய பற்களுடன் வினோதமான உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக்கண்ட மக்கள் இதுபோன்ற ஒரு உயிரினத்தை கண்டதில்லை எனவும் அத்தோடு குறித்த உயிரினம் உயிரிழந்து கிடந்தது என நினைத்துள்ளார்கள். அதன் பின்னர் வினோத உயிரினம் குறித்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பசுபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழ…

    • 0 replies
    • 774 views
  9. இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹலால் உணவுக்கு அண்மையில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில் அரங்கேறியது. "ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த திருவிழாவின் நோக்கம் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். "நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான இடங்களில் சென்…

  10. காத­லி­க­ளுக்கு 25 வய­தா­னபின் அவர்­க­ளி­ட­மி­ருந்து பிரிந்­து­விடும் 'டைட்­டானிக்' நாயகன் By VISHNU 02 SEP, 2022 | 10:41 AM ஹொலிவூட் திரை­யு­லகின் முன்­னிலை நடி­கர்­களில் ஒரு­வ­ரான லிய­னார்டோ டிகெப்­ரி­யோவும் அவரின் காதலி கமிலா மொரோ­னேவும் பிரிந்­து­விட்­டனர் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆர்­ஜென்­டின அமெ­ரிக்க மொட­லான கெமிலா மொரோன், கடந்த ஜூன் மாதம் 25 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டா­டி­யவர். லிய­னார்­டோவும், கமி­லாவும் கடந்த கோடை­யுடன் பிரிந்­து­விட்­டனர், இப்­பி­ரிவு சமூ­க­மா­க­மா­னது. அவர்­க­ளுக்­கி­டையில் மனஸ்­தாபம் எது­வு­மில்லை என ஒரு தகவல் வட்­டாரம் தெரி­வித்­த­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள…

  11. பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை த…

  12. சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ? - ஒரு சவுக்குகடி ரிப்போர்ட் ! சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. சாதி அடிப்படையிலும், மத அடிப்படையிலும், மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும், இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள்..... பிறகு ஏன் மோதல் ? இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளை வெல்கிறது. ஆனால், வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணி, வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றது. ஆனால், ராஜீவ் ஏனோ, ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார். இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம்.பிக்களின் ஆதரவோடு, வ…

  13. நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்! நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள…

  14. 2,000 ஆண்டுகள் பழமையான சீன மது கண்டுபிடிப்பு! மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள பண்டைய காலத்து கல்லறை ஒன்றிருந்து சுமார் 2,000 ஆண்டுப் பழமையான 3.5 லிட்டர் மதுபானம் கண்டறியப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலப்பானைக்குள் இருந்து இந்த மது பானம் கண்டறியப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும்கூட அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவையே. விதவிதமான வண்ணம் பூசப்பட்ட களிமண் பானைகளும், வெண்கலக் கலைப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. காட்டு வாத்து வடிவிலான விளக்கு, ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவ…

  15. நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது. "40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இத…

    • 0 replies
    • 498 views
  16. இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…

  17. உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது. சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 …

  18. சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அகில உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ், எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது. இந்த நிலையில், ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அந…

  19. கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு January 16, 2022 மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றைமுன்தினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவா்கள் இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்தச.அக்சயன் (வயது 16), ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16) (வயது 16) ஆகிய இரு சிறுவர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (15) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா்…

  20. கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .லூசி கனடாவிற்கு சென்ற போது லூசிக்கு வயது இரண்டு . சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்க…

  21. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா. இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் ‘டேட்டிங்’ அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை. தங்கள…

  22. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசியாவில் அண்மைக் காலத்தில் ஆட்சி செய்த மிகவும் மோசமான ஆட்சியாளர்ராக மெதமுலன ராஜபக்ஸவை குறிப்பிடமுடியும். இந்த அரசாங்கத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்தத் தவறியுள்ளமை வருத்தமளிக்கின்றது. ராஜபக்ஸ அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அவர…

    • 0 replies
    • 285 views
  23. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…

  24. மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.