செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
-
- 0 replies
- 659 views
-
-
கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு January 16, 2022 மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றைமுன்தினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவா்கள் இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்தச.அக்சயன் (வயது 16), ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16) (வயது 16) ஆகிய இரு சிறுவர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (15) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா்…
-
- 0 replies
- 194 views
-
-
கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .லூசி கனடாவிற்கு சென்ற போது லூசிக்கு வயது இரண்டு . சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்க…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா. இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் ‘டேட்டிங்’ அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை. தங்கள…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசியாவில் அண்மைக் காலத்தில் ஆட்சி செய்த மிகவும் மோசமான ஆட்சியாளர்ராக மெதமுலன ராஜபக்ஸவை குறிப்பிடமுடியும். இந்த அரசாங்கத்திடமிருந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடத்தத் தவறியுள்ளமை வருத்தமளிக்கின்றது. ராஜபக்ஸ அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அவர…
-
- 0 replies
- 294 views
-
-
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் மயில் ஒன்றை வேட்டையாடி கொன்று சமைத்து உணவாக உட்கொண்ட காட்சி சமூக ஊடகங்களில் ஒன்றான யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொளி தொடர்பில் வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் மீது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த காணொளி ‘கோ வித் அலி’ (Go With Ali) என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் தேசிய பூங்காவிற்குள் ஒரு குழுவினர் மயில் ஒன்றை வேட்டையாடி விறகு அடுப்பில் சமைத்து உட்கொள்ளும் காட்சி காணொளியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரஜை மற்றும் நான்கு வேடுவச் சமூகத்தினர் அடங்கிய குழுவினர் தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் முதல்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…
-
- 0 replies
- 502 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர் மண் அகழ்வு இயந்திரத்தின் மூலம் விமானத்தை சேதப்படுத்தினார் (வீடியோ இணைப்பு) 2016-04-27 13:13:23 வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், விமானமொன்றை மண் அகழ்வு இயந்திரம் மூலம் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியொவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 என்ஜின்கள் கொண்ட Yak - 40 - ரக விமானமொன்றை டிக்கர் இயந்திரத்தின் மூலம் மேற்படி நபர் பல தடவை தாக்கிய காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. இத் தாக்குதலினால் விமானத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளன. இவ் விமானம் ரஷ்யாவின் யூ.ரி. எயார் நிறுவனத்துக்குச…
-
- 0 replies
- 367 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூதாட்டி ஒருவர் பெயர்பெற்றுள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 108 வயதான பாத்திமா நெக்ரினி என்ற மூதாட்டியே இவராவார். மிலனில் உள்ள அன்னி அஸ்ஸுரி சான் ஃபாஸ்டினோ பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதன்போதே அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தப்பிய சில மாதங்களுக்குப் பிறகு, கொவிட்-19 தடுப்பூசி பெற்ற உலகின் மிகப் பழமையான நபர்களில் ஒருவராக இத்தாலிய நூற்றாண்டு வீரர் ஒருவர் ஆனார் என்று அவரது ஓய்வூதிய இல்லம் தெரிவி…
-
- 0 replies
- 338 views
-
-
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
நியூஸிலாந்தின் விமான சேவை நிறுவனமொன்று விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வீடியோவை மிக செக்ஸியாக தயாரித்து வெளியிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு பயணிகளை தயார்படுத்துதற்காக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்குவது விமான ஊழியர்களின் வழக்கம். சில விமானங்களில் வீடியோ மூலம் பாதுகாப்புச் செயன்முறைகள் விளக்கப்படுவதுண்டு. ஆனால், எயார் நியூஸிலண்ட் எனும் விமான சேவை நிறுவனம் தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்குவதற்கான வீடியோவில் நீச்சலுடை அணிந்த பெண்களை தோன்றச்செய்துள்ளது. கிறிஸ்டி பிரிங்லே, கிறிஸி டெய்கன், ஜெஸிகா கோமஸ் உட்பட சர்வதேச பு…
-
- 0 replies
- 672 views
-
-
இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான். அந்நிலையில் சிறுவன் விற்பனை அகத்தில் இருந்து நேற்றைய தினம் (திங்கட்கிழமை) தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டா…
-
- 0 replies
- 359 views
-
-
குமரப்பாவின் தாயாரை ஏமாற்றினாரா?: சிவாஜிலிங்கம் மீது சரமாரி தாக்குதல்! October 6, 2018 வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று தாக்கப்பட்டுள்ளார். அவருடன், வல்வெட்டித்துறை நகரசபையின் உத தலைவர் கேசவனும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இறுதியில் பொலிசாரால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். நேற்று (05) தீருவிலில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பன்னிரண்டு மாவீரர்களிகளின் நினைவிடத்தில், அனைத்து இயக்கங்களில் இருந்தும் உயிர்நீத்தவர்களின் நினைவிடம் ஒன்றை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்தது. எம்.கே.சிவாஜிலிங்கமே இந்த முடிவை எடுத்து, வல்வெட்டித்துறை நகரசபையினரை அந்த தீர்மானத்தை நோக்கி நகர்த்தினார். அந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென ஏனைய கட்சிக…
-
- 0 replies
- 389 views
-
-
சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேல…
-
- 0 replies
- 323 views
-
-
பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கான சலுகைப்பணம் குறைப்பு [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 11:13.23 AM GMT ] பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்த்து கோரும் அகதிகள் பாதிப்படையவுள்ளனர். இது தொடர்பான தகவலை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் …
-
- 0 replies
- 156 views
-
-
3 மணி நேரத்தில் 2 மாடி வீடு: சீனாவில் புதிய சாதனை! பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீ…
-
- 0 replies
- 411 views
-
-
தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை இலங்கைக்கு மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். கந்தகொட, மித்தெனிய, வீரவெல ஆகிய நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது மாலைவேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வானிலை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடல் பிராந்தியங்களில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடல் பகுதிகளில் ம…
-
- 0 replies
- 496 views
-
-
பிரான்சிலிருந்து இயங்கும் ஊடகஇல்லத்தின் ஊடக அறிக்கை ஊடகஇல்லம் 22 rue Perdonnet 75010 Paris France 12.09.2012 ஊடக அறிக்கை எமது ஊடகஇல்லத்தின் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுடனும், தமிழீழ தேசிய உணர்வாளர்களுடன் சில விசமிகள் தொடர்பாடல்களை ஏற்படுத்தியிருப்பது தொடர்பான முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக எமது ஊடகஇல்லத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட செவ்வியொன்று அண்மையில் புலம்பெயர் ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செவ்வியுடனோ அன்றி இதற்கான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொண்ட நபர்களுடனோ எவ்விதமான தொடர்பையும் நாம் கொண்டிருக்கவில்லை என்பதை திட்டவட்டமாக அறியத் தருகின்றோம். எமது அனுமதியோ அன்றி அங்கீகா…
-
- 0 replies
- 867 views
-
-
"கள்" பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வரி குறைப்பு, தவறணை 2 மணி நேரம் அதிகரிப்பு - பிரதமர் அனுமதி போத்தல் கள்ளுக்கான வரியை குறைக்குமாறு யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக போத்தல் கள்ளுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா வரி 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் பனையிலிருந்து தயாரிக்கப்படும் கள் போத்தல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்குமாறு, யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் யாழ்.வந்திருந்த விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை முன்வைத்திருந்தார். இதனையடுத்து, குறித்த விடயத்தை இரா…
-
- 0 replies
- 363 views
-
-
திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி! திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1228385
-
- 0 replies
- 220 views
-
-
லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார…
-
- 0 replies
- 616 views
-
-
பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர். சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெ…
-
- 0 replies
- 171 views
-
-
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியான யஷோதா பென் அஹமதாபாத்தில் ஒரு கிராமமொன்றில் உள்ள அவரது வீட்டில் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றார். http://metronews.lk/article.php?category=world&news=7912#sthash.niyGFmF5.dpuf
-
- 0 replies
- 607 views
-
-
தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி ! தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். வர்த்தகரான குறிப்பிட்ட எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார். வடமாகாணத்தை சேர்ந்த குறிப்பிட்ட எம்.பி, வர்த்தகராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானவர். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், தனது தொகுதியில் தமிழரசுக்கட்சி மட்டுமே போட்டியிடலாம், உள்ளூராட்சிமன்ற தலைவர் பதவியை பெறுப்பேற்கலாமென தீவிர ரகளையில் ஈடுபட்டவர். இந்த விவகாரம், அப்போது கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க …
-
- 0 replies
- 491 views
-