செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
தொன்மை வாய்ந்த... நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு! வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தப்படும் ஒரு கட்டிடமாகும். போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள…
-
- 0 replies
- 217 views
-
-
1. எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். 2. இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம். 3. காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். 4. குளிர் காலத்தில் குயில் கூவாது. 5. வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். 6. தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ. 7.லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 8. கரப்பான் பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையின் முதலாவது மெழுகுச் சிலைக கண்காட்சி கொழும்பு 7 இலுள்ள தேசிய கலாபவனத்தில் தற்போது நடைபெறுகிறது. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான, மாலினி பொன்சேகா, டபிள்யூ.டி. அமரதேவ, ரவீந்திர ரந்தெனிய, விக்டர் ரத்நயாக்க, சுனில் எதிரிசிங்க, மஹேந்திர பெரேரா, மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களான கார்லோ பொன்சேகா, சுனில் ஆரியரத்ன ஆகியோருடன் இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிர மராஜசிங்கன், கெப்பித்திபொல நிலமே, எஹெலபொல குமாரிஹாமி, சே குவேரா, புரூஸ் லீ உட்பட பலரின் சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது ஒரேயொரு மெழுகு சிலை நூதனசாலையான ஆத்மா மெழுகு சிலை நூதனசாலையின் (Atma Wax Museum) சிற்பக் கலைஞர்களான அத்துல ஹேரத், அவரின் புதல்வர் மஹிம ஹேரத் ஆகியோர் …
-
- 0 replies
- 527 views
-
-
சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம் Play video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,41 01:41 காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம் 12 நவம்பர் 2022, 03:05 GMT பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது. டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர். …
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
பேனையைத் திருடிய ஜனாதிபதி செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொ…
-
- 0 replies
- 763 views
-
-
நீங்கள் தங்கும் ஹோட்டலில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? Play video, "ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன?", கால அளவு 1,40 01:40 காணொளிக் குறிப்பு, ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு ஜேமி கிளாட்மேனும் அவரது 12 தோழிகளும் விடுமுறையை கழிக்க சென்று இருந்தனர். அங்கு இருந்த ஒரு வீட்டை Airbnb மூலமாக வாடகைக்கு எடுத்து விடுமுறையை கொண்டாடினர். அதில் ஒரு தோழி, தான் டிக்டாக்கில் பார்த்தது போல பாத்ரூமில் கேமரா …
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை கடந்து செல்ல முற்படும் ஆமைகள் ரயில்களால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளன. அதையடுத்து ஆமைகளை பாதுகாப்பதற்காக அவற்றுக்கென தனியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமா நீரியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் பல்லாயிர…
-
- 0 replies
- 447 views
-
-
மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST) சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:- மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும். சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம். அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும். பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார். மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 386 views
-
-
வட்டக்கச்சியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி! கிளிநொச்சி மாவட்ட சவாரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் (06) வட்டக்கச்சி கலைவாணி சவாரித்திடலில் மாபெரும் சவாரிப்போட்டி நடைபெற்றது. இதன்போது 100 சோடி மாடுகள் பங்குபற்ற சவாரி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/வட்டக்கச்சியில்-நடைபெற்/
-
- 0 replies
- 340 views
-
-
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல்! கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1217257
-
- 0 replies
- 348 views
-
-
துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்! மின்னம்பலம்2021-07-25 துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷுக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்குத் துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை இருந்திருக்கிறது. இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தன் நெஞ்சில் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்க…
-
- 0 replies
- 588 views
-
-
காவல் நிலையத்தில் கனிந்த கருணை: கத்தியுடன் வந்தவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய தாய்லாந்து போலீஸ் கத்தியுடன் வந்த நபர் போலீஸ் அதிகாரி அனிருத்திடம் சரணடையும் தாய்லாந்தைச் சேர்ந்த அனிருட் மலே தற்போது உலக பிரபலமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் குறித்தான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத். இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இரு…
-
- 0 replies
- 178 views
-
-
பிரித்தானியாவில் விசா இல்லாதவர்களுக்கு வந்தது பொலிசாரின் கடும் சட்டம் பிரித்தானியாவில் உள்ள பேர்மிங்ஹாம் நகரில், யாராவது விசா இல்லாத நபர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டின் உரிமையாளருக்கு 3,000 பவுன்சுகள் தண்டம் விதிக்கப்படும் என பொலிசார் அதிரடியாக கூறியுள்ளார்கள். லண்டனில் விசா இல்லாத பலர் புறநகர்ப் பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று களவாக வேலைசெய்வது வழக்கம். லண்டன் நகரில் தான் பொலிசாரின் கெடுபிடிகள் அதிமாக உள்ளது. பிற இடங்களில் பொலிசாரின் கெடுபிடிகள் அதிகம் இல்லை. இதனால் தான் விசா காலாவதியானவர்கள். மற்றும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் இவ்வாறு வேறு இடங்களில் சென்று களவாக வேலைசெய்து அங்கே தங்கி வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் பெரும்…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி. இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் இவர்களுடன் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் இரத்த களரியாக காணப்பட்…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி! பரபரப்பு தகவல்[ புதன்கிழமை, 22 யூலை 2015, 08:31.53 AM GMT +05:30 ] ராகுல்காந்தி போதைப்பொருளுடன் பிடிபட்டபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரை காப்பாற்றியதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்ற பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே லலித் மோடிக்கு உதவி செய்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு ராகுல் காந்தி 1.60 லட்சம் அமெரிக்க டொலர் மற்றும் 'ஒயிட் ஷுகர்' எனப்படும் போதைப்பொருளுடன் பொலிசாரிடம் சிக்கினார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சோனியா காந்தி தொடர்பு …
-
- 0 replies
- 190 views
-
-
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்கா…
-
- 0 replies
- 408 views
-
-
47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம் அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ந…
-
- 0 replies
- 896 views
-
-
நித்தியானந்தாவைப் பதவி விலக்கத் தயார் நித்யானந்தரை விட சிறந்தவரை காண்பித்தால் அவரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நீக்கத் தயார் என்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்தார். கொடைக்கானல் அட்டுவம்பட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் 21 நாள் யோகா தியான பயிற்சி முகாம் நித்யானந்தாவின் தியான பீடம் சார்பில் நடத்தப்படுகிறது. முகாமினை மதுரை ஆதினம் அருணகிரிநாதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நித்யானந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடைக்கானலில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் திட உணவு உட்கொள்ளாமல் 21 நாட்கள் யோகா பிராயணம் உள்ளிட்டவரை செய்வர். 434 பேர் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். மதுரை…
-
- 0 replies
- 719 views
-
-
13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத…
-
- 0 replies
- 119 views
-
-
பிரான்சில் அரசியற் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையிலுள்ள இளைஞர்களின் நிலைமையைத் தமக்கு சாதகமாக்கப் பயன்படுத்தி சிலர் அரசியல் மற்றும் பண இலாபங்களை அடைவதற்கு எத்தனிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அவர்களிடம் செல்கின்றவர்களின் சுயவிபரங்கள், முகவரிகள் என்பவை பெறப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. வதிவிட உரிமையற்று நிற்கும் இளைஞர்களின் நிர்க்கத்தியான நிலைமையைப் பயன்படுத்தித் தமது கட்சி ஆட்சேர்ப்பில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். அது மட்டுமல்லாது அலுவலக வாடகை, வழக்கறிஞர் கட்டணம் எனக் கூறிப் பெருந்தொகையான கட்டணங்கள் அறவிடுவதற்கும் முயற்சி எடுக்கின்றனர். பிரான்ஸ் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒருவரிடம் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது சட்டப்படி குற்றமாகும். இளைஞர்களே! அ…
-
- 0 replies
- 436 views
-
-
வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை பிஸி என்ற நாய் காப்பாற்றியுள்ளது.சேலம் வாழப்பாடி அருகே அக்ரஹாரம் வைத்தி படையாச்சித் தெரு, ஆடு அடிக்கும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். இதற்கு பிஸி என்று பெயர் வைத்திருந்தார்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் பிஸி தேடிச் சென்றுள்ளது. அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் கம்பெனி அருகே ரவிச்சந்திரன் அமர்ந்திருப்பதை பிஸி கண்டுபிடித்து அவர் அருகில் சென்றது. ஆனால் ரவிச்ச…
-
- 0 replies
- 289 views
-
-
விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித…
-
- 0 replies
- 283 views
-
-
பாதுகாப்பாக 10 லட்சம் மைல் . Thursday, 28 May, 2009 01:42 PM . லண்டன், மே 28: பிரிட்டனைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பாதுகாப்பான டிரைவர் விருதை வென்றிருக்கிறாராம். . பீட்டர் நீடின் என்னும் அந்த டிரைவருக்கு 63 வயதாகிறதாம். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தகாலத்தில் அவர் 10 லட்சம் மைல்களுக்கு மேல் பஸ் ஓட்டி சென்றுள்ளார். இதுவரை ஒருமுறை கூட விபத்துக்குள்ளான தில்லையாம். அவருடைய பஸ்சில் ஒரு சிறுகீறல் கூட விழுந்ததில்லையாம். அந்த அளவுக்கு மிகவும் கவனத்தோடு பஸ் ஓட்டி வந்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பான டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. நன்றி மாலைசுடர்
-
- 0 replies
- 696 views
-
-
வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப்படம் பிடித்த பெண் கைது வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப் புகைப்படமெடுத்த நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க விடுதியில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது கையடக்க தொலைபேசியால் படம்பிடித்துள்ளார். இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப…
-
- 0 replies
- 980 views
-
-
Published By: RAJEEBAN 18 APR, 2023 | 09:03 AM அமெரிக்காவில் வசிக்கும் சீன அதிருப்தியாளர்களை மௌனமாக்கும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு சீன முகவர்களை கைதுசெய்துள்ளதாக அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன அரச எதிர்ப்பாளர்களை துன்புறுத்திய சீன முகவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அறிவிக்கப்படாத பொலிஸ் நிலையங்களை நடத்தி வந்தனர் என நியுயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுஜியான்வாங் மற்றும் சென்ஜின்பிங் இருவரும் நியுயோர்க் நகரின் சைனாடவுனில் பொலிஸ்நிலையமொன்றை நடத்திவந்தனர். அமெரிக்க பிரஜைகளான இருவரும் சீன அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் நீதிக்கு இட…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-