Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தில் வின்டோ லாண்யா ரோமன் கோட்டை பகுதியில் போர் வீரர்கள் அறையின் மூலையில் தோண்டி அகழ்வு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது. இதன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மண்டை ஓட்டில் அடிபட்டு இருந்தது. இந்த எலும்பு கூட்டை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இது ஒரு பெண் குழந்தையின் எலும்பு கூடு என்றும், இவள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் அப்போது இங்கிலாந்தை ஆண்டை ரோமானியர்கள் மனிதர்களை புதைத்த இடங்களில் கோட்டைகள் மற்றும் நகரங்களை அமைத்ததாக கூறப்படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp…

  2. மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  3. மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது47). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் மகள் மாரிச்செல்வி (18) உள்ளார். மாரிச்செல்வி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாரிச் செல்வி விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிச்செல்வியின் வாயிலும், காதிலும் விஷம் ஊற்றப்பட்டிருந்தது. மகள் கொலைக்கு தந்தை ரெங்கசாமிதான் காரணம் என்பது தெரியவந்தது. ரெங்கசாமியின் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்த மூர்த்தி, வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மாரிச்செல்வியை விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரண் அடைவதற்காக காளவாசல் பகு…

    • 2 replies
    • 881 views
  4. மகளின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியாமைக்காக அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா – அஸ்வின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.களுக்கு ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்துள்ளார். ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்: எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பத…

  5. விபச்சாரம் தண்டனைக்குரிய குற்ற செயல். அதை தடுக்க விபச்சார தடுப்பு பிரிவு என்ற குழுவே காவல் துறையில் இயங்குகிறது. அதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி நடவடிக்கை எடுத்து தான் வருகின்றனர் ஆனாலும் அரசர்கள் காலத்தில் இருந்து இன்று வரை விபச்சாரம் பல வித டெக்னிக்குகளில் லாட்ஸ், குடில்கள், கணவன் மனைவி போல் கடலில் படகுகளில் என பயணித்து உயிர்காக்கும் வாகனமான ஆம்லென்ஸ்களில் கூட தொடர்கிறதே. தனியார் மருத்துவமனை வாகனங்கள் ஆள் அரவமே இல்லாத நெடுஞ்சாலைகளில் சுமார் 20 கி.மி தூரம் சென்றடைவதற்குள் அவசர அவசரமாக முடித்துக் கொள்ள வேண்டும். இந்த சேவையில் கல்லூரி மாணவ மாணவர்கள் ஈடுபடுத்தல் படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு முறைக்கு சுமார் ரூ 2000 முதல் 7000 ரூபாய் வசூலிக்கிறார்களாம…

    • 0 replies
    • 527 views
  6. இளம்பெண்களின் மார்பழகைப் பார்த்து பணத்தை கோட்டைவிட்ட தமிழர்! பாரீஸ் : பிரான்சில் ஏ.டி.எம்., மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரிடம், இரண்டு இளம் பெண்கள் தங்கள் மார்பழகைக் காட்டி, அவரது கவனத்தைத் திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில், "லெப்ட் பேங்க்' என்ற பகுதியில் , உள்ள ஏ.டி.எம்., நிலையத்தில் ஒரு தமிழர் பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணைப் பதிவு செய்து கொண்டிருந்த போது, 20 வயதுடைய இரு இளம் பெண்கள், அவரருகில் தங்கள் மார்பழகைக் காட்டியவாறு வந்து நின்றனர். கவர்ச்சியில் மயங்கிய அந்த நபர், ஒரு பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது, மற்றொரு பெண், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு…

  7. முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு) கடந்த வாரம் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..

  8. அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி ...(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) வியாழன், 26 ஆகஸ்ட் 2010 06:26 கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது. இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார். ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியி…

  9. மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…

  10. இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம்…

    • 2 replies
    • 599 views
  11. செவ்வாய்க்கிழமை, 17, ஆகஸ்ட் 2010 (19:37 IST) கரூரில் வாலுடன் பிறந்த குழந்தை: கலெக்டரிடம் மனு கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று கரூர் அருகே உள்ள மணவாசியில் கண்ணன் -சார்மிளா தம்பதிகளுக்கு பிறந்த ஆண்டு குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது குழந்தையின் பின்புறம் விநோதமாக சிறிய வால் போன்ற அமைப்பு உள்ளது தெரியவந்தது. குழந்தையின் வலது காலும் பாதிக்கப்பட்டிருந்தது. கை விரல்களும் வளர்ச்சி குன்றிய நிலையிலும், வலது கையில் ஒரு விரல் குறைவாகவும் இருந்தது. குழந்தை வளரும் போது காலப்போக்கில், இந்த அமைப்பு உதிர்ந்துவிடும் என்று நம்பினர். தற்போது ஒரு வயதாகப்போகும் குழந்தை விக்னேஷுக்கு, பின்புறம் உள்ள வால் போன்ற அமைப்பு மூன்று அங்குலம் நீளத்துக்கு வளர்ந்துள…

    • 1 reply
    • 565 views
  12. இலங்கையின் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவர், தனது கணவர் உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார். அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம். ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாம…

    • 4 replies
    • 712 views
  13. விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி அ‌‌றியலா‌ம். குழந்தை பெறும் தந்தை மானுடத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறுகிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. உயிரிழக்க வைக்கும் காதல் ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை உடலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற…

  14. வயது சிறுமி குழந்தை பெற்றாள் 9 வயது சிறுமி குழந்தை பெற்றாள் செவ்வாய், 24 ஆகஸ்ட் 2010 04:57 பெய்ஜிங் : ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் குழந்தை பெற்றுள்ளாள். சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன. சா…

  15. மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம் (புகைபடங்கள் , காணொளி இணைப்பு) செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இப் பிராகா நகரின் கிழக்கு திசையில் 70 கிலோமீற்றருக்கு அப்பால் செட்லெக் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மனித எலும்புக்கூடுகளிலான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலயத்தின் பெயர் ஒசாரே செட்லெக் தேவாலயம் ஆகும். இவ் அதிசய தேவாலயம் 40000 க்கு மேற்பட்டோரின் இறந்த உடல் எலும்புகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திடீரென பரவிய ப்ளெக்(plague) நோயினால் 30000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பாரிய உயிரிழப்புக்கு 'கறுப்…

  16. 61 வயது பிலிப்பைன்ஸ் பெண்ணை கற்பழிக்க முயன்று வாங்கிக் கட்டிய 41 வயது இலங்கையர்! வெள்ளி, 20 ஆகஸ்ட் 2010 19:46 இத்தாலியின் மில்லன் நகரில் 61 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டினார் 41 வயது உடைய இலங்கையர் ஒருவர். இப்பெண்மணி தாதியாக கடமையாற்றுகின்றார். ஆனால் இவர் கராட்டிக் கலையில் கறுப்புப் பட்டியை பெற்றுக் கொண்டவர். இவர் நேற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் ஒரு தொடர்மாடியில்தான் வசிக்கின்றார். இந்த இலங்கையரும் இத்தொடர்மாடியில்தான் இருக்கின்றார். இவர் மின்சாரத்தில் இயங்கும் மாடிப்படி ஊடாக சென்றபோது கத்தரிக்கோல் ஒன்றுடன் இலங்கையர் இவருக்காக வெளி வாசலில் காத்திருக்கின்றார். இலங்கையர் உள்ளாடை மாத்திரம் அணிந்திருந்தார். …

  17. முதலைக்காக கணவரை விவாகரத்து செய்த ஆஸ்திரேலிய பெண்மணி வியாழக்கிழமை, ஆகஸ்ட் 19, 2010, 14:56[iST] மெல்போர்ன்: 'ஆத்துக்காரர்' சவுண்டாக குறட்டை விட்டாலே டிவோர்ஸ் கேட்பவர்கள் வெள்ளையர்கள். அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி, தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் முதலைகளை வெறுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக தனது கணவரையே டிவோர்ஸ் செய்து விட்டார். ஆஸ்திரேலியாவில்தான் இந்த அக்கப்போர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் விக்கி லோவிங். முதலைப் பிரியை. பிரியை என்று சொல்ல முடியாது, வெறியை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தஅளவுக்கு முதலை என்றால் இவருக்கு உயிர். இவர் வீட்டில் நாய்களை விட முதலைகள்தான் நிறைய. வீடு முழுக்க தொட்டிகளை வைத்து அதில் முதலைகளைப் போட்டு நிரப்பி வைத்துள…

  18. ஆண்களோடு கூடி நெருங்கிப் பழகும் சவுதி முஸ்லீம் பெண்கள்.. அந்த ஆண்களுக்கு பாலூட்ட வேண்டும் என்று சவுதி இஸ்லாம் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். முஸ்லீம் சட்டத்திற்கு முரணாக பெண்கள் ஆண்களோடு நெருங்கிப் பழகின் அவர்களுக்கு குழந்தைகள் போல பாலூட்டின் அந்த ஆண்கள் குறிப்பிட்ட பெண்களின் உறவினர்களா அல்லது குழந்தைகளாக நோக்கப்படுவார்களாம். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லுறது..! தலிபானின் கொடுமைகள் என்று கட்டுரை வரையும் ஊடகங்கள் இதுகளை கண்டுகொள்ள மாட்டினம். ஏனோ..??! Women in Saudi Arabia should give their breast milk to male colleagues and acquaintances in order to avoid breaking strict Islamic law forbidding mixing between the sexes, two powerful Saudi clerics have said. T…

  19. . புலிக்கும், சிங்கத்துக்கும் பிறந்த குட்டி. "லைகர்" முன்பு குதிரையும் கழுதை இணையும் போது.... பிறந்தது கோவேறு கழுதை என்னும் போது நகைச்சுவையாக சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இப்போ... இந்தப் படங்களில் சிங்கத்துக்கும், புலிக்கும் பிறந்ததை "லைகர்" என்று சொல்கிறார்கள். http://www.youtube.com/watch?v=1zOWYj59BXI&feature=related http://www.youtube.com/watch?v=CmUt1h2217o .

  20. ஏடிஎம் மையத்தில் மார்பைக் காட்டி பணத்தைத் திருடிய 2 பெண்கள். பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த இரண்டு அழகான பெண்கள் [^] அங்கு பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவரிடம் தங்களது மார்புகளை காட்டி, கவர்ச்சியால் மயக்கி அந்த நபரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்த இரு பெண்களுக்கும் 20 வயது இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு ஏடிஎம் மையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது அங்கு ஒரு நபர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய இருவரும் மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டு தங்களது மார்புகளை திறந்து காட்டியுள்ளனர். படு நெருக்கத்தில் இரு பெண்களை கவர்ச்சிகரமாக பார்த்ததில் அந்த நபர் வெலவெலத்து போய் தன்னிலை மறந்தார். இதைப் பயன்படுத…

    • 6 replies
    • 888 views
  21. சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2010, 9:40[iST] சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர். இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியி…

  22. குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல். ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜ…

  23. நியூயார்க்: அமெரிக்காவின் ப்ரூஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ரான் ஸ்வீடன்(75). இவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. பசியில்லை, தொடர்ந்து இரும்பிக் கொண்டே இருந்தார். ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்தது. நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டார். கேப் காட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரான் ஸ்வீடனுக்கு எக்ஸ்&ரே எடுக்கப்பட்டது. அதில் நுரையீரலின் மூச்சுக்குழலில் கட்டியிருப்பது போல் தெரிந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அது கட்டியில்லை பட்டாணி என தெரிந்தது. காய்கறி சேலட் உணவு சாப்பிட்டபோது, புரையேறியதில் எப்படியோ ஒரு பட்டாணி அவரது மூச்சுக் குழலுக்குள் சென்று விட்டது. அது அங்கேயே பதுங்கி 1 1/2 இன்ச் அளவுக்கு முளைவிட்டிருந்தது. அதை ஆபரேஷன் மூ…

  24. புதுடெல்லி : பெண்களின் அழகு கிரீம்களை மறைந்து, ஒளிந்து ஆண்கள் பூசத் தொடங்கியது போய், வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மீது இப்போது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது. இதை நீல்சன் நிறுவன புள்ளிவிவரம் புட்டு வைக்கிறது. இதுபற்றி நீல்சன் நடத்திய ஆய்வு விவரம்: முகத்தில் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், மேடு பள்ளங்களை சரி செய்து பொலிவுடன் காட்டும் ‘பேர்னஸ்’ கிரீம்களை பெண்கள்தான் முன்பு பயன்படுத்துவார்கள். கடையில் அவற்றை தனக்கென கேட்டு வாங்க முடியாத இளைஞர்கள், வீட்டில் சகோதரியின் கிரீமை ரகசியமாக எடுத்து மறைந்திருந்து பூசிக் கொள்ளத் தொடங்கினர். இதை வீட்டினர் கவனித்தார்களோ இல்லையோ, நிறுவனங்கள் கவனித்து விட்டன. இளைஞர்களின் கஷ்டத்தை போக்க, ஆண்களுக்கான கிரீம்களை மார்க்கெட்டில் இறக்…

  25. மேட்டூர் : கிராமத்தில் உள்ள பக்தர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிப்பதற்கு கோவிலை சுற்றி உலவும் பேய்களே காரணம் என குறி சொன்னதால், நேற்று பக்தர்கள் கோவிலில் இருந்து பேயை விரட்டி அம்மனுக்கு பூஜைகள் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, சாம்பள்ளி கோயில்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்கள் நான்கு மாதத்திற்கு முன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகம் நடத்திய பின், விழா குழுவினர் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு என்ன காரணம் என கிராம மக்கள் சிலர் ஒரு சாமியாரிடம் குறி கேட்டுள்ளனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய போதிலும், கெட்ட ஆவி ஒன்று கோவிலை சுற்றி உலவுவதால் அம்மனால் பக்தர்களுக்கும், கிராமத்திற்கும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.