செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!! விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள். அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது. சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்…
-
- 0 replies
- 804 views
-
-
ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பிறந்தநாளா? கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்புஅறிவித்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப…
-
- 0 replies
- 228 views
-
-
1969இல் நாகேஸ் நடித்த உலகம் இவ்வளவுதான் என்ற திரைப்படம் வெளி வந்திருந்தது. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில், “ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் இறங்கி நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து இரசிப்பேன்” என்ற வரிகள் இருக்கும் இந்த வரிகளை என் நினைவுக்கு கொண்டு வந்தது, போர்த்துக்கலில் நடந்த சம்பவம் ஒன்று. போர்த்துக்கலில் உள்ள ஒரு கிராமம்தான் (São Lourenço) செள லோரென்சோ. ஆங்கிலத்தில் சொல்வதானால் St. Lawrence. கடந்த வார இறுதியில் இந்தக் கிராமத்தில் சிவப்பு வைன் ஆறாக ஓடி இருக்கிறது. அந்தச் சிறிய கிராமத்தின் வீதிகளில் ஆறாக ஓடிய சிவப்பு வைன்களின் அளவு 2.2 மில்லியன் லீற்றர்கள். வைன் தயாரிக்கு…
-
- 0 replies
- 431 views
-
-
2023ஆம் ஆண்டின் ’மறைவுக்குப் பின்னரும் வருமானம் குவிக்கும் பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில்’ பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் பலரும் தங்கள் படைப்புகள் மூலம், மறைவுக்குப் பின்னரும் அதிக வருமானம் குவித்து வருகின்றனர். அப்படியானவர்களை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. நடப்பாண்டின் பட்டியல் இந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 115 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் மைக்கேல் ஜாக்சன், இந்தப் பட்டியலில் முதலிடம் பி…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து க…
-
- 0 replies
- 634 views
-
-
28 NOV, 2024 | 12:09 PM முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199901
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நீதிமன்றம் விடுதலை செய்த திகைப்பான சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த 46 வயதுடைய கோடீஸ்வரரான வர்த்தகர் இஷான் அப்துல் அஸீஸ் இலண்டனில் வசித்து வருகின்றார். இவர் 18 வயதுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது குறித்த கோடீஸ்வரர் திகைப்பான ஒரு விடயத்தை கூறியுள்ளார். 'எனது ஆண் உறுப்பு தவறுதலாக பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊடுறுவி இருக்கலாம். இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது…
-
- 0 replies
- 302 views
-
-
-யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 / 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு- முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து, ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்ட தமது நாடுவாரியான மக்களவை உறுப்பினர்களை அறிமுகம்செய்து வைத்தனர். தொடர்ந்து, அந்தத்த நாடுகள் ரீதியாக தாம் மேற்க…
-
- 0 replies
- 420 views
-
-
விவசாயிகள்... பிரியாணி, உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பறவைகள் வாயிலாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ மதன் திலாவர் அளித்த பேட்டியில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக கூறியுள்…
-
- 0 replies
- 342 views
-
-
மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிராந்திய சாம்பியன்ஷிப் செஸ் தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 12 வயது சிறுமி ஒருவர் முழங்கால் வரையிலாக ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். 2-வது சுற்றில் அவர் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது போட்டியின் தலைமை நடுவர், தொடரின் விதிமுறைக்க…
-
- 0 replies
- 336 views
-
-
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை 21 மணிநேரம் காத்திருந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் திருமலைக்கு வருவது வாடிக்கை. அனைத்து மாநிலங்களிலும் தேர்வு முடிந்து பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் தின விடுமுறைகள் காரணமாகவும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை தர்ம தரிசன பக்தர்கள் 31 கம்பார்ட்மென்ட்களை கடந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும், நடைபாதை பக்தர்கள் 12 கம்பார்ட்மென்ட்களிலும், ரூ.300 விரை…
-
- 0 replies
- 470 views
-
-
கோமாவில் இருந்ததால் பழைய நினைவுகளை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்! [sunday, 2014-02-09 19:15:47] திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத…
-
- 0 replies
- 602 views
-
-
புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:00.28 AM GMT ] 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் மிக குறைவாக காணப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ஒரு கடற்படை தளத்தை நிறுவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இலங்கையில் சீனாவின் இருப்பு தொடர்பான இந்தியாவின் அவதானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் சீனாவின் கடற்படை தளங்களை நிறுவக்கூடிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட் டேட்டா நிறுவகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் ஹ…
-
- 0 replies
- 95 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார். கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார். தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார். எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து வ…
-
- 0 replies
- 434 views
-
-
பாம்புகளுடன் தேனீர் – எங்கு தெரியுமா? ஜப்பானில் சில ஆண்டுகளாக விலங்குகளை மையமாக கொண்டு இயங்கும் சில உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது டோக்கியோவில் snake café என்ற உணவகங்கள் சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடையில் 35 நஞ்சில்லாப் பாம்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாம்பும் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு மேசையில் இருக்கும், அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேனீர் குடிக்கலாம், விரும்பினால் பாம்புகளைத் தொட்டுப் பார்த்து விளையாடவும் செய்யலாம். அந்தக் கடைக்கு இரண்டு ஆண்டுகளில் 40,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்துள்ளனராம். கடைக்குள் செல்ல பன்னிரண்டரை வெள்ளி கட்டணமாக வ…
-
- 0 replies
- 434 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆல்பேனி மருத்துவ மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென மெலடீஸ் என்ற சிறப்பு மையம் உள்ளது. அங்கே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆபி என்கிற நான்கு வயது சிறுமிக்கும், அவளுக்கு மிகவும் பிடித்த ஆண் செவிலியரான மேட் ஹிக்கிலிங்குக்கும் திருமணம் நடந்தது. லூக்கேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆபி, தனது தாயிடம் ஆண் செவிலியரான மேட்டைத் திருமணம் செய்ய விரும்பியதாக கூறினார். இதனையடுத்து வெறும் 12 மணி நேரத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடந்த இடம் முழுக்க ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்தபின் தம்பதிகள் செல்ல ‘ஜஸ்ட் மேரிட்’ என எழுதப்பட்ட பொம்மைக் காரும் வைக்கப்பட்டிருந்தது. ‘இந்த ந…
-
- 0 replies
- 554 views
-
-
இந்த நவீன உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளுடன் வெளியே செல்வது அவர்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அடிக்கடி வெளியில் சுற்றுலா செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடப்பது குழந்தைகளுக்கு தனிமையான உணர்வை கொடுக்கலாம். இது அவர்களது இளமைக்கால மகிழ்ச்சியை கூட குறைக்கலாம். நீண்ட தூரம் பயணம் செய்து பல்வேறு விதமான மக்களின் வாழ்க்கை முறையை உணர்வது அற்புதமான மனிதனை செதுக்கும். கனடா நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு அவர்களது வாழ்நாளில் அழிக்க முடியாத சந்தோஷமான தருணத்தை கொடுக்க நினைத்தனர். புருஸ் கிர்பை மற்றும் கிரிஷ்டின் பிட்கெனென் என்ற அந்த தம்பதி தங்களது இரு ஆண் குழந்தைகளையும் உலகம் முழுவதும் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணினர். அது பெரும்பாலா…
-
- 0 replies
- 334 views
-
-
44-லிலும் குத்துவரும் . Saturday, 01 March, 2008 12:00 PM . டோக்கியோ, மார்ச்.1: ஜப்பானைச் சேர்ந்த 44வது பெண்மணி ஒருவர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறாராம். . கசுமி இசாக்கி என்னும் அந்த பெண்மணிக்கு 21 மற்றும் 14 வயதான 2 மகள்கள் இருக்கின்றன ராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குத்து சண்டை பயிற்சி பெற தொடங்கினார். இந்நிலையில் தற்போது அவர் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான லைசென்ஸ் பெற்றிருக்கிறார். இதன் மூலம் குத்து சண்டை போட்டிகளில் பங்கேற்கும் மிகவும் வயதானவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார். அந்நாட்டைச் சேர்ந்த 46வயது மனிதர் ஒருவர் இதற்கு முன்னர் இந்த பெருமையை பெற்றிருந்தார். ஆனால் அவர் தன்னுடை…
-
- 0 replies
- 734 views
-
-
ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன. குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்த…
-
- 0 replies
- 265 views
-
-
பேரன் உயிரிழந்த சோகம் தாங்காது பாட்டியும் உயிரிழந்தார் - யாழில் சம்பவம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார். இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போ…
-
- 0 replies
- 618 views
-
-
இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி கடல் சமாதி என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வரு…
-
- 0 replies
- 485 views
-
-
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார். வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம் புரண்டது. இதனால் வெங்கட்ராவின் வாழ்க்கை ஸ்டைல் மாறியது. கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான பணத்துடன் டிப்டாப்பாக திடீர் பணக்காரராக வலம் வந்த வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது. வெங்க…
-
- 0 replies
- 692 views
-
-
ஐ.நா. அமர்வில் அஸர்பைஜான் ஜனாதிபதி மகள் செய்த காரியம்! ஐக்கிய நாடுகள் சபையில் அஸர்பைஜான் ஜனாதிபதி மிக முக்கியமான பேச்சை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவையில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது மகள் செய்த காரியம் மக்களை எரிச்சலூட்டியுள்ளது. நடைபெற்று வரும் ஐ.நா.வின் 72வது அமர்வில், அஸர்பைஜானுக்கும் அதன் அண்டை நாடான ஆர்மேனியாவுக்கும் இடையில் 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் பற்றி அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹம் அலியேவ் உரையாற்றிக்கொண்டிருந்தார். தம் நாட்டின் மீது ஆர்மேனியா இனப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது என்றும், போர் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது மகள் லெய்லா அலியேவா (33) தனது கைத்தொலைபேசியில் முக…
-
- 0 replies
- 230 views
-