Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார். அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி மறுமாள் வந்தபோது அவருக்…

  2. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்கள் கடல் வழியாகத் தமிழகம் வந்தடைந்தார் எனப் பரபரப்புத் தகவல் கள் தமிழகத்தில் வெளியாகியிருக்கின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இராமேஸ்வரத்தில் குறிப்பாக மண்டபம் அகதி முகாமில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தித் தகவலைப் பூதகரப்படுத்தினர், என தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எனினும், திருமதி. மதிவதனியின் வருகை என்ற தகவல் வெறும் வதந்தி எனப் பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்கள், எனப் பிந்திக் கிடைத்த சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. இது பற்றி தமிழக நாளேடுகளில் வெளியான செய்திகளின் விவரம் வருமாறு :- அமுலில் இருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதல…

  3. ."எங்கிட்டே மோதாதே' கோல்கட்டா :கோல்கட்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் கற்களை வீசி தொல்லை கொடுத்த பார்வையாளர் களுக்கு, அவர்கள் பாணியிலேயே சிம்பன்சி குரங்கு பதிலடி கொடுத்தது. தொடர்ந்து அரைமணி நேரம் கற்களை வீசி வலுவை சிம்பன்சி காட்டியதும், பார்வையாளர்கள் தப்பி ஓடினர். கோல்கட்டாவில் அலிப்பூர் விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு இரண்டு சிம்பன்சி குரங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல அடி உயர தடுப்பு சுவர் உள்ள பகுதிக்குள் சிம்பன்சிகள் செய்யும் சேஷ்டைகளை பார்வையாளர்கள் கண்டு களித்து வந்தனர். சமீபத்தில், பார்வையாளர் ஒருவர் சிம்பன்சி மீது கல்லை வீசினார்.கோபம் அடைந்த இரண்டு சிம்பன்சிகளும், தடுப்பு சுவரை தாண்டி வெளியே வந்தன. பித்து பிடித்தது போல இங்கும் அங்கும் ஓ…

    • 1 reply
    • 1.2k views
  4. எய்ட்ஸ் பாதித்த பெண் குழந்தையை போட்டு ஓட முயற்சி மதுரை :எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண், பெற்றக் குழந்தையை, அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு ஓட முயன்ற போது பொதுமக்கள் பிடித்தனர். மேலுார் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்தன. கட்டட வேலை செய்து வரும் பஞ்சு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆறு மாதத்திற்கு முன் கணவர் நோயால் இறந்தார். உடன் வேலை பார்த்தவர்கள் துணையால் பிரசவத்துக்காக டிச., 29ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் பெண் குழந்தையை பெற்றார்.அப்போது நடந்த சோதனையில் அவரை எச்.ஐ.வி., பாதித்திருந்தது தெரிய வந்தது. குழந்தைக்கும் அந்த பாதிப்பு உள்ளதா என இன்னும் உறுதி செய்யப்பட…

    • 2 replies
    • 1.3k views
  5. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதி நோக்கி புயல் காற்று நகர்கின்றது அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதி நோக்கி புயல்காற்று நகர்ந்து வருதாகவும் சனிக்கிழமை அது கரையோரப்பகுதிகளை தாக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. 87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL

  7. பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த் [24 - December - 2007] * கைது செய்ய காத்திருந்த பொலிஸார் தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட ஆதரவாளருமான விஜயகாந்த் பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்தநாள் விழா இடம்பெற்ற இடத்தை உளவுப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்ய காத்திருந்த சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எடுக்கும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் அள்ளித் தருவது அவரது மனைவி பிரேமலதா பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்களிலும் விஜயகாந்தே இதை வெளிப்படையாகக் கூறி வருகிறார். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வி…

  8. 24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன? 'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க... ''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே வைத்திருக…

  9. கெயிட்டி ஐநா அமைதிகாக்கும் படையில் பணியாற்றிய இலங்கையைச் சேந்த 114 இராணுவத்தினர் பெண்கள் குழந்தைகள் என பாராது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால் அப்பணியில் இருந்து ஐநா அவர்களை நீக்கியுள்ளது. http://www.latimes.com/news/nationworld/wo...1&cset=true U.N. confronts another sex scandal template_bas template_bas In Haiti, more than 100 peacekeeping troops from Sri Lanka are deported on suspicion of illicit liaisons. By Carol J. Williams, Los Angeles Times Staff Writer December 15, 2007 PORT-AU-PRINCE, HAITI -- Girls as young as 13 were having sex with U.N. peacekeepers for as little as $1. Five young Haitian women who followed soldiers back to …

    • 9 replies
    • 1.9k views
  10. என்னை கொல்ல முயலும் சார்லஸ்-டயானாவின் கடித பரபரப்பு வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கார் விபத்தை உருவாக்கி தன்னை இளவரசர் சார்லஸ் கொல்ல முயல்வதாக, பாரீஸ் விபத்தில் உயிரிழந்த இளவசரி டயானா தனது கைப்பட எழுதிய கடிதம் இப்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் தனது காதலர் பயத் டோடியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டயானா. அவரது மரணம் எப்படி நடந்துத என்பதில் இன்னும் கூட தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந் நிலையில் டயானா தனது கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பட்லரான பால் பர்ரெலுக்கு டயானா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கணவர் சார்லஸ் தன்னை கார் விபத்தில் கொல்ல முயற்சிப்பதாக கூறிய…

    • 4 replies
    • 1.4k views
  11. செயற்கை இருதயம் மட்டும் தொடர்ந்து இயங்குகிறது * 7 ஆண்டுக்கு முன் பொருத்தி கொண்டவர் மரணம் பர்மிங்காம்: உலகிலேயே முதல் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்து விட்டார். ஆனால், அவரது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமை சேர்ந்தவர் ஹவ்டன். 2000வது ஆண்டில், புளு காய்ச்சல் காரணமாக ஹவ்டனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஜான் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் கண்டுபிடித்த செயற்கை இதயம் அதுவரை மனிதர்களிடம் பொருத்தி பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான், டாக்டர் ராபர்ட் ஜார்விக் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை ஹவ்டனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்ற…

    • 1 reply
    • 1.1k views
  12. உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிப்பு. உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆராட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.6 மீற்றர் நீளம் உடைய இந்த நாக பாம்பு ஒரே தடவையில் 20 பேரை கடித்து கொல்லக்கூடிய விசத்தினை கொண்டிருக்கின்றது என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். AFP.

    • 9 replies
    • 3.4k views
  13. கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2007 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்க…

    • 1 reply
    • 1.1k views
  14. கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு கும்பகோணம்: சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாக கூறி, கும்பகோணம் கோர்ட்டில் இந்து முன்னணி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பெண் டைரக்டர் மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது. துவக்க விழாவில் கதாநாயகன் பார்த்திபன், கதாநாயகி சாயாசிங், எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையின்போது லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் முன்பு குஷ்பு செருப்பு அணிந்தபடி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.…

    • 52 replies
    • 12.2k views
  15. பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007 சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார். அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் …

  16. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ேபாட்டியிடும் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி லெஸ்பியன் என்று ஒரு பிரச்சாரம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ஹிலாரி மறுத்துள்ளார். ஹிலாரிக்கும் அவரது உதவியாளரான ஹூமா அபுதினுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, என்னைப் பற்றி என்னென்னவோ புரளியை பரப்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் லெஸ்பியன் என்று சொல்லப்படுவதில் உண்மையும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. எப்போதும் ஹிலாரியுடனேயே இருக்கும் ஹூமா பற்றி பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவர் லெபனானைச் சேர்ந்தவர், ஜோர்ட…

  17. `செம்பு'மூலம் திருடர்களை கண்டுபிடிக்கும் கிராம மக்கள் ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் இருந்து 45கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நாகுலபள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண் டுகளாக செம்பு மூலம் திரு டர்களை கண்டு பிடித்து வருகிறார்கள். இந்த செம்பில் தண்ணீர் ஊற்றி அங்குள்ள அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அதற்கு குங்குமம், சந்தனம்தடவி, மாலை அணிவித்து ஊரின் மையப்பகுதியில் வைத்து விடுகிறார்கள். அந்த ஊரில் திருட்டு, கொள்ளை ஏதாவது நடந் திருந்தால், நாட்டாமை கிராம மக்களிடம் விசா ரணை நடத்துவார். பின்னர் சந்தேகப்படும் நபர்களை குறித்து வைத்துக் கொள்வார். பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் செம்பை வைத்து சந்தேகப்படும் நபர்களின் பெயரை ஒவ் வொன்றாக …

    • 5 replies
    • 1.9k views
  18. Started by pepsi,

    ‘‘மறுபிறவி எடுத்து வந்தது மாதிரி இருக்கு. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் ஆரம்பித்து வாழ்க்கையில் எல்லாத்தையுமே இனிதான் புதுசா தொடங்கணும். இனிமே எனக்கு ரெண்டு அம்மா. இவங்க சுபலட்சுமி சண்முகம். என்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா. இவங்க சாந்தி சுரேஷ். இந்த இரண்டாவது பிறவியை எனக்குத் தந்த என் நண்பன் அருணோட அம்மா’’ இரண்டு அம்மாக்களுக்கும் நடுவே குழந்தையாகச் சிரிக்கிறார் விக்னேஷ்வரன். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்-தட்ட கைவிடப்-பட்ட நிலையில், தன் இறுதி நாட்களை எண்ணிக்-கொண்டு இருந்தவர் விக்னேஷ்வரன். அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவர். பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து தேர் இழுத்ததன் பலன்... ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை மு…

  19. பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை! இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். சூகடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று சூகூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்! அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், சூஇரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ள…

  20. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவிஸ் பெண் ரூ. ஒரு கோடி காணிக்கை நகரி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் காணிக்கை அளித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத இவர், கடந்த ஆண்டு திருப்பதி திருமலைக்கு வந்தார். அப்போது, தேவஸ்தான அதிகாரிகளிடம் தனக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் சொத்துகளையும் தானமாக வழங்க முன்வருவதாகக் கூறினார். தனது கணவர் நினைவு தினத்தன்று, திருமலையில் திருப்பாவாடை சேவை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும் உயிர் காக்கும் திட்டம், அன்னதான திட்டத்திற்கு இந்த காணிக்கையை உபயோகிக்க விருப்பம் தெரிவித்த அவர், முதல் கட்டமாக ஒரு…

  21. ‘‘எங்க ஊருல தொடர்ந்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. திருடனை கண்டுபிடிக்கறதுக்காக ‘தேங்கா பூசாரி’யை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க. நீங்க வந்து நேர்ல பாத்து நியூஸ் எழுதுங்களேன்...’’ இப்படி விநோத அழைப்பு ஒன்று சேலம் மாவட்டம் மாரியம்மன்கோயில் புதூர் என்ற கிராமத்து வாசகரிடமிருந்து வர, எதிர்பார்ப்போடு புறப்பட்டோம். சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும் குக்கிராமம்தான் மாரியம்மன்கோயில் புதூர். முதலில், ஆடுகளைப் பறிகொடுத்த பெருமாளிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எங்க ஊரே விவசாயத்தை நம்பிதாங்க இருக்கு. காட்டுல மேட்டுல சுத்தும்போது பூச்சி பொட்டு தீண்டிப் புடக் கூடாதுங்குறதுக்காக எங்க குலதெய்வத்துக்கு ஆட்ட…

    • 14 replies
    • 3.5k views
  22. மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார் Monday, 19 November, 2007 02:31 PM . சென்னை, நவ. 19: அமெரிக்காவில் வரதட்சணை கொடு மைக்கு ஆளாகி, ஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை செபாஸ்டின் கூறியுள்ளார். . இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த செபாஸ்டின் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது: என் பெயர் செபாஸ்டின். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள் ளேன். என் மனைவி பெயர் ஒபிலியா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. எங்களுக்கு ஸ்டான்லி ஜெரால்டு, ஜெஸ்டின் வசுந்தர ராஜ் என்ற இரண்டு மகன்களும், ஸ்மலின் ஜெனிட்டா என்ற மகளும் உள்ளனர். நாங்கள் திருச்சி, பாலக்கரையில்…

    • 14 replies
    • 2.6k views
  23. தான் கடையில் வாங்கிவந்த முட்டைகளை மத்தியானம் பொரித்து சாப்பிடுவதற்காக சட்டியில் உடைத்து ஊற்றியபோது அவற்றினுள் இருந்த மஞ்சள் கருக்களை காணவில்லை என்று பொதுமகன் ஒருவர் போலிசில் புகார் கொடுத்ததால் நேற்று தமிழ்நாடு சென்னையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்த சட்டிகள், மற்றும் பொலித்தீன் பைகளை கொண்டுவந்து அவற்றினுள் முட்டையை அடித்து ஊற்றி அதனுள் மஞ்சள் கரு இருப்பதை உறுதிசெய்தபின்பே கடையில் இருந்து முட்டைகளை வீட்டுக்கு வாங்கிச்சென்றனர். முட்டையினுள் இருந்த மஞ்சள்கரு எப்படி காணாமல் போயுள்ளது என்பது பற்றி அக்கறை கொள்ளாத மைனாரிட்டி தி.மு.க அரசு விரைவில் பதவி விலகவேண்டும் என்று செல்வி. ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். செல்வி…

  24. சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …

    • 8 replies
    • 1.9k views
  25. கோயிலுக்கு மாணவியை பொட்டு கட்டிவிட்ட கொடுமை. திருக்கோவிலூர் :பள்ளி சிறுமியை, கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட கொடூர சம்பவம், திருக்கோவிலூர் அருகே அரங்கேறியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு வாழைமரம் கட்டி மைக்செட் போட்டு விநோத நிகழ்ச்சி துவங்கியது. இதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - அஞ்சலை தம்பதியரின் ஏழாவது மகள் 13 வயது சிறுமி, கிருஷ்ணவேணியை மாரியம்மன் கோயிலுக்கு பொட்டுக் கட்டி விடும் நிகழ்ச்சி அது. இவர் அரங் கண்டநல்லூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாடு மேய்க்க ஆள் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். தேவதாசி…

    • 12 replies
    • 13.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.