Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சட்டவிரோதமாக குடியேறிய அகதி: விமானத்திற்குள் சரமாரியாக தாக்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 11:21.19 மு.ப GMT ] சட்டவிரோதமாக குடியேறிய அகதி ஒருவரை, விமானத்திற்குள்ளேயே சரமாரியாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்கு குடியேறும் அகதிகளை அந்நாட்டு அரசு ‘அகதிகள் முகாம்களில்’ தற்காலிகமாக தங்க வைத்து பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். சில வாரங்களுக்கு முன் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக கூறி அவரை ஸ்பெயின் விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்போது, விமானத…

    • 0 replies
    • 316 views
  2. திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…

    • 0 replies
    • 867 views
  3. வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்களஅரசை நிறுவியவன் என்று சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூலை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கதைகளும் இதில் உண்டு. இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்க…

    • 0 replies
    • 1.5k views
  4. இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பி…

  5. தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும். நன்றி - newjaffna.com http://newjaffna.com/fullview.php?id=MTg0NjU=

    • 0 replies
    • 745 views
  6. ஜெய்ப்பூர்: உங்களுக்குப் பார்க்கப்படும் மாப்பிள்ளைகளின் வீடுகளில் டாய்லெட் வசதி இல்லாவிட்டால் தயவு செய்து அந்த வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போகாதீர்கள், நிராகரித்து விடுங்கள் என்று பெண்களுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை கூறியுள்ளார். நாட்டில் கோவில்களைக் கட்டுவதற்குப் பதில் டாய்லெட்கள்தான் அதிகம் கட்டப்பட வேண்டும் என்ற யோசனையை அண்மையில் கூறியவர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில் பெண்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார் அவர். ஜெய்ப்பூரில் நடந்த பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டாய்லெட் வசதி ஒரு வீட்டில் இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். பிறகே அந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு போங்கள். டாய்லெட் இல்லாத வீடுகளில் ப…

    • 0 replies
    • 508 views
  7. பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம…

  8. ஓக்குநொஷிமா (Ōkunoshima) ஜப்பானின் Hiroshima மற்றும் Shikoku இற்கு இடைப்பட்ட சிறிய தீவாகும், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தினரின் இரசாயன உற்பத்திகளின் க்கிய அமைவிடமாகவும் இத்தீவு காணப்பட்டது. இன்று பலராலும் விரும்பப்படும் பாசத்திற்குரிய ஒரு பிரதேசமாக இது மாறியிருக்கிறது. முயல் தீவு என அழைக்கப்படும் இத்தீவு முழுவதும் முயல்கள் செறிந்து வாழுகின்றன, 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சுமார் 500ற்கும் மேற்பட்ட முயல்கள் சுதந்திரமாக நடமாடுகின்றன. http://www.puthiyaulakam.com/2013/01/okunoshima.html

  9. செய்த தவறுக்காக மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக மயானத்தில் வாழும் வயோதிபர்: குருநாகலில் சம்பவம் தனது மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக வயோதிபர் ஒருவர் கல்லறையில் வாழும் அதிசய சம்பவம் குருநாகல் கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பகுதியில் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற வயோதிபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார். குறித்த நபர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், 'நான் நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாவை இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் 30…

  10. ஆயிரம் கோழி­களைத் திருடி இறைச்­சிக்­காக விற்­பனை செய்த நான்கு சந்­தேக நபர்­களை மிஹிந்­தலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். மிஹிந்­தலை மின்­சார சபை வீதி­யி­லுள்ள கோழிப்பண்­ணை­யொன்­றி­லி­ருந்தே கோழிகள் திரு­டப்­பட்­ட­தா­கவும் விற்­கப்­பட்ட கோழி­களில் எஞ்­சி­யி­ருந்த 93 கோழி­களை பொலிஸார் மீட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கோழி­களை ஏற்றிச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட லொறி­யையும் கோழி­களை விற்று பெற்றுக்கொண்ட மூன்று இலட்­சத்து 93 ஆயிரம் ரூபா­வையும் முக்­கிய சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். கடந்த 8 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கும் 10.30 மணிக்­கு­மி­டையில் கோழிகள் திரு­டப்­பட்­ட­தா­கவும் அச்­சந்­தர்ப்­பத்தில் பண்ணை உரி­மை­யாளர் வெளிய…

  11. பயணிகள் தப்பியோடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல் புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக பால்மா டி மல்லோர்காவிற்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் தரையிறங்கியதும், 21 பயணிகள் ஓடுபாதையின் குறுக்கே ஓடி, சுற்றுச்சுவர் வேலிக்கு மேல் பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வ…

  12. தெரிந்து கொள்வோம்: கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும், கற்பூரத்திற்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே. https://www.facebook.com/photo.php?fbid=644553492269769&set=a.134953169896473.25916.126712174053906&type=1&theater

  13. ஆட்டுக்கறி சாப்பிடும் விநாயகர்... ஆஸ்திரேலிய நிறுவனத்தின் விஷமத்தால் சர்ச்சை! ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என பலரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல அந்த வ…

  14. இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது. இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா. இளைஞர்களுக…

    • 0 replies
    • 605 views
  15. ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார். “சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம். ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது” என டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தான் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார், ஆனால் நான் தான் பிரசாரத்தை முன்னெடுத்தேன். கஞ்சா செய்கையை மட்டும் அபிவிருத்தி செய்வதே பொர…

  16. சனி 18-08-2007 00:31 மணி தமிழீழம் [தாயகன்] தமிழக தடுப்பு முகாமில் இரண்டு இலங்கையர் உண்ணா நிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இருவர் கடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டதால், சுய நினைவிழந்த இருவரும் நேற்று செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 அகவையுடைய அமுதசாகர், 35 அகவையுடைய முஹமட் இஸ்மயில் ஆகியோரே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருடன் இணைந்து மேலும் 17 தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தடுப்பு முகாம் வட்டாரங்கள் தெரிவித்த போதிலு…

  17. நடிகையுடன் ஊர் சுற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது. அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும்…

  18. வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி Vhg அக்டோபர் 06, 2024 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது. இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை. …

  19. நியூஸிலாந்து றக்பி அணியின் அங்கியை தனது ஊழியர்களுக்கு இன்று அணிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸியின் கான்டாஸ் நிறுவனம் உலகக் கிண்ண றக்பி சுற்­றுப்­போட்­டியில் நியூ­ஸி­லாந்து அணி சம்பி­ய­னா­கி­ய­தை­ய­டுத்து, அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிர­தான விமான சேவை நிறு­வ­ன­மான கான்டாஸ் நிறு­வனம், இன்று திங்­கட்­கி­ழமை தனது விமா­னங்­களின் ஊழி­யர்கள் அனை­வ­ருக்கும் நியூ­ஸி­லாந்து அணியின் சீரு­டை­யான கறுப்பு நிற அங்­கியை அணி­விக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. உலகக் கிண்ண றக்பி போட்டி தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லி­யாவின் கான்டாஸ் நிறு­வ­னத்­துகும் நியூ­ஸி­லாந்தின் எயார் நியூ­ஸிலண்ட் நிறு­வனத்­து­க்கும் இடையில் நடை­பெற்ற பந்­த­யமே இதற்குக் காரணம். அவுஸ்­தி­ரே­லி­யாவும் நிய…

  20. ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது. தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தில் 114வது பிறந்த தின நிகழ்வுகள் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கியிருந்…

  21. லன்டனில் பிக் பென்னுக்கு அருகில் பஸ் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு 2016-02-09 08:18:18 லண்டன் நகரில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சி பலரை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரபல பிக்பென் கடிகாரத்துக்கு அண்மையிலுள்ள லம்பெத் பாலத்தின் மீது ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தட்டு பஸ் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இக் காட்சியை கண்ட பலர் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாமோ என அஞ்சினர். எனினும், அது திரை…

  22. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொட்ட மஞ்சு மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோடாங்கியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 48). விவசாயி. இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது இரண்டாவது மனைவி இவருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் 3-வதாக அதே மலைக்கிராமத்தை சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை (14) கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். முனியம்மாவை திருமணம் செய்ய அவரது தந்தைக்கு விவசாயி மாதப்பன் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இந்த தகவல் அந்த கிராமத்துக்கு சென்று வந்த ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்டிற்கு தெரிய வந்தது. அவர் இன்று ஒரு குழுவை அனுப்பி அங்கு விசாரணை …

  23. சவூதி அரேபியாவில் ஒரு பாகிஸ்தானியரை கொன்றதற்காக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிலுவையில் அறையப்பட்டது. சவூதி அரேபியாவில் பணிபுரிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பாஸ்தே செய்யது கான் என்பவரை ஓமனைச் சேர்ந்த முகம்மது ரஷாத் கைரி ஹுசைன் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு ஹுசைன் கானை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜிசான் நகரில் ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சிலுவையில் அறையப்பட்டுள்ளது. சவூதியில் ஹுசைனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 28 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் சவூதியில் மொத்தம் 76 பேரி…

  24. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.