செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு 03 May, 2023 | 10:12 AM Published By: Sethu அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட் டுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் இம்மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார். உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி இது. இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று சோதனையிட்டனர். அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்…
-
- 4 replies
- 635 views
- 1 follower
-
-
தனது இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியைப் பலவந்தமாகச் செலுத்தி அவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதால் மயக்கமடைந்த வைத்தியரின் மனைவி ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணமாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவருடன் அடிக்கடி தகராறு செய்து வருபவர் என விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சந்தேக நபரான வைத்தியர் …
-
- 5 replies
- 1k views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் பூதிநத்தம். இங்குள்ள மக்கள் திடீரென்று மதுபாட்டில்களை பொதுவெளியில் உடைத்தது ஏன்? இங்குள்ள மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும். இதை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தனர். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலா…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
விந்து வங்கியூடாக தனது விந்தணுக்களை வழங்கி 550 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகள் உருவாக்கக் காரணமாக இருந்த 41 வயதான நெதர்லாந்து ஆண் ஒருவர் எனியும் விந்து வங்கிக்கு விந்தணுக்கள் தரக்கூடாது.. அதனை பாவிக்க அனுமதிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார். மீறின் 88,000 பவுன்கள் அபராதம் விதிக்கப்படுமாம். இந்த வினோதச் செய்தியை பிரசுரித்திருப்பது பிரித்தானிய ஊடகம் ஒன்று.
-
- 10 replies
- 856 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 APR, 2023 | 03:31 PM பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழ…
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
இந்தியா – கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 😎 மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோசமான மின்கலம் (Battery) காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவனம் தேவை – பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் கைபேசி பயன்படுத்தும் நேரத்த…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மாகொல ஞான மௌலி மாவத்தையை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கு ஹங்குரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் சமூக வலைத்தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து உறவினர்களிடம் அப்பெண் தெரியப்படுத்தியதையடுத்து, அவரின் மருமகன் மற்றுமொரு யுவதியின் போலியான நிழற்படத்தை பயன்படுத்தி, WhatsApp கணக்கை உருவாக்கி குறித்த இளைஞருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி கொழும்பிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த இளை…
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது தந்தை மகள் உறவு எப்போதும் ஸ்பெஷல். மகள்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் அப்பா தான். இங்கும் ஒரு தந்தை தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி அலைகிறார். எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார். …
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
ஹிட்லர் - மர்மங்களின் புதையல்! ஹிட்லர் என்ற தனிமனிதனை ஆராய்வது சுவாரசியமானது. காரணம், ஹிட்லரைச் சுற்றி இப்படி பல சர்ச்சைகள் சூழ்ந்திருப்பதால் தான். இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க 00:00 00:00 வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் Advertisement: 0:15 Close Player 'மகனே. இதுவரை உன் தந்தை யார் என்று ஒருபோதும் உன்னிடத்தில் நான் சொல்லியது இல்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நான் இன்று ஒரு உண்மையை உனக்கு சொல்கிறேன். எனது இளமை காலத்தில் ஒர…
-
- 0 replies
- 475 views
-
-
சிங்கங்களை ஏற்றுமதி செய்யப்போகிறதா விவசாய அமைச்சு? சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய அமைச்சகம் இப்போது குரங்குகளையும் சிங்கங்களையும் கலந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் டோக் மக்காக் குரங்குகளை அகற்றும் திட்டத்தை விவசாய சங்கங்கள் ஆதரிக்கின்றன என்று அமைச்சகம் ஏப்ரல் 16 அன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. எவ்வாறாயினும், குறித்த ஊடக அறி…
-
- 0 replies
- 247 views
-
-
காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …
-
- 1 reply
- 573 views
- 1 follower
-
-
21 APR, 2023 | 05:08 PM திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தாக்…
-
- 0 replies
- 570 views
- 1 follower
-
-
பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் ஆசிரியர் பாலியல் ரீதியான சேட்டை : விசாரணைகள் ஆரம்பம்! By kugen வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து…
-
- 1 reply
- 972 views
-
-
அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 20 APR, 2023 | 03:48 PM யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி சென்றதாக பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரைச் சேர்ந்த அரச குமார் கடந்த 16 ஆம் திகதி தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு நாட்டிக்கள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காலில் பிளாஸ்டிக் கட்டிய புறா ஒன்று அவரது நாட்டுப்படகில் தஞ்சமடைந்துள்ளது. புறா காலில் கட்டியிருந்த பிளாஸ்டிக்கில் சி…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஏப்ரல் 2023, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையாக இருக்கும்போது, தனது பெற்றோருடன் மொடெனா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கத்தோலிக்க ஜெபக் கூட்டங்களில் பங்கேற்பதை கேப்ரியல் அமோர்த் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நகரம் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரார்த்தனையில் கவனம் செலுத்தாமல், சிறுவயது குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனத்துடன் தேவாலயத்தை சுற்றி கண்ணாமூச்சி விளையாடுவதில் அவர் ஆர்வம் செலுத்தினார். அதேவேளையில், அவரது நன்னடத்தைக்காக அம்மா இனிப்புகளை வழங்கும்போது சமத்தாகிவிடுவார். தனது குறும்புக்கார மகன் உலகின் …
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
‘ஸ்ரீ’ என்ற சாதகமற்ற வார்த்தையின் காரணமாகவே கடந்த சில தசாப்தங்களாக நாடு பெரும் அழிவை சந்தித்திருக்கிறது என விஞ்ஞான எழுத்தாளரும் வானவியலாளருமான அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலை முதல் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தை அடங்கிய நிறுவனங்கள் திவாலாகியது வரை இந்த ‘ஸ்ரீ’ தான் காரணம், . இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான்” என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்த 1956 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டின் துரதிர்ஷ்டம் ஆரம்பமானது “வாகன இலக்கத் தகடுகளில் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் ப…
-
- 1 reply
- 636 views
- 1 follower
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மருத்துவமனை நிர்வாகத்தால் மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென தெரிவித்தார். நோயாளர் காவு வண்டியின் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரி…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…
-
- 6 replies
- 730 views
-
-
Published By: RAJEEBAN 18 APR, 2023 | 09:03 AM அமெரிக்காவில் வசிக்கும் சீன அதிருப்தியாளர்களை மௌனமாக்கும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு சீன முகவர்களை கைதுசெய்துள்ளதாக அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன அரச எதிர்ப்பாளர்களை துன்புறுத்திய சீன முகவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அறிவிக்கப்படாத பொலிஸ் நிலையங்களை நடத்தி வந்தனர் என நியுயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுஜியான்வாங் மற்றும் சென்ஜின்பிங் இருவரும் நியுயோர்க் நகரின் சைனாடவுனில் பொலிஸ்நிலையமொன்றை நடத்திவந்தனர். அமெரிக்க பிரஜைகளான இருவரும் சீன அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் நீதிக்கு இட…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,THE HARPER LAW FIRM கட்டுரை தகவல் எழுதியவர்,பிராண்டன் டிரெனான் பதவி,பிபிசி நியூஸ், வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லான்டா நகர சிறைச்சாலையில் உயிரிழந்த ஒரு நபரை “பூச்சிகளும் மூட்டைப்பூச்சிகளும் உயிரோடு சாப்பிட்டுவிட்டதாக” அவரது குடும்ப வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். லாஷான் தாம்சன் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தீர்ப்பளித்த பிறகு ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டார். அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்ச…
-
- 4 replies
- 850 views
- 1 follower
-
-
சிங்கள தமிழ் புத்தாண்டு இன்று உதயமானது. புத்தாண்டின் சுப வேளைகளில் நாடு முழுவதும் சடங்குகள் செய்யப்பட்டன. புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்ட பல விளையாட்டுகள் இருப்பது சிறப்பு. இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டார் என்பதும் குறிப…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
குவைத்தில் வசிக்கும் தொழிலதிபர் வழிகாட்டல் : கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் யாழில் கைது Published By: Digital Desk 5 14 Apr, 2023 | 11:03 AM கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலம…
-
- 1 reply
- 318 views
-
-
Published By: SETHU 11 APR, 2023 | 06:19 PM பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது. கோமியம் எனவும் பசுவின் சிறுநீர் குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளிலும் மக்கள் சிலர் பசுவின் சிறுநீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நோய்களை பசுவின் சிறுநீர் குணப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். கொரோனா பரவல் உச்சத்திலிருந்துபோது பசுவின் சிறுநீர் அருந்தும் ந…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-