செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி ஸ்பெயினிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டலோனியாவில் மேலாடையின்றி பொது நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்அறிவிப்பினையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். கட்டலோனியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பல நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்லும் பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக ஒவ்வொரு கோடையிலும் இதுகுறித்த ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, “தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் க…
-
- 0 replies
- 359 views
-
-
தந்தையுடன் வாக்குவாதம் - மகள் கொலை தந்தையுடன் வாக்குவாதம் செய்த குடிபோதை ஆசாமி, காத்திருந்து, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒன்றும் அறியாத 19 வயது மகளை மறைந்திருந்து பின்னால் சென்று கத்தியால் குத்தினார். வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், அந்த இளம் பெண். சிங்கள ஊரில் சம்பவம், குடி, போதைப்பொருள்....கொலை, கொலை.... கொலைகள்.... இலங்கை எங்கே செல்கிறது. https://www.youtube.com/watch?v=u4IR5Y56xWU&ab_channel=DailyMirrorNews
-
- 0 replies
- 261 views
-
-
இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்; யாழில் பரபரப்பு யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https…
-
- 0 replies
- 385 views
-
-
உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது 2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடக்க சென்றார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார். கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
27 JUN, 2023 | 10:35 AM உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார். பிரதமர் மோடியின் பெயர் பட்டி த…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
தன்னைக் கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதியைக் கொன்ற பெண் தன்னைக்கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதி மீது பெண் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோப் கோபா (Phoebe Copa) என்ற பெண் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெண்டகியைச் சேர்ந்த குறித்த பெண் தனது காதலனைக் காண ஊபரில் பயணித்துள்ள நிலையில், டெக்ஸாஸின் எல்லைநகரமான எல் பாசோ பகுதியில் வைத்து தான் மெக்ஸிகோவுக்கு கடத்தப்படுவதாக எண்ணி அதன் சாரதியான டேனியல் பீட்ரா கார்சியா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 52 வயதான குறித்த சாரதி உயிரிழந்துள்ளார் . இதனையடுத…
-
- 0 replies
- 260 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி பட்டேல் பதவி,பிபிசி குஜராத்திக்காக 26 ஜூன் 2023, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் "எங்கள் 13 வயது மகள் எங்களைக் கொல்ல சதி செய்கிறாள். சமையில் அறையில் உள்ள சர்க்கரைக் குப்பியில் மருந்தை கலக்குகிறாள், தினமும் காலையில் நான் குளியலறைக்குச் செல்லும்போது குளியலறையில் எண்ணெயை கொட்டுகிறாள், யூடியூப்பில் கொலை வீடியோக்களை எப்போதும் பார்க்கிறாள். " குஜராத்தின் ஆமதாபத்தைச் சேர்ந்த 56 வயது தந்தை தனது மகள் குறித்து கூறிய வார்த்தைகள் இவை. குஜராத் அரசால் செயல்படுத்தப்படு 'அபயம்' என்ற 181 ஹெல்ப்லைனை தொடர்புகொண்ட…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 23.06.2023 யேர்மனி முனிச் நகரில் இருந்து சோபியா (பல்கேரியா)வுக்கு லுஃப்தான்சா விமானம் ஒன்று புறப்படத் தயாரக இருந்தது. திடீரென 27 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் தனது உடைகளைக் களைந்து விட்டு பெரும் சத்தமாகக் கூச்சல் போட ஆரம்பித்தாள். நிலமையைச் சீராக்க விமானத்துக்குள் பொலிஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவளுக்கு உடையை அணிவிக்கவோ, அவளைச் சமாதானப் படுத்தவோ முடியவில்லை. இதற்கிடையில் அவளது நிர்வாண மேனியை போர்வை கொண்டு மூடி விட எத்தனித்த ஒரு பொலிஸின் இடது கையின் முன்பக்கத்தில் கடித்து காயத்தையும் ஏற்படுத்தியிருந்தாள். நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் விமானத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட பல்கேரியாவைச் சேர்ந்த அந்தப் பெண் மருத்…
-
- 5 replies
- 670 views
-
-
யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…
-
- 15 replies
- 1.1k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
குட்டைப் பாவாடை அணிந்த மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மருமகளைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று அவரது மருமகள் மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளின் மீது சூடான எண்ணெயை ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது கணவரிடம்தெரிவித்தபோது, அவரும் தந்தையின் செயலை ஆதரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்யத் தான் தி…
-
- 0 replies
- 476 views
-
-
மாடுகள் கொல்லப்பட வேண்டும் “எங்கள் நாட்டு பட்டர் மிகவும் சுவயானவை. ஏனெனி்ல் எங்கள் மாடுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன” என்று ஐயர்லாண்ட், பட்டருக்காக விளம்பரம் செய்கிறது. ஆனால் 19.06.2023 ஐயர்லாண்ட் நாட்டால் இருந்து வந்த செய்தி அதற்கு நேர்மறையாக இருந்தது. மாடுகளுக்கு ஒருவேளை படிக்கத் தெரிந்திருந்தால் அந்தச் செய்தியை வாசித்து அவைகள் மகிழ்ச்சியைத் தொலைத்து கண்ணீர் வடிக்கும் . பட்டர்களும் கூட இனி சுவை குறைந்து போகும். காபனீர்ஒக்சைட் வெளியேற்றத்தை 1990 ஆம் ஆண்டை விட 2050 ஆம் ஆண்டளவில் 80 சதவிகிதத்தால் குறைக்கும் நோக்கை ஐயர்லாண்ட் நாடு அடைய வேண்டுமாயின் 200,000 மாடுகள் கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஒரு மாடு ஆண்டுக்கு 100 கிலோக…
-
- 0 replies
- 433 views
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 07:51 PM டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை. https://www.virakesari.lk/article/158103
-
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது. பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் இரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி இரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை இராட்சத பறவையாக இருக்க…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
திடீர் விபத்துகள் ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு பலரும் உதவி செய்வார்கள். ஆனாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதில் ஏறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது சற்று கடினமானது. ஆனால் பெரு நாட்டில் உள்ள லிமா பகுதியில் பெரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நாய்கள் சிக்கி கொண்டன. கட்டிடத்தை சுற்றிலும் தீ பரவியதால், அதில் சிக்கிய நாய்களை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் அரியாஸ் என்ற வாலிபர் தீப்பிடித்த கட்டிடத்தில் ஏறி அதில் சிக்கி இருந்த நாய்கள் ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசினார். அப்போது அங்கு வலையுடன் தயாராக நின்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நா…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா?கடைசியில் பதிலை சொன்ன ஆய்வாளர்கள்.. வாஷிங்டன்: பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர். நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு அறிவியல் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது. அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என…
-
- 1 reply
- 568 views
-
-
தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது. எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
திருமணத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோர் பலி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாரா பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்றைய தினம் அதிகாலை படகில் வீடு திரும்பியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2023/1334784
-
- 0 replies
- 300 views
-
-
அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக ‘பைலட்’ ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லொக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி ‘பைலட்’ ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/258424
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது. தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்…
-
- 7 replies
- 594 views
- 2 followers
-
-
பிரேதப்பெட்டியில் சுவாசித்த பெண் - ஈக்குவடோரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் 13 Jun, 2023 | 10:50 AM இறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது. பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றிஇறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர். …
-
- 5 replies
- 446 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
எகிப்து நாட்டின் ஹூர்கடா நகரத்தில் உள்ள கடற்கரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அற்புதமான இடமாக இருக்கும். பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர், 37பாகை செல்சியஸ் வெப்பநிலை என்பன அந்தக் கடலில் நீராட, சுழியோடி மகிழ, கடற்கரையில் அமர்ந்து சூரியக் குளியல் செய்ய என பல உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும். இன்று நிலமை மாறி இருக்கிறது. கடற்கரையின் வெள்ளை மணலில் மனிதக் காலடிகளைக் காணவில்லை. அதன் 75 கிலோ மீற்றர் நீள சுற்றளவான கடற்கரை அரசாங்கத்தால் இப்பொழுது பாவனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. 08.06.2023 வியாழக்கிழமை Elysees Dream Beach Hotelக் கு முன்னால் உள்ள கடலில் குளித் துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சுறாவினால் கொல்லப்பட்ட பின்னரே இந்த நிலை அங்கு வந்திருக்கிறது. …
-
- 5 replies
- 379 views
-
-
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்தில் பேத்தை மீனை (puffer fish) உண்ட 27 வயதான பெண் உயிரிழந்துள்ளார். மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானில் தேர்ச்சிவாய்ந்த சமையற்கலை நி…
-
- 0 replies
- 439 views
-