வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ் சாண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார். பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார். இத்தனை வருடத்தில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என அவருக்கு தோன்ற வாழ பிடிக்காமல் தற்கொலை முயற்சி செய்து பின்னர் காப்பற்றப்பட்டார். Category
-
- 0 replies
- 480 views
-
-
"வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற தள்ளுவண்டிக் கடை மோகன்! வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார். கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை. இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால்…
-
- 0 replies
- 614 views
-
-
கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது. கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக …
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்…
-
- 0 replies
- 543 views
-
-
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirro…
-
- 1 reply
- 700 views
-
-
ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் 8100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு இரு நாடுகள் இடையே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 38000 கன மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு 2024 ஆம் ஆண்டு வரை வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். எரிசக்தி துறையில் இருநாடுளுக்கு இடையிலான உறவு இனி புதிய உயரத்திற்கு ச…
-
- 2 replies
- 403 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்றுறைகளுக்கு மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாக உள்ளநிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் மாதம் 15ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, ஜூன் 15ஆம் திகதி முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்ற நீங்கள் வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள், காணாமல் போயிருப்பதை அவதானித்து …
-
- 0 replies
- 497 views
-
-
’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ Editorial / 2018 ஒக்டோபர் 06 சனிக்கிழமை, பி.ப. 04:05 ’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்ந…
-
- 0 replies
- 402 views
-
-
TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் 11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு…
-
- 0 replies
- 353 views
-
-
``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி பேசியிருக்கிறார் மோடி. கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் என ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பாரபட்சமின்றி 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை வெறும் 6 மாதங்களில் சந்தித்திருக்கிறது இந்தத் துறை. ஆனால், ``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி மௌனம் கலைத்துள்ளார் பிரதமர் மோடி. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்து பேட்டியளித்துள்ள பிரதமர், தற்போது ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலையைப் போக்க ஏதாவது முயற்சி…
-
- 2 replies
- 538 views
-
-
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…
-
- 0 replies
- 557 views
-
-
Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 05:56 PM (டேனியல் மாக்ரட் மேரி) ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கட்டுப்பாடின்றி அதிகமான பணம் உருவாக்கப்பட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை "பண அச்சிடல்" (Money Printing) என அழைக்கலாம். இது சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். பணம் அச்சிடல் என்றால் என்ன? அதாவது, பண அச்சிடல் என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கி புதிய பணத்தை உருவாக்கி அரசுக்கு அல்லது பொருளாதாரத்துக்கு வழங்கும் செயலாகும். பொதுவாக அரசு திறைசேரியில் பணம் குறையும்போது, அரசின் செலவுகளை நிரப்ப மத்திய வங்கியிடம் பணம் பெறும். மத்திய வங்கி, புது பணத்தை அச்சிட்டு அல்லது வேறு முறையில் பணத்தை கணக்கில் சேர…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
மூன்றாம் நீர் பற்றிய உலக யுத்தமும் யுத்தமும் மறை நீர் அறிவியலும் நம்மை ஏமாற்றும் உலகமும் ?
-
- 0 replies
- 599 views
-
-
இலங்கையில் அரசு முதியோர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு திட்டத்தை தந்துள்ளது. அதாவதை நீங்கள் முதியவர் என்றால் ( 65 வயதுக்கு மேலானவர் ?, இலங்கை பிரசை) என்றால் 15 இலட்சம் வரை அசையாத முதலீடாக செய்து வருடம் 15% வட்டியை பெறலாம். அதாவது நீங்கள் ஒரு இலட்ச்சம் இலங்கை ரூபாவை முதலீடு செய்தால் வருடம் 15,000 ரூபாய்கள் கிடைக்கும் இது அரசின் வருமான வரிக்கும் விதி விலக்கானது. No change in 15% interest given to senior citizens : Tuesday, 6 August 2019 01:16 …
-
- 1 reply
- 413 views
-
-
பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாய…
-
- 0 replies
- 2.9k views
-
-
கொவிட்-19 எதிரொலி: கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, பிரித்தானியாவில் மிகப்பெரிய கார் விற்பனை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாத புதிய கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (எஸ்.எம்.எம்.டி) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 161,000 உடன் ஒப்பிடும் போது மிகப் பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இது 1946ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த மாத நிலையை குறிக்கின்றது. 4,321 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்…
-
- 0 replies
- 357 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில…
-
- 0 replies
- 258 views
-
-
கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2425849 இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஜப்பானிய மொழியை எங்கு?எப்படி?எவ்வளவு காலத்தில் கற்கலாம் என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பதால், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தால் எளிதில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜப்பானிய மொழிக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் அனுராதா. தமிழகத்தில் மட்டும் சுமார் 577 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில…
-
- 0 replies
- 376 views
-
-
கிர்ஸ்டி கிராண்ட் பிபிசி நியூஸ்பீட் சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன, கேம்ஸ்டாப் என்றால் என்ன என நீங்கள் யோசித்தால் இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது. கேம்ஸ்டாப் என்றால் என்ன? கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் வீடியோ கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். சொல்லப்போனால் இது பெருந்தொற்று காலத்தில் பெரும் அடிவாங்கிய ஒரு கடை என்று சொல்ல வேண்டும். ரெட்டிட் வலைதளத்துக்கு என்ன தொடர்பு? ரெட்டிட்( Reddit) என்ப…
-
- 0 replies
- 473 views
-
-
உலகின் 4 ஆவது பெரிய பணக்காரரான வாரன் பப்பெட், தற்போதுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவே தொடங்கியுள்ளார் எனும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் சி.இ.ஓவுமான வாரன் பப்பெட், ஆப்பிள் நிறுவன பங்குகளிலும் பங்குதாரராக உள்ளார். இருந்தபோதும், சாம்சங் நிறுவனத்தின் பழைய பிளிப் மாடல் செல்போனையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குத் திரும்பியுள்ள அவர், ஆப்பிள் ஐ போன் 11 மாடலை தற்போது பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கால் செய்வதற்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வரும் வாரன் பப்பெட், பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தனியாக ஐபேட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும…
-
- 1 reply
- 733 views
-
-
நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு March 31, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும். இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது. பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்க…
-
- 20 replies
- 4.4k views
-
-
Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் 4 பேர் தொடர்ந்த நஷ்ட ஈட்டு வழக்கில், அந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் 5 ஆயிரத்து 334 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் சட்டவிதிகள் மாறுபடுவதால் இது சுமார் ஆயிரத்து 316 கோடியாக குறையும் என்று கூறப்படுகிறது. Johnson & Johnsonபேபி பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் ந…
-
- 0 replies
- 264 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் - நோ டைம் டு டை திரைப்படத்தின் வெளியீடு 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். வரு…
-
- 0 replies
- 422 views
-
-
உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை - நெருக்கடியால் தவிக்கும் நாடுகள் டேனியல் க்ரேமர் 19 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கப்பல்கள் உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள் தொடர்பான விளைவுகள் பல வழிகளில் உணரப்படுகின்றன. சீனா: நிலக்கரி மற்றும் காகிதம் …
-
- 0 replies
- 314 views
-