வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்கள…
-
- 0 replies
- 293 views
-
-
ACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது HNB Finance PLC இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகள் விருது வழங்கும் நிகழ்வில் (ACEF Global Customer Engagement Awards 2020) தங்க விருதினை வென்றுள்ளது. HNB Finance நிறுவனம் இந்த விருது வழங்கும் நிகழ்வின் போது சிறந்த கௌரவமான விருதான ‘இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ச்சியாக பேணி’ வந்ததற்காக தங்க விருதினையும், ‘வங்கி மற்றும் நிதி சேவைகள் துறையில் சிறந்த சமூக ஊடக இலச்சினை’ ரீதியாகவும் தங்க விருதினை வென்றெடுத்துள்ளது. சிறந்த வாட…
-
- 0 replies
- 292 views
-
-
நாட்டை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.33 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/78269
-
- 0 replies
- 290 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,IVB கார்த்திகேயா பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பழைய வீடுகளிலும், வயல்களிலும், சில சமயங்களில் குளங்களிலும் இப்படி மறைத்து வைக்கப்பட்ட பணத்தை நாம் சில சமயம் பார்த்து இருப்போம். ஆனால் பங்குச் சந்தை வந்த பிறகு இந்த அணுகுமுறையில் சில மாற்றம் நடந்தது. இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவிகித்தினர் தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீட்டை பெருக்க பல நிதி கோட்பாடுகளும் உருவாக்கப்பட்…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகள…
-
- 0 replies
- 289 views
-
-
உலகின் 132 நாடுகளில் வாழ்க்கைச் செலவை ஒப்பிட்டு வாழ்கைச்செலவு அதிகமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ;CEOWORLD' எனப்படும் உலகின் முன்னணி வணிக இதழ் ஒன்று இதனை தரப்படுத்தியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, இணையச்செலவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ் வாழ்க்கைச்செலவு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் பட்டியலின்படி உலகின் வாழ்க்கைச்செலவு அதிகமான நாடாக சுவிற்சர்லாந்து தெரிவாகியுள்ளது. நோர்வே இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இவற்றின் வாழ்க்கைச் செலவு சுட்டெண் முறையே 122.04, 101.04, 100.48 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு இடங்களை ஜப்பான், டென்மார்க், பஹாமாஸ், லக்சம்பேர்க், இஸ்ரேல், சிங்…
-
- 0 replies
- 286 views
-
-
நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார். அ…
-
- 0 replies
- 285 views
-
-
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளின் வணிகம், தொழில் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்து வருகிறது. இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 414 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 219 ஆக இருந்தது. உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்க…
-
- 1 reply
- 285 views
-
-
எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…
-
- 0 replies
- 285 views
-
-
திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும் என கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை தழுவினால், அவர்களே பொறுப்பேற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரையரங்குகள் மீது மாநில அரசு விதிக்கும் 8% சதவீத வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்றும், தவறினால் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்ற தீர்மானத்தை…
-
- 1 reply
- 284 views
-
-
மாட்டுப்பண்ணையை ஆரம்பித்துள்ள மெட்டா உரிமையாளர் மார்க். மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், உலகின் மிக உயர் தரமான மாட்டிறைச்சியை உற்பத்தி செய்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார். இதனிடையே, இந்த பசுக்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அதே பண்ணையில் தயாரிக்கப்படும் உணவு பசுக்களுக்கு வழங்கப்படும் என்றும், ஜுக்கர்பெர்க் தனது மகள்களின் உதவியோடு இதனை மெருகு படுத்துவார்…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும் ஜூன் 10, 2022 காணாமல் போண கணவரின் துயரத்தில் துவண்டு விழாமல் முன்னோக்கி செல்லும் வீர மங்கை செல்வம் மேரி நிர்மலா நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் இக்கால கட்டத்தில் சுயதொழில் பொருளாதாரத்தில் ஈடுபாடுடைய முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் செல்வம் மேரி நிர்மலா, சுயதொழிலில் ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டவர். முன்பள்ளி, இசை மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் கற்கை துறைகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்தவர். அதேவேளை முன்பள்ளிப் பாடசாலை பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக காவேரி கலாமன்றத்தின் ஊடாக உன்னத சேவையாற்றி வருபவர். இக்கால சூழலைக் கருத்திற் …
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை மாற்றப்போவதாக எலோன் மஸ்க் அறிவிப்பு அமெரிக்காவைச் சேர்ந்த மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வரி விதிக்கப்படுவதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமுள்ளதாலும் ஆரக்கிள், எச்பி, டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் தலைமையகத்தை டெக்சாஸ் மாநிலத்துக்கு மாற்றிவிட்டன. அந்த வரிசையில் இப்போது டெஸ்லாவின் தலைமையகத்தை டெக்ஸாஸின் ஆஸ்டின் நகருக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் ஆண்டுக் கூட்டத்தில் அறி…
-
- 0 replies
- 283 views
-
-
ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சி கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா? பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்: உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் என்பவை வெறு…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் நூறு கோடி ரூபாய் நிதியை, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரசால் சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாக் மா, தனது தொண்டு நிறுவனம் வாயிலாக சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதில் சுமார் 41 கோடி ரூபாய் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, இரண்டு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மீத தொகை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் என, அமெரிக்க நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/98719/கொரோனா-வைரஸ்-…
-
- 0 replies
- 280 views
-
-
சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் அதாஹோல்பா அமேரீஸ் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணம். இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது. 1976 இல் மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிறகு சீனா தனது கொள்கையை சிறிது மாற்றி, பழமைவாத கம்யூனிசத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சிக்கான புத…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சேமிப்பு கணக்கு செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அ…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
70,000 கார்களை மீளப்பெறுகிறது வொல்வோ நிறுவனம் வொல்வோ கார்களில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதனால் பிரித்தானியாவில் 70,000 கார்களை மீளப்பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் தவறு காரணமாக, அரை மில்லியனுக்கும் அதிகமான டீசல் வாகனங்கள் உலக அளவில் மீளப்பெறப்படுவதாக வொல்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடன் கார் உற்பத்தி நிறுவனமான வொல்வோ தெரிவிக்கையில்; மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இயந்திரத்தின் பிளாஸ்ரிக் பகுதி உருகி சிதைந்துவிடும் என்றும் சிலவேளைகளில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த பிரச்சினையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சில கார்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையா…
-
- 0 replies
- 278 views
-
-
நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா? அனுதினன் சுதந்திரநாதன் இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத…
-
- 0 replies
- 278 views
-
-
சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம் லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட். அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள். கடந்த காலங்க…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கையில் பலகோடி வருமானங்கள் பெறும் முதன்மையான 10 நிறுவனங்கள்!
-
- 0 replies
- 277 views
-
-
சீனாவிலுள்ள, தனது ஆலையை மூடுவதற்கு தோஷிபா நடவடிக்கை! சீனா- டாலியன் நகரிலுள்ள ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா, தனது ஆலையை இந்த மாத இறுதியில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதாவது, தற்போதைய வணிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அந்நிறுவனம் இதனை மேற்கொள்கின்றது. இந்த ஆலையில் சுமார் 650 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் இதில் தொழில்துறை மோட்டார்கள் மற்றும் ஒளிபரப்பு டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்கப்படுகிறது. ஆனால், உற்பத்தியில் செங்குத்தான வீழ்ச்சி காரணமாகவே மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிக்கி ஆசியா தெரிவிக்கிறது. குறித்த ஆலை 1991 ஆம் ஆண்டு போ க்ஸிலாய் துணை மேயராக இருந்த காலத்தில் திறக்கப்பட்டது. தோஷிபா ஆலை பணிப்பாளர், ஒக்டோபர் மாதத்தில்…
-
- 0 replies
- 277 views
-
-
4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துள்ளது. 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழ…
-
- 0 replies
- 276 views
-
-
லண்டனிலுள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் முதலமைச்சர் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், அரசு அதிகாரிகள், கிங்ஸ் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைப்பது குறித…
-
- 0 replies
- 276 views
-
-
வரிக் கொள்கையுடன் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் ச.சேகர் – business.tamilmirror@gmail.com நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்புகளுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய வருமான வீதத்துக்கு நிகரான அரச வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நாடு திவாலாகியுள்ளதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வரி வருமான அதிகரிப்பு தவிர்க்கப்படமுடியாத விடயமாக மாறியிருந்தது. அத்துடன், சர…
-
- 0 replies
- 276 views
-