வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
இலங்கையிலிருந்து நிறுவனங்கள் வெளியேற்றம் Editorial / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, பி.ப. 09:34 Comments - 0 நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமையகங்களை சிங்கப்பூருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு வரி விதிப்பு மற்றும் நாட்டில் தற்போது பொதுவாக காணப்படும் வியாபாரச் சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் தமது நி…
-
- 1 reply
- 620 views
-
-
சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்! முத்துப்பாண்டி யோகானந்த் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப…
-
- 0 replies
- 573 views
-
-
ஸகாரா டாவுட்போய் கடந்த தசாப்தத்தில் கொழும்பின் உணவு நிலை கணிசமானளவு வேறுபட்டது. இன்று கொழும்புவாசி ஒருவருக்கு தெரிவு செய்வதற்கு பரந்த அளவிலான சமையல் வகைகள் உள்ளன, மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய உணவகம் உள்ளது. விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பிரிவுகளில் துரித உணவும் ஒன்று. ஸ்ரீலங்காவில் 1993ம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட சர்வதேச துரித உணவுச் சங்கிலி ‘பிஸ்ஸா ஹட்’ ஆகும். யூனியன் பிளேசில் அமைந்திருந்த இந்த புதுமையான கடை உடனடியாகவே நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களிடையே மிகவும் பிரபலம் பெற்றது, குறிப்பாக அதன் விரிவான விளையாட்டுப் பகுதி காரணமாக, அது மேலும் அந்த நேரத்தில் கொழும்பில் எளிதாகக் கிடைக்காத உணவு வகைகளையும் வழங்கியது. அப்போது முதல் ஸ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
‘கிலோகிராமை’ அளவிட்ட மூலப் படிக்கல்லுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது! சந்தைகளிலும், வர்த்தக நிலையங்களிலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த கிலோ படிக்கல் கடந்த சில காலமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இலத்திரனியல் விசை அளவீட்டு இயந்திரங்கள் பாவனைக்கு வந்துவிட்டன. அவை தற்போது பரிணாமமடைந்து நவீன தொழினுட்ப அளவீடுகளை உள்ளடக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா? அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள். என்றாலும் உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்தி வந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு வழங்க இருக்கிறார…
-
- 0 replies
- 597 views
-
-
கனடா மற்றும் சீனா வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்! கனடா மற்றும் சீன நாடுகள் தமக்கிடையில் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஆழமான வர்த்தக யுத்தத்தின் பின்னணியிலும் சீனாவும் கனடாவும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய கலந்துரையாடலில் பங்கேற்ற கனடா மற்றும் சீன அதிகாரிகள் இந்த கருத்துகளை வௌியிட்டனர். சீனா தன்னிச்சைவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் நோக்கில் கனடாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக சீனாவின் மாநில கவுன்சிலர் வாங் யோங் தெரி…
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையின் அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம் இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால் இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளதுடன் வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என பீடிஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை ருபாவின் பெறுமதி அச்சப்படவைக்கும் அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதால் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கை மணியும் அடிக்கப்பட்டுள்ளது என பீடிஐ தெரிவித்துள்ளது இலங்கையில் உருவாகியுள்ள குழப்பநிலை இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்தால் இரத்தக்களறி ஏ…
-
- 0 replies
- 484 views
-
-
அமெரிக்கா – சீனாவுக்கிடையலான வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது November 6, 2018 அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு அளவுக்கு அதிகமான வரியை விதித்து வருகின்றதனால் இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு 500 பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் இந்த வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என ; ஜேக் மா கூறியுள்ளார். சீனாவின் ஷாங்காயில் ஆரம்பமாகியுள…
-
- 0 replies
- 244 views
-
-
TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் 11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு…
-
- 0 replies
- 356 views
-
-
கனடாவில்... கடன் பட்டோரின், மனக்கவலை அதிகரிப்பு! கனடாவில் அதிகரித்துவரும் வங்கிக்கடன் வட்டி காரணமாக, கடன்பட்டோர்கள் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக சொந்த வீடுகளையுடைய கனடிய மக்கள் மிகவும் குறைந்த வட்டிகளைக் கொண்ட கடன்களைப் பெற்று மகிழ்ச்சியாகவும் இலாபகரமாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்த வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையானது கடந்த வாரத்திலிருந்து பாரிய அளவு அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் காணப்பட்ட வட்டிக்கு தற்போதைய வட்டி ஐந்து மடங்கு அதிகமாகும். 400,000 டொலர் பெறுமதியான அடைமானத்திற்கு மாதாந்தம் 186 டொலர் வட்டி அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 763 views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா ஒப்புதல், அவுஸ்ரேலியா இறுதி கட்ட ஆலோசனை! ஜப்பான் தலைமையிலான ஒரு பரந்த பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்தாவது நாடாக கனடா இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது. பசிபிக் வலயத்திற்கு அப்பால் கூட்டுப் பங்காண்மை கொண்ட 11 நாடுகள் விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று சட்டத்துறையினர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர் கனடா அதன் சட்டப்பூர்வ செயல்முறையை வார இறுதிக்குள் நிறைவு செய்துள்ளது. பசுபிக் வர்த்தக ஒப்பந…
-
- 0 replies
- 321 views
-
-
வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேலைத்திட்டங்கள் அவசியம் 2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்ளி விப ரங்களின் பிரகாரம் 381,834 பேர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் இளை ஞர்களே அதிகமாக இருக்கின் றனர். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் துக்கும் குறைவான தகுதியை கொண்ட வர்கள் 137,615 பேர் வேலை யற்றவர்களாக உள் ளனர். கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகைமையை கொண்டவர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்பதாக புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன. அதிலும் 30 வயதுக்கு மேற…
-
- 0 replies
- 334 views
-
-
இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம். முதல் படத்தில், யாழ் தின்ன வெளி சந்தைக் கடையில் வாழ்க்கையை ஓட்ட வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஒருவர். அடுத்த படம், $4.5 பில்லியன் பழ வியாபாரம் செய்யும் dole என்னும் கம்பெனி. 167 வருடங்களுக்கு முன்னர் 1861 ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம் டோல். அமெரிக்காவின் கலிபோர்னியாவினை தளமாக கொண்டு செயல் படும் பெரு நிறுவனம். சாமுவேல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. கரும்பினை விளையும் இடத்தில் கப்பலில் ஏத்தி, பயணத்தின் போதே கப்பலில் உள்ள பாக்டரி செட்டப்பில் சீனி பக்கட்டுகளாக சேருமிடத்தில் இறக்குமதி செய்யும் பெரு நிறுவனம். வாழைப்பழம், அன்னாசி, முந்திரிகை, கிவி, மாதுளை போன்ற பழங்களை விளைவித்து ஏற்றுமதி செய்கிறது. கீழே உ…
-
- 2 replies
- 1k views
-
-
ரஷ்ய-இத்தாலி இணைந்த இருதரப்பு வர்த்தகத்திட்டம்! ரஷ்யா-இத்தாலி நாடுகள் இணைந்து இருதரப்பு வர்த்தக திட்டங்களை முன்னெடுத்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினை இத்தாலிய பிரதமர் கியூசெப்பே கொன்டே நேற்று (புதன்கிழமை) மாலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். குறித்த இருதரப்புக் கலந்துரையாடலின் பலனாக, சக்தி, போக்குவரத்து, உட்கட்டுமானம், உணவு உற்பத்தி, உயர் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவில் முன்னணி வகிக்கும் எண்ணெய் நிறுவனத்தின் முதல்வரான நிகோலை டொகரேவ் மற்றும் இத்தாலி நாட்டின் முன்னணி தொழில் முதல்வரான ஸ்டெஃபனோ செசினடோ ஆகியோரை இணைத்து எண்ணெய்த்தொழிற்சாலை…
-
- 1 reply
- 512 views
-
-
2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம் 2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Lonely Planet சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் தரப்படுத்தலுக்கமைய, 2019ஆம் ஆண்டு சிறந்த சுற்றுலா நாடுகளில் முதலிடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையைத் தவிர ஜோர்தான், சிம்பாப்வே, பனாமா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்காக சிறந்த நாடு இலங்கையென்றும் குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை, 2 ஆவது ஜேர்மனி, 3ஆவது சிம்பாப்வே, 4 ஆவது பனாமா 5 ஆவது குர்…
-
- 0 replies
- 891 views
-
-
50,000 கோடி நஷ்டம், எங்கள நம்பி பணம் கொடுத்த மக்கள் ஏமாந்துட்டாங்க சார், கதறி அழும் கார்ப்பரேட்..! இன்னக்கி உலகமே ஒரு விஷயத்தப் பாத்து பயப்படுதுன்னா... அது fake news தான். போர், சூழலியல், அரசியல் எல்லாமே... எல்லாமே அடுத்து தான். யாருக்கும் பயப்படாத பெரியண்ணன் அமெரிக்கா கூட இப்ப fake news-ஐ பாத்து பம்முராங்க. நாம தான் இத பரப்புறது... நம்மல மாதிரி சாதாரண ஜனங்க தான். ஒரு வேளை உண்மையா இருந்தா... நம்மலால நாலு பேர் தப்பிப்பாங்க-ங்குற நல்ல எண்ணத்துல தான் செய்றாங்க. ஆனா ஒரு செய்திய எப்படி உண்மையா பொய்யான்னு உறுதிப்படுத்துறது...? ஒரு செய்திய யார் அனுப்புனா...? அத யார் கொஞ்சம் எடிட் பண்ணி பொய்யான செய்தியாக்குனது? எதையும் கண்டு பிடிக்க முடியாது. அது தான் இங்க பிர…
-
- 0 replies
- 635 views
-
-
ஜேர்மனியை சேர்ந்த BMW நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்! ஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் புத்தம் புதிய X7 SUV வாகன மாதிரியின் ஔிப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 இருக்கைகள் கொண்ட மாதிரியாக வௌிவரவிருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ், வோல்வோ, அவுடி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் இந்த புதிய மாதிரி வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஹெட்லைட் வடிவமைப்புகள், LED DRL கள் மற்றும் நவீன மேன்சிங் கிரில்களை கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி.களில் குரோம் சுற்றப்பட்டு உள்ளது. பின்பாகத்தில் மெல்லிய எச்சர…
-
- 0 replies
- 594 views
-
-
ஐரோப்பா மற்றும் ஆசியா சுதந்திர வர்த்தகத்திற்கு ஆர்வம் காட்டுகின்றன – ஜேர்மன் அதிபர் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான பன்முக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ஆர்வம் காட்டப்படுவதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார் இன்று (வௌ்ளிக்கிழமை) பிரசல்ஸ்ஸில் இடம்பெற்ற ஆசிய – ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். உலகின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான நாடுகள் பன்முகத்தன்மைக்கு உறுதியளித்துள்ளதுடன், சுதந்திர வர்த்தகத்தின் நன்மைகளை அங்கீகரித்துள்ளன. அங்கு மேலும் உரையாற்றிய ஜேர்மன் அதிபர், “ஒழுங்கின் அடிப்படையிலான ஒரு வர்த்தக நடைமுறை வேண்டும் என்பதுடன், பன்முகத்தன்மைக்கு தங்களை உறுதிப…
-
- 1 reply
- 497 views
-
-
இன்றைய நாணய மாற்று விகிதம் 17.08.2018 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 114.1469 118.8385 …
-
- 38 replies
- 7.3k views
-
-
பொருளாதார சவால்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்த்தின் போத…
-
- 0 replies
- 418 views
-
-
ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்! ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 408 views
-
-
பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி! பணவீக்கத்தின் முக்கிய விளைவாக சீனாவின் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 2.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தொழிற்சாலை வாசலில் பொருட்களின் பெறுமதியை அளவீட செய்யும் சீனாவின் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண் (பிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 3.6 சதவீதம் உயர்வடைந்துள்ளது. ஆனாலும் முந்தைய மாதத்தை விடவும் 0.5 சதவீத புள்ளிகள்; குறைவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள், பழங்கள், மற்றும் முட்டை, பன்றி இறைச்சி விலைகள் 2.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் உண…
-
- 0 replies
- 546 views
-
-
அமெரிக்கா – சீனாவுக்கு இடையிலான வணிக யுத்தம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வணிக யுத்தம் உலகை, வறிய மற்றும் ஆபத்தான இடமாக மாற்றக்கூடுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான உலக வளர்ச்சிக்குரிய முன்னறிவிப்பைக் குறைத்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒரு முழுமையான வணிகப்போர் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை உண்டாக்குமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக தடைகள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பரந்த பொருளாதாரம் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கப் பொருட்கள…
-
- 0 replies
- 466 views
-
-
இலங்கை வர்த்தகத் தடையை முறியடித்தால் தெற்காசியப் பிராந்திய ஏற்றுமதியை இரு மடங்கிற்கு மேலாக அதிகரிக்கலாம் - உலகவங்கி இலங்கை வர்த்தகத் தடையை முறியடித்தால் தெற்காசியப் பிராந்திய ஏற்றுமதியை இரு மடங்கிற்கு மேலாக அதிகரிக்கலாம் - உலகவங்கி வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான ஏற்றுமதிகளை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரிப்பதற்கான சாத்தியம் இலங்கைக்கு உண்டென உலகவங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேலும் வர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசிய பிராந்தியத்திற்குள்ளான வர்த்தகத்தை 23 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 67 பில்லியன்…
-
- 0 replies
- 463 views
-
-
’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ Editorial / 2018 ஒக்டோபர் 06 சனிக்கிழமை, பி.ப. 04:05 ’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்ந…
-
- 0 replies
- 405 views
-
-
அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்! நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க சுதந்திர உடன்படிக்கைக்கு பதிலாக, அதனை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன. ‘ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம்’ என குறித்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது. நஃப்டாவில் கனடா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக பெரிதும் நம்பப்பட்டது. நஃப்டா தொடர்பில் அமெரிக்காவுடன் மெக்சிகோ ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளன. இந்த உடன்பாட…
-
- 0 replies
- 455 views
-