Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற…

    • 0 replies
    • 400 views
  2. -எஸ்.குகன் பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கால், உப்பாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், நேற்று (02) விடப்பட்டன. இவ்வாறு விடப்பட்ட இறால் குஞ்சுகள், இன்னும் மூன்று மாதங்களில், சராசரியாக ஓர் இறால் 40 கிராம் எடை வரையில் வளர்ந்து, இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/10-இலட்சம்-இறால்-குஞ்சுகள்-விடப்பட்டன/71-244918

    • 0 replies
    • 419 views
  3. இலங்கையில், 4/21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஆரம்பித்துள்ள இலங்கையின் இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதாரமானது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியானது, மக்களிடத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், சர்வதேச் ரீதியில் வீழ்ந்துபோயுள்ள இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்து, சுற்றுலாத்துறையை மீளக்கொணர்வதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக அமைந்துள்ளது. இவற்றின் மூலமாக, இலங்கை இவ்வருடத்தில் திட்டமிட்ட பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும், மிக மோசமான எதிர்ப்பக்க நிலைமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இதற்கு நாட்டின் உள்நாட்டு வர்த்தக நம்பிக்கைகள் உயர்வடைவதும் அரசியல் சூழ்நிலைகள் …

    • 0 replies
    • 466 views
  4. பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்' அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக அறிவிக்கப்பட்டதுமான 'புளூ டொட் நெட்வேர்க்கானது' பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி …

  5. பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும். 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களிலும் அலைகின்றன. (AFP) உத்தர பிரதேசத்தில் பசுக்களின் நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் பசுக்களின் நலனுக்காகவும் முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் “2012 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மாநிலத்தில் …

    • 0 replies
    • 273 views
  6. கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன். July 8, 2021 கொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும் சிலருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. மாடு வளர்ப்போர் காலத்தில் தற்போது நல்ல அதிஸ்ட காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பால், இறைச்சி என்பனவற்றின் விலை ஏற்றத்திற்கு அப்பால் எரிவின் விலை ஏற்றமே மகிழ்ச்சியான காலம் என்றே கூறப்படுகின்றது. கால் நடை வளர்ப்பு என்பது தொழில் அற்ற வீட்டில் இருப்பவர்கள் அல்லது விவசாயிகள் பகுதி நேரமாகவுமே மேற்கொள்ள வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்ட அல்லது வருமானம் அற்றவர்கள் மேற்கொ…

  7. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கையில் கட்டப்பட்ட 02 புதிய வழிக்காட்டி படகுகளை கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமாக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாத…

    • 0 replies
    • 310 views
  8. மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 06 கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது. இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள். ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிட…

  9. உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 26 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை அல்லது வழக்கம் நம்மிடையே காணப்படுகிறது. ஒருவேளை, அவர்கள் தருகின்ற முதலீட்ட…

  10. அடுத்தவருடம் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம்- சர்வதேச நாணயநிதியம் சர்வதேச பொருளாதார நிலை எதிர்காலத்தில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த மதிப்பீடுகள் பொருளாதார நிலை கணிசமான அளவிற்கு இருள்மயமாக காணப்படும் என தெரிவிக்கின்றன என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியா ஆபத்துக்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளதால் அடுத்தவருடம் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 2022 ஆண்டிற்கான சர்வதேசபொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வுகூறலை 3.6 வீதமாக சர்வதேச நாணயநிதியம் குறைக்கும் என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள அவர்சரியான எண்ணிக்கையை மதிப்பிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கு…

  11. நீங்கள் இதுவரை இந்த நிறுவனங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கவிட்டால், வரும் காலங்களில் அதிகம் அறியும் நிறுவனங்களாக இவை இருக்கலாம். 1. பியோன்ட் மீற் : https://www.beyondmeat.com/products/ 2. இம்பொசிப்பில் பூட் : https://impossiblefoods.com/ உலகில் மனிதர் வாழ்ந்த காலம் வரை அவன் மற்றைய உயிரினங்களை கொன்று அவற்றை உண்டு வாழ்கிறான். ஆனால், நவீன உலகில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசி உள்ளது. அதனால் அவர்கள் எதையும் படம் எடுத்து அதை உலகிற்கு தரவேற்றம் செய்யும் போராளிகள். அந்த வகையில், பலரும் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். உங்களுக்கு ஜல்லி கட்டு பிரச்சனையில் 'பீட்டா' என்ற அமைப்பை அறிந்திருப்பீர்கள். இன்றைய இளைய சமுதாயம் இவ்வாறு 'புதிதாக'…

    • 0 replies
    • 338 views
  12. அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை. ஜெஃப் 1999ம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு. அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் ஜெஃபும் ஒருவர். ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தளவுக்கு சாதித்தது எப்படி? அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் …

    • 0 replies
    • 402 views
  13. முன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் காணப்­படும் சிறந்த நிலைபேராண்மை அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை பின்­பற்­று­வதில் தொடர்ச்­சி­யாக முன்­னணி வகிக்கும் இந்­நி­று­வ­னத்தின் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்­தஸ்து இவ்­வாண்டு கிடைத்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி இந்த தொழிற்­சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முத­லா­வது Leed பிளாட்­டனம் என்ற சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ளது. …

    • 0 replies
    • 511 views
  14. 2019-ம் ஆண்டு இந்தியாவின் செல்வந்தர்களுக்கு சவாலான காலம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்பஸின் 2019 வியாபார அதிபர்களின் மொத்த செல்வத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் வறுமையை குறைக்க உதவிகிறார்கள். அவர்கள் மரியாதை மற்றும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் என்று கூறியிருந்தார். ஃபோர்பஸ் இந்திய பணக்கார பட்டியல் 2019 ல் தொழிலதிபர் கெளதம் அதானி 8 இடங்கள் தாண்டி 15.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது பணக்கார இந்தியராக திகழ்ந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். அசோக் லேலண்ட் உர…

    • 0 replies
    • 352 views
  15. காப்புரிமை Reuters சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது. வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில…

    • 0 replies
    • 467 views
  16. நெருக்கடி கால கொள்வனவு, நாடளாவிய முடக்கங்கள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள சர்வதேச எச்சரிக்கை! அதிகரித்துவரும் ,நெருக்கடி கால கொள்வனவு மற்றும் நாடளாவிய முடக்கங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின், உணவு மற்றும் விவசாய அமையத்தால், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான தானியங்கள் மற்றும் என்னை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தற்போது விநியோகத்துக்கு தவையான சேமிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்நிலையினை தடுக்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இதனடிப்படைய…

  17. உண்டியலூடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஆப்பு. இவ்வளவு காலமும் இங்கே பணத்தைக் கொடுத்தால் இலங்கையில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள். இனிமேல்?நேரடியாக போய் பெற்றுக் கொள்ளலாமோ? வெளிநாடுகளில் உள்ள பலர் வட்டி கூடுதலாக வருகுது என்று இலங்கை வங்கிகளில் போட்டு வட்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் சிக்கல் வருமோ?

  18. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் 27 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GOXX CAPITAL பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார். இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி. மிஸ்டர் கோக்…

  19. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகும் மிகவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முரண்பாடுகளை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட தாக்கம், ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால், நிதி உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அ…

  20. ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் காரணமாக நடக்கும் வர்த்தக ஆண்டில், ஏப்ரல் 2019 - மார்ச் 2020, 160 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் வரை நட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் தெரிவித்துள்ளார். SriLankan Airlines to report loss of up to $160 m due to Easter Sunday attacks: CEO Reuters: Sri Lanka’s state-run carrier could post a loss of as much as $160 million this financial year, as tourist arrivals in the island nation fell following the Easter bombings in April. “The forecast (for fiscal year ending March 2020) soon after the Easter Sunday attack is about $160 million ... but I’ll be happy if I can cap it around $100-$120 million,”…

    • 0 replies
    • 329 views
  21. தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார். டுவிட்டரில், சுமார் 3 கோடி பேரால் பின்தொடரப்படும் எலன் மஸ்க், கடந்த 2018ஆம் ஆண்டு, பிரிட்டனைச் சேர்ந்த குகை ஆய்வு வல்லுநரான வெர்னான் அன்ஸ்வொர்த் (Vernon Unsworth) குறித்து வெளியிட்ட அவதூறு பதிவிற்காக, மானநஷ்ட வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். இந்த வகையில், லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் வில்சன் (Stephen Wilson) முன் ஆஜரான எலன் மஸ்க்கிடம், தங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என எதிர்தரப்பு வழக்கறிஞர் வினவினார். இதற்கு பதிலளித்த எலன் மஸ்க், தாம் கையில் ஏராளமாக பணம் வைத்திரு…

    • 0 replies
    • 278 views
  22. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. மின்சார பேட்டரிகளை விட ஹைட்ரஜன் செல் வாகனங்களுக்கு அதிக திறனைத் தருகின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக வகையிலும் உள்ளது. அதிக தூரம் பயணிக்கக்கூடிய, பேருந்து, சரக்கு வாகனங்கள், போன்றவற்றிற்கும் இத…

    • 0 replies
    • 501 views
  23. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்…

    • 0 replies
    • 510 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.