Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார். ஆங்­கில பேரா­சி­ரி­யர் இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது. ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன்,…

  2. Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நு…

    • 0 replies
    • 550 views
  3. கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல். நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர்…

    • 0 replies
    • 549 views
  4. மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 06 கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது. இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள். ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிட…

  5. 3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=130049

    • 0 replies
    • 544 views
  6. கொரோனா தாக்கமும் தொடக்கநிலை வணிகங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 21 இலங்கை போன்றதொரு நாட்டில், தொடக்கநிலை வணிகங்களின் ஆரம்பமானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரவேற்கத்தக்க வகையிலும் பிரமிப்பைத் தரக்கூடியதாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் சிலிக்கன்வெளியை ஒத்தவகையில், இந்து சமூத்திரத்தில் இலங்கை தொடக்கநிலை வணிகங்களுக்கு ஒரு சாதகமான இடமாக உருப்பெற்று வந்துகொண்டிருக்கிறது. உண்மையில், கொரோனா தாக்கம் பல்வேறு வணிகங்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் இடையூறாக மாறியிருக்கின்ற நிலையில், இந்த இடர்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டுகூட நிறைய தொடக்கநிலை வணிகங்கள், இலங்கையில் உருப்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு குறுங்காலத்தில் உ…

  7. இலங்கை மத்திய வங்கி மக்களுக்காகவா? அரசியல்வாதிகளுக்காகவா? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கின்ற, வெளியிடுகின்ற ஒரு ஸ்தாபனாக இருக்கக்கூடிய மத்திய வங்கி, 15ஆம் திகதி தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். நாட்டின் முதன்மை மனிதனாக அறியப்படுகின்ற ஜனாதியால், “என்னுடைய பொருளாதார கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கு, நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறீர்கள்” எனச் சொல்லும் அளவுக்கு, எங்கள் மத்திய வங்கியின் நிலை இருக்கிறதா? என்கிற கேள்வியை எல்லோரிடத்திலும் எழுப்பி இருக்கிறது. உண்மையில், இலங்கையின் மத்திய வங்கி வினைத்திறனற்று இருக்கிறதா? கொரோனா காலத்தில் நாட்டின் நலன்கருதி எதனையும் செய்யாமல் இருந்…

  8. பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி! பணவீக்கத்தின் முக்கிய விளைவாக சீனாவின் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 2.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தொழிற்சாலை வாசலில் பொருட்களின் பெறுமதியை அளவீட செய்யும் சீனாவின் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண் (பிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 3.6 சதவீதம் உயர்வடைந்துள்ளது. ஆனாலும் முந்தைய மாதத்தை விடவும் 0.5 சதவீத புள்ளிகள்; குறைவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள், பழங்கள், மற்றும் முட்டை, பன்றி இறைச்சி விலைகள் 2.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் உண…

  9. ஐரோப்பாவையும், சீனாவையும் இணைக்கும் 2000 கிலோமீற்றர் நீளம் கொண்ட நெடுவீதியை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய எல்லையில் இருந்து ரஷ்யா, கசகஸ்தான் எல்லை ஊடாக சீனா வரையில் இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிக்கான ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்விடேவ் அனுமதி வழங்கியுள்ளார். அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 9.4 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பிரதான சரக்கு பரிமாற்று பாதையாக அமையும் என்று கூறப்படுகிறது http://www.hirunews.lk/tamil/220004/ஐ…

    • 1 reply
    • 541 views
  10. இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா? அனுதினன் சுதந்திரநாதன் / இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வாறு வளர்ச்சியடையும் வணிகத்ைத நம்பியிருக்கும் வணி…

  11. யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளது. யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் கே.விக்னேஷ் கண்காட்சி குறித்த தகவலை வெளியிட்டார். குறித்த வர்த்தக சந்தையில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளதுடன், விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார். சர்வதேச ரீதியாக உள்ள 20 நாடுகள் பங்குபற்றும் குறித்த வர்த்தக சந்தையில், 20 நாடுகளைச் சேர்ந்தோர் இங்குள்ள முதலீட்டாளர்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் வணிகர் கழகத்தின்…

  12. ஏன் ரூபாயின் மதிப்பு உயர்கிறது ச.சேகர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்வடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நவம்பர் மாதம் 30ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ. 329 ஆகும். இந்தப் பெறுமதி மார்ச் 22ஆம் திகதி ரூ. 298 ஆக உயர்ந்திருந்தது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடையும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. திறந்த பொருளாதாரமுறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த போதிலும், 2022 மார்ச் மாதம் முதல் 2022 மே மாதம் வரையான பொ…

  13. டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி சரிவை கண்டுள்ளது! புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயற்படுவதால் டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி 28 மாதங்களுக்கு குறைந்த அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது. ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை …

  14. காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்!

  15. ``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி பேசியிருக்கிறார் மோடி. கார்கள், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் என ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பாரபட்சமின்றி 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை வெறும் 6 மாதங்களில் சந்தித்திருக்கிறது இந்தத் துறை. ஆனால், ``இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. எதையும் அனுமானிக்கவேண்டாம்'' என முதன்முறையாக ஆட்டோமொபைல் துறையைப்பற்றி மௌனம் கலைத்துள்ளார் பிரதமர் மோடி. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்து பேட்டியளித்துள்ள பிரதமர், தற்போது ஆட்டோமொபைல் துறையின் மந்தநிலையைப் போக்க ஏதாவது முயற்சி…

    • 2 replies
    • 538 views
  16. கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன். July 8, 2021 கொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும் சிலருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. மாடு வளர்ப்போர் காலத்தில் தற்போது நல்ல அதிஸ்ட காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பால், இறைச்சி என்பனவற்றின் விலை ஏற்றத்திற்கு அப்பால் எரிவின் விலை ஏற்றமே மகிழ்ச்சியான காலம் என்றே கூறப்படுகின்றது. கால் நடை வளர்ப்பு என்பது தொழில் அற்ற வீட்டில் இருப்பவர்கள் அல்லது விவசாயிகள் பகுதி நேரமாகவுமே மேற்கொள்ள வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்ட அல்லது வருமானம் அற்றவர்கள் மேற்கொ…

  17. பட்டு மற்றும் பாதை திட்டத்திற்கு போட்டியாக பைடன் முன்னெடுக்கும் 'புளூ டொட் நெட்வேர்க்' அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுடன் இணைந்து, சீனாவின் பட்டிய மற்றும் பாதை முன்முயற்சிக்கு மாற்றாக வளர்ந்து வரும் சந்தைகளுக்கு வாய்ப்பினை வழங்குமொரு உள்கட்டமைப்பு முயற்சியை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட கால செயலற்ற நிலையில் இருந்ததும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்பின் நிர்வாகத்தின் போது முதன்முதலாக அறிவிக்கப்பட்டதுமான 'புளூ டொட் நெட்வேர்க்கானது' பாரிஸில் தனது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை கடந்த திங்களன்று ஆரம்பித்திருந்தது. இந்த கூட்டத்தின்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக வொஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் நிதி …

  18. தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப் வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீஜிங்குடன் இரண்டாவது கட்ட வர்த்தக தொடர்பு குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபருடன் தற்போது பேசப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இரண்டாவது கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப், ''பீஜிங்குடன் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட…

  19. இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: நவம்பர் 03, 2020 15:13 PM லண்டன் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மேலும் 30 லட்சம் பேர் வேலையிழக்க இருப்பதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கப்போவதாக தொழில் செய்வோர் கணித்துள்ளதுடன், ஏற்கனவே அடிபட்டு மீண்டு எழ இருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இரு…

  20. கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சீனாவின் பொருளாதாரம் குறித்த சில தரவுகள் அந்நாட்டிற்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலீட்டாளர்களை பதற்றப்படுத்துவது எது? அதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது? 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் வளர்ந்த நாடுகள் அதிலிருந்து விரைவில் மீண்டெழுந்த சமயத்தில், தனியொரு பாதையில் பயணித்த சீனா, உலக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாறியது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கி வரும் சீனா, 1990களில் இருந்தே குறைந்த வேகத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் ப…

  21. அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெரையும் (Mark Esper) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்டுக்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் நேரத்தில், அமேசானை ஒழித்துக் கட்டுமாறு டிரம்ப் உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்துள…

    • 0 replies
    • 527 views
  22. Bitcoin: ₹10,000 கோடி முதலீடு செய்த எலான் மஸ்க்... உச்சம் தொட்ட மதிப்பு... என்ன நடக்கிறது? செ.கார்த்திகேயன் எலான் மஸ்க் பிட்காயின் பற்றி உலகமெங்கிலும் பேச வைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க். இப்போதெல்லாம் அடிக்கடி பேசக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது 'பிட்காயின்'. கடந்த டிசம்பர் 17-ம் தேதி பிட்காயின் விலை முதன்முறையாக 20,000 டாலரைக் கடந்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அன்று ஒரே நாளில் மட்டும் 10.5% ஏற்றம் கண்டு, 23,655 டாலருக்கு பிட்காயின் வர்த்தகமானது. உலக நாடுகளின் கவனம் முழுவதும் பிட்காயின் பக்கம் திரும்பியது அன்றுதான். …

  23. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் May 10, 2019 epaselect epa04947798 Demonstrators with Chinese and United States national flags gather at sunset in Washington, DC, USA, 24 September 2015. Chinese President Xi Jinping begins an official state visit at the White House with US President Barack Obama on 25 September. EPA/ERIK S. LESSER அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்பட…

  24. வெப்பம் கூடிய நாடுகளில், வீடுகளை மற்றும் வேலைத்தளங்களை குறித்த வெப்பநிலைக்குள் வைத்திருக்க பலவழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொருளாதார சூழல் சார்ந்த பிரச்சனைகளை தருகின்றன. வேறு எந்த வழிகளால் வெப்பத்தை குறைக்கலாம் என உள்ள வழிகளில் சிலவற்றை பார்க்கலாம். #1: கட்டத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் ஊடுருவும் வெப்பம் எவ்வளவு குறையும்? ஒரு கட்டடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட்ட அடிப்பதால், சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்து, அந்த கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது. இவ்வாறு செய்வதால் தீமைகள் ஏதாவது உண்டா? கோடைகால வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய நகரங்கள் உண்டு. "குளிர்ச்சி…

    • 0 replies
    • 525 views
  25. யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் இதுபோன்று செய்து வரும் வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார். பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.