சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
517 topics in this forum
-
மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள் ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES வன உயிர்களின் எண்ணிக்கை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதுவரை பார்த்திராத வகையில், மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. “நாம் காடுகளை எரி…
-
- 0 replies
- 360 views
-
-
“சீமை கருவேல” மரங்களை அழிக்க அதிகாரமளிக்கப்பட்ட உப குழு அமைக்க தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் சிறப்பு வேலைத்திட்டம் விரைவில்.. யாழ்.நகரின் கரையோர பகுதிகள் மற்றும் தீவக பகுதிகளில் மிக அதிகளவில் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடி நீர் அருகும் ஆபத்தை தவிர்ப்பதற்காக குறித்த மரங்களை அழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாயத்த கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மேற்படி விடயம் கருத்தில் எடுக்கப்பட்டு சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த இத்தாவரம் யாழ் பிரதேசங்களில் அதிகம் வளர்ந்து வரும் நிலையில் எதிர்கால…
-
- 0 replies
- 407 views
-
-
சிறுத்தைப் பொறி மனிதனுக்கு மாத்திரம் சொந்தமானது என்று பலராலும் நம்பப்படும் இந்தப் பூமியில், அனைத்து வகையான விலங்கினங்கள், தாவர இனங்கள், பூச்சி இனங்கள் போன்ற இதர உயிரினங்கள் அனைத்துக்கும் வாழ, சரி சமமான உரிமை உண்டு என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வலிமையான இனம், வலிமை குறைந்த இனம் என உதாசீனப்படுத்துவது, அதன் உரிமைகளை மறுப்பது, சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு, வீடு உள்ளிட்ட காட்டு விலங்குகளைத் துன்புறுத்துவது, கொலை செய்வது போன்றவற்றுக்கான தண்டனை குறித்து, இலங்கை அரசமைப்பின் சட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு விலங்கின் உணவு, நீர், இருப்பிடம், உடற்பயிற்சியை மறுப்பதோ, தனிநபரின் விருப்பத்துக்கு ஏற்ப, நீண்டகாலம் அடைத்து வைப்பது, கட்டி வைப்பது தண்ட…
-
- 0 replies
- 364 views
-
-
மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்! மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி, ஆயிரம் டொன் எரிபொருளை கடலில் கசியவிட்ட, ஜப்பானிய கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நூற்றுக் கணக்கான டொன் எரிபொருட்கள் கடலில் முன்னதாகவே கலந்துவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை கப்பல் இரண்டாக பிளவடைந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமை, உத்தியோகபூர்வ தூய்மை…
-
- 2 replies
- 683 views
-
-
அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு! அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகம், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறுகையில், “ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்” என கூறினார். அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக புவியின் மேற்பரப…
-
- 0 replies
- 303 views
-
-
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ – வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை கலிபோர்னியாவில் காட்டுத் தீ கட்டுங்கடங்காது பரவி வரும் நிலையில், வார இறுதியில் மேலும் மின்னல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அண்மைய மாநில உதவியுடன் 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் வனப்பகுதியில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து வருகிறது. இதன் விளைவாக 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 700 கட்டடங்கள் நெருப்புக்கு இரையாகியுள்ளன. அத்தோடு, குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து சுமார் 2 இலட்சம் பேரை வெளியேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நெ…
-
- 0 replies
- 313 views
-
-
கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளது! உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்தாண்டில் மட்டும், 586 பில்லியன் டன் எடையிலான பனிக்கட்டி உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் கிரீன்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில், பனிக்கட்டிகள் உருகியதன் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும், உலக அளவில் 1.5 மில்லி மீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு கோடைக்காலத்தில் பனி உருகும் அளவு குறைவாக இருந்த காலத்தையும் தாண்டி, தற்போது 2019ஆம் ஆண்டில் மட்டும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக 586 பில்லியன் டன்கள், அதாவது 140 ட்ரில்லியன் கேலன்கள் (5…
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு REUTERS அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள…
-
- 5 replies
- 595 views
-
-
2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பேரழிவுகளின் பட்டியல்.! ஜனவரி 1 – ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ (20 இறப்புகள்) ஜனவரி 1 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளம் (66 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்) ஜனவரி 3 – அமெரிக்க-ஈரானிய போர் ஜனவரி 4 – இந்தோனேசியாவில் கிளாடியா (Claudia) சூறாவளி ஜனவரி 5 – கொரோனா வைரஸின் முதல் பரவு ஜனவரி 7 – பெருவில் ஹுவானுகோவின் வெள்ளம் ஜனவரி 10 – தெற்கு அமெரிக்காவில் சூறாவளி ஜனவரி 12 – பிலிப்பைன்ஸில் தால் (Taal) எரிமலை வெடித்தது ஜனவரி 13 – அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பிரெண்டன் சூறாவளி ஜனவரி 14 – பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு (41 க்கும் மேற்பட்ட இறப்புகள்) ஜனவரி 14 – ஆஸ்திரேலியாவில் 5,000 ஒட்டகங்களைக் கொள்ள…
-
- 0 replies
- 384 views
-
-
அமேசன் மழைக்காடுகளில் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் முதலீடுகள் முடக்கப்படும்- முதலீட்டாளர்கள் பிரேஸிலுக்கு எச்சரிக்கை! பிரேசிலின் அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தாவிட்டால், 2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்பிலான முதலீடுகளை திரும்பப் பெறப்போவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அதிகரிக்க, அமேசன் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், இந்த ஓகஸ்ற் மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே (Inpe) நிறுவனத்தின் தரவுகளின்படி இந்தத் தகவல் வெளிய…
-
- 0 replies
- 287 views
-
-
இந்தோனேசியாவில் மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது: மக்களுக்கு எச்சரிக்கை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் எரி…
-
- 0 replies
- 699 views
-
-
பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்.. வாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் தற்போது கண்டு பிடித்திருக்கின்றனர். இவை இறைச்சி உண்ணும் டினோசார்களான ஸ்பினோசாரஸ் உலகில் சுற்றித் திரிந்த நாட்களுக்கு முன்பே உருவானவை. இவை கடலுக்கு அடியில் புதையுண்டதற்க்குப்பின் இந்த உலகில் கண்டங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்திருக்கின்றன; கடல் மட்டங்கள் மேலெழும்பி தாழ்ந்திருக்கின்றன; மனிதக் குரங்குகள் தோன்றியிருக்கின்றன; பின்…
-
- 0 replies
- 380 views
-
-
வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி பனிப்பாறை தானாகவே இடிந்துள்ளது: ஆராய்ச்சியாளர்கள் தகவல் வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது. சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒ…
-
- 0 replies
- 355 views
-
-
போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சே…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொரோனா முடக்கத்தால் உலகின் பாதியாகக் குறைந்துள்ள ஒலி அதிர்வு: தோமஸ் லெகோக் ! உலகில் பொதுவாக எழும் ஒலி அதிர்வின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் மனிதர்களின் இயல்பான நடமாட்டம் மட்டுமின்றி சுற்றுலா, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகில் ஒலி அதிர்வுகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனா தொடங்கி இத்தாலி வரை உலகின் பல்வேறு நாடுகளில் அமுல்படுத்தப்பட்ட முடக்க ந…
-
- 0 replies
- 445 views
-
-
ஆணுறை முதல் டயர் வரை: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு 21 ஜூலை 2020, 10:09 GMT Getty Images கடன்கள் மற்றும் தொடர் தோல்விகளின் மேகம் சூழ்ந்த அமெரிக்காவின் கண்ணோட்டத்திலேயே ரப்பரின் வரலாறு பார்க்கப்படுகிறது. காரணம், ரப்பரை கடினப்படுத்தும் செயல்முறையை அந்நாடுதான் கண்டுபிடித்தது. சார்ல்ஸ் குட் இயர் என்ற ஓர் அறிவியலாளரின் இந்தக் கண்டுபிடிப்பால்தான் பின்னர், வாகனங்கள், விமானம் மற்றும் பிற இயந்திரங்களுக்கும் டயர் பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. சார்ல்ஸின் குடும்பப் பெயரான குட் இயர் உலகப் புகழ் அடையக் காரணம், பன்னாட்டு நிறுவனமான 'த குட் இயர் டயர் அண்ட் ரப்பர் கம்பெ…
-
- 0 replies
- 545 views
-
-
8 காண்டாமிருகம் உள்பட 100 காட்டுயிர்கள் வெள்ளத்தில் பலி: அசாம் காசிரங்கா தேசியப் பூங்காவில் சோகம் 19 ஜூலை 2020 Getty Images அசாமின் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட காட்டுயிர்கள் இறந்தன. உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டன. தற்போது காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் குறைந்தது 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆண்டு பர…
-
- 1 reply
- 503 views
-
-
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்குமனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். ஆச்சர்யமாய் இருந்தது..விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்..."சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான்குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் …
-
- 0 replies
- 346 views
-
-
கடல் நுரையால் ரம்மியமான காட்சி - எச்சரிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்.! தென் ஆப்பிரிக்கா, கேப்டவுன் கடற்கரையில் அளவுக்கு அதிகமாகத் திரண்டுள்ளது கடல் நுரை. கடல் அலைகளில் உருவாகியுள்ள நுரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சாலை முழுவதும் பரவி, ரம்மியமான காட்சியை உருவாக்கியுள்ளது. வெள்ளைப் பனி படர்ந்து கிடப்பதைப் போல சாலை முழுவதும் பொங்கி வழியும் நுரையில் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த காற்றுடன், மழை பெய்து வருகிறது. மணிக்கு 70 – 100 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடல் அலையும் 10 அடி உயரம் வரை எழுந்துள்ளது. இதனால் நகரில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. நகரிலிருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரசாய…
-
- 1 reply
- 537 views
-
-
யானையை பற்றி உங்களுக்கு தெரியுமா.? யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும். சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும். ஒரு யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை🐘🐘 ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது. ஒரு யானை🐘🐘 தன்…
-
- 0 replies
- 585 views
-
-
புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் CRISTIAN ECHEVERRÍA சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. புதியதாக நடப்பட்டு வரும் காடுகள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொர…
-
- 1 reply
- 817 views
-
-
உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ் உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காற்று மாசினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பற்றியுள்ள நெருப்பு மற்றும் புகை மூட்டம் காரணமாக புதிய கர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் கிவ் நகரத்தில் வசிக்கும் 3.7 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு செர்னோபில் அ…
-
- 1 reply
- 817 views
-
-
மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? - ஒரு டைம் ட்ராவல் டுன்கன் க்ரே பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின் Getty Images இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த பூ…
-
- 0 replies
- 471 views
-
-
கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.! பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் 8 ஆம் கண்டம் இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் ச…
-
- 0 replies
- 409 views
-
-
மனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன? ஆனி மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகும். 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'உயிர்ப் பன்மையத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நிலைபேறான இயற்கை பேணப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்களை விளக்குகிறார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. http://www.nimirvu.org/search/label/பொருளாதாரம்
-
- 1 reply
- 485 views
-