சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
மெகலடான் சுறா 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தது எப்படி? ஹெலன் பிரிக்ஸ் சூழலியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அவை கடலில் சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றித்திரிந்துள்ளது. இதுவரை இந்த உலகில் வாழ்ந்த மிக நீளமான சுறா இனமான மெகலடானின் முடிவுக்கு மற்றொரு மிகப்பெரிய உயிரினத்துடன் ஏற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய உணவுச்சண்டை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெருங்கடலில் வாழ்ந்த இந்த மிகப்பெரிய கடல் உயிரினத்தின் புதைபடிவ பற்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
ஈரக்குமிழ் வெப்பநிலை என்றால் என்ன? நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிடாலே அபூ ம்ராட் பிபிசி உலக செய்திகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் தீவிர வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல, பாகிஸ்தானிலும் வெப்பம் சுட்டெரிக்கிறது. வரும் காலங்களில் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை அடையும் என, வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த 50 டிகிரி செல்சியஸ் என்பதன் தீவிரம் வேறுபடும். அதாவது, வெப்பநிலை என்பது எல்லா இடங்களி…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
வெனிசுவேலா வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு! மேற்கு வெனிசுவேலா மாநிலமான மெரிடாவில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மெரிடாவில் ஆளும் சோஸலிஸ்ட் கட்சி அதிகாரி நேற்று (புதன்கிழமை) அரசாங்க தொலைக்காட்சியில் இதனை உறுதிப்படுத்தினார். அத்துடன் மேலும் சில பகுதிகளில் தொலைபேசி சேவையை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடும் போது 1,200 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதனை உறுதிசெய்துள்ளதாகவும 17பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாநில…
-
- 0 replies
- 306 views
-
-
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை…
-
- 0 replies
- 306 views
-
-
டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 800 பேருக்கு வழக்கு டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது. கடந்த வாரம் முழுவதும் நாடளாவிய ரீதியில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகள் பரிசோதிக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 30 வீதமான பகுதிகள், நுளம்புகள் பெரும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 வீதமான பகுதிகளிலிருந்து டெங்கு நுள…
-
- 0 replies
- 305 views
-
-
மிகவும் வெப்பமான ஆண்டுகளின் பட்டியல் வெளியானது! 19ஆம் நூற்றாண்டிலிருந்து அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருக்கும் ஆண்டுகளின் பட்டியலில் கடந்த 2018ஆம் ஆண்டு நான்காம் இடத்தினை பிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்றச் சேவைப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரியமிலவாயு வெளியேற்றம் காரணமாகவே கடந்த 2018ஆம் ஆண்டு அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 14.7 டிகிரி செல்சியஸ் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படும் 2016ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில் இது 0.2 ட…
-
- 0 replies
- 305 views
-
-
சுற்றுச்சூழல் மாசடைதல் அளவைக் கண்டறிய மொம்பர்னாஸ் கோபுரத்தை அறிமுகப்படுத்தும் பிரான்ஸ்! பிரான்ஸ் தலைநகரில் சுற்றுச் சூழல் மாசடைதலின் அளவைக் கண்டறிவதற்கு மொம்பர்னாஸ் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிஸில் உள்ள மிகப் பிரபலமான மொம்பர்னாஸ் கோபும்ரம் எதிர்வரும் 21-ஆம் திகதி வரை வெவ்வேறு வர்ண நிறங்களில் ஒளிரும் எனவும் அது அழகுக்காக மாத்திரமன்றி, பரிஸில் சுற்றுச்சூழல் மாசடைவைக் குறிப்பதற்காக பெரும்பாலும் பயன்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிஸில் உடனுக்குடன் பதிவாகும் சுற்றாடல் மாசடைவுக்கு ஏற்றது போல் பச்சை, இளம் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு’ஆகிய நிறங்களில் மொம்பர்னாஸ் கட்டிடம் ஒளிரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 304 views
-
-
காலநிலை மாற்றம்: அரசாங்கத்தின் நடவடிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வெளிநடப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஜேர்மனில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்த மாணவர்கள் துறைமுக நகரான ஹம்பேர்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ‘காலநிலைக்காக பாடசாலை புறக்கணிப்பு’ அல்லது ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ என்ற தொனிப்பொருளில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு அங்கமாகவே நேற்றைய பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்…
-
- 0 replies
- 303 views
-
-
அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு! அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக லண்டன் பல்கலைக்கழகம், லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் கூறுகையில், “ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்” என கூறினார். அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக புவியின் மேற்பரப…
-
- 0 replies
- 301 views
-
-
பருவநிலை மாற்றத்தின் வேகம் அச்சுறுத்தலானது – பிரித்தானிய விஞ்ஞானி எச்சரிக்கை உலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகளின் வேகம் அச்சுறுத்துவதாக இருக்கின்றது என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் கிங் தெரிவித்துள்ளார். அந்த விளைவுகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே நேர்வதாக அவர் BBC செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரித்தானியா தனது பருவநிலை மாற்றம் குறித்த இலக்குகளைப் பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால், இவ்வளவ…
-
- 0 replies
- 301 views
-
-
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு! கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் வெப்பமான காலநிலை நிலவிய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை கையாள்வதில் உலக மக்கள் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) வரை பல உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும…
-
- 0 replies
- 300 views
-
-
சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களை அடுத்து வருகிறது எலன் புயல் சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களைத் தொடர்ந்து எலன் புயல் இங்கிலாந்தைத் தாக்கும் என்று லங்காஷயர் லைவ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. சியாரா மற்றும் டென்னிஸ் புயல்களால் பிரித்தானியா முழுவதும் பேரழிவு ஏற்பட்ட நிலையில் புதிய புயலான எலன் இங்கிலாந்தைத் தாக்கவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இங்கிலாந்தில் தீவிரமான வானிலை நிலவிவருகின்றது. முதலில் வீசிய சியாரா புயல் காரணமாக லண்டன் ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வலையமைப்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து டென்னிஸ் புயல் லண்டனில் 50 மைல் வேகத்தில் வீசியது. அத்துடன் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்கள் முழுவதும் கடுமையான மழை பெய்தத…
-
- 0 replies
- 300 views
-
-
22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமா உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம். கர்ப்பமாக இருந்த மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கடலில் நம்மால் கலக்கப்படுகிற பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் பரிதாபமாக இறந்திருக்கிறது.அப்படி இறந்த திமிங்கலத்தை மீட்டெடுத்து ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கிட்டதட்ட 22 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிந்து வெளியே அகற்றப்பட்டிருக்கிறது. மத்தியத் தரைகடல் மத்திய தரைகடல் பகுதியில் மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதனால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாவதற்கான நமக்கான எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கடல் பகுதியில் கலந்து விட்டது. அது மத்திய தரை…
-
- 0 replies
- 299 views
-
-
படத்தின் காப்புரிமை DAVID SCHNEIDER, HERPETOLOGICAL ASSOCIATES இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன. 'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல…
-
- 0 replies
- 298 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலென் ப்ரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர். மரபணு ஆய்வுகளின்படி, 2.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவில் இந்த மரங்கள் தோன்றின. பின்னர், அவற்றின் விதைகள் கடல் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு, தனித்தனி இனங்களாகப் பரிணமித்தன. ஆராய்ச்சியாளர்கள் இந்த மரங்களைப் பாதுக…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
150 கி.மீ நீளம்; போர்த்துக்கலில் சுனாமி அலைகள் போல் தோன்றிய மேகங்கள்! போர்த்துக்கல் தற்போது மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை பாதித்த வெப்ப அலையை எதிர்கொள்கிறது. ஐபீரிய தீபகற்பத்தின் சில பகுதிகளிலும், கிரீஸ் மற்றும் பிரான்சிலும் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. அதேநேரம், போர்த்துக்கலின் வெப்பம் பல்வேறு அசாதாரண வானிலை நிகழ்வுகளை உருவாக்கியது. அவற்றில் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவை அடங்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் போர்த்துக்கலின் கடற்கரைக்குச் செல்வோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜூன் 29 அன்று கடலுக்கு மேல் எழுந்த மிகப்பெரிய சுனாமி அலைகள் போல் தோன்றிய ரோல் மேகங்களால் அவர்கள் திகைத்துப் போனார்கள். வெவ்வேறு வெப்பநிலைகளின் காற்று நிறைகள்…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் – எச்சரிக்கும் புதிய ஆய்வு! பருவநிலை மாற்றம் காரணமாக 21 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும். மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால்…
-
- 1 reply
- 297 views
-
-
மனித குலத்துக்கு பனிமலைகள் உருகுவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன? வில்லியம் பார்க் 22 அக்டோபர் 2021, 01:54 GMT பட மூலாதாரம், DENIS BALIBOUSE/AFP/GETTY IMAGES பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன? பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்…
-
- 0 replies
- 296 views
-
-
காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர். குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையா…
-
- 1 reply
- 295 views
-
-
அமேசன் காட்டை பாதுகாக்கும் உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்து September 8, 2019 அமேசன் காட்டை பாதுகாப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் 7 தென்னமெரிக்க நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. பொலிவியா , பிரேசில், கொலம்பியா , ஈக்வடோர், கானா , பெரு மற்றும் சுரிநம் ஆகிய நாடுகளே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஏழு நாடுகளும் ஏற்கனவே பழங்குடியின மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வாண்டில் மட்டும் அமேசன் காடுகளில் 80,000 தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 293 views
-
-
பருவநிலை மாற்றம்: ஜப்பானில் நிலக்கரிக்கு மாற்றாகிறதா நீல ஹைட்ரஜன்? ரூபெர்ட் விங்ஃபீல்ட் - ஹேய்ஸ் பிபிசி, டோக்யோ 13 டிசம்பர் 2021, 11:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அதுவொரு அழகான இலையுதிர்க் காலத்தின் மதிய நேரம். நான் மலைப்பாங்கான இடத்தில் நின்றுகொண்டு டோக்யோ விரிகுடாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில், பொதுவாக சாந்தமான குணமுள்ள, தனது 70களில் உள்ள தகாவோ சாய்கி இருந்தார். ஆனால், இன்று சாய்கி கோபமாக காணப்பட்டார். "இது முழுவதும் நகைச்சுவையாக இருக்கிறது" என, நேர்த்தியான ஆங்கிலத்தில் கூறினார். "அபத்தமாகவும் இருக்கிறது!". அவருடைய வருத்தத்திற்…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
உலக கடல் மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவான மிகப் பெரிய பனிப்பாறை உருகியது! கிறீன்லாந்தின் பெரும்பாலான பனி படலங்கள் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவு உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவற்றில் மிகப் பெரிய பனிப்பாறையும் உருகியிருக்கலாம் என்று அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம், சராசரி உலக கடல் மட்டத்தை ஒரு மில்லிமீட்டருக்கு மேல் உயர்த்துவதற்கு ஏதுவான பனி உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளை அண்டிய நகரங்களின் எதிர்காலம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும், பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தெற்கு கிறீன்லாந்தில் ஒரு பனிப்பாறை இறுதியாக 2004…
-
- 0 replies
- 292 views
-
-
அறிவியல் அதிசயம்: உலகின் மிக நீளமான தாவரம் - ஒரே விதையிலிருந்து உருவானது டிஃப்பேனி டர்ன்புல் பிபிசி செய்திகள், சிட்னி 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RACHEL AUSTIN அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரைவிட மூன்று மடங்கு அளவில் பெரிய கடற்புல் தாவரம் ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான தாவரமாக அறியப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் இந்த நீளமான கடற்புல் தாவரத்தை மரபணு சோதனை மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நீளமான கடற்புல் ஒரே தாவரம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
17 JUN, 2024 | 08:42 PM ஒவ்வொரு நகர ஈரநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பொதுவான தன்மையைக் கருத்தில் கொண்டு ஈரநில முகாமைத்துவம் தொடர்பான பொதுவான தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்துமாறு ஈரநில மாநாட்டில் கலந்துகொண்டவகளுக்கு பிரதமர் பரிந்துரைத்தார். சர்வதேச ஈர நிலப் பூங்கா ஒன்றியத்தின் ஆசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மாநாட்டின் ஆரம்ப விழா இன்று திங்கட்கிழமை (17) காலை வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது. சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆசிய முதல் மாநாடு ஜூன் 14 முதல் 21 வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெறவுள்ளது. நகர …
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
சுற்றுசூழல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி வரும் சிறுமி கிரெட்டா தன்பர்க், நார்டிக் கவுன்சில் அறிவித்துள்ள ‘சுற்றுசூழல் விருதினை’ நிராகரித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி, வெள்ளிக்கிழமைகளில் தனது வகுப்புகளை புறக்கணித்து விட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டு நாடாளுமன்றம் முன் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இதன்மூலம் உலக முழுவதும் பிரபலமடைந்த சிறுமிக்கு, ‘சுற்றுசூழல் விருது’ வழங்க 87 நாடுகளை கொண்ட நார்வே கவுன்சில் முன்வந்தது. ஆனால் கவுன்சிலின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள தன்பர்க், விருது மற்றும் பரிசு தொகை சுமார் 36 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை வாங்க மறுத்துள்ளார். மேலும் சுற்றுசூழல் இயக்கத்துக்காக விருதுகளை வழங்க…
-
- 0 replies
- 288 views
-