சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
காலநிலை மாற்றம்: 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை! போலந்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டையொட்டி முன் தயாரிப்புகளுக்காக இந்தியா 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமி சூடாவதைத் தடுப்பதற்கு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து நாடுகளும் முக்கியமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் பூமி சூடாவதற்குக் காரணமாக உள்ள கரியமில வாயுகள் மற்றும் பசுமை குடில் வாயுகளைக் கட்டுபடுத்த நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 459 views
-
-
‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 25 அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 7000 பொதுமக்களும் கலந்துகொண்டனர். காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அதனை எதிர்த்து போராடவும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் செயற்றிட்டங்களை வகுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ‘உலகம் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் நடைபெறாததைப் போன்று நாம் உள்ளோம்’ என்ற சுலோகம் அடங்கிய பதாதையை தாங்கியவாறு குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 908 views
-
-
உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள். உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண…
-
- 0 replies
- 516 views
-
-
கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! தேவிபாரதி புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் எனக் கணித்ததை இப்போது ஐநாவின் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்னும் பன்னிரெண்டே ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1,5 டிகிரி செல்சியல் அளவுக்கு உயரும். இதன் விளைவுகள் மோசமானவை. வறட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் பல கோடி மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும், அதன் விளைவாகக் கடல் மட்டம் உயரும். கடல…
-
- 0 replies
- 511 views
-
-
கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று. பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள். பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம். 'பல்லுயிர் பெருக்கம்' ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை 'ஹம்மிங் பேர்ட்'கள் உள்ளன. படத்தின் காப்புரிமைAFP புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர். ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நா…
-
- 0 replies
- 336 views
-
-
பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன. பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி. அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது. பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இ…
-
- 6 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன் September 30, 2018 1 Min Read உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் க…
-
- 0 replies
- 960 views
-
-
உலகிலேயே மிக விலை கூடிய தேவை மிக்க மரங்கள் தான் சந்தனம், தேக்கு போன்ற மரங்கள். சந்தன மர கடத்தல், ஆந்திராவில் சந்தன மரங்கள் வெட்டிய தமிழர்கள் கொலை என்பதால் இது ஏதோ வளர்க்க கூடாத மரங்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். விசயம் அதுவல்ல. அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் களவாக வெட்டப்படும் மரங்களுக்கே இந்தக் கெடுபிடி. சிலைத் திருட்டு போல, சந்தன மர திருட்டும் சட்ட விரோதமானது. இந்த வகை மரங்கள் வளர்ப்பு, சந்தை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இப்போது உண்டாகி, பலர் இந்த மரங்கள் வளர்ப்பு குறித்து அக்கறை செலுத்துகிறார்கள். 25 வருடங்கள் வளர்க்கப் படும் ஒரு பூரணமாக வளர்ந்த மரணத்துக்கான சந்தை மதிப்பு 2 கோடி (இலங்கைப் பணத்தில்) வரை கிடைப்பதால், இந்த மரத்தினை தமது ந…
-
- 1 reply
- 1k views
-
-
கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக்கை உண்பதை கேள்விப்படுகிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகட்டுப்படுத்தாவிட்டால், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அடுத்த பத்தாண்டுகளில் மும்மடங்காகும். அதற்குக் காரணம்…
-
- 0 replies
- 499 views
-
-
இதுவரை உலகில் வாழ்ந்த மிகப் பெரிய பறவையை வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் அழித்தனரா என்ற கேள்வியை மடகாஸ்கரில் புதைபடிவ நிலையில் கண்டறியப்பட்டுள்ள அவற்றின் எலும்புகள் எழுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவைகள் வரலாற்று முந்தைய மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது கிடைத்துள்ள இந்தப் பறவையின் எலும்புகள், சுமார் 10,000 வருடங்களுக்கு முந்தியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் கண்டறியப்படுவதற்கு முன்புவரை மனிதர்கள் இத்தீவுக்கு சுமார் 2,500 முதல் 4,000 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. "இந்த ஆதாரங்கள் தற…
-
- 0 replies
- 536 views
-
-
புத்திசாலியான பிரான்ஸ் காகம் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறச் சூழலின் தூய்மையானது, தற்காலத்தில் பெரிதும் பாதிப்படைந்த ஓர் இக்கட்டான நிலையிலேயே காணப்படுகின்றதென்பது, நாம் அனைவரும் பொதுவாகக் கண்டறிந்துகொண்ட உண்மையாகும். …
-
- 1 reply
- 1.4k views
-
-
'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு' - இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான். kallanai cauvery ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்குத் தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாகப் பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப் போக…
-
- 0 replies
- 845 views
-
-
காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம். எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிரு…
-
- 0 replies
- 536 views
-
-
சுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் ! பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வோர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ரொபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. குறித்த ஆய்வில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர…
-
- 0 replies
- 547 views
-