Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கடந்த இரண்டு வாரங்களாக இருமல் இருமல் இருமல் தொண்டை கழுத்து முதுகு தலை நுரையீரல் இதயம் எல்லா உறுப்புக்கும் இப்போது வேலை இருமல் இப்போது எனக்குக் கிடைத்த ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு நித்திரை தொலைந்தது மேல் மூச்சு வாங்குகிறது பகலை நீட்டிக்க இருமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பரிசளிக்கப்படுகிறது தியா - காண்டீபன்

  2. "வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring" "தோப்பின் நிழலில் சாய்ந்து இருக்கையில் தோன்றின மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோரணமாய் தொங்கிய இன்ப சிந்தனையில் தோய்ந்து சில சோகத்தையும் தந்தன!" "இயற்கை மனித குலத்தின் ஆன்மாவுடன் இறுக்கமாக தொடர்பை பிணைக்கும் பொழுது இதயம்வருந்தி என்னை சிந்திக்க வைத்தது இவனேன் மனிதகுலத்துடன் பிணையவில்லை என்று?" "பசுமை வனப்பகுதியில் காட்டுச்செடிக் கூட்டத்தில் பஞ்சுச்செடி அழகிய மாலையை சூட்டிட பல்லாயிரம் மலரும் தாம்சுவாசிக்கும் காற்றை பரவசத்துடன் அனுபவித்து இன்பம் கண்டன!" "என்னைச…

  3. "ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் …

  4. "எங்கு சென்றாய்?" [கசல் கவிதை] "காதல் தந்தாய் காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி சோதனை செய்யவா எங்கு சென்றாய்?" "அழகிய உடல் ஆனந்தம் தந்தது! அருகில் இல்லாமல் தூர விலகினாயே எங்கு சென்றாய்?" "கொஞ்சும் பேச்சில் நெஞ்சைப் பறித்தவளே! வஞ்சக மனத்துடன் கஞ்சத்தனம் வேண்டாம் எங்கு சென்றாய்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. "எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!" "கொடூரமாக இருக்காதே திமிர் பிடிக்காதே உரிமைகளை மதி குரல்களை மதி" "இங்கு வேலையாட்கள் இல்லை இங்கு முதலாளிகள் இல்லை இங்கு குடும்பமே உண்டு இனி நட்பாகக் கவனி" "கஷ்டங்களைக் கேளு துயரங்களைக் கேளு கடவுள் சிவாவாக இரு இயேசு கிறிஸ்துவாக இரு" "ஆதாயத்தைப் பகிரு லாபத்தைப் பகிரு ஒரு தந்தையைப் போல ஒரு தாயைப் போல" "அடிமை ஆக்காதே ஏழைகளை உருவாக்காதே ரோமாக இருக்காதே நீரோவாக இருக்காதே" "எல்லோரையும் இணை தொழிலாளர்கள் பங்கேற்கட்டும் அனைவரையும் உள்ளடக்கு முடிவெடுப்பதில் கலந்தாலோசி" "ஆர்வத்தைக் கொடு நம்பகத்தன்மை வளரட்டும் …

  6. 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா நெல்லுச் சோறு நிறைவு கொள்ளும் நெல்லுச் சோறு நிலா ஒளியில் நெல்லுச் சோறு !" "அத்தான் அறுவடை செய்த நெல்லு அத்தை வேகவைத்த கூட்டாஞ் சோறு அழகாய் பாத்தியால் சுமந்த சோறு அன்பாய் இருவரும் உண்ணும் சோறு!" "வேப்பமர குச்சியால் பல் விளக்கி வேக தண்ணியில் வாய் கொப்பளித்து வேட்டி தலைப்பில் வாய் தொடைத்து வேங்கை நிழலில் பரிமாறிய சோறு!" "ஓடும் நீரில் கால் நனைத்து பாடும் குயிலின் இன்னிசை ரசித்து சுடும் சோறை தயிரில் பிசைத்து கடும் காற்றில் ஊட்டிய சோறு !" …

  7. நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத பலநாட்களை பலமுறை நாம் கடக்கின்றோம் சில நாட்கள் நம் வாழ்வில் - நாம் மறக்கவே முடியாமல் சிதளூரும் காயங்கள் போல் நித வருத்தம் தருவன 2009, சித்திரை 27 கடற்கரை மணலில் குளிரூட்டப்பட்ட திடலில் காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட விடுமுறையில் மூன்று மணி நேரம் கலைஞரின் நாடகம் அரங்கேறிய நாள் தியா காண்டீபன் கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/ https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26

  8. “ஆனந்தம் ஆனந்தமே” "புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே! பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே! உருகி பேசி நெஞ்சில் சாய்ந்து வருடி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தமே!" "பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே! பருத்த மார்பும் சிறுத்த இடையும் கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே!" "பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில் உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே! திரும்பி பார்த்து வெட்க்கப் ப…

  9. 'மாற்றம் மாறாதது' "காதல் தந்த பார்வையும் மங்கும் காமம் தந்த உடலும் கூனும் காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "காலியான குளமும் நிரம்பி வடியும் காசுகள் தொலைந்து வறுமை வாட்டும் காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும் அற்புதமான உடலும் கருகிப் போகும் முற்றத்து துளசியும் வெறிச் சோடும் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது" "ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும் ஒற்றுமை குலைத்து பகையைக் கூட்டும் குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான் மாற்றம்…

  10. "சந்தேகம்" "சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு சரித்திரம் சொல்லும் இவைகளின் கதைகளை சகோதரர்களை பிரித்தது சில வரலாறுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது சில நிகழ்வுகள்" "எதிர்காலம் குறித்த சில சந்தேகங்கள் எல்லா உறவுகளில் எழும் ஐயப்பாடுகள் எதிர்பாராமல் விஸ்வரூபம் எடுக்கும் ஒருநாள் எல்லாம் மனநோயாக மனிதனை மாற்றிவிடும்" "சிலருக்கு ஏற்பட்ட சில பாதிப்புக்கள் சில தனி நபருடைய குணாதிசயங்கள் சிரசில் எடுத்த முன் எச்சரிக்கைகளை சிலவேளை சந்தேகமென அழைக்கச் சொல்லும்" "தவறாக சம்பவத்தை புரிந்து கொள்ளுதல் தகவல் சரிபார்க்காமல் சுயவிளக்கம் கொடுத்தல் தருண…

  11. "எந்தன் உயிரே" "அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து ஆரத் தழுவி ஆசை தூண்டி இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!" "அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி இடுப்பு வளைவு இன்பம் சொரிய ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக உரிமை நாட்டும் உத்தம உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. "தேடும் கண்களே" "தேடும் கண்களே ஓடும் உலகில் நீயோ நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே! காடும் மலையும் பெரிதல்ல வாடும் கொக்காய் இரவும் பகலும் ஆடும் நெஞ்சே பெரிது! சிறுத்த இடையும் செவ்விதழும் உறுத்தும் பார்வையும் அறுத்து எடுக்குதே என் இதயத்தை! கருத்த கூந்தல் காற்றில் ஆட ஒருத்தி அருகில் வந்தால் குருத்து ஆசை விழிகளில் மலருதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன். "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானி…

  14. "பேராசை" "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும். ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன். நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நி…

  15. "குழலூதும் இவனை பார்த்து" "மழலையின் மொழி கேட்டு நான்பேசும் மொழி மறந்தேன் மழலையின் மொழி பேசி என்னையே நான் மறந்தேன்!" "மழலையின் குறும்பு கண்டு துன்பங்கள் ஓடி மறைந்தன மழலையின் புன்னகை பார்த்து இதயமே வானில் பறந்தன!" "குழலூதும் இவனை பார்த்து குறும்பு கண்ணனை மறந்தேன் குழந்தை காட்டும் நளினத்தில் குமரி ஊர்வசியை மறந்தேன்!" "குழவி தளர்நடை கண்டு குதூகலித்து நான் மகிழ்ந்தேன் குழவியின் கொஞ்சிக் குலாவுதலில் குரத்தி வள்ளியை மறந்தேன்!" "தரணியில் ஓர்நிலவு கண்டேன் மழலையில் பலநிலவு கண்டேன் தரணியில…

  16. "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!" "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!" "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!" "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!…

  17. "நீராடும் நிலா" "வானத்து மதியாய் என்னுடைய காதலியாய் கானத்து குயிலாய் இனிமையின் ஒலியாய் மோனமாய் இருந்து நெஞ்சில் நிறைந்தவளே! ஆனந்தம் எதுவென உன்னில் அறிந்தேன் அனலாய் இதயம் இன்னும் கொத்திக்குதே!" "கிராமத்து மண்ணின் வாசனை தெரியுது கூரான கண்ணனும் என்னைத் துளைக்குது சீரான அழகோ ஆசையைத் தூண்டாதே! நேரான பாதையிலே தலைநிமிர்ந்து போறவளே நீராடும் நிலா நீதானோ என்னவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்" "திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம் இல்லை எனக்கூறாய் இருப்பதை எமக்கு அளித்தாய் வாழ்வின் பொருளை உன்னில் நாம் கண்டோம் வில்லங்கத்தில் இருப்பவனுக்கு நீ ஒரு கடவுள் நாவிற்கு இனிய சுவையுடன் தினமும் உணவு தந்தாய் யகத்தில் வித்தாகி, மலராகி, காயாகி, கனியாகி, விதையானாய் கண்டதையும் கற்று பண்டிதையாகிய ஒரு பல்கலைக்கழகமே லிங்கவழிபாடு பின் விநாயகர் முருகன் என்றும் முடிவில்லை இங்கிதமாய் பழகிடுவாய் இன்று உன்னை எங்கு காண்போம் கண்டதும் கவர்ந்திடுவாய் கலகலப்பாய் பழகிடுவாய் ஒரு பெரு முற்றுப்புள்ளியை இன்று பொட்டாய் வைத்துவிட்டாய் …

  19. "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.] "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால் நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால் நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால் நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை காற்று உதடைவிட மென்மை எ…

  20. "போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்திய…

  21. "எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் …

  22. "கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு" "கிள்ளை மொழி பேசும் மரகதமே கிளியே எங்கள் குலக் கொடியே கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?" "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?" "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழி…

  23. "கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது" [ஒரு குழந்தை பாட்டு] "கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது காலை வேளையில் வடை சுடுறாள் காத்து இருக்குது பூவரசம் வேலியில் கானா பாட்டு பாடி ஆடுறாள் !" "கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது காரிருளில் இரு கண்கள் மிளுருது காரை கொஞ்சம் விரைவா செலுத்து காத தூரம் போக வேண்டும் !" "கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது காடை கோழி எட்டி பார்க்குது காளான் பூஞ்சையை கொத்தி சாப்பிடுது காட்டுப் பக்கம் அறுந்து போகுது !" "கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது காங்கேயம் காளை துள்ளி வருகுது கா…

  24. "எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?" "பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு? மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!" "அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி? விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி? கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!" "உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ? கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவ…

  25. "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.