Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், …

  2. இம்ப்ரோ சித்த மருந்து விவகாரம்; ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 11:07 AM மதுரை, மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம்…

  3. திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு - 11 தனிப்படைகள் அமைப்பு திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பதிவு: ஜூலை 07, 2020 09:35 AM திருச்சி, திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கின் விவரம்: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங…

  4. கட்டுப்பாடுகள் தளர்வு சென்னையில் இன்று முதல் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும் மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும். மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன. பதிவு: ஜூலை 06, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சம்பந்தப்பட்ட 4 மாவட்ட…

  5. மக்கள் நீதி மய்யத்தின் ‘நாமே தீர்வு’ வலைத்தளம்: ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்தார்; ஒரே நாளில் 54,000க்கும் அதிகமான அழைப்புகள் மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப் பணிக்காக தொடங்கியுள்ள "நாமே தீர்வு" என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா நிவாரணப் பணிக்காக திமுக, 'ஒன்றிணைவோம் வா' எனும் திட்டத்தைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாமே தீர்வு இயக்கத்தின் மூலம் சேவைப் பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன…

  6. ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது பதிவு: ஜூலை 03, 2020 16:17 PM புதுடெல்லி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள ஜூன் 26 தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்திய விலங்குகள் நல வாரியம் செயலாளர் டாக்டர் எஸ்.கே. தத்தா கூற இருப்பதாவது: பீட்டா ஒரு ஆய்வு அறிக்கையை அனுப்பியுள்ளது, அதில் போது ஆறு விலங்குகள் இறந்துவிட்டதாக (ஜல்லிக்கட்டு திருவிழாவின் போது) தெரிவிக்கப்பட்டுள்ளது. சில படங்கள் விலங்குகளை நகங்களால் சுரண்டுவதாக காட்டி உள்ளன. அது விலங்குகளுக்கு என்ன கொடுமை நடக்கிறது என்பதைக் காட்டியது. …

  7. புதுக்கோட்டை சிறுமி கொலை: முதல்வர் இரங்கல், குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு புதுக்கோட்டை, அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல…

  8. தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பதிவு: ஜூலை 02, 2020 15:36 PM தூத்துக்குடி, தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்த…

  9. அரச வன்முறையின் ஊற்றுக்கண் நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம். அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்…

  10. என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 01, 2020 10:53 AM நெய்வேலி, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக…

  11. உதயநிதியை இ-பாஸ் இல்லாமல் தூத்துக்குடி செல்ல அனுமதித்த அனைவரையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும்!- அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடி “இ-பாஸ் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி செல்ல அனுமதித்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ’இந்து தமிழ்’ இணையத்துக்குப் புகழேந்தி அளித்த பிரத்யேகப் பேட்டி: கரோனாவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆரம்பத்திருலிருந்தே தான் சொல்லிவரும் யோசனைகளைக் கேட்காமல் உதாசீனப்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களைத் தற்போது நெருக்கடியான கட்டத்தில் கொண்டுவந்த…

  12. அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி! மின்னம்பலம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் ஒதுக்கப்பட்டு, பணிகளைக் கவனித்து வந்தார். இதனிடையே கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு செய்திகள் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனை போனில் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டார். அத்துடன், மத்திய மனிதவள…

  13. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூன் 29 தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற ‘இரண்டு மரணங்கள்’, தமிழ் நாட்டுப் பொலிஸார், கடந்த நான்கு மாதங்களாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் செய்த அரிய சேவைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் கள வீரர்களாக அதாவது, கொரோனா வைரஸ் போராளிகளாகத் தமிழக பொலிஸார்தான் செயற்பட்டிருந்தார்கள். ஊரடங்கு உத்தரவுகளைச் செயற்படுத்துவதில், மிக முக்கிய பங்காற்றியவர்களும் பொலிஸார்தான். கொன்ஸ்டபிள் முதல் டி.ஜி.பிக்கள் வரை, மிகச்சரியாகச் சொல்வதென்றால், தங்கள் குடும்பங்களை மறந்து, தெருவி…

  14. மாமூல் வாங்கு, வழிப்பறி செய், அடித்துக் கொல் - தமிழக காவல்துறையின் தாரக மந்திரங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஜெயராஜும், அவரது மகனும் காவல் துறையால் கொடூரமாக அடித்து, சித்தரவதை செய்யப்பட்டதோடு பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதால் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணம் அடைந்திருக்கின்றனர். தமிழக காவல் துறையின் இந்த அரக்கத்தனத்திற்கு எதிராக தூத்துக்குடி மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துப் போய் இருக்கின்றது. வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு தன்னுட…

  15. சிறப்புக் கட்டுரை: சாத்தான்குளம் கொடூர நிகழ்வு: பனிப்பாறையின் நுனி! மின்னம்பலம் ராஜன் குறை கடலில் பெரும் பனிப்பாறைகள் மிதக்கும். அவற்றின் சிறிய நுனி வெளியே தெரியும். ஆனால் கடலின் மேற்பரப்புக்குக் கீழே அந்த சிறிய நுனியால் அடையாளம் காண முடியாத அளவு மிகவும் பெரிய பாறையாக அது இருக்கும். டைட்டானிக் படத்தில் அப்படி ஒரு பாறை மோதி கப்பலில் உடைவு ஏற்பட்டு அது மூழ்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதனால் ஒரு பிரமாண்டமான பிரச்சினையின் சிறிய வெளிப்பாட்டை பனிப்பாறையின் நுனி, Tip of the Iceberg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் என்பவரும், அவருடைய மகன் பென்னிக்ஸ் என்பவரும் போலீஸாரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, கடும…

    • 1 reply
    • 800 views
  16. தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு: தமிழக அரசின் புதிய திட்டம்! அன்றாட வாழ்க்கையில் தூய தமிழில் பேசுவோருக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டமொன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இதரமொழிச் சொற்களின் பயன்பாடு அல்லாமல் தூய தமிழில் பேசும் மூவருக்கு 5 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பெறுமதியான பரிசுத் தொகை வழங்கப்படுமென செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதன்படி, தகுதியுடையோர் sorkuvai.com என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பத்துடன், நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ்ப் பற்றை உறுதிசெய்து சான்றிதழ் பெற வேண்டும…

    • 2 replies
    • 766 views
  17. கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடக்கும் ராணுவ வீரர் சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மானாமதுரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடந்து செல்கிறார். மானாமதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). ராணுவவீரரான இவர், தற்போது விடுமுறையில் உள்ளார். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பது குறித்து கிராமமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதனை உலக சாதனையாக மாற்றும் முயற்சியாகவும் பின்னோக்கி நடக்க முடிவு செய்தார். இதற்காக அவர் சிவகங்கை மாவட்டத்தில் 10 நாட்களில் ஆயிரம் கி.மீ., பயனித்து பல நூறு…

  18. திருச்சியில் ரூ.200 கோடி மதிப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும்; முதல் அமைச்சர் பழனிசாமி திருச்சியில் ரூ.200 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். பதிவு: ஜூன் 26, 2020 17:21 PM திருச்சி, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் சிறு, குறு தொழில் அமைப்புகளுடன் காணொலி காட்சி வழியே ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருச்சி மாவட்ட தொழில் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இதன்பின் அவர் பேசும்பொழுது, திருச்சி மணப்பாறை காகித நிறுவனத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக 400 மெட்ரிக் டன் காகித கூழ் தயாரிக்கப்படும் என கூறினார். …

  19. திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி முக்கொம்பில் ரூ.387.6 கோடி மதிப்பில் புதிய கதவணை அமைக்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பதிவு: ஜூன் 26, 2020 15:50 PM திருச்சி, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இன்று பேசும்பொழுது, திருச்சி மாவட்டத்தில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. திருச்சியில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜூன்12ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் அ.தி.…

  20. ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில் திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இர…

    • 1 reply
    • 683 views
  21. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வடசென்னையில் களமிறக்கப்பட்ட கமாண்டோ படை வீரர்கள் வடசென்னை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பதிவு: ஜூன் 26, 2020 05:26 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னையில் வடசென்னை பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் போதிய விழிப்புணர…

    • 1 reply
    • 483 views
  22. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பே அவசியம்- ராமதாஸ் by : Litharsan கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கோரியுள்ளார். இதேவேளை, சென்னையில் மட்டும் 14,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் திருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) தனது ருவிற்றரில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ஒரே நாளில் 14 ஆயிரம் கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும்…

    • 0 replies
    • 383 views
  23. வாழ்வா சாவா நேரத்தில் “விக்” அவசியம் தானா..? சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகி கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 64603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35339 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனை, தரமான சிகிச்சை, சிறப்பான கட்டுப்படுத்தும் பணிகள் என கொரோனாவை தடுத்து விரட்டுவதில் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்க…

  24. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள்- மத்திய அரசு அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மேலும் 29 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தத் திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்…

  25. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம்; உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: சபாநாயகருக்கு திமுக பதில் கடிதம் அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் மீது சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி திமுக சார்பில் பதில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சித் தாவல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக அளித்த மனுவிற்கு மூன்றரை வருடங்களுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி ஜூன் 1 அன்று அளித்த விளக்கத்தினை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் திமுகவிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.