Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பதிவு: ஜூன் 25, 2020 04:30 AM சென்னை, சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கொரோனா தாக்குதலையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு காரியங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அரசு அதிகார…

  2. உனக்கு ஓகேவா.. எனக்கு பிடிச்சிருக்கு".. தாத்தாவின் சேட்டை.. சிறுமிக்கு "லெட்டர்".. தூக்கிய போலீஸ்! கோவை: "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று கேள்வி கேட்டு, சிறுமிக்கு லவ் லட்டரும் தந்த முகமது தாத்தாவை தூக்கி உள்ளே வைத்துள்ளனர் நம் போலீசார்!! கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா.. இவருக்கு 66 வயதாகிறது.. இதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். சிறுமியை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் முகமது தாத்தாவுக்கு சபலம் ஏற்பட்டு வந்துள்ளது.. அதனால் இதை மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க அவருக்கு விருப்பமில்லை.. உடனே ஒரு லவ் லட்டர் எழுதினார்.. "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு …

  3. அக்டோபரில் உச்சம்...! சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாறுகிறது...!! அக்டோபரில் உச்சம் அடையும் கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. பதிவு: ஜூன் 24, 2020 13:08 PM சென்னை சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில ந…

  4. கொரோனா பரவல் அதிகரிப்பு : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - முதலமைச்சர் ஆலோசனை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது பதிவு: ஜூன் 24, 2020 10:54 AM சென்னை அரியலூர், திருப்பூரை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரித்துவரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் கட…

  5. சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பதிவு: ஜூன் 24, 2020 04:45 AM சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர்.சம்பவத்தன்று இரவு இவர்கள் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த சாத்தான்…

  6. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்கள் இரத்து! சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கான விமான சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/சென்னை-உள்ளிட்ட-நான்கு-ம-2/

  7. உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு Facebook சங்கர் - கௌசல்யா ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கல…

  8. காப்பாற்ற போராடிய வனத்துறை... காயம் எப்போது ஏற்பட்டது..? பரிதாபமாக உயிரிழந்த யானை...

  9. 8 லட்சம் மரங்கள், குறுங்காடுகள்... வனத்துக்குள் திருப்பூர்! சுற்றுச்சூழல்: ஒரு லட்சம் மரம் என்ற இலக்குடன் களமிறங்கி, 5 வருடங்களில் 8 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறது 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு. தங்கள் கட்சித் தலைமையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இத்தனை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது என ஒவ்வொரு கட்சியும் அறிக்கைக் கொடுக்கும். அவர்கள் சொன்ன கணக்கில் உண்மையாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தால் இன்றைக்குத் தமிழகமே பசுமை வனமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் காகிதங்களில் அறிக்கை மற்றும் கணக்கில் மட்டும் மரம் வளர்ப்பவர்கள். மரக்கன்றுகளை நடவு செய்வது…

  10. கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் உயிரிழக்கும் மாநகராட்சி களப்பணியாளர் குடும்பத்துக்கு நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்: பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என வருவதால் குடும்பத்தினர் கவலை கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி களப் பணியாளர்கள். (கோப்புப் படங்கள்) சென்னை மாநகராட்சி களப் பணியாளர்கள் சிலர் கரோனா அறிகுறி யுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வருவதால், குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எ…

  11. தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்திற்கு பால் தரமாட்டோம்: தமிழக அரசு அதிரடி தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் ஆவின் பால் திட்டத்தின் மூலம், இலங்கை இராணுவத்திற்கு நாளாந்தம் பால் வழங்கும் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இதனை தெரிவித்துள்ளார். ஆவின் பால் திட்டத்தின் மூலம் இலங்கை இராணுவம் நாளாந்தம் ஆயிரம் லீற்றர் பால் வழங்கும் திட்ட முன்மொழிவை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் எமக்கு அனுப்பியது. ஆனால், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு பால் வழங்கமாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த திட்டத்தை நிராகரித்து விட்டார் என அவர் தெரிவித்துள்ளார். “நேற்று இலங்கை அரசு, தமிழக …

  12. சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்! மின்னம்பலம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிப்பதற்காக 260 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 20) நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சர்கள், மருத்துவர்களுடன் கொரோனா வைரசைத் தடுப்பது தொடர்பாகப் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இந்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் காரணமாக, இன்றைக்குக் குணம் அடைந்தவர்களின் எண…

  13. சர்வதேச யோகா தினம்: தமிழகத்தில் வென்டிலேட்டரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோக நித்ரா சிகிச்சை தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதோடு இந்திய மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலும் இயற்கை, யோகா மருத்துவத்தில் சோதனை செய்யப்படுகிறது. நோய் எதிர்ப்பு பானம் தயாரிப்பது எப்படி?…

  14. நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 17:17 PM சென்னை, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு பட…

  15. உதவிகள் குவிந்தாலும் நுங்கு வெட்டுவதைத் தொடரும் மருத்துவ மாணவர்! ஈரோடு நுங்கு வெட்டி, விற்பனை செய்யும் மருத்துவ மாணவர் சிவாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், “உதவிகளுக்கு நன்றி. எனினும், எங்கள் குடும்பத்துக்கே சோறு போடும் தொழிலை விடமுடியுமா?” எனத் தொடர்ந்து நுங்கு விற்று வருகிறார் சிவா. ஈரோடு மாவட்டம், எழத்தூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது குடும்பமே ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதிகளிலிருந்து நுங்கு குலைகளை மினி ஆட்டோவில் ஏற்றி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு எடுத்து வந்து வியாபாரம் செய்து வருகிற…

  16. 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 12:06 PM சென்னை கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்…

  17. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து சிறப்பு மருந்து சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பதிவு: ஜூன் 19, 2020 08:16 AM சென்னை சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்…

  18. தமிழ் மொழிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் மாற்றம்: தமிழக அரசு ஆணை ரத்து 14 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பக ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரி…

  19. உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது. சென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத்…

  20. மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை பிரதமர் மோடி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியுடன் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார். ஆலோசனையின்போது ‘‘மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி உடனடியாக வழங்க வேண்டும். மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியு…

  21. நாட்டுக்காக மகன் உயிரை தியாகம் செய்ததை இட்டு பெருமை -லடாக் மோதலில் பலியான இராணுவ வீரரின் தாய் உருக்கம் எனது ஒரேயொரு மகனை பறிகொடுத்ததை இட்டு நான் மிகவும் துயர் அடைகின்றேன். எனினும் நாட்டுக்காக தனது உயிரை அவர் தியாகம் செய்ததை இட்டு நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு லடாக் மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கேணல் சந்தோஷ் பாபுவின் தாயாரான மஞ்சுளா உருக்கமாக தெரிவித்துள்ளார். ஞாயிறன்று மகனுடன் கடைசியாக பேசியதாக தெரிவித்த அவர் அங்கிருந்து வரும் தகவல்கள் குறித்து விசாரித்தபோது,அதை நம்ப வேண்டாம் எனவும், உண்மையான நிலவரம் வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மகன் இறந்த தகவலை முதலில் நம்ப மறுத்ததாக கூறும் தந்தை உபேந்தர், உண்மை அதுவென தங்களு…

    • 3 replies
    • 676 views
  22. கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உட்பட 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் தொண்டை, மூக்கு, காது சிகிச்சைப் பிரிவில் கடந்த 8-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக 'டிரக்யாஸ்டமி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார். பிறகு, இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் …

  23. ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு- மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத…

  24. அடையாளமே இல்லாதவர்களிடம் அடையாள அட்டை கேட்கிறது அரசு! - திருநபர் கிரேஸ் பானு பேட்டி முகம்மது ரியாஸ் நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்? தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருந…

  25. ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம் சென்னை வன்கொடுமைத் தடுப்பு வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.