Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் இருந்து 1,000 கி.மீ. நடந்தே வந்த நாகை, திருவாரூர் பட்டதாரிகள் திருச்சியில் இருந்து வாகனத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மும்பையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரம் நடந்தே வந்த பட்டதாரிகள். திருச்சி: நாகை மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சோலாப்பூரில் செயல்பட்டு வரும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பி.எஸ்சி, எம்.எஸ்சி. வேளாண் பட்டதாரிகள் ஆவர். அனைவரும் சோலாப்பூரில் தங்கி வேலை …

  2. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சராசரி மனிதனுக்கு சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 12:38 PM சென்னை இதய நோய் வந்துவிட்டாலே அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை நினைத்தும் அதற்கு ஆகும் செலவை எண்ணியுமே பலரும் அதிகம் வருந்துவார்கள். வசதி குறைந்தவர்களாக இருந்தால் சரியான மருத்துவத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த அளவிற்கு இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் மருத்துவம் ஆடம்பர பொருளாக இருந்தது சாதாரணமாக அடிப்படை பரிசோதனைகளை செய்வதற்கே அதிக செலவாகும். ஆனால் கொரோனா நோய் தொற்று வந்த பிறகு மாரடைப்பு மற்ரும் எய்ட்ஸ்போன்ற அதிக அபாயகரமான நோய்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. …

  3. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில்- இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி சென்னையில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாநில அரசாஙகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட 16,00 சுகாதார தொழிலாளர்களை பயன்படுத்தி வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உடைகளுடன் நடவடிக்கையில் இறங்கவுள்ள சுகாதார பணியாளர்கள் சென்னையை 24மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருப்ப…

  4. தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளம…

  5. சென்னை: கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கும், சிகிச்சை மற்றும் மாத்திரை பெற வருபவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக சுரங்க வடிவில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்…

  6. சென்னை: எப்போதுமே எங்களுக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கி வைக்கும் நிலையில் இப்போது மட்டும் எங்களை கொண்டாடுவது ஏன் என தூய்மைப்பணியாளர்கள் தங்கள் மனக்குமுறலை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை. நாடு தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்கள் உடல், உடைகளில் அசுத்தங்களை சுமக்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருக்க அறிவுறுத்தப…

  7. அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவம…

    • 0 replies
    • 215 views
  8. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தமிழகத்தில் ரயில் பெட்டியில் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலதிக தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.

    • 0 replies
    • 392 views
  9. ‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்! சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்! நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: …

  10. சென்னை: கொரோனா பரவல் வேகம் அதிகரித்து இருப்பதின் எதிரொலியாக சென்னையில் கொருக்குப்பேட்டை, புதுப்பேட்டை, வேளச்சேரி பிரபல வணிக வளாகம் என 9 முக்கிய இடங்களை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ேவண்டாம் என போலீசார் தடை வித்துள்ளனர். இந்த தடையை மீறினால் 2 ஆண்டு சிறை என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று மாலை 411 ஆக அதிகரித்தது.சென்னையில் நேற்று முன்தினம் மாலை வரை மாநிலத்தில் அதிகமாக 45 …

  11. தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்! தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்…

    • 1 reply
    • 999 views
  12. ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கின்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி தமிழக முழுக்க 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதன் பட்டியல் இதோ:…

  13. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. பதிவு: ஏப்ரல் 03, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75…

  14. சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…

  15. ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்துற்கு 500 கி.மீ. நடந்து வந்த வாலிபர் சொந்த ஊர் செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நபர்கள் (கோப்பு படம்) ஐதராபாத்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 69 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 156 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவத…

  16. ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும் சிறப்பு கவனம்- முதல்வர் ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்பட்டு வரும், அம்மா உணவகங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நலிவுற்ற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத் திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை இலட்சம் பேர் உணவு அருந்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.…

  17. தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது! கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது தமிழக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் 7 நாட்களில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்குப் பதிவுச…

  18. கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள விபரம்: தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் மார்ச் மாதத்திற்கான வாடகையை வசூல் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று(மார்ச்-31) உத்தரவிட்டுள்ளது. இதனை …

  19. ராஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை.! தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதை அடுத்து அனைத்து மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் அனைத்து ராஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு மர்ம கும்பல் திருடி சென்று விட்டது என்பதும் இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள ராஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு ரூபாய் 45 ஆயிரம் …

    • 2 replies
    • 690 views
  20. பாவனையற்ற ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் தமிழகம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாவனைக்கு உதவாத ரயில் பெட்டிகளை பயன்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முதல்கட்டமாக 674 பழைய ரயில் பெட்டிகள்அடுத்த ஒரு வாரத்தில் தனி வார்டுகளாக மாற்றப்படவுள்ளது. இதன்மூலம் குறைந்த செலவில் சுமார் 1,300 படுக்கைகள் அமைக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பழமையான ரயில் பெட்டிகளை தேர்வுசெய்து, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ரயில்வே வாரியம் அனைத்து மண்டல முகாமை…

  21. சென்னை : டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 'தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லா…

  22. நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்து 7 நாட்களை கடப்பதற்கு முன்னதாகவே, சென்னையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்துக்கு விற்றுவருவதாக மளிகை மொத்த மற்றும் சில்லரைவியாபரிகள் மீது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெருக்கடியான காலக்கட்டத்திலும் மக்கள் கையில் இருக்கும் கொஞ்ச பணத்தையும் பறிக்கும் வியாபார கொள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை மற்று காய்கறி கடைகளுக்கு அரசு விலக்கு அளித்திருந்த நிலையில், ஞாயிற்று கிழமை முதல் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ள…

    • 0 replies
    • 841 views
  23. சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம். இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அ…

  24. தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரும் முதல்வர் கொரோனா தடுப்புக்காகவும், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலவர் எடப்பாடி பழநிசாமி கோரியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியப் பொது நிதிமுறையின் கீழ் மத்திய அரசு மட்டுமே ரிசேர்வ் வங்கியிடமிருந்து தங்கு தடையின்றி கடன்பெற முடியும் எனவும் மாநில அரசுகள் வேறு பல கடன் ஆதாரங்களைச் சார்ந்திருந்தாலும் தங்கு தடையின்றி நிதி திரட்டுவது சாத்தியம் அல்ல என்றும் முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஊரடங்கின் மூலம் நாடு முடக்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.