Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரை மாநகரில் மக்களை துரத்தும் கரோனா தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வந்தோருக்கும், டெல்லி நிகழ்வுக்குச் சென்று வந்தோருக்கும் மட்டுமே பரிசோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டது. முதல் முறையாக தமிழகத்தில் உள் ளூரைச் சேர்ந்த ஒரு நபராக மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கரோனா தொற்று உறுதியானது. இவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கரோனோ உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த சில வாரங் களாக மதுரையில் கரோனா கட் டுக்குள் இருந்தது. சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, திருச்சி என …

  2. கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் ! இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது. கொரோனா தொற்றை காரணம் காட்டி, அரசு எந்தவித முன்தயாரிப்பும் செய்துகொள்ளாமல் ஊரடங்கை அறிவிப்பு செய்துவிட்டது. பெரும்பான்மை மக்களுக்கு முன்தயாரிப்பு செய்துகொள்ள போதிய நேரம் தரவில்லை. விளைவு பெரும்பான்மை மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி, வறுமையிலும் பசியிலும் தள்ளியுள்ளது. இந்நிலையில் மக்களை காப்பது நமது கடமை என்ற அடிப்படையில், சட்ட மாணவர்களும், இளம் வழக்கறிஞர்களும், கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்…

  3. கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதுக்கு உட்பட்ட 110 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோவையில் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தையும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 110 குழந்தைகளில் 59 ஆண் குழந்தையும், 51 பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட…

  4. உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை! தமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசாத முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பேசினார்கள். இந்நிலையில் நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன…

    • 3 replies
    • 586 views
  5. 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன – அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ.சி.எம்.ஆரின் ஆணைப்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேபிட் பரிசோதனை கருவிகளை வாங்கியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உலகமே போட்டி போட்டு ரேபிட் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வாங்க முயற்சித்த நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. அந்த கருவிகளை எங்கு, யாரிடம் வாங்கலாம் என்பதை ஐ.ச…

    • 4 replies
    • 645 views
  6. யாழில் உயிரிழந்த தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வேண்டும் – முருகன் அரசுக்கு வேண்டுகோள் தந்தையின் உடலையாவது இறுதியாகப் பார்க்க அனுமதி வழங்க வேண்டுமென்று சிறையில் உள்ள முருகன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்தார். இந்நிலையில் கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும…

  7. தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் by : Benitlas கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றி உலக நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மக்களிடையே கொரோனா பாதிப்பு பற்றி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், உடனடியாக முடிவுகள் தெரிவதற்கு போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் உபகரணங்கள் வாங்குவதற்கு சீனாவிடம் இந்தியா கோரியது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்க…

  8. கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. மாதந்தோறும் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்! புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும், கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம். கடந்த 4 ஆண்டுகளாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் …

    • 1 reply
    • 635 views
  9. ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தெரிவிப்பு! கொரோனா நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்தை தொடங்கினார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட…

  10. தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''எங்கள் பர்ஸ் காலி'' வேதனையில் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல்…

  11. அதிரடியாக மூடப்பட்டது சென்னை அண்ணாசாலை! கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், சென்னை அண்ணாசாலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை மையப் புள்ளியாக உள்ளது. இங்கு மட்டும் 400 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஊரடங்கு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சென்னை அண்ணாசாலையில் அண்ணா மேம்பாலம் முதல் திருவல்லிக்கேணி வரை வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. விதிகளை மீறி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்…

  12. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழப்பவருக்கு 50 இலட்சம் இழப்பீடு- முதல்வர் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது வைத்தியத் துறையினர் தொற்று ஏற்பட்டு துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்கள…

    • 1 reply
    • 383 views
  13. தமிழகத்தை தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாக அறிவித்தது மாநில அரசு! by : Litharsan தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939இன் 62ஆவது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76இன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், மதம் சார்ந்த இடங்கள் என அனைத்திலும் சவர்க்காரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவும் இடம் அமைக்கவும் அங்கு வந்து செல்வோர் கை கழுவுவதை உறுதி செய்…

    • 0 replies
    • 480 views
  14. தமிழகத்தில் தொழிற்சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை by : Litharsan கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இணைந்திருந்தனர்…

    • 0 replies
    • 372 views
  15. ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்சம் அளவுக்கு அபராதம் வியாழக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைதாகி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வலம்வந்த 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.2 கோடியே 68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.1 கோடியே 46 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்க…

    • 0 replies
    • 803 views
  16. சென்னையில் 27 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் 95 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் தற்போது தற்காலிமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தி…

  17. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதி – விஜயகாந்த் அறிவிப்பு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், மருத்துவத்துறையை தேர்வு செய்து மக்கள் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்…

  18. தமிழகத்தில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு: மேலும் 105 பேருக்கு கொரோனா! தமிழ்நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதனைவிட திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்…

  19. இந்நேரத்தில் சமூக அக்கறை இல்லை என்றால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை!- களப்பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை பேட்டி திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் தற்காலிகக் காய்கறிச் சந்தையில் தன்னார்வலராய்ப் பணியில் இருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை புஷ்பலதா. முகக்கவசம் இல்லாமல் வருகிறவர்களிடம் பேசுகிறார்; அவர்களுக்கு முகக்கவசம் அளிக்கிறார். சந்தைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால் அதை ஒழுங்குபடுத்துகிறார். எடமலைப்பட்டிப் புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரியும் புஷ்பலதா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 70 சிப்பம் அரிசியைக் கொடையாளர்களிடமிருந்து பெற்று ஏழை மக்களுக்குப் பகிர்ந்தள…

  20. தோட்டத்திலேயே அழுகும் கிர்ணி பழங்கள். புதுச்சேரி ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர். புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும். அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கட…

  21. முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு என்பது பாலபாடம்! எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல! முதலமைச்சர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயகப் பண்பல்ல - அதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: உலக நாடுகளையே வதைத்துக் கொண் டும், வரலாறு காணாத உயிர்ப் பலிகளை ‘காவு'…

  22. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 1372 ஆக உயர்வு! தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த முதலாம் திகதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 …

  23. கொரோனா வைரஸை முற்றாக அழிக்கும் கிருமிநாசினி ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறனர். சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்பொழுது உலகில் இரண்டு மில்லியனுக்கு மேல் மக்களை பாதித்து, ஒரு இலட்சத்துக்கும் மேலானவர்களை உயிர் பலி வாங்கி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை எப்படி ஒழிப்பது என தெரியாமல் உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவுகிறது. இதை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிருமி நாசினியை பயன்படுத்தினால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஆனால் வைரஸை அழிக்க முடியாது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை…

  24. யூன் 24 வரை ஊரடங்கு.? கிடைத்தது ஆதாரம்..! பேரதிர்ச்சியில் மக்கள் ..! கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் தற்போது வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இதற்கு முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிய இருந்த நிலையில்,கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து,மே 3 வரையில் மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சியில் மக்கள் தேவையில்லாமல் வ…

  25. அடக்கம் செய்யப்பட்ட முதியவருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிப்பு; சிந்தாதிரிபேட்டையில் ஒரு தெரு முழுதும் சீல்: சுகாதாரத்துறையினரின் அலட்சியம்? கரோனா சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளையும் தமிழக அரசும், பொது சுகாதாரத்துறையும் மிக கவனமாகவும், பொறுப்புடனும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஆங்காங்கே காணப்படும் அலட்சியத்தால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படி ஒரு நிலை சென்னையில் நடந்துள்ளது. சென்னை தமிழகத்தில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாவட்டம். ஹாட்ஸ்பாட்டில் உள்ள மாவட்டம் ஆகும். சென்னையில் 228 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் 3 மண்டலங்களில் அதிக தொற்று உள்ளது. இதில் 5 வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.