Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். அவரது வீட்…

  2. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவில் உள்ளது கர்நாடகம். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் திறக்கும் முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அன்றாட பயன்பாட்டிற்கே தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத…

  3. காஞ்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் அத்தி வரதர் தரிசனம்.. மலர்ச்சரம் பெற்றார். திமுக தலைவா் ஸ்டாலினின் மனைவி துா்க்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபிக்களுக்கான சிறப்பு வழியில் வந்து தரிசனம் செய்துவிட்டு பயபக்தியுடன் மலர்சரம் பெற்று சென்றார். திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்.அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். ஆனால் கூடவே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும். இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சிதான் திமுக என்ற பிரச்சாரத்தை பாஜக போன்ற கட்சிகள் தொடர்ந்…

  4. நான் காமாட்சி அம்மன்...ஏவ்.. எல்லோரும் வரணும்.. ஏவ்.. கோர்ட் வாசலை கலங்கடித்த நிர்மலா தேவி! தன் முடியை தானே வெட்டி, காதிலும் அதை தொங்க விட்டு கொண்டு, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று பேச ஆரம்பித்த நிர்மலாதேவியை தமிழகம் முழுக்க மக்கள் குழப்பத்துடன் பார்த்து வருகிறார்கள். வழக்கம்போல் பளபளவென புடவை, தலைநிறைய மல்லிகைப்பூ, கழுத்து நிறைய நகைகளுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் நிர்மலாதேவி. கோர்ட்டுக்குள் வழக்கறிஞருடன் பேசிக் கொண்டே சென்றார். அப்போது, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று சொல்லி பேன்ட், பூ, புடவையை…

  5. வைகோ, அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தெரிவு! டெல்லி மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர். மாநிலங்களவையில், தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் 24ஆம் திகதி முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு வருகிற 18ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறித்த 6 உறுப்பினர்களையும் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும் தெரிவுச…

  6. முகிலனை தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தது...ஆந்திர காவல்துறை! திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு அழைத்து வரப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் தமிழக சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு முகிலன் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/social-activist-mukhilan-handed-over-cbcit-police

  7. நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று வாதாடினார். விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் 30 நாட்கள் பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி பரோல் கோரி மனு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நளினி நேரில் ஆஜராவதில் சிக்கல் உள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இ…

    • 0 replies
    • 796 views
  8. இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க.வின் முக்கிய பதவியான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 1980களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது தி.மு.க.வும் இளைஞர் அணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளராக மு.க.ஸ்டாலின் செயற்பட்டார். அவரைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் பதவியேற்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமையை ஏற்றுள்ள தந்தைக்கு உதவியாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். மக்களவைத் தேர்த…

  9. மாநிலங்களவைத் தேர்தல் – ம.தி.மு.க. வேட்பாளராக வைகோ தேர்வு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் வரும் 18 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் உடன்பாட்டின் அடிப்படையில் மாநிலங்களவைக்கான ஒரு இடத்தை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியது. இந்த இடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவார் …

  10. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. திமுகவின் தங்கதமிழ்செல்வனின் கோரிக்கை மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் இன்று இவ்வழக்கை விசாரிக்க உள்ளது. இத்தடன் சேர்த்து 3 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிற்கு எதிரான வழக்கையும் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானதுதற்போதைய துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வத்தை ஆதரித்…

  11. அடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு.! சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீக்கிரமாகவே ராஜ்ய சபா சென்றுவிடுவார் என்று பார்த்தால், ஒரு சிக்கல் எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த சீட் மதிமுகவுக்கு தரப்படவில்லை என்றதுமே, வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக உறுதி அளித்திருந்தது.அதன்படி வைகோ எம்பியாக போகிறார் என்றும், 23 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ராஜ்ய சபாவில் முழங்க போகிறார் என்றும் தொண்டர்கள் ஆர்வமானார்கள். தேச துரோக வழக்கு ஆனால், 2009-ல் குற்றம் சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக திமுக ஆட்சி காலத்தில் தேசத…

  12. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பெரும் 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை உச்சநீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனைக்காலமான 14 ஆண்டுகளை ஏற்கனவே சிறைகளில் கழித்துவிட்டதால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலா…

    • 0 replies
    • 515 views
  13. தமிழ்நாடு அரசின் சின்னமானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி.. தமிழகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது.இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களி…

  14. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – ஸ்டாலின் தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஆட்சி கவிழப்போவது உறுதி எனவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அ.தி.மு.கவின் ஆட்சிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் மட்டுமே ஆயுள் இருக்கிறது. ஆயுள் முடிந்து ஆட்சி மாற்றமா? அல்லது ஆயுள் முடிவதற்கு முன்பே ஆட்சி மாற்றமா? என்ற கேள்வி தொடர்ந்து நிலவிவருகின்றது. இருப்பினும் விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார…

  15. ஒரே குடும்ப அட்டை முறைமைக்கு வைகோ கண்டனம் நாடு முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறிய கருத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வைகோ இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க தொடர்ந்து முயற்சிகளை…

  16. தீ வைத்தது நாம் தமிழர் கட்சியா? https://www.youtube.com/watch?v=03PRK_lVVEk

  17. முடிஞ்சா ரஜினிகிட்ட மோதிப்பாருங்க... ஸ்டாலினுக்கு கராத்தே காட்டும் தியாகராஜன்..! அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ’’நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் க…

  18. ஜெயலலிதா வாழ்ந்த வீடு – நினைவு இல்லமாக மாற்றும் பணி ஆரம்பம் June 29, 2019 மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம்திகதி மரணம் அடைந்த ஜெயலலிதா, தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார். இந்தநிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழத் தொடங்கியதையடுத்து நிறைவேற்றும் வகையில், தமிழக அரசும் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது, அதற…

  19. காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 ஆவது நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேரூரில் தினமும் 400 மில்லியன் லீட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை …

    • 0 replies
    • 669 views
  20. 'இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என இலங்கைக் கடற்படை அதிகாரி எச்சரிக்கை. இதனால், மீனவர்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கச்சத்தீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்டது முதல் இந்திய மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லையின் தூரம் மிகக் குறைவாக இருப்பத…

    • 0 replies
    • 1.1k views
  21. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் இன்னும் பலர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தின் உரிமையை ஸ்டாலின் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணிச்சலான முடிவு எடுக்கக்கூடியவர் என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் திமுகவில் இண…

  22. தினமலர்: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 4 வயது குழந்தை கொலை நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன் நான்கு வயது குழந்தையை காணவில்லை என நேற்று இரவு 7:30 மணி அளவில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு கழிப்பறையில் இருந்த கோணி…

  23. தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் – தினகரன் அதிர்ச்சி தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகா…

  24. நளினியை நேரில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினியை எதிர்வரும் 5 ஆம் திகதி நேரில் முன்னிலைப்படுத்துமாறு வேலூர் சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரிய நளினியின் மனு மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினி, தனது சட்டத்தரணி ஊட…

  25. ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீடிப்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீடிக்கப்பட்ட கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தமையால், தமிழக அரசு மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.