தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
'மத்திய அரசின் அனுமதி தேவையில்லை..!'- பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததோடு, உச்ச நீத…
-
- 1 reply
- 573 views
-
-
'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்போலோவில் காவிரி பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவரது இதயம் செயலிழந்தது குறித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
'மருத்துவ சிகிச்சையா.... அப்படின்னா?' -பேரறிவாளனை வதைக்கும் சிறைத்துறை தமிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர்' என வேதனைப்படுகிறார் அவர். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன், " மன…
-
- 1 reply
- 568 views
-
-
'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். …
-
- 1 reply
- 844 views
-
-
'மாவட்டச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட்' அ.தி.மு.க-விலும் நீண்ட ராவ் கரம்! ''முன்னாள் தமிழகத் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஐ.டி. பிடியில் சிக்கியது யாருக்கு சந்தோசத்தை தருகிறதோ இல்லையோ, அவரால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க-வின் சீனியர்கள் பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது'' என்கிறார்கள் போயஸ் கார்டன் வட்டாரத்தில். காரணம், அரசுத் துறைகளின் ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டில், பணியிட மாற்றம் மற்றும் புதியதாகப் பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட அரசு நிர்வாக விஷயங்களில் மட்டும்தான் ராவ் தலையீடு அதிகம் இருந்தது என்று புகார்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க-விலும் அவர் அறிவிக்கப்படாத பொதுச் செயலாளராக இருந்தார் என்பதுதான். இதனை 2011 - 2016 வரையிலான அ.த…
-
- 0 replies
- 421 views
-
-
'மாஸ்' காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம் சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்க…
-
- 0 replies
- 488 views
-
-
'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்? பகிர்க குட்டி கோடம்பாக்கம் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், 'பொருள் ஆட்சி' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவா…
-
- 0 replies
- 578 views
-
-
'மீனவர்களை சிறை பிடித்த இலங்கை' - கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் 10 AUG, 2025 | 11:38 AM இராமேஸ்வரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்நிலையில் தங்கச்சிமடத்த…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க. #VikatanExclusive கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவி…
-
- 0 replies
- 378 views
-
-
'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா 'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேச…
-
- 2 replies
- 918 views
-
-
'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!' - தமிழக அமைச்சர்களின் மனநிலை புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் 5-ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். 'தற்போதுள்ள சூழலில் தலைமைப் பதவிக்கு வர விரும்பினார் எடப்பாடி. சசிகலாவின் சமாதானத்தால் அமைதியாகிவிட்டார். தலைமைக்கழக கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்த ஜெயலலிதா, 2011-16ம் ஆண்டு ஆட்சியில் கோலோச்சியவர்களை ஓரம்கட்டியே வைத்திருந்தார். 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொடுத்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இதனால…
-
- 0 replies
- 653 views
-
-
'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!' அப்போலோ அறிக்கை முதல்வர் கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர், முதல்வர் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கே நேற்று மாலை சென்று, மருத்துவர்களிடம் விசாரித்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர்டு முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதாக முன்னரே செய்திகள் வெளிவந்தன. தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில், செய்தி வெளியிட்டு இருக்கிறது அப்போலோ. அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து தேறிவருகிறது. எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனிற்காக லண்டன் Guy's and St.Thomas மர…
-
- 12 replies
- 1.4k views
-
-
'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…
-
- 0 replies
- 460 views
-
-
'முதல்வர் பதவிக்காக ஏன் அவசரப்பட்டார் சசிகலா?!' - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா பின்னணி #VikatanExclusive தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், உறவுகளின் அழுத்தம் தாங்க முடியாமல் அப்போலோ மருத்துவமனையின் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ம.நடராசன். மன்னார்குடி உறவுகளின் ஆட்டமும் தொடங்கிவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் நிறைவடைவதற்குள், தமிழக முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துவிட்டார் சசிகலா. 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருக…
-
- 0 replies
- 432 views
-
-
'முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்! அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன்? என்பதற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, www.dailyo.in என்ற ஆங்கில இணையதளத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருப்பதாவது:- "அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைகளின் போது, ஊடகங்களிலும், செய்திகளிலும் பரபரப்பாக எனது பெயர் விமர்சனத்திற்கு உள்ளானதைப் போன்று, 45 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை விமர்சிக்கப்…
-
- 0 replies
- 380 views
-
-
'பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டும்' என, சசிகலாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலி யுறுத்தி வரும் நிலையில், முதல்வர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட, மந்திரி உதயகுமார் மூலம், சசி சொந்தங்கள் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, ஜெ., பேரவை மூலம், முதல் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு உள்ளது. இதன் மூலம், சசிகலா துதி பாடிகளின் கச்சேரி துவங்கி விட்டதாக, அ.தி.மு.க., தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, ஏற்கனவே இரு முறை அந்த பதவியை வகித்த, பன்னீர்செல்வம் முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, 'ஜெ., வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்க வேண்டும்' என, கட்சியின் முக்கிய நி…
-
- 0 replies
- 261 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் ச…
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல் ரஹிம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதுபோல்,கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் முஸ்லீம்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி, விருந்தினர் மாளிகை முன்பு நான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன்'' என தெரிவித்தார். http://news.vikatan.com/article.php?modu…
-
- 3 replies
- 732 views
-
-
'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா? பட மூலாதாரம்,IMD 8 டிசம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 மு…
-
- 5 replies
- 503 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, (கோப்புப்படம்) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
'மோடியை எதிர்த்தால் மட்டுமே கட்சி நீடிக்கும்!' -எஸ்.ஆர்.பி, ராமமோகன ராவ் கொந்தளிப்பின் பின்னணி பொதுக்குழுவை நல்லபடியாக நடத்தி முடிக்கும் முடிவில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். ' மத்திய அரசுக்கு எதிராக வலுவாகப் போராட இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். அதையொட்டியே எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்றைக்கு ராம மோகன ராவ் கொதித்திருக்கிறார். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ஓ.பி.எஸ் மௌனமாக இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்க இருக்கிறது. இதில், பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு…
-
- 0 replies
- 486 views
-
-
'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி! இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார், டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர், அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது, டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவி…
-
- 1 reply
- 251 views
-
-
'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்? பட மூலாதாரம்,ANBUPAALAM/WEBSITE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குடியிருப்பு பகுதிகளுக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம் - என்ன சர்ச்சை?26 ஜனவரி 2023 'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம்26 ஜனவரி 2023 ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?25 ஜனவரி 2023 யார் இந்த பாலம் கல்யணசுந்தரம்? திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
'ரஜினி தனிக்கட்சி தொடங்குகிறார் என்று நான் சொல்லவில்லை' : சகோதரர் சத்யநாராயணராவ் மறுப்பு! அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-இல் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தாக தகவல் வெளியானது. அதில்…
-
- 0 replies
- 519 views
-
-
ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்பாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதேபோல் ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டட ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/35938/57/12/d,article_full.aspx
-
- 2 replies
- 1.2k views
-