தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு ! தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது. மூன்று நாட்கள் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இ…
-
- 1 reply
- 690 views
-
-
டெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு . ஒரு பெரும் பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. கஜா புயல் ஈவு இரக்கமற்று தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. டெல்டா விவசாயிகள் வரலாற்றின் இருண்ட காலத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுக்க ஆடை என எதுவுமே இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னையும், வாழையும், பலாவும் கஜாவால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, உயிரற்ற உடல்களாக வீழ்ந்து கிடக்கின்றன. இனி உயிர் பிழைத்து இந்த உலகில் வாழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள் ஊருக்கே உணவளித்து காத்த விவசாய மக்கள். ஆனாலும் என…
-
- 0 replies
- 604 views
-
-
தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள் படத்தின் காப்புரிமை DINAMALAR கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 426 views
-
-
கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்! கேரள பொலிஸ் அதிகாரிகளை கண்டித்து கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது. சபரிமலைக்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்த, கேரள பொலிஸ் அதிகாரிகளை கண்டித்து கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில், அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு போருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் போருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. முழு அடைப்பால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக் மு…
-
- 0 replies
- 484 views
-
-
சங்கர், இளவரசன், நந்தீஷ்.. 1000 நாளில் 81 ஆணவ படுகொலைகள்.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? தமிழ்நாட்டில் கடந்த ஆயிரம் நாட்களில் மட்டும் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது. உத்தர பிரதேசம், பீகாரில் நடக்கும் மதக்கலவரங்கள் தமிழர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். அந்த மாநிலங்கள் எல்லாம் இன்னும் முன்னேறவில்லை என்று கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் மார்தட்டிக் கொள்ள முடியும். ஆனால் தமிழகம் வேறு ஒரு விஷயத்தில் அந்த மாநிலங்களை எல்லாம் விட பின்தங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களில் மற்ற எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு ஆணவக்கொலைகள் நடந்து இருக்கிறது. கடந்த 1000 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் 81 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. அதாவது 12 நாட்களுக…
-
- 0 replies
- 1.8k views
-
-
3 கொலையாளிகளை விடுதலை செய்ய என்ன ஒரு அக்கறை, வேகம்.. 7 தமிழர்கள் விடுதலை ஏன் இல்லை ? சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த 3 பேரை தெரிந்த ஆளுநருக்கு இந்த 7 பேரை தெரியுமா? இவர்களையும் விடுதலை செய்வார…
-
- 2 replies
- 1.4k views
-
-
சுழற்றியடித்த கஜா.. மிரண்டு போன சிறுமி.. உயிரை பறித்த தென்னை மரம்.. ஒரு பரிதாப மரணம்! கஜா புயலை விட கொடுமையான, கொடூரமான செயலைதான் இவர்கள் செய்திருக்கிறார்கள்... அந்த செய்திதான் இது!! கஜா... பட்டுக்கோட்டை பக்கமாக போகும்போது தந்துவிட்டுபோன அழிவு கொஞ்சம் நஞ்சமல்ல. நடுராத்திரி... அப்படி ஒரு பேய்க்காத்து.. ஊரே தூக்கிட்டு போற மாதிரி காற்று சுழட்டி அடித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. அணைக்காடு கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கிறாள் அந்த சிறுமி. திடீரென்று வயசுக்கு வந்துட்டாள். அதனால் வீட்டு பெரிசுகள் எல்லாம் சேர்ந்து தீட்டு என்று காரணம் சொல்லி, அந்த சிறுமியை தனியாக உட்கார வைத்து விட்டார்கள். உட்கார வைக்கப்பட்ட இடம் எது தெரியுமா? வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக இருக்கி…
-
- 2 replies
- 937 views
-
-
கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர். அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல…
-
- 0 replies
- 586 views
-
-
இரட்டை இலை சின்னம் வழக்கு: விரைவில் கைதாகிறாரா டிடிவி?
-
- 0 replies
- 610 views
-
-
அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது? ஆர். மணி மூத்த பத்திரிகையாளர் Getty Images (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்…
-
- 3 replies
- 1k views
-
-
48 மணி நேரத்தில் வங்க கடலில் புயல் எச்சரிக்கை! வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் கூறியபோது, “நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது தென் கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அந்த புயல் 14ஆம்; திகதி இரவு வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும். இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, ஆந்திர கடலோர பகுதிகளின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்ப…
-
- 11 replies
- 2.4k views
-
-
கருணாநிதியின் உருவச் சிலை திறப்புத் திகதி அறிவிப்பு! மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை எரிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படுமென, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைமைக்கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று சிறப்பாக திறந்து வைக்கவிருக்கிறார்கள். ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழ…
-
- 1 reply
- 481 views
-
-
கருணாநிதியின் 100ஆவது நினைவுநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் அஞ்சலி! முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய சமாதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கிவைத்தார். 100ஆவது நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் அவரது சமாதி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சமாதியின் மீது கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் அவர் இருப்பது போன்ற ஓவியமும் பூக்களால் உருவாக்கப்பட்டிருந்தது. சமாதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படம் அலங்கார வளைவு போன்று வடிவம…
-
- 0 replies
- 401 views
-
-
பாரதிய ஜனதா மிகவும் ஆபத்தான கட்சி: திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சி விஷத்தன்மைக் கொண்ட பாம்பைப் போன்று ஆபத்தான கட்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் திருவள்ளூரில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு உலகிலேயே உயரமான சிலை இல்லை. பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்து சுற்றியுள்ள சாம்ராஜ்ஜியங்களை இணைத்து முழு இந்தியாவை உருவாக்கினார். அதனால் அவருக்கு சில…
-
- 0 replies
- 459 views
-
-
முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து வாழைக் காய் ஏற்றுமதி! இந்தியாவில் வாழைக்காய் உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முன்னிலை வகித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகளாக பழமையான முறையில் விவசாயம் மேற்கொண்டு ஏக்கருக்கு நிகர லாபமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே ஈட்டப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் முயற்சியினால் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தப்பட்டன. இதன்படி, திசு வளர்ப்பு கன்றுகள், சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி குளிரூட்டி பழுக்க வைக்கும் கூடம், சிப்பம் கட்டும் மையம் ஆகியவற்றை அமைத்து, தேனி மாவட்ட விவசாயிகள்…
-
- 50 replies
- 4.2k views
-
-
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு November 14, 2018 1 Min Read சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று க…
-
- 0 replies
- 408 views
-
-
எந்த 7 பேர்?.... எனக்குத் தெரியாதே?... ஷாக் கொடுத்த ரஜினி பதில்! ராஜீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த 7 பேர் இது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா என கடுப்பாகி நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நன்றாகவே தெரியும். அட வரலாறு தெரியலன்னா கூட கடந்த 2 நாட்களாக தினசரி செய்தித்தாள் படிச்சிருந்தாலாவது யார் இந்த 7 பேர் என்ற விஷயம் தெரிந்திருக்கும். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளி…
-
- 11 replies
- 1.5k views
-
-
பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும்... கமல் கொந்தளிப்பு! பிச்சைகாரர்களுக்குத் தான் இலவசம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் மத்திய கேமல் பேசியதாவது : சினிமாத்துறையில் இருந்த நான் எதார்த்த வாழ்வியலை ந்மபி அரசியலுக்கு வந்திருக்கிறேன். மக்களை நம்பித் தான் நான் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறேன். மக்கள் நிச்சயம் என்னை கரை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.வணிகர்களை நம்பியே நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது, அவர்களே நாட்டின் முதுகெலும்பு. வாக…
-
- 0 replies
- 564 views
-
-
சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம். சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட தொடங்கி உள்ளது.சர்கார் படத்தால் அதிமுகவினர் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். பட…
-
- 13 replies
- 2k views
-
-
7 தமிழர்கள் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இருந்தது ஆர் டி ஐ மூலம் பகீர் தகவல் கிடைத்துள்ளது. 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு ச…
-
- 0 replies
- 582 views
-
-
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: ஸ்டாலின் Editorial / 2018 நவம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 12:37 Comments - 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை, இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று, இலங்கையின் அரசமைப்பில் உள்ள நிலையில், இந்த அரசமைப்பை போட்டு மிதித்து, …
-
- 1 reply
- 1.2k views
-
-
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு November 9, 2018 1 Min Read மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள. அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை…
-
- 0 replies
- 552 views
-
-
சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு! சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரும், சிறையிலுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சென்று கலந்துரையாடவுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் குறித்த 18 பேரும் செல்லவுள்ளனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியபோது, சசிகலாவை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படுமென குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 459 views
-
-
தமிழகத்தில் டெங்கு தொற்றினால் 34 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,600 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது சட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலினை கட்டுப்படுவதற்கு வேண்டிய சகல வசதிகளும் வைத்தியசாலைகளில் தற்போது உள்ளமையால் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில…
-
- 0 replies
- 392 views
-
-
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு! வெற்றிடமாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இன்று(புதன் கிழமை) தனது 64ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியபோது, “20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க கூடும் என்று நம்புகின்றேன். அப்படி நடந்தால் நாங்கள் போட்டியிடுவோம். அதற்காக அந்த 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். சுகாதாரமான அரசியலுக்காகதான் நாங்கள் வந்து இருக்கின்றோம். ஊழலற்ற சுகாதாரமான அரசியல் வந்தால் எல்லா துறைகளும் …
-
- 0 replies
- 408 views
-