Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கியமை – 53 தமிழக காவல்துறையினர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு October 17, 2018 1 Min Read டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையினர் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது . கடந்த வருடம் நவம்பர் 21ம் திகதி உயர் பாதுகாப்பு சிறையில் உள்ள 18 கைதிகளிடம் கைத்தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலினையடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் 52 காவல்துறையினர் இணைந்து உயர் பாதுகாப்பு அறையில் சோதனை நடத்தினர். இதன்போது அங்கிருந்த கைதிகளுக்கும் காவல்துறையினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக மாறியதில…

  2. நட்பு நாடு என்று கூறிக் கொண்டே இலங்கை நம் முதுகில் குத்துகிறதே: ஸ்டாலின் வேதனை. நட்பு நாடு என்று கூறிக் கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நாசகரமான தாக்குதல் நடத்தி முதுகில் குத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில்தான் இப்படியொரு அபாண்டமான தீர்…

  3. முதலமைச்சர் கனவில் கமல் ஹாசன் மிதக்கின்றார் – கருப்பணன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தமிழக அரசு மீது, கமல் ஹாசன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக குறிப்பிட்டார். எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல் ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் சில தயாரிப்பாளர…

  4. நடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு: October 14, 2018 1 Min Read மீரூ கவனயீர்ப்பின் ஊடாக வெளிவரும் நடிகைகள்மீதான பாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். அண்மையில் ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் முறைப்பாட்டை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களையுட் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் முறைப்பாட்டை முன்வைத்தார். இதேவேளை சமூக வலைதளங்களில் ‘மீரூ’ ஹாஷ்டக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தமது ப…

    • 1 reply
    • 934 views
  5. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் தமிழிசை கருத்து திரைப்படத்திற்கு ‘சர்கார்’ என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றால், நியவாழ்வில் சர்காரிலிருந்து ஆட்சி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாதா என்று, நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்த கருத்துக்களுக்கு தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், “வாழ்நாளில் மக்கள் குறித்து கவலைப்படாமல், தனது கஜானாவை மட்டுமே நிரப்புவதை கொள்கையாக கொண்ட ஒருவர், அந்த நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடீரென அரசியலுக்கு வந்து, அரசியல்வாதிகளை விமர்…

  6. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் பாராட்டு! தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது. ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைது செய…

  7. ‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி?- வைரலாகும் விவகாரம் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், தமிழிசை பிரஸ்மீட் தமிழிசை பேட்டி அளிக்கும்போது பெட்ரோல் விலை தினமும் ஏறுவதாக தெரிவித்த ஆட்டோ டிரைவர் பாஜக ஆட்களால் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக வெளியான தகவல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. இதனால் தினம் தினம் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல்…

    • 2 replies
    • 1.1k views
  8. வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை October 15, 2018 வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம்; கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 …

  9. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை FACEBOOK மீடூ(me too) என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார கா…

  10. பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன் இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்” என பழ. நெடுமாறன் தெரிவித்தார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று (சனிக்கிழமை) இராமநாதபுரத்தில் ஊடகவியாளரிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், ”இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாதநிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை ப…

  11. சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்…

  12. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை ஆரம்பம் October 14, 2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முதல் கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி பிரிவு…

  13. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன் தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். மேலும் தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என தெரிவித்தார். அத்துடன் எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால், கமல் ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்றும் தெரிவித்தார். http://athavannews.com/தி-மு-க-காங்கிரஸ்-கூட்டணி/

  14. எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கு பாஜக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார். படத்தின் காப்புரிமை facebook Image caption எஸ்.வி. சேகர் "திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். ஐக்கிய முற்போக்…

  15. தமிழக முன்னாள் அமைச்சர் திடீர் மறைவு! தமிழகத்தின் முன்னாள் ஊடக மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தனது 58ஆவது வயதில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அடையாரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலமானார். ஆறு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்த அவர், அதன் பின்னர் 2006 – 2011 வரையான தி.மு.க. ஆட்சி காலத்தில் ஊடக மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த அவர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயற்பட்டு வ…

  16. ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி, அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை, டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. கடந்த 1980 ஆகஸ்ட் 14 ஆம் திகதி அம்ருதா பிற…

  17. சிபிஐ விசாரணை வளையத்தில் சிஎம்.. அடுத்து என்ன? எஞ்சியிருப்பது 3 வாய்ப்புகள்தான்! நெடுஞ்சாலை துறை ஊழல்கள் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த, வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து முதல்வருக்கு இப்போது எஞ்சியிருப்பது 3 சட்ட வழிகள்தான் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை திட்டங்கள் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற ரூ.4800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான பணிகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்…

  18. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்த ஒரு செய்திக்காக, , கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றம் கைது ஆணை வழங்காததால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், அந்த கைது விவகாரம் குறித்தும் ஊடக சுதந்திரம் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து... கேள்வி: செவ்வாய்க்கிழமையன்று விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது? பதில்: அன்றைய தினம் காலையில் நானும் இன்னும் இ…

  19. ஆளுநர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும்வரை தொடர்ந்து போராடுவோம் என, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் – பாராட்டும் என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. அவர் எத்தனையோ எதிர்ப்புக்களை கடந்து வந்தவர். கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தே…

  20. கட்டுப்பாட்டு சுவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது? அதிகாரிகள் குழப்பம்! திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோதியுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது. அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையி…

  21. எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விபரங்களை கோரியது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விபரத்தை அப்பலோ மருத்துவமனை வெளியிடவேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் ஏன் இடம்பெறவில்லை என பலர் கேள்வி எழுப்பி வந்துள்ளனர். இந்த விவகாரமே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. 1984 இல் எம்ஜிஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் அமெரிக்காவிற்கு …

  22. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்த தாழி வெளிப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அளித்த தகவலின்படி ஆத்தூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன. தாழியின் உள்பகுதியில் அடக்கம் ச…

    • 4 replies
    • 1.2k views
  23. ஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம் October 9, 2018 ஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி நக்கீரன் கோபாலுக்காக வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் சமூகமளித்தா…

  24. கடலுக்குச் சென்று, காணாமல் போன 19 மீனவர்கள் மீட்பு – 210 மீனவர்கள் கரை சேரவில்லை… October 10, 2018 தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். அதேவேளை கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் கடந்த முதலாம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து 2 படகுகள் தவிர ஏனைய படகுகள் கரை திரும்பியிருந்தன. இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில…

  25. நக்கீரன் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைது! சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் இருந்து புனே செல்ல புறப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.சில நிமிடம் முன் தமிழக போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஆளுநர் மாளிகையின் உத்தரவின் பேரில் கைது செய்யட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-arrested-chennai-airport-331583.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.