தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10258 topics in this forum
-
ஜெ.,வுக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பை விலக்கியது யார்? கேள்விகளால் நிலை குலையும் மத்திய உள்துறை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடப்பதாக, அக்கட்சியின் முன்ணணி பிரமுகர்கள் நாள்தோறும், ஊடகங்கள் வாயிலாக, தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்தான், முதன் முதலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பூதம் கிளப்பினார். லேட்டஸ்ட்டாக அவர் எழுப்பி இருக்கும் சந்தேகம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை பாதுகாப்பு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும் அந்த பக்கம் எட்டியே பார்க்காதது ஏன் என்பது குறித்துத்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி…
-
- 0 replies
- 403 views
-
-
எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டப்பேரவை கூடும்போது, அ…
-
- 0 replies
- 197 views
-
-
விபரீதம் ஏற்படும்! பெங்களூரில் பழனிசாமி அணியைக் கலங்கடித்த வெற்றிவேல் டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அருகதை இல்லை என்று எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் ச…
-
- 0 replies
- 297 views
-
-
ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்- மு.க.ஸ்டாலின் கண்டனம் Posted on December 14, 2021 by தென்னவள் 13 0 ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 0 replies
- 256 views
-
-
இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டும் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்! இந்திய அளிவில் உள்ள மாநில கட்சிகளின் வரவு-செலவு தொடர்பான விவரங்களை தில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. Association of Democratic Reforms (ADR) என்ற அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை விவரம் பின்வருமாறு: இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை மொத்தம் 47-ஆக உள்ளது. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே 2015-16 நிதியாண்டில் முறையான கணக்கு வழக்கை தாக்கல் செய்துள்ளது. மீதமுள்ள 15 மாநில கட்சிகளும் இந்த நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல்…
-
- 0 replies
- 670 views
-
-
வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்த 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆன்லைன் மூலம் சில புரோக்கர்கள் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் காவல்துறைக்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணையில் இறங்கினர். நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி…
-
- 0 replies
- 903 views
-
-
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ம…
-
- 0 replies
- 779 views
-
-
காவிரியை விட மெரீனா கடற்கரை முக்கியமா: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், "காவிரி பிரச்சனையைவிட மெரீனா கடற்கரை முக்கியமா?" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கேட்டுள்ளது. Image captionஉயர்நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலி…
-
- 0 replies
- 508 views
-
-
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 3 ஆம் தேதியன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஞானதேசிகன் ராஜினாமாவை வரவேற்ற ஜி.கே. வாசன், லட்சக்கணக்கான தொண்டர்களின் மனநிலையை அவர…
-
- 0 replies
- 360 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தி…
-
- 0 replies
- 425 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி- கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யாத நிலையில், காவிரிக்கு நீர் வரத்து குறைந்திருப்பது தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் 100 அடிக்கு மேல் இருந்தால், ஜூன் 12ஆம் தேதியன்று அணை விவசாயத்திற்காகத் திறக்கப்படும். அதன்படி இந்…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் : மு.க.ஸ்டாலின் உறுதியளிப்பு! கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம்அருகே மீனவர் நல மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க அரசு என்…
-
- 0 replies
- 594 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுவிவகாரம் – சி.பி.ஐ அதிகாரி மீது குற்றச்சாட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது வழக்கு பதிவு செய்யாததால், விசாரணை நடத்தும் சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு பதில் வழங்குமாறு சி.பி.ஐ. இணை இயக்குநர் பிரவீன் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மே 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 ஆவது நாள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 371 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னைக்கு தனி வானிலை மாடலை உருவாக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா? இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவ…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
சின்னம் தெளிவாக இல்லை.. நாம் தமிழர் காளியம்மாள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் சின்னம் தெளிவாக இல்லையென வடசென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நான் வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் மாதிரி வாக்குச்சீட்டை வெளியிட்டார்.அதில் எங்கள் கட்சியின் சின்னம் மங்கலாகவும், தெளிவு இல்லாமலும் இருந்தது. இதனால் எங்கள் கட்சிக்கு வயதானாவ…
-
- 0 replies
- 769 views
-
-
மீண்டும் மோடி?: தமிழர்கள் மறக்க வேண்டிய விஷயங்கள்! சரா சுப்ரமணியம் எவ்வித அலையும் வீசாத 2019 மக்களவைத் தேர்தலில், மத்தியில் ஆட்சியமைக்கப் போவோருக்கு உறுதுணை புரியக்கூடிய ‘நம்பர்’ தமிழகத்திலிருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறை தமிழக வாக்காளர்களும் தேச அளவில் முன் எப்போதையும்விட கூடுதலாகவே கவனிக்கப்படுகின்றனர். 2014இல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய உத்தரப் பிரதேசத்தின் முடிவுகள் பேருதவி புரிந்தன. நாட்டின் அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. இம்முறை அம்மாநிலத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. தேச அளவில் நிலவும் பொதுவான அதிரு…
-
- 0 replies
- 801 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நீட் பயிற்சி நிறுவனங்களில் சேர பணம் இல்லாததால் இந்த ஆண்டு தங்களின் மருத்துவ கனவுகள் பறிபோகியுள்ளன என்கிறார்கள் தமிழ்நாட்டின் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள். நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கான பிரத்யேகப் பயிற்சிப் பெற்றுள்ளனர் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. 12ஆம் வகுப்பு படித்த பிறகு ஓராண்டு பயிற்சிக்காக செல…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது: - நீதிமன்றில் வழக்கு தாக்கல் [Wednesday 2016-05-18 09:00] திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் டிராபிக் ராமசாமி. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். திருப்பூரில் ப…
-
- 0 replies
- 548 views
-
-
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் ஸ்டாலின்! சட்டமன்ற திமுக குழுத் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற திமுக குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற திமுக குழுத் துணைத் தலைவராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். மேலும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக பிச…
-
- 0 replies
- 417 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதி – விஜயகாந்த் அறிவிப்பு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், மருத்துவத்துறையை தேர்வு செய்து மக்கள் பணியாற்றிய ஒரு மருத்துவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்…
-
- 0 replies
- 443 views
-
-
சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை நான் கொலை செய்யவில்லை என்றும், போலீசார் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜீன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது முயற்சியின் போது அவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால், அப்போது வாக்குமூலம் பெறமுடியவில்லை. அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் உடல் நிலை தேறிய பின் அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத…
-
- 0 replies
- 286 views
-
-
7 பேர் விடுதலை எப்போது? - கவர்னர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “புழல் சிறையில் என்னுடைய மகன் அடைப்பட்டுள்ளான். சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பேரறிவாளன், இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அவருக்கு 90 நாட்கள் ‘பரோல்’ வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.…
-
- 0 replies
- 541 views
-
-
கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா! ‘ரேப்பர் ரெடி செய்யவும்’ என்று கழுகார் அனுப்பிவைத்த ‘கையெழுத்து... பத்திரம்... ஜெயலலிதா!’ என்கிற டைட்டில் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தன. லே-அவுட்டுக்கு தலைப்பை அனுப்பிவிட்டு கழுகாருக்காகக் காத்திருந்தோம். தீபாவளி கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகப் புத்தாடையில் வந்தார் கழுகார். குறிப்பு நோட்டை புரட்டியபடியே பேச ஆரம்பித்தார். ‘‘அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ஒரு மாதத்தைத் தாண்டிவிட்டது. அவரது உடல்நலம் தேறிவர வேண்டும் என தமிழகமே பிரார்த்திக்கிறது. லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் என டாக்டர்கள் படையெடுத்தபடியே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சத்தமில்லாமல் ஒரு காரியம் நடந்து கொண்டிருக்கிறதாம். அடுத்து நான் …
-
- 0 replies
- 893 views
-
-
கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று (14) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளாயனந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யூ. அருளானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று (13) இரவு 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினரால் 79 மீனவர்க…
-
- 0 replies
- 471 views
-