Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பற்றிய புகார்கள், போயஸ் தோட்டத்தில் குவிந்து வருவதால், மனு தாக்கல் முடியும் வரை, இந்த மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாதம், 4ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புகார்களுக்கு ஆளானவர்கள் என்பதால், அதிர்ச்சி அடைந்த கட்…

    • 0 replies
    • 504 views
  2. நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணா…

  3. கருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ? புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன …

    • 0 replies
    • 1.8k views
  4. 'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டி…

  5. மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல…

    • 0 replies
    • 422 views
  6. தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்க தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் திரளும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார்? என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது அமைச்சர்கள் மற்ற…

  7. பன்னீர் தியானத்துக்குப் பிறகு... சசிகலா, தி.மு.க, சட்டசபை என்னவாகும்? மெரீனா கடற்கரை மற்றொரு வரலாற்று நிகழ்வுக்கு சாட்சியாக நின்று அலைகளை வரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் திரட்சியான போராட்டம் அந்தக் கடற்கரையில் பெற்ற அதே முக்கியத்துவத்தை, ஓ.பன்னீர் செல்வம் என்ற ஒற்றை மனிதனின் இறுகிய தியானமும் பெற்றுள்ளது. தியானத்துக்குப் பிறகு தன் மௌனம் கலைத்த பன்னீர் செல்வம் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. அமைதியே உருவான அந்த ஒற்றை மனிதனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும், கோடிக்கணக்கான தொண்டர்களுடைய மனச்சாட்சியின் குரல் பேரிரிசைச்சலாய் ஒலித்தது. “நான் வேண்டாம் என்று சொல்லியும் க…

  8. ‘ஜெயில் கதவை திற... எங்க அம்மாவைப் பாக்கணும்..!’ பரப்பன அக்ரஹாரவை பரபரப்பாக்கிய பெண் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன் ஆகிய 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை வளாகம் முழுக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது…

  9. சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் சசிகலா | கோப்பு படம் அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக இர…

  10. உடையும் ‘சிதம்பர’ ரகசியம்! - ஜூ.வி லென்ஸ் தமிழகத்தில் அ.தி.மு.க வட்டாரத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ரெய்டு பூதம், இந்தமுறை காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 16-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டுக் கதவைத் தட்டியது, சி.பி.ஐ படையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு. கார்த்தி சிதம்பரத்தைக் குறிவைத்து, சென்னை, டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ ரெய்டு நடந்தது. எல்லா ரெய்டுகளுக்கும் பின்னால் அதிகாரக் காரணங்கள் இருப்பதுபோல், அரசியல் காரணமும் இருக்கும். கார்த்தி சிதம்பரம் விவகாரத்திலும் அப்படிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதிகாரக் காரணங்கள் என்ன? மும்பையைச் சேர்ந்த மீட…

  11. 'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப் பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் காய்த்ரி ரகுராம் தெரி வித்த கருத்தால், தமிழக பா.ஜ., நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் துவங்கி, பாலிவுட்டில் கோலோச்சி, தமிழுக்கு வந்துள்ளது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. இதில், பிரபலங்களை, வீட்டுக்குள், 100 நாட்கள் பூட்டி வைத்து, உளவியல் ரீதியாக போட்டி நடத்தப்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு, மிகவும் புதிய நிகழ்ச்சியான இதில், பா.ஜ., பிரமுகரும், நடிகை மற்றும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பங்கேற்ற…

  12. சசிகலா 'ஜெயில் சீக்ரெட்' வெளிவந்தது எப்படி ? | JV Breaks

  13. ”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி என்பதைவிட, தற்போது பி.ஜே.பிதான் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அண்மை காலமாக அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதை விட , தி.மு.க தலைவர்களும் பி.ஜே.பி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்ற…

  14. கோர்ட் தீர்ப்புக்கு பின் ராஜினாமா முடிவு! அடுத்தகட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு சென்னை:''கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவை, நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் தெரிவிப்போம். அதுவரை, 'சஸ்பென்ஸ்' நீடிக்கட்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார். தினகரன் அணியின், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், அரசு விழாவை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும், தலைமைச் செயலர். டி.ஜி.பி., ஆகியோருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட…

  15. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரா? : சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளான எடப்பாடியின் பேச்சு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதன்கிழமையன்று தஞ்சாவூரில் பேசும்போது கம்ப ராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகிறது. 2012ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் தன் பேச்சைத் துவக்கும்போது, "1989ல் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் நிற்கவைத்து என் அரசியல் வாழ்க்கையில் கோடு போட்டது நீங்கள்தான்; நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி, என்னை ரோடு போடச் சொன்னதும் நீங்கள்தான்" என்று ஆரம்பித்தார். அப்போது…

  16. பரிசு திருப்பப் பெறப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம்

  17. ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களை ஏலம்விட உத்தரவு ! சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடைமைகளான வைரம், தங்கம், விலையுயர்ந்த புடவைகள், செருப்புகள் உள்ளிட்டவற்றை, பொது ஏலம்விட நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஐ ஆர்வலர் ந…

  18. பட மூலாதாரம்,MK STALIN/X 18 டிசம்பர் 2023 தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து நிற்கும் பல படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். 1930-களில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவர் உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்களுக்கு முன்மாதிரியான, காலம்கடந்த படங்களை தயாரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் - கருணாநிதி இருவரும் தங்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள் மூலமாகவே தடம் பதித்தனர். குறிப்பாக, எல்லீஸ் ஆர். டங்கன் 1950-இல் எம்ஜிஆர் நடித்து கருணாநிதி வசனம் எழுதிய `மந்திரி குமாரி` திரைப்படத்தைக் கூறலாம். …

  19. அ.தி.மு.க.வின் கோட்டையில் விழுது பெரும் ஓட்டை...! வெடித்துக் கிளம்பும் எதிர்ப்புகள், மூச்சு திணறும் முதல்வர்கள்..!! யுத்தத்தில் பிரம்மாஸ்திரம் மிக மிக முக்கியமானது. எல்லாம் இழந்த நிலையில் கடைசி அஸ்திரமாக ஏவப்பட்டு எதிரிகளை துவம்சம் செய்து, வெற்றியை நிலைநாட்டிட உதவும் ஆயுதம் இது. அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக இருந்தது ‘கொங்கு மண்டல தொகுதிகள்’தான். தெற்கு, வடக்கு, டெல்டா என மற்ற பகுதிகளில் பல இடங்களை இழந்திருந்தாலும் கூட, கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் கிடைத்த பெரும் வெற்றிதான் அந்த கட்சியை மீண்டும் அரியணையில் உட்கார வைத்தது மட்டுமில்லாமல், தொடர்ந்து அரசியல் ஆதிக்கம் செலுத்திடவும் வைத்துக் கொண்டிருந்தது. கொங்கு…

  20. இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், அரசியலில் அறிமுகமாகிறது. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும். அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள். அந்த விசாரணைய…

  21. காற்றில் பறக்கும் விதிகள்; அதிவேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள் : 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 23,700 பேர் பலி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 60 சதவீதம் அதிக வேகம் காரணமாக நிகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், சக்கர வாகனங்கள் 60 கி.மீ. வேகத்திலும், 8-க்கும் அதிக இருக்கைகள் கொண்ட வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், 8-க்கும் குறைந்த இருக்கைகள் கொண்ட வாகனங் கள் 100 கி.மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைத்துறை 2014 ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது. இந்த விதிகளை வாகன ஓட்டி கள் கடைபிடிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் 90 சதவீத வாகனங்கள் 100 கி.மீட்டருக்கும்…

    • 0 replies
    • 254 views
  22. "இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திரும…

  23. 27 MAY, 2024 | 11:51 AM சென்னை: சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில்,சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல் துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போ…

  24. சென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம் சென்னையின் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் கடற்கரையை ஒட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சி பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள ஸ்ரீநிவாஸபுரம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே கடல் நீர்மட்டம் உயர்ந்தும் சீற்றம் அதிகரித்தும் காணப்பட்டது. இதனால், கடலோரம் அமைந்துள்ள பல வீடுகள் அலையின் சீற்றத்தில் நொறுங்கின. கடல் சீற…

  25. பாலியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை மசாஜ் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி துடா சாலையில் சுரேஷ் என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இங்கு மூலம், குடலிறக்கம், பாலியல் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த வினய்(26) என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். ஆனால், வினய் தொடர்ந்து கிளினிக்கை நடத்தி வந்தார். இவரிடம் வரும் நோயாளிகளிடம் சாதாரண மருந்துகளை கொடுத்துவிட்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலித்து வந்தார். அவரிடம் சிகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.