தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10254 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: பச்சைக்கொடி... கறுப்புக்கொடி... பரபரக்கும் காவிரிக் கொடி! எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த கழுகார், அதைவிட வேகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையில் தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான நிலையில் உள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு உள்ளது. இந்தச் சூழலில், ‘சென்னை அருகே திருவிடந்தையில் மத்தியப் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் டிஃபென்ஸ் எக்ஸ்போவுக்கு வரும் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம்’ என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த அறிவிப்பு, தமிழகத்தின் இன்றைய இக்கட்டான சூழல்…
-
- 0 replies
- 925 views
-
-
கொட்டும் மழையில், சுழன்றடிக்கும் காற்றில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை பூந்தமல்லியில் நடத்தி அரசியல் சூறாவளியில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் வைகோ! பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தின் ஏதாவது ஓர் ஊரில் மாநாடாக நடத்தும் வழக்கத்தை ம.தி.மு.க வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான விழா திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடக்கும் மாநாடு என்பதால் கட்சிக்காரர்கள் இதனை உன்னிப்பாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதேநேரத்தில், வைகோ உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்…
-
- 0 replies
- 624 views
-
-
பட மூலாதாரம்,X/ANI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 4 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மார்ச் 2024 தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதை பிரதமர் மோதி பார்வையிட்டுள்ளார். ஆனால், இந்த ஈனுலை ஆபத்தானது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதில் உண்மையில் பிரச்னை இருக்கிறதா? கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலை கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் இந்த முதலுறு அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வடிவமைத்துச் …
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 13 ஜூன் 2024 கோவையில் தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானையை முதுமலை முகாமில் வைத்து வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். தாயைப் பிரியும் குட்டி யானைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? தாய் யானையைப் போல் வனத்துறையால் குட்டியை வளர்க்க முடியுமா? கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் மே 30-ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 40 வயதான பெண் யானையையும், மூன்று மாதங்களேயான அதன் குட்டி யானையையும் வனத்துறையினர் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர். வனக்கால்நடை மருத்துவர்கள் குழுவினர், 5 நாட்கள் அந்த…
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
சென்னை: பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது, அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், 'நல்லதே நடக்கும்' என்று கூறியது, அவர்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது. ஆனாலும், அவரின் மகன் முரண்டு பிடிப்பதால், கட்சி நிர்வாகிகள் மீண்டும் சமரச முயற்சியை தொடர்ந்துள்ளனர். பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே, கடந்த லோக்சபா தேர்தலின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தன் மகள் வழி பேரன் முகுந்தனை, பா.ம.க.,வின் இளைஞர் அணி தலைவராக அறிவித்தார். அதை, பொதுமேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். இதனால், இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்த…
-
- 0 replies
- 239 views
-
-
அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...? தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் உட்கட்சி பூசல்கள் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளாக மாறிப்போயுள்ளன. காணும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் இதயமாக வலம் வரும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் ஓரங்கப்பட்டுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள். இந்த நீக்கல் நடவடிக்கைகைகள் மேலும் தொடரும்.என்பதெல்லாம் அதிமுகவின் இப்போதைய ஹாட் நியூஸாக இருக்கிறது. எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும் அதிமுகவினர்கூட அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிர விவாதத்தில் இறங்கிவிடுகின்றனர். இந்த அளவுக…
-
- 0 replies
- 585 views
-
-
'இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!' -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள் சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்' எனக் கட்சிக் கூட்டத்தில் வேதனைப்பட்டிருக்கிறார் அவர். தே.மு.தி.க.வைத் தொடங்கிய நாள்முதலாக சந்தித்து வரும் தேர்தல்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த சட்டமன்றத் தேர்தலில்தான். அதிலும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளும், கிடைத்த மூன்றாவது இடமும் தே.மு.தி.க தலைமையை அதிர வைத்தன. தேர்தல் முடிவில் அதிலும், கட்சியின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவீதம் அளவுக்குக் குறைந்…
-
- 0 replies
- 631 views
-
-
தமிழர் பண்பாட்டை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில், இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, உலகின் ஏனைய பண்பாடுகளுடன் அதற்குள்ள தொடர்பு…
-
- 0 replies
- 487 views
-
-
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசம் மதுரை: “புற்றுநோயை விட கொடியதாக சமுதாயத்தில் லஞ்சம் பரவி வருகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். சென்னையை சேர்ந்த சூரியபிரகாசம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அப்படி இருக்கும்நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அதுபோல தமிழகத்தில் நெல் விளையும் பகுதிகளில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்களை அரசு நிறுவி உள்ளது. அந்தந்த ப…
-
- 0 replies
- 823 views
-
-
கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் இன்று 5 வது நாளாக தொடருகிறது. கடந்த 7 ஆம் தேதி 500 விசைப்பபகுகளில் மீன் பிடிக்கச் சென்ற ராமேவரம் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், சில படகுகளில் இருந்த வலைகளை அறுத்தும், 5 படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிவு செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18 ஆம் தேதி வர…
-
- 0 replies
- 368 views
-
-
தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது. கோவை, திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சென்னையில் சுமாரான மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடுமையான சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ததால், மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போகம்பட்டியில் மழை காரணமாக கோழிப்பண்ணை தரைமட்டமானது. இதில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால், ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மின் கம்பங்களும்,மரங்களும் சாய்ந்தன. திண்டுக்கல்லில் கடும் சூறாவளி காற்றுடன் மழ…
-
- 0 replies
- 536 views
-
-
‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive அந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான். பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம…
-
- 0 replies
- 419 views
-
-
ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் எப்படி இருக்கிறது? #VikatanExclusive ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் வேதா நிலையத்தில், இரவில் மயான அமைதி நிலவுகிறது. பகலில் மட்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை போயஸ் கார்டன் என்றதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 81, வேதா நிலையம் நினைவுக்கு வரும். ஏனெனில் அந்தளவுக்கு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஜெயலலிதா, வீட்டிலிருந்து தலைமை செயலகம் அல்லது வெளியூர் செல்ல புறப்பட்டால், அந்தப் பகுதியில் காக்கிகள் அணிவகுத்து நிறுத்தப்படுவர். ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாப்போடு செல்லும் கான்வாயில், அவரது காரைப் பார்த்த…
-
- 0 replies
- 385 views
-
-
'கூவத்துார் புகழ்' எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா, மூன்று கோடி ரூபாய் பணம், மூன்று கிலோ தங்கம் கொடுத்ததை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அம்பலப்படுத்தினார். பதவிக்காக மந்திரிகள் நடத்திய நாடகம் பற்றிய பரபரப்பு தகவல்களையும், அவர் வெளியிட்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் போன்றோர் சொல்வதெல்லாம் பொய் என்றும், ஆவேச புகார் கூறினார். பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தலா, மூன்று கிலோ தங்கம், மூன்று கோடி ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளனர். அதை வேண்டாம் எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏ., செம்மலை வெளியில் வந்து விட்டார். நேராக தொகுதிக்கு…
-
- 0 replies
- 302 views
-
-
புதுடில்லி:'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, இரு வாரங் களுக்குள் பதிலளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதே போல், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், இது போன்ற தடை விதிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பதவியை தொடர வும், வாழ்நாள் முழுவதும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அமர்வு முன், நேற்ற…
-
- 0 replies
- 204 views
-
-
முதல்வர்,5அமைச்சர்களிடம் விசாரணை நடத்த... ரூ.89 கோடிக்கான மூலாதாரம் அறிய வரித்துறை மும்முரம் சென்னை, ஆர்.கே.நகரில், தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 89 கோடி ரூபாய்க்கான மூலாதாரம் அறிய, வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களிடம் விசாரிக்க, சம்மன் அனுப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தினகரன், எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, பணத்த…
-
- 0 replies
- 196 views
-
-
'நமது எம்.ஜி.ஆர்', இனி 'எனது' எம்.ஜி.ஆர்!... அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டின் தனி ஆவர்த்தனம்! கட்சிகள் உடைந்து அணிகளாக மாறுவதை தமிழக அரசியல் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால் கட்சிக்கான அதிகாரப்புர்வ நாளேடு தனி அணியாக இயங்குவதை அதிமுகதான் அறிமுகப்படுத்தியிருக்கிறது இப்போது. அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இயங்கிவருகிறது நமது எம்.ஜி.ஆர். இதன் நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது கட்சிக்கென அதன் செயல்பாடுகள் தலைவர்களின் சுற்றுப்பயண அறிக்கைகள் நிர்வாக மாறுதல்கள் உள்ளிட்டவைகளை கட்சித்தொண்டர்களிடம் தெரிவிப்பதற்காக அண்ணா நாளிதழைத் தொடங்கினார். இதுவன்றி கே.ஏ.கிருஷ்ணசாமியின் தென்னகம் உள்பட பல பெயர்களில் கட்சிக்கெ…
-
- 0 replies
- 704 views
-
-
ரஜினிகாந்த்: "அறிவில் அடங்கியது ஜாதி" - சர்ச்சையாகும் ஆன்மிக பேச்சு 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'அறிவு' என்பது 'புத்தி', 'சிந்தனை', 'நீ யார்?' 'எங்கிருந்து வந்தாய்?', 'ஜாதி' என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவர் பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோஷமோ இல்லை. ஏனென்றால் சந்தோஷமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல," என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது பேச்சு ஆன்மிக ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தபோதும், சமூக ஊடகங்களில் பலரும் அவரது உரைக்கு எதிர்வினையாற்றியுள்ளனர். ரஜினி …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது. சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கத்தரி வெயில்: கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர். ஆண்டுதோறும், 'கத்தரி வெயில்' எனப்படும், அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது: 'ஆ. ராசா, திமுகவுக்கு மிரட்டல்' விடுத்ததாக புகார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@BALAJI_UTHAM TWITTER படக்குறிப்பு, தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையுடன் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி. (இடது) கோவையில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கும் திமுகவினருக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். சனாதன தர்மம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சி மற்ற…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
சுப்ரதா ராயும், ஜெயலலிதா ஜாமீன் மனுவும்... ஒரு திகில் எதிர்பார்ப்பு! டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில், டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இவர்களின் மனுவை விசாரித்தால் நிச்சயம் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். காரணம், நீதிபதி தாக்கூர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. சஹாரா இந்தியத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீனே கொடுக்க முடியாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் நீதிபதி டி.எஸ். தாக்கூர் என்பதால் ஜெயலலிதாவின் நிலை இவரிடம் போனால் மேலும் சிக்கலாகும் என்று கூறுகிறார்கள்…
-
- 0 replies
- 838 views
-
-
ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்! மகாபலிபுரம் அருகே மரங்கள் சூழ்ந்த தோட்டம். மெல்லிய காற்று. நிலவொளி தவழும் பௌர்ணமி இரவு. ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அட, அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை... பேரெடுத்து உண்மையச் சொல்லி பிழைக்க முடியலை... இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியலை’ ‘பலே பாண்டியா’-வின் கண்ணதாசனின் பாடல் ஒலிக்க வெடித்துச் சிரிக்கிறார் பிரகாஷ்ராஜ். “கவியரசர் என்னிக்கோ எழுதின வரிகள். இன்னிக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு இல்ல...” என்று கேட்கிறார். கருத்துச் சுதந்திரம், மதவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பன்முகம…
-
- 0 replies
- 497 views
-
-
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 ஜூலை 2023, 15:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான அழகுக்கு பின்னால் இருக்கும் சோகக்கதைகள் குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. மேலை நாடுகளில் சுரங்கப்பாதை தொழிலாளர்கள் எந்த அளவு அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்களோ அதை விட அதிக சுரண்டல்களையும் கொடுமைகளையும் அனுபவித்தவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். 1941 முதல் 1965 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு November 14, 2018 1 Min Read சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி மாதம் 24-ந் திகதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. அந்தச் சிலையில் ஜெயலலிதாவின் முகபாவனையில் இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தநிலையில் ஜெயலலிதாவின் சிலையை மாற்றியமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை இன்று க…
-
- 0 replies
- 404 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பருவ மழை பெய்வது வழக்கம். அந்த மழை நமக்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையைத் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. ஓரிரு நாட்களில் பெய்த அதிகனமழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாததுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணம் என்கின்றனர் இயற்கையியலாளர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. அவற்றுள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 124 ஏரிகளும், 34 கோவில் குளங்களும் உள்ளன. இதில் ஏரிகளின் மொத்த கொள்ளளவு சென்னை மாநகர பர…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-