Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது? தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத் இடிபாடுகளுக்குள் புதைந்துகிடக்கும் கன்டெய்னர்களில் சிக்கியுள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாகத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 31-ம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி 7 மாடி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. தீவிபத்தில் பலத்த சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன…

  2. ''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள் 2015-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, அதிகாலை 4 மணி. தமது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஐ.டி காலனி இல்லத்தில், மரக்கன்று ஒன்றை நடுகிறார் அவர். அருகிலிருந்த ராஜாத்தியம்மாள், சிறிய பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை அந்த கன்றுக்கு ஊற்றுகிறார். இதைக்கண்டு, ''பாத்துமா... ரொம்ப சிந்திடப்போகுது'' என்று கிண்டல் செய்கின்றனர் குழுமியிருந்த சீனியர் தலைவர்கள். அப்போது, ''தண்ணீர் சிந்தினால் தவறில்லை. கண்ணீர் சிந்தினால்தான் பிரச்னை'' என வெளிப்படுகிறது ஒரு கரகரத்த குரல். அனைவரும் அமைதியாக அடுத்த வார்த்தையை எதிர்பார்த்திருக்க, சில நொடி இடைவெளிக்குப் பிறகு, ''கருணாநிதி வீட்டில் பெண்கள் கண்ணீர்…

  3. புரசைவாக்கம் வணிக வளாகத்தில் தீ விபத்து: அலறியடித்து மக்கள் ஓட்டம்! சென்னையில் பரபரப்பான பகுதியான புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் சிட்டி மால் எனும் வணிக வளாகம் உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும் வளாகம் அது. அங்குள்ள ஒரு துணிக்கடையில் இன்று திடீரென தீப்பற்றியது. எதிர்பாராத இந்த விபத்தால் மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். உடனடியாக வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள தீயணைப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விரைந்து செ…

  4. 'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு! நடிகர் ரஜினிகாந்த், இன்று முதல் 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார். அப்போது ரஜினி பேசுகையில், "இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும், 'உனது உடலைப் பார்த்துக்கொள், ரசிகர்களைப் பார்த்துப் பேசு, போட்டோ எடுத்துக்கொள்' என்று சொல்வார். அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆ…

  5. 'யாரும் நீக்கவில்லை... கட்சிப் பணியைத் தொடர்வேன்' : திகாரில் இருந்து வெளிவந்த தினகரன் அதிரடி! இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு கைதுசெய்யப்பட்டார், டி.டி.வி.தினகரன். விசாரணைக்குப் பின்னர், அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, டெல்லி நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்த மனு மீது, கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று டி.டி.வி.தினகரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது, டெல்லி நீதிமன்றம். அவருடன் கைதான மல்லிகார்ஜுனாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவி…

  6. செல்வாக்கை சரிக்கட்டுமா சசிகலா அணி...? தினகரன் ஜாமீன் பின்னணி! ஆளுங்கட்சியாக இருந்தாலும் இருவேறு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றாக இணைக்கும் பணி, வேகமாக நடப்பது போல் வெளியில் தெரிந்தாலும் உள்ளுக்குள் என்னவோ வேறு கதை ஓடுகிறது. அவரவர் பலத்தைக் காண்பித்து கட்சி, ஆட்சி, இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றையும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில்தான் இரண்டு அணிகளுக்குள் பந்தயம் நடக்கிறது... பந்தயத்தில் முந்திக் கொள்ளும் பாய்ச்சலில் சசிகலா அணியே முதலில் இருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.கவில் ஏற்பட்ட குளறுபடிகள் ஊரறிந்த ஒன்றே. அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா என்று இருந்து வந்த நிலை மாறி சசிகலா, நடராஜன், ஓ.பி.எஸ், டி.டி.…

  7. தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ... அப்துல் ரகுமான், காலமானார்.கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80. மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். 'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர…

  8. அ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’? அதிமுகவில் எந்த அணிக்கு உரிமை உள்ளது எனச் சட்டரீதியாக வழக்கு நடந்துவரும்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழ், திடீர்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு அணிகளாக எதிரெதிர்த் திசைகளில் பயணித்தாலும், மத்திய பாஜக அரசை ஆதரிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைதருமாறு பிரதமர் மோடியை இரண்டு அணிகளின் தலைவர்களான - பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். குறிப்பாக, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் போன்ற ச…

  9. மிஸ்டர் கழுகு: நாள் குறிக்கிறார் ரஜினி! சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானபோது அவருக்காக இளநீர் வைத்திருந்தோம். ஸ்ட்ரா போட்டு மெல்ல உள்ளே இழுத்த கழுகார், ‘‘ரஜினி அரசியல் தொடர்பான அனல், இதைவிட அதிகமாக அடிக்க ஆரம்பித்துள்ளது” என்றார். இளநீரை முடிக்கும்வரை காத்திருந்தோம். ‘‘கடந்த 20 வருடங்களாக பல்வேறு அரசியல் டயலாக்குகளைத் தனது படங்களில் பேசி வந்திருக்கிறார் ரஜினி. ‘நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்’ என்பது அவரது பிரபலமான டயலாக்குகளில் ஒன்று. அவர் சொன்ன ‘வரவேண்டிய நேரம்’ வந்துவிட்டதாகவே அவரது ரசிகர்கள் இப்போது நினைக்கிறார்கள். ‘இதுவரை தலைவர் சொன்னது எல்லாம் சும்மா. யாரோ தூண்டிவி…

    • 2 replies
    • 3.1k views
  10. இலங்கையிலிருந்து கடத்திய தங்கத்துடன் இந்தியாவில் இருவர் கைது ; பிரதான நபரைத் தேடி வலைவீச்சு ராமேஸ்வரம் அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி இந்திய ரூபா மதிப்பிலான தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று…

  11. முகப்புப் பகுதி இடிந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: எல்.சீனிவாசன். சென்னை சில்க்ஸ் நான்கு மாடி கட்டிடத்துக்கு அனுமதி வாங்கிவிட்டு 8 மாடி கட்டியது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் நேற்று (புதன்கிழமை) காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர். ஆனால்இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அரசு சார்பில் கட்டிடத்தை இடிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.ப…

  12. தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத் தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுப் பணித்துறை நிபுணர்கள் பொறியாளர்கள் ஆலோசனையின்படி மாலை 4 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது. கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. ரூ.420 கோடி இழப்பு: சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித…

    • 0 replies
    • 1.5k views
  13. டிடிவி. தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவு வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்: டெல்லி நீதிமன்றம் டிடிவி தினகரன் | கோப்புப் படம். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் நாளை (வியாழன்) வெளியிடுகிறது. சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கவிருந்தார். ஆனால் ஸ்டெனோகிராபர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் உத்தரவை இன்று பூர்த்தி செய்ய முடியாமல் போனது, எனவே உத்தரவு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. டெல்லி போலீஸாரால் ஏப…

  14. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்?: தமிழக அரசு ஆலோசனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை கோர்ட்டு அபராதமாக விதித்தது. அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டு அறிவுற…

    • 1 reply
    • 434 views
  15. மேலும் 2 வழக்குகளில் திருமுருகன் காந்தி கைது! 2016ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய வழக்கில், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மே 21 ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த 29 ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். இந்த நில…

  16. சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் உஸ்மான் சாலை. | படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விதிமீறல் கட்டிடங்கள் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை…

    • 0 replies
    • 445 views
  17. ‘எதிரிக்கு எதிரி; நமக்கு நண்பன்!’ - சசிகலாவின் கூட்டல் கழித்தல் கணக்கு #VikatanExclusive அ.தி.மு.க-வில், சசிகலாவின் குடும்பத்தினரை ஓரம்கட்ட முடிவுசெய்துள்ள நிலையில், 'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' என்ற ரீதியில் அவர்கள் குடும்பத்துக்குள் சில வாக்குறுதிகளுக்கு சசிகலா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் உருவாகிவருகின்றன. சசிகலா, டி.டி.வி.தினகரன் சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவி…

  18. கட்டிடத்தின் உள்ளே ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறும் புகை. படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இ…

    • 0 replies
    • 1.9k views
  19. அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயற்சி செய்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு…

  20. ரஜினி கட்சி..."தமிழருவி மணியன்" கொ.ப.செ...! ரசிகர்கள் உற்சாகம்! ACTOR RAJINI...POLITICS... UPDATES..

    • 3 replies
    • 509 views
  21. மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற சென்னை ஐஐடி மாணவர் மீது சரமாரி தாக்குதல் சென்னை ஐஐடியில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர், வலதுசாரி ஆதரவு மாணவரால் தாக்கப்பட்டிருக்கிறார். Image captionதாக்குதலுக்கு உள்ளான மாணவர் மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு கடும் விதிமுறைகளை விதித்து கடந்த மே 25ஆம் தேதியன்று உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) அன்று இரவு சில மாணவர்கள் மாட்டு இறைச்சி விருந்து ஒன்றை நடத்தினர். இதில் சுமார் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்ட சூரஜ் ராஜகோபாலன் என்ற மாணவர் இன்று பிற்பகலில் ஐ…

  22. இதுதான் ஜெ. சம்பாதிச்ச "பெயர்".. பறிமுதலாகிறது 68 சொத்துக்கள்... 6 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.தமிழக அரசு உ…

  23. உணர்ச்சிகரமாகச் செய்தார்கள் வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை சசிகலா சிறைக்குச் செல்வார் என்றார், சென்றார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்றார். முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போகும் என்றார் நிறுத்தப்பட்டது. தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியான பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைச் சந்தித்தபோது… நீங்கள் சொல்வது எல்லாம் நடந்து வருகிறது என்கிறார்கள். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்? தமிழக சட்டசபைக்கு 2021 க்கு முன்னரே தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கின்றன. முதல்வர் மேலேயே விசாரணை வருகிறது! இரண்டு திராவிட…

  24. எதிர்ப்பு....! தினகரனுக்கு ஜாமின் அளிக்க டில்லி போலீஸ் கடும்.. ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரனுக்கு ஜாமின் அளிக்க,டில்லி போலீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மொபைல் போனை சேதப்படுத்தியது உட்பட, ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அ.தி.மு.க., பிளவுபட்டதைத் தொடர்ந்து, முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்…

  25. 'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துவருகின்றனர். அப்போது, மெலிந்து காணப்பட்ட டி.டி.வி. தினகரனிடம், 'அண்ணனை இப்படியா நாங்க பார்க்கணும்' என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க, டெல்லி ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்ததாக போலீஸார் டி.டி.வி.தினகரனை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், சிறைக்குச் சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.