Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'ஆப்ரேஷன் அ.தி.மு.க.' - அமித் ஷா வகுத்த பி.ஜேபி. வியூகம்! மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழக அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றி வருகிறது. அதன் ஒரு கட்டம்தான், தேர்தல் நேரத்தில் பறக்கும் படை ரெய்டு நடத்தி கைப்பற்றும் பணக்குவியல்கள். இதுவரை இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளும் இணைந்தே ரெய்டு நடத்த களத்தில் இறங்கியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கணக்கு காட்ட முடியாத பணம் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் 125 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய நிதித்துறைச் செயலகம். இவர்களின் தலைமையின் கீழ் சுமார் 300 அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இவர்கள…

  2. உறைநிலையில் சென்னை: பசித்திருக்கும் வயிறுகளுக்கு என்ன பதில்? மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளலாகின்றன சென்னையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும். ஊரடங்கு எனும் சொல்லுக்குப் பின் மக்கள் கொடுக்கும் விலை என்னவென்பதை மிகச் சுலபமாக எண்ணிவிடுகிறதோ அரசு என்கிற கேள்வியே பிரதானமாக எழுகிறது. கிருமித் தொற்றைக் குறைப்பதற்கான தவிர்க்க முடியாத வியூகம் என்று அரசு இதற்கான காரணத்தைச் சொல்லுமானால், முன்னதாக அமலாக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் அரசு இயந்திரம் சாதித்தது என்ன என்ற பதில் கேள்வி தவிர்க்கவே முடியாதது. சென்னையில் முந்தைய ஊரடங்குக்குப் பிறகு, மே 25 முதலாகவே தொழிற்பேட்டைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜூன் 1 முதலாகக் கடைகளைத்…

  3. ‘அமைச்சர் பதவியில்தான் இருக்கிறாரா ஓ.பி.எஸ்?!’ -கடுகடு கார்டன்; கதிகலக்கும் கோட்டை அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வர…

  4. இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத…

  5. சீட்டுக்கு பணம் கேட்கப்பட்டதா? கேப்டன் அலுவலகத்திற்கு பூட்டு! தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று ஓப்பனாக அறிவித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கொஞ்சமாக அதில் ஒரு மாற்றம் போல், 'என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் கட்சிகளை வரவேற்கிறேன்' என்றார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் பல ரசவாதங்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. பின்வாசல் வழி தேமுதிகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரே கேப்டனின் இந்த முடிவால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், '' தேமுதிக அலுவலகத்துக்கு பின் வாசல் வழியாக வந்து பின் வாசல் வழியாகவே விஜயகாந்த் போகிறார்'' என்ற குற்றச்சாட்டையும் …

  6. ‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ. அ.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு! ஒருங்கிணைப்பாளர் பதவி ‘நோ’! கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முதலில் எடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன். இந்த முழக்கத்தை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள…

  7. தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம் 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட…

  8. சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 4 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது நாரயணாபுரம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக சிவகாசியை சேர்ந்த விஜயகுமார் உள்ளார். இந்த பட்டாசு ஆலையை பால்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென்று தீப்பிடித்தது. பட்டாசுகள் டமார்... டமார்.…

  9. தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்: பி.ஜோதி ராமலிங்கம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே வைகோவும் ராமதா ஸும் மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிபோல் செயல்படக்கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்தது உட்பட தமிழர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரு கிறது. அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் பள்ளிகளில் திரு வள்ளுவர் தினம் கொண்டாடப் படும் என மத்திய அரசு அறி வித்துள்ளது. அடுத்து பாரதியார் தினமும் கொண்டாடப்படும். காங்கிரஸ் அரசில் மு.க. அழகிரியை நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்கவில்லை. பாஜக ஆட்சியி…

  10. “ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களில் உடன் இருந்தவர்களை விசாரிக்க வேண்டும்!” ஆவேச சசிகலா புஷ்பா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா-வின் மரணத்தில், சந்தேகமிருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பலவித சந்தேக கணைகளை வீசி வருகின்றனர். இதில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பேசிய ஆடியோ வாட்ஸ் அப் ஒன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், (8-12-16) கோவையில் அதனை அவர் உறுதி செய்துள்ளார். ஜெயலலதாவின் மரணத்தில் சந்தேகம்! ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில், எங்களுக்குப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஜெயலலிதாவை ஒருமுறைகூட நேரில் காட்டவில்லை. ஒரு …

  11. படத்தின் காப்புரிமை ARUN SANKAR/Getty images வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதுபோல் தூத்துக்குடியிலும் மக்களவைத் தேர்தலை நிறுத்தும் சதி நடைபெறுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த தொகுதியில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. …

  12. கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது…

  13. 13th May 2013 திருவாரூர் கொரடாச்சேரி பகுதியில் உள்ள பிஎம்எச் காலனியைச் சேர்ந்தவர்களான மதன் (23). ராஜா ஸ்ரீதர் (19) ஆகிய சகோதரர்கள் இருவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த ஹாஜி முகம்மது தலைமையிலான கும்பல் கொடூரமாக வெட்டியது. இருசக்கர வாகன பழுது பார்ப்பில் ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் திருவாரூர் அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நடந்துள்ளது. இந்த இச்சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் இறந்த ஒருவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். h…

  14. திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொத…

    • 0 replies
    • 513 views
  15. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''ப…

  16. தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குழுவினர் இன்று பந்த் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ், லாரி, ஆட்டோ போன்ற எந்த வாகனமும் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று மாலை கூடி, தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டதை த…

  17. யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி

  18. இந்திய அளவில் தனித்துவம் பெற்றுள்ள சென்னை ரயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது. ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் ‘வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway …

  19. நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! இந்தியாவில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா பேரிடரின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. நாளொன்றுக்கு எத்தனை மனிதரென்று சரியான எண்ணிக்கை இறுதிவரை வராமலே போகலாம். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற மனிதாபிமான நாடுகள் தாராளமாக இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் அந்நாடு சந்திக்கும் சவாலுக்கு அவல் பொரி போன்றது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தால் அதற்கு அயலிலுள்ள குட்டித்தீவான இலங்கை எதிர்பார்க்கப்பட்ட சோதனை வலயமாகியுள்ளது. அரசியல், சாதி, மத, இன பேதமின்றி இந்நோய் இங்குள்ளவர்களை ஒட்டுமொத்தமாக தாக…

    • 0 replies
    • 512 views
  20. 'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா? பட மூலாதாரம்,IMD 8 டிசம்பர் 2022, 05:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 மு…

  21. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்! புதுச்சேரியில ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சரான நாராயணசாமியால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். குறித்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மா…

  22. துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு.. ஸ்பெஷல் ரிப்போர்ட் ரெடி.. தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு! திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்த அறிக்கை தற்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மூன்று நாட்களாக நடந்த ரெய்டு நேற்று முடிவிற்கு வந்தது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.முதல்நாள் சோதனையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் அதையும் கூட துரைமுருகன் தரப்பு மறுத்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சோதனை நடந்தது. வேலூர் அருகே காட்பாடியில் உள்ள சிமெண்ட் குடோனில் வருமானவரி…

  23. 'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை' ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்) "ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ? திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது . வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்…

  24. நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்' என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்' என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்' வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான், ரஜினி அதில், ``ஐயா ரஜினிகாந்தை நான்…

  25. கொலை முயற்சி வழக்கு; விஜயகாந்த் திடீர் மாயம் தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்தில், பல்வேறு திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென அங்கிருந்து மாயமானார். ரிஷிவந்தியம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக வியாழக்கிழமை காலை விஜயகாந்த் வந்திருந்தார். பிறகு திட்டமிட்படி தோப்புச்சேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கண்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அகண்டை கூட்ரோட்டில் ரிஷிவந்திய ஊராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத் திறனாளிகள் 8 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கினார். 51 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.