தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க கோரியும். தமிழக தமிழர்களை “Tamil Chauvinist groups” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி இன உணர்வுடன் செயல்படும் தமிழர்களை “தமிழின வெறியர்கள்” என்ற பொருள்படும்படி இந்த அரசாணை கண்டித்தும். நீதிபதி திரு.மிட்டல் அவர்களே திரும்பிப்போ என முழங்கும் உரிமை எழுச்சி போராட்டம் ஒன்று நேற்று நடை பெற்றது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு தொடர்பான அரசாணை தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் கட்சி செந்தமிழ்க்குமரன் தலைமையிலான தமிழ்த்தேச மக்கள் கட்சியினர் 35 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/34155/57/35/d,article_full.aspx
-
- 0 replies
- 370 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்த அறிக்கை செப்டம்பர் மாதம் தாக்கல் February 2, 2019 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கையினை தாக்கல் செய்யவுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராடத்தின் கடைசி நாளன்று, கடற்கரையில் வன்முறை வெடித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் வி…
-
- 0 replies
- 274 views
-
-
28 APR, 2024 | 06:36 PM நேர்கண்டவர் - ரொபட் அன்டனி இலங்கையில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய ஒரு துறையாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு தான் மிகவும் உயர்ந்த அளவான சுற்றுலாத்துறை ஆற்றலை கொண்டிருக்கிறது. எனவே இலங்கையும் தமிழகமும் சுற்றுலாத்துறை விடயத்தில் ஒரு கூட்டு பொறிமுறையை வகுத்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும் என்று தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவியிலேயே இதனை சுட்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாள்: செப்டம்பர் 13. 'சென்னை துறைமுகத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்டெய்னரை காணவில்லை' என துறைமுகம் காவல் நிலையத்தில் சி.ஐ.டி.பி.எல் நிறுவன மேலாளர் பொன் இசக்கியப்பன் புகார் கூறியபோது, நேரம் இரவு 10 மணி. மனுவில், கன்டெய்னரில் இருந்த ரூ.35 கோடி மதிப்பிலான டெல் நிறுவன லேப்டாப் பெட்டிகள் காணாமல் போனதாகக் கூறப்பட்டிருந்தது. 'இவ்வளவு பெரிய தொகையா?' என அதிர்ச்சியுடன் விசாரிக்கத் தொடங்கிய போலீசாருக்கு கன்டெய்னர் கடத்தலின் மூளையாக இருந்து அரங்கேற்றிய நபரைக் கைது செய்யவே 30 நாட்கள் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் தொடங்கிய இன்றைய தினத்தில், 10 மணி முதல் சட்டென்று குளிர்ந்த வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து, இன்று காலையில் தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக வேகமெடுத்தது. அண்ணா நகர், பாடி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. அண்ணா மேம்பாலத்தின் கீழ், கனமழை காரணமாக ம…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தமிழ்நாடு முழுவதும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 சென்டி மீட்டர் மழையும், பெரிய நாயக்கன் பாளையத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. கோயம்புத்தூர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மால…
-
- 0 replies
- 593 views
-
-
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம் மெரினா கடற்கரை காணமால்போகும் என ஐஐடி ஆய்வு ஒன்று எச்சரித்து உள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 14:51 PM சென்னை சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதில் சென்னை அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், சென்னை மக்களைப் பொறுத்தவரை, '100 ஆண்டுகளில் இல்லாத' மற்றும் 'பேரழிவு' போன்ற சொற…
-
- 0 replies
- 514 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான உள்நாட்டுத் தீர்வை நாம் ஏற்கப்போவதில்லை – சம்பந்தன் வெளிநாட்டுப் பொறிமுறையொன்று அவசியம் “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் எத் தீர்வையும் தமித் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. சர்வதேசங்களின் பங்களிப்புடனான ஒரு தீர்வே அவசியம். புதிய அரசியலமைப்பிற்கான எமது முன்மொழிவு இதுவாகவே இருக்கும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பிற்கான வரைவு பற்றி விவாதிப்பதற்காகத் திங்களன்று கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் திரு சம்பந்தன் இக் கருத்தைத் தெரிவித்தார். இக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் பிரதிநி…
-
- 0 replies
- 528 views
-
-
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களால் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு வந்த சோகம்! கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட் மீது தான் தற்போது தமிழகத்தில் அனைவரின் கவனமும் உள்ளது. முதலில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புகார். அடுத்து இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்ற புகார். நேற்று சசிகலா இங்கு யாரையும் அடைத்து வைக்கவில்லை என பேச தமிழகம் முழுவதும் ரிசார்ட்டை சுற்றியே உள்ளது. டாக் ஆஃப்தி டவுனாக இருக்கும் இந்த விடுதி எப்படி இருக்கும். உள்ளே எம்.எல்.ஏக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கான ஒருநாள் செலவு என பல செய்திகள் வந்தாலும் தற்போது மோசமான பாதிப்பு ஒன்று ரிசார்ட்டுக்கு வந்துள்ளது. இந்த …
-
- 0 replies
- 968 views
-
-
முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது. இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாள…
-
- 0 replies
- 225 views
-
-
பெட்டிகளுடன் வலம் வரும் சசி ஆதரவு கும்பல் : ஓட்டம் பிடிக்கும் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க, பிள்ளை பிடிக்கும் கும்பலை போல, சசிகலா ஆதரவு மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகி கள் சுற்றி வருகின்றனர். பணப்பெட்டிகளை காட்டி, அவர்களை கவரவும் முற்பட்டுள்ளனர். இதை பார்த்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக அனுப்பிய நோட்டீசுக்கு, சசிகலா சார்பில் தினகரன் அளித்த விளக…
-
- 0 replies
- 414 views
-
-
கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்: தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. பதிவு: ஏப்ரல் 30, 2021 16:13 PM சென்னை, வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவு…
-
- 0 replies
- 691 views
-
-
டில்லியில் தமிழக மந்திரிகள் ஆலோசனை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் எப்போது எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், நம்பிக்கை ஓட்டெடுப்பு, பொதுக்குழு என மூன்று விஷயங் களும், ஒரே நேர்கோட்டில் வந்து நிற்பதால், இவற்றை எளிதாக கையாளுவது குறித்த அறிவுரைகளை, தமிழக அமைச்சர்கள், டில்லியில் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டா ரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரிடம் மனு அளித்து விட்டு, புதுச்சேரி புறப்பட்டுச் சென்றதிலிருந்தே, முதல்வர் பழனிசாமி தலை மையிலான அரசு, ஆட்டம் காணத் த…
-
- 0 replies
- 420 views
-
-
சசிகலா குடும்பம் கொள்ளையடித்தது எப்படி? ஜெயலலிதா விதைத்த வினை - நக்கீரன் கோபால்
-
- 0 replies
- 769 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 608 பக்க அறிக்கை சமர்ப்பித்தது 27 ஆகஸ்ட் 2022, 06:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வந்த நீதியரசர் ஆறுமுகசாமி முதல்வரை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
மக்கள் நீதி மய்யம்: மதுரையில் உலாவிய போயஸ் உளவாளிகள் #VikatanExclusive “மக்கள் நீதி மய்யம்” கட்சியை மதுரையில் கோலகலமாகத் துவக்கிவிட்டார் கமல்ஹாசன்.பிரமாண்ட மேடை, புதுமையான வடிவில் கொடி, வித்தியாசமான பெயர் என ஒவ்வொரு விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மதுரையில் நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை உளவு பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு டீம் மதுரையில் தங்கியிருந்து முழு நிகழ்வையும் சென்னைக்கு அனுப்பியதுதான் சுவாரசியம். தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக் கலைத்துறையின் ஆளுமை சக்திகளாக விளங்கிய ரஜினி, கமல் இருவரும் அரசியல் அரிதாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.இ…
-
- 0 replies
- 349 views
-
-
''நானும் சசிகலாவும் பேசிக்கொண்டது எங்க பெர்சனல்!” - விகடனுக்கு நடராசனின் கடைசி பேட்டி புதிய பார்வை பத்திரிகை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராசன், கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை முடித்துவிட்டு, அவரது தம்பி ராமச்சந்திரன் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது, அவரைச் சந்தித்துப் பேட்டி கேட்டோம். “பேட்டியாக நான் எதுவும் கொடுக்கவில்லை; சில விஷயங்களைப் பேசலாம்; அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள்” என்றார். அந்த நேரம், மன்னார்குடி குடும்பத்துக்கு மிகவும் இக்கட்டான காலகட்டம்! எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் வியூகங்களைத் தீர்மானித்ததில் நடராசனின் பங்கு மிகப்பெரியது. ஆனால், அந்தக் கட்சியும், அதன் தலைமையில் அமைந்த ஆட்…
-
- 0 replies
- 509 views
-
-
படக்குறிப்பு, சென்னை செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. உண்மையில் நடந்தது என்ன? ஜூலை நான்காம் தேதியன்று சென்னை செங்குன்றம், திருச்சி மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்களுடன் மாணவன் கைது! சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்துசெல்லும் விமானத்தில் இருந்த கல்லூரி மாணவன் ஒருவர் வைத்திருந்த பெட்டியிலேயே இந்த அரிய வகை உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த சோதனையின் போது அதில் ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்துள்ளன. அதேநேரம் இவை 34 வகையான கொடிய உயிரினங்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரி…
-
- 0 replies
- 422 views
-
-
ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர், அவரே எந்ததொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர். அந்தவகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது. இத…
-
- 0 replies
- 650 views
-
-
நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு நாங்கள் கிங் மேக்கராக இருப்போம், விஜயகாந்த் கிங்காக இருப்பார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போர். மக்கள் நலக்கூட்டணி-…
-
- 0 replies
- 601 views
-
-
1996ல் ரஜினியின் வாய்ஸ் தேர்தலில் எதிரொலித்தது போன்று 2021 தேர்தலில் விஜய் வாய்ஸ் எதிரொலிக்குமா?
-
- 0 replies
- 394 views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமான திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை, விசைத்தறி, பாத்திர உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழில்கள் வளர்வதற்குத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களின் கடும் உழைப்பும், தொழில் துறையினரின் முயற்சியுமே இங்கு தொழில்கள் வளர்ச்சி பெற முக்கிய காரணமாகும். தமிழகத்தில் நிலவும் அவலங்களுக்கு அதிமுகவே காரணம். வரும் சட்டப் பேரவைத் த…
-
- 0 replies
- 428 views
-
-
தேவாலயத்தின் பெயரால் கச்சத்தீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: மத்திய அரசு கடும் அதிருப்தி! டெல்லி: கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்களின் வலைகளை உலர்த்த, அங்கு நடக்கும் அந்தோணியார் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. காலப்போக்கில் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பக்கம் வரவிடாமல் தடுத்து வருகிறது இலங்கை கடற்படை. இந்நிலையில் கச்சத்தீவில் ரூ.1 கோடி செல…
-
- 0 replies
- 488 views
-
-
பா.ம.கவின் அங்கீகாரம் ரத்து?! மரக்காணம் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு! மாமல்லபுரத்தில் கடந்த 2013ல் நடந்த சித்திரைப் பெருவிழாவில், இருசமூகத்தினருக்கு இடையே எழுந்த மோதல் தொடர்பாக, பா.ம.கவிற்கு எதிராக வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷனல் பெஞ்ச், 'மோசடி செய்து பா.ம.க அங்கீகாரம் பெற்றது தெரியவந்தால், தேர்தல் கமிஷனே பா.ம.க மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று' தீர்ப்பு அளித்துள்ளது. மாமல்லபுரம் வன்னியர் சித்திரை பெருவிழா; ஒரு பிளாஷ் பேக்! ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், சித்திரை மாதம், பௌர்ணமி தினத்தன்று வன்னியர் சங்கம் சார்பில் 'முழுநிலவு சித்திரை பெரு…
-
- 0 replies
- 1k views
-