தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10241 topics in this forum
-
படக்குறிப்பு,செவிலியர் சபீனாவின் பணியைப் பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 15 ஆகஸ்ட் 2024 ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை ஜிப்லைன் வாயிலாகக் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலையில் இருந்து இப்படி ஜிப்லைன் மூலமாக ஒரு செவிலியர் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் …
-
- 1 reply
- 498 views
- 1 follower
-
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு! நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொக…
-
-
- 32 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை மாநகரம் தொடர்ச்சியாக நகர்ப்புற வெப்பத் தீவுகள், வெப்ப அலை, கடல் அரிப்பு, புயல், வெள்ளம் எனப் பல அபாயங்களை எதிர்கொண்டு வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 16 ஆகஸ்ட் 2024 “இப்போ கடல் ரொம்ப வயலா இருக்கு (ஒரு சில அலைகள் மட்டுமே இருக்கும், பெரிய அலைகள் இல்லாத நிலை). இந்த மாதிரி இருக்கும்போது ராத்திரில கடலுக்குப் போனாதான் வரிப்பாறை, கருவாழை போன்ற மீன்கள் கிடைக்கும். கடல் இப்படி இருக்கும்போது தண்ணி ரொம்ப தெளிவா இருக்கும். காலையில போனா மீன் கண்ணுக்கு வலை நல்லா தெரிஞ்சு, சிக்காம தப்பிச்சுக்கும்.” “இதையெல்லாம், அனுதினமும் கடலைப் பார்…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
ஒரு தலித் எப்போதுமே முதலமைச்சர் ஆக முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரும் போகும் என்றும் ஆனா…
-
- 1 reply
- 499 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பத்து வகையான உப்புகளும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக இக்கட்டுரை கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் 'மனித வாழ்வில் பிரிக்க முடியாதது எதுவோ?' என திருவிளையாடல் திரைப்படத்தின் தருமி பாணியில் கேட்டால், 'உப்பும் சர்க்கரையும்' என ஒரே வரியில் பதில் அளித்துவிடலாம். சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி,…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
15 AUG, 2024 | 05:13 PM இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் நாடு திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின் ரெய்மெண்ட் ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 3 படகுகளிலிருந்த காளீஸ்வரன் 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஊர்க…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
”முதல்வர் மருந்தகம்” திட்டம் இன்று முதல் ஆரம்பம் – 1000 மருந்தகங்கள் – 3 இலட்சம் மானியம். சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வருகை தந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வரவேற்றார். பின்னர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். குறித்த உரையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார். பொதுப்பெயர் வகை மருந்துகள் (Gene…
-
- 0 replies
- 370 views
-
-
பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி காமகோடி கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2024 இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை ஐஐடி மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு(NIRF) பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தபிரிவில் , 2019 முதல் ஆறாவது முறையாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மெட்ராஸ் முதல் இடம் பிடித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்களன்று 2024 NIRF தரவரிசை விவரங்களை வெளியிட்டார். ஐஐடி மெட…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..? உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். மேலும் அங்கு கூகுள் நிறுவன அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்…
-
- 2 replies
- 353 views
- 1 follower
-
-
14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில்…
-
- 0 replies
- 126 views
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்ப…
-
- 1 reply
- 283 views
-
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர…
-
-
- 58 replies
- 4.6k views
- 3 followers
-
-
விஜய் அரசியலுக்கு வருவதை நினைத்து பயப்படக் கூடாது எனவும் புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போடியிடப் போவதில்லை என அறிவித்த அவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க போவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “தமிழகத்தில் இன்று நான்கு முனை போட்டி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, புதியதாக நடிகர் விஜய் வருகிறார். நடிகர் விஜய்யை நான…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
திராவிடப் பேரரசும், திளைத்து வாழும் சிற்றரசர்களும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -1 அன்றைய வரலாற்றின் தேவையாக உருவான இந்த இயக்கம் காலப் போக்கில் பெயர் மாறி, உருமாறி, திசைமாறி..பயணித்துக் கொண்டிருக்கிறது..! இதன் ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை சமூக, அரசியல் தளங்களில் இது ஏற்படுத்திய தாக்கங்களையும், இன்றைய சரிவுகளையும் சமரசமின்றி அலசுகிறார் சுப.உதயகுமாரன்; சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் பார்ப்பனரல்லாத தென்னக மக்கள் அதிகமான வாய்ப்புக்களைப் பெறவும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவுமாக சர். பிட்டி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்றோரால் 1916-ஆம் ஆண்டு தென் இந்திய நல உரிமைச்சங்கம்…
-
- 8 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒருவர் தனது கையில் உள்ள செல்போனில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் மேப் காட்டும் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றார் அவர். திடீரென அவரருகே ஓடி வந்த இளைஞர் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார். செல்போனை இழந்தவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். “கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம…
-
-
- 2 replies
- 736 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு கொண்டு செல்லப்படும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பை படம் பிடிக்க சேலத்தை சேர்ந்த ஒருவர் பறக்கவிட்ட டிரோன் கேமராவில், வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்த கருப்பு நாய் ஒன்றின் படம் பதிவானது. இது பலரின் கவனத்தை மேட்டூரை நோக்கி திருப்பியுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய பட்டாளமே மேட்டூர் அணையின் 16 ம் கண் மதகு பகுதியை நோக்கி முகாமிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஜூன் 30ம் தேத…
-
-
- 4 replies
- 394 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,POOVALUGIN NANBARGAL கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் அமெரிக்க சிப்பி இனத்தால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே பறிபோவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் இந்த உயிரினம் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது? சென்னை மாவட்டம், எண்ணூரில் முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன்படை குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதி மக்க…
-
- 1 reply
- 860 views
- 2 followers
-
-
10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவ…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழையும்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் செயற்கை காலை கழற்றிவிட்டு வரும்படி கூறியதாகவும் கோயிலுக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல 500 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்று ஊழியர் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் ஒருவர் காணொளியை பகிருந்திருந்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் …
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB படக்குறிப்பு,ஆர்ம்ஸ்ட்ராங் 48 நிமிடங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே இரு சக…
-
- 10 replies
- 951 views
- 1 follower
-
-
தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம். அரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 க்கு கோவையில் ஆரம்பித்து வைத்துள்ளார். கோவை அரச கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அ…
-
- 0 replies
- 389 views
-
-
பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு,தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2024 தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வந்தது. …
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
08 AUG, 2024 | 12:02 PM தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 10 ம் திகதி தமிநாட்டில் உள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் மீனவர் திரு மலைச்சாமி கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் திரு இராமச்சந்திரன் என்பவரை காணவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. மற்ற இருவர் உயிருடன் தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் த…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
கடந்த 45 ஆண்டுகளில் 875 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கொலையை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்களா? இல்லையா? என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மாநிலங்களவையில் மதிமுக எம்பி வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. இன்றைக்கும் கூட 22 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. த…
-
-
- 2 replies
- 419 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KNNEHRU படக்குறிப்பு,கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-