தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்! தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். குழி தோண்டி விளையாடிக் கொண்டிந்த வேளையில் அவர்கள், பழங்கால நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் கல் கல்வெட்டுகளை மீட்டுள்ளனர். தகவல் அறிந்த பாரம்பரிய சங்க செயலாளரும், …
-
- 0 replies
- 360 views
-
-
30 SEP, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : “ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் நேற்று( 28.09.2024 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில் இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீன…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு! தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அந்த முறைப்பாட்டில், தன்னை நான்கு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து பொலிஸார் அந்த மாணவியை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். …
-
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. புதிய ஜனாதிபதிக்கு நன்றி இதில் ஒரு வருடமாக இலங்கைச் சிறையில் இருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த ரொபர்ட் என்ற கடற்றொழிலாளரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த க…
-
- 0 replies
- 921 views
-
-
பட மூலாதாரம்,TWITTER/V_SENTHILBALAJI/ 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அபய் ஓகா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று (வியாழன், செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். நீண்ட காலமாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் இருப்பதால் மனித உரிமைகளை கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், “15 மாதங்களுக்கும் மேலாக விசாரணை…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டில் கலப்படமா ? உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பிரசாதமாக தயார் செய்து விற்கப்பட்டும் வருகிறது. திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். …
-
- 0 replies
- 617 views
-
-
காரில் இருந்து ஐவரின் சடலம் மீட்பு – விசாரணைகள் தீவிரம். புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமன சமுத்திரம் பகுதி அருகே வீதியோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஐவரின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் வெகு நேரமாக கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நமனசமுத்திரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரில் சடலங்கள் இருப்பதை கண்டுள்ளனர். காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் எதற்காக புதுக்கோட்டை பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாக பொ…
-
- 0 replies
- 847 views
-
-
24 SEP, 2024 | 02:17 PM சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு தடையை மீறி ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செப்.24) சோதனை மேற்கொண்டனர். ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இந்நிலையில், சென்னையில் 10 இடங்க…
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2024 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன. நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன? நீலக்குறிஞ்சி மலர்களின் பண்புகள் என்ன? இவை எந்தச் சூழலில் வளர்கின்றன? இந்த மலர் உள்ளூர் கலாசாரத்தில் எத்தகைய மு…
-
- 0 replies
- 574 views
- 1 follower
-
-
சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்த இந்திய உயர் நீதிமன்றம்! சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்பதும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் குற்றமாகும் என்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் செயல்பாட்டில், டிஜிட்டல் சாதனங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் குறித்த முக்கிய தீர்ப்பில் இந்திய உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது. 28 வயது இளைஞர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சிறுவர் ஆபாச படங்களை பதி…
-
- 0 replies
- 283 views
-
-
பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் க…
-
- 1 reply
- 743 views
- 1 follower
-
-
இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர…
-
- 0 replies
- 294 views
-
-
15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மே…
-
-
- 70 replies
- 4.2k views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிற…
-
-
- 8 replies
- 745 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆகஸ்ட் மாதம் கன்னிப்படல முக்கியத்துவம், கன்னித்தன்மை மற்றும் கன்னிகழிதல் போன்ற தலைப்புகளை தடயவியல் மருத்துவ பாடத் திட்டத்தில் இணைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சூழலில் பெண்களின் புனிதம், பாலியல் தூய்மை, ஒழுக்கப் பண்புகள் மீது கட்டமைக்கப்படும் எதிர்பார்ப்புகள் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் சூழலில், என்.எம்.சியின் இந்த சமீபத்திய நடவடிக்கை பல்வேறு மட்டங்களில் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மருத்துவ மற்றும் LGBTQ+ உர…
-
- 0 replies
- 995 views
- 1 follower
-
-
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு தள்ளிப்போனது. தற்போது புதிய திகதியை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்ப…
-
- 0 replies
- 776 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X/M.K.STALIN படக்குறிப்பு, திருமாவளவன் மற்றும் மு.க. ஸ்டாலின் (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில…
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும்…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 59 நிமிடங்களுக்கு முன்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு. ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முன…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவை அங்கே பேச அழைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் இன்று பிற்பகலில் (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா, “மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நாங்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தோம் எனச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படி ஒரு நிகழ்ச்…
-
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
12 SEP, 2024 | 03:34 PM நாகப்பட்டினம்: தங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் இன்று (செப்.12) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள சுமார் 2500 பேர் வேலையிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. சில நேரங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் சம…
-
-
- 7 replies
- 363 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 10) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,COIMBATORE CITY POLICE படக்குறிப்பு, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சுஹாசினி கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் ''சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியர் சிலர், கோவையில் ஒரு தோழியின் ‘பாசிங் அவுட்’டுக்காக வந்து, ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அதில் ஒரு மாணவி, தான் குளிக்கும்போது, யாரோ படமெடுத்தது போலத் தெரிந்ததாக ஒரு கல்லூரித் தோழியிடம் சொல்லியிருக்கிறார். அவர் ‘போலீஸ் அக்கா’விடம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னார். உடனே நாங்கள் அந்த விடுதிக்குச் செ…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-
-
09 SEP, 2024 | 02:45 PM சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 07-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும்அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் (7-09-2024 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப்…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,KUMANAN படக்குறிப்பு, பரதன் பாண்டுரங்கன், சௌதியில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள தமிழர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகோட்டுமுளை என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பரதன் பாண்டுரங்கன் 2000ஆம் ஆண்டில் சௌதி அரேபியா சென்றார் . சௌதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் ஜெனரல் மருத்துவமனையில் இஇஜி (Electroencephaloram) டெக்னீஷியனாக பணியைத் தொடங்கினார். பரதனின் அறையில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த ஃபைசல் என்பவர் 2008 ஆம் ஆண்டு ஜூன் 31-ஆம் தேதி கொல்லப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களில் பரதன் கைது…
-
- 0 replies
- 666 views
- 1 follower
-