Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்துப் பேச, விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் இருதரப்புத் தலைவர்களும், வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கருப்பண்ணன், கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக பறை இசைக் கலைஞர்கள் பறையை இசைத்துக்கொண்டிருந்தனர். அந்த இசையின் பின்னணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின…

    • 0 replies
    • 409 views
  2. கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. …

    • 0 replies
    • 383 views
  3. 'அன்புமணி ஆகிய நான் ' ஒரு வேளை வியப்பை ஏற்படுத்துகிறாரோ? சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார். அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது.…

  4. தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கு…

    • 0 replies
    • 948 views
  5. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs

  6. ' 25 ஆண்டு துன்பம் போதும்; இலங்கைக்கே போய்விடுகிறேன்!' -சாந்தனின் கண்ணீர் கோரிக்கை ' ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சட்டவிரோதமாக 25 ஆண்டுகளாக தமிழக சிறையில் துன்பப்படுகிறேன். நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என மத்திய உள்துறை அமைச்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் வேலூர் சிறையில் உள்ள சாந்தன். மத்திய உள்துறை அமைச்சக செயலர், மாநில அரசின் உள்துறைச் செயலர், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சாந்தன். அந்தக் கடிதத்தில், " வெளிநாட்டில் வேலைக்குச் சேருவதற்காக கடந்த 91-ம் ஆண்டு படகு மூலம் இந்திய…

  7. தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ-யிடம் தி.மு.க மனு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனரைச் சந்தித்து அளித்த மனுவில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். இந்தப் பணம் தொடர்பாக தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், தன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இளங்கோவன் கூறியிருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட…

  8. 100 நாள் ஆட்சி... 110 காட்சி! கவர் ஸ்டோரி அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துவிட்டன. சினிமா பட ரேஞ்சுக்கு 100-வது நாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. நூறு நாட்களில் செய்த சாதனைகளைப் பட்டியல்போட்டு பல கோடி ரூபாய் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருக்கிறது. ஆனால், இந்த விளம்பரங்களைத் தாண்டி, வேறுவிதமாக இருக்கிறது யதார்த்தம். 100 நாட்களில் நடந்த ‘110’ காட்சிகள் இங்கே. 1. தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கும் புகாரில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. 2. ரூ.570 கோடி கன்டெய்னர் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3. ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை ப…

  9. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்து நடத்தினர். கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்த…

  10. ரிசார்ட்டில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எங்கே? காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறிய ஜெயக்குமார், காரில் சென்றார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கருத்து கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சி சீனியர்களில் ஒருவர் ஜெயக்குமார். ஆனால் அவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்ப…

  11. காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தே.மு.தி.க. முடிவு எடுத்தால் நாட்டின் நலன் கருதி அதை கருத்தில் கொள்வோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் காங்கிரசோடு கூட்டணி அமைத்தாலும் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். தி.மு.க. 2004 முதல் 2013 தொடக்கம் வரை மத்திய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து, ஆட்சியில் பங்கு பெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை தமிழர்களின் பேரழிவுக்கு காரணமாக இருந்ததை யாராலும் மறைக்க …

    • 0 replies
    • 328 views
  12. சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்தோ, அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, விஜயகாந்த் ஜாமீனில் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இதையடுத்து, பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் கடந்த 3ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்…

  13. கரிசல் எழுத்தின் 'முன்னத்தி ஏர்' - ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் எனும் கிரா! சென்னை: தமிழில் கரிசல் இலக்கியத்தின் தந்தையாக போற்றப்படுகிற கி.ரா. எனும் ராயங்கால் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜ பெருமாள் ராஜ நாராயணன் (வயது 99) வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் திங்கள்கிழமையன்று காலமானர். கி.ராவின் உடல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இடைச்செவலில் நாளை பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்படும். கரிசல் இலக்கியத்தின் தந்தையாக, போற்றுதலுக்குரிய கதை சொல்லியாக திகழ்ந்தவர் கி.ரா. 1923-ம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்டம் இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ரா. …

    • 0 replies
    • 635 views
  14. மருத்துவக் கல்வியில்... தமிழ் அகதிகளுக்கு இட ஒதுக்கீடு, வழங்க வேண்டும் – ராமதாஸ் மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில், பெரும்பான்மையான உதவிகள், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன. ஆனால் மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்தவகையிலும் அறமல்ல. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பலர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தியாவில் வசிக்க விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத் தரப்படும் என தி.மு.க …

  15. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் யூசுப் மகன் திருமணத்திற்கான பத்திரிகையை கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் திமுக தலைமையிலான அணியில் தேமுதிக இணைந்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அதனையொட்டி இந்த சந்திப்பு இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114578

  16. சென்னை வங்கி நகை கொள்ளையில் முக்கிய சந்தேக நபர் கைது - 18 கிலோ நகை மீட்பு 14 ஆகஸ்ட் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் கிளையில் சனிக்கிழமை 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபரான முருகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டதால், 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் கூறுக…

  17. மிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர் ‘‘ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ் என்று செய்தி பரவி வருகிறதே உண்மையா?” என்று கழுகாருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். அடுத்த நொடி நம்முன் அவர் ஆஜராகியிருந்தார். “உமக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் இருந்து தொடங்கும்” என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார். ‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல் புதிதல்ல. நாளுக்கு நாள் அது அதிகமாகிவருகிறது என்கிறார்கள். மனசுக்குள் இருந்த கசப்புகள் இப்போது வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன என்று சொல்கிறார்கள்.” ‘‘வரிசையாகச் சொல்லும்!” ‘‘சமீபத்தில் ஊட்டியில் அரசு சார்பில் மலர்க் கண்காட்சி நடந்தது. அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அழைக்கப்படவி…

  18. சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்: கண்ணீர் விடும் முன்னாள் மாணவர்கள் படக்குறிப்பு, மன நல ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவுவதை குறிப்பதற்கு இந்த மஞ்சள் அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படுகிறது. 31 நிமிடங்களுக்கு முன்னர் சென்னை ஐஐடியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் இறப்பு குறித்து ஆராய மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை ஐஐடி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் தொடர் தற்கொலை சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து பலரும் மீளவில்லை என்று ஐஐடி மாணவர்கள் கூறுகின்றனர். பல்வ…

  19. சென்னை! இந்த பெயரைக் கேட்டதுமே சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா.. இவற்றுக்கு முன்பாக எல்லோருக்கும் 'கூவம்'தான் ஞாபகம் வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து, சென்னை மாநகரின் பிரதான பகுதிகளைக் கடந்து வங்கக் கடலில் சங்கமமாகும் இந்த கூவம் ஒரு பக்கம் என்றால், அதற்குப் போட்டியாக நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மினி கூவங்கள். அனிச்சையாகக்கூட மூக்கை மூடாத அளவுக்கு பழகிவிட்டது சென்னைவாசிகளுக்கு. 1978-ல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உருவாக்கப்பட்டபோது, சென்னையின் கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டக் கொள்கை (மாஸ்டர் பிளான்) வகுக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகள் அதாவது 2008-ல் சென்னையின் மக்கள்தொகை என்னவாக இருக்கும் என கணக்…

  20. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்கு, கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள் என, அனைத்து கோஷ்டி தலைவர்களும் முட்டுக்கட்டை போடுவதாக, கூறப்படுகிறது. நடிகை குஷ்பு, காங்கிரசில் சேர்ந்த பின், அவரது வேகமான நடவடிக்கைகள், கட்சி மேலிடத்துக்கு பிடித்து விட்டதால், அவருக்கு, செய்தி தொடர்பாளர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் குஷ்புவுக்கு, மகாராஷ்டிர மாநிலம் மூலம் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டும் என, முகுல் வாஸ்னிக், கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைப்பதாக தகவல் பரவ, அதற்கு தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் பலரும், கடும் எதிர்ப்பு தெரிவித்தி…

  21. 25 FEB, 2024 | 10:00 AM மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக - பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்…

  22. திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை செயல்பட்டதை அடுத்து, மதுக்கடையை மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் தடியடி நடத்தினர். மதுக்கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கல்வீச்ச…

    • 0 replies
    • 178 views
  23. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாத…

  24. அதிமுக + பாஜக கூட்டணிக்குள் வருகிறார் சீமான்? நாம் தமிழர் வருகையால் யாருக்கு சாதகம்? பாதகம்? Shyamsundar IUpdated: Wednesday, April 16, 2025, 12:42 [IST] சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். 2. பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள். அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வத…

  25. சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.