தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:54.03 AM GMT +05:30 ] தமிழகத்தில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுவிலக்கு போராட்டம் நடத்தி காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 440 views
-
-
ஒரு மாதம் அவகாசம் கொடுப்பார் ஆளுநர்!' - ஓ.பன்னீர்செல்வத்துக்கு டெல்லி நம்பிக்கை #VikatanExclusive #OPSvsSasikala 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 131 பேர் கலந்து கொண்டனர்' என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன். ' நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.கவின் மாநிலங்களவைக்குள்ளும் பிளவு ஏற்பட்டுவிட்டது' என அதிர வைக்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். தமிழக அரசியல் வரலாற்றில் நேற்றைய பொழுதை அ.தி.மு.க தொண்டர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் அதிரடியைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 440 views
-
-
கத்திக் குத்து, கலவரம், அதிகாலை 4 மணி! - ஆர்.கே.நகரில் படரும் ‘திடீர்’ அபாயம் #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் பிரசார செயல்பாடுகளை, அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றன தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.' அதிகாலை நான்கு மணிக்குத்தான் பண விநியோகத்தைத் தொடங்குகின்றனர் தினகரனின் ஆட்கள். நேற்று பண விநியோகத்தைத் தடுத்ததற்காக தி.மு.க மாணவர் அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவர சூழலில் இருக்கிறது ஆர்.கே.நகர்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன…
-
- 0 replies
- 440 views
-
-
சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 - ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூ…
-
- 0 replies
- 440 views
-
-
தமிழகம்: 570 கோடி ரூபாய் பணம் விவகாரம், சிபிஐ-யிடம் தி.மு.க மனு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சோதனையின்போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்து மேலும் சில கேள்விகளை எழுப்பியுள்ள தி.மு.க., அவற்றை விசாரிக்கும்படி மத்தியப் புலனாய்வுத் துறையைக் கோரியுள்ளது. இது தொடர்பாக தி.மு.கவின் மாநிலங்களவை எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனரைச் சந்தித்து அளித்த மனுவில் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். இந்தப் பணம் தொடர்பாக தன்னிடம் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால், தன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்றும் இளங்கோவன் கூறியிருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் விசாகப்பட…
-
- 0 replies
- 440 views
-
-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை இண்டர்போல் உதவியுடன் அகமதாபாத் மற்றும் பெங்களூர் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நித்தியானந்தாவுக்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள யோகினி சர்வஜன பீடம் ஆசிரமத்தைச் சேர்ந்த சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீநித்திய ஈஷ்வர பிரியானந்தா என்பவர் கடந்த சில நாட்களாக மாயமானார். இந்நிலையில் அவரது உடல் இந்திய – நேபாள எல்லையில் கண்டெடுக்கப்பட்டு வாரணாசியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந…
-
- 0 replies
- 440 views
-
-
சிரமமான சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள் : ராஜீவ் கொலை வழக்கு : சாந்தன் கடிதம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட எழுவரும் விடுதலைக்காக போராடி வருகின்றனர். இந் நிலையிலேயே சாந்தன் தன்னை விடுதலை செய்ய கோரி தனது வழக்கறிஞர் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு 4 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். சாந்தன் கடிதத்தில், “நான் சுதேந்திரராஜா என…
-
- 0 replies
- 440 views
-
-
பெரம்பலூர் அருகே உள்ள எசனையை சேர்ந்தவர் துரைசாமி இவரது மகள் அமுதா (8), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த அமுதா சிறுவாச்சூர் கோயில் திருவிழாவிற்காக தனது தாய்மாமன் வேல்முருகன் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுவாச்சூர் கோயில் பகுதியில் கிடா வெட்டி பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் அதே ஊரைச்சேர்ந்த சோலைமுத்து (55). திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5 மணியளவில் போதையில் இருந்த சோலை முத்து அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அமுதாவை நைசாக கோயிலுக்கு வடக்கு புறமுள்ள ஏரியின் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிரு…
-
- 0 replies
- 440 views
-
-
எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?- வாக்களித்தபின் சீமான் கேள்வி வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான். சென்னை பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வாக்க…
-
- 0 replies
- 440 views
-
-
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது 13 Dec 2025, 11:15 AM பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். வழக்கு விபரம் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின்…
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் கைதான தமிழக பெண்ணுக்கு விளக்கமறியல்! இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட தமிழக பெண் உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ராமநாதபுரம் – உச்சிப்புளி அருகே உள்ள கிராமத்தில் வள்ளி (42) என்ற பெண் நேற்…
-
- 0 replies
- 440 views
-
-
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை தான்: 1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி. 2) கோவில்பட்டி - 428 3) கரூர் - 441 4) தென்காசி - 462 5) ஒட்டப்பிடாரம் - 493 6) பெரம்பூர் - 579 7) திருப்போரூர் - 950 8) பர்கூர் - 963 9) பேராவூரணி - 964 10) கிணத்துக்கடவு - 1332 11) ஆவடி - 1395 12) அரியலூர் - 1753 13) சிதம்பரம் - 1945 14) மொடக்குறிச்சி - 2222 15) விருகம்பாக்கம் - 2333 16) ஊத்தாங்கரை - 2613 17) கெங்கவள்ளி - 2622 18) அறந்தாங்கி - 2837 http://www.dinamalar.…
-
- 0 replies
- 440 views
-
-
சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி! சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கடந்த மே மாதம்…
-
- 1 reply
- 440 views
-
-
Vaiko · மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழியாது! வெந்த புண்ணில் வேல் வீச வேண்டாம்!! வைகோ அறிக்கை உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் கற்பு சூரையாடப்பட்டு இராணுவத்தினரால் வதைத்துக் கொல்லப்பட்டனர். வயது முதிர்ந்தோர், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் என எவரையும் விட்டுவைக்கவில்லை சிங்கள அரசு. உலகம் தடை செய்த குண்டுகளை பயன்படுத்தி அழித்தனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிருபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள்…
-
- 0 replies
- 440 views
-
-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது. வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட தம்பதி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு (உதவி எண் 100) வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெற்றோரை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர் என தெரியவந்தது. ஆனால் அவர…
-
- 1 reply
- 440 views
-
-
தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு இடம்: சென்னை தேனாம்பேட்டை - அண்ணா சாலை | படம்: ம.பிரபு போட்டோ கேலரி மழை தழுவிய அண்ணா சாலை சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகலில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் துண்டிப்பும் ஏற்பட்டன. …
-
- 0 replies
- 440 views
-
-
அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம் அ-அ+ `நாளை நமதே' என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்ப…
-
- 0 replies
- 440 views
-
-
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். 4 பேரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர். இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோப…
-
- 1 reply
- 440 views
-
-
தாது மணல் எடுக்கப்பட்ட கடற்கரை (ஆவணப்படம்) தமிழக அரசு மாநிலத்தில் கடற்கரை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியினை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட் டம் வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக அண்மையில் புகார்கள் எழ, தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தவென வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரண்டு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை தோண்டி எடுக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையினை இன்று (செவ்வாய்) அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்…
-
- 0 replies
- 440 views
-
-
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வறண்டு போன நிலையில் பாலாறு கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன். கர்நாடகா…
-
- 0 replies
- 439 views
-
-
பட மூலாதாரம்,MK STALIN/X 18 டிசம்பர் 2023 தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து நிற்கும் பல படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். 1930-களில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவர் உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்களுக்கு முன்மாதிரியான, காலம்கடந்த படங்களை தயாரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் - கருணாநிதி இருவரும் தங்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள் மூலமாகவே தடம் பதித்தனர். குறிப்பாக, எல்லீஸ் ஆர். டங்கன் 1950-இல் எம்ஜிஆர் நடித்து கருணாநிதி வசனம் எழுதிய `மந்திரி குமாரி` திரைப்படத்தைக் கூறலாம். …
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
நாகப்பட்டினத்தில் அரசு போக்குவரத்து பணிமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்து 8 தொழிலாளர்கள் பலி நாகப்பட்டினம் பொறையாறில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் போக்குவரத்து தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில், "நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை உள்ளது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இன்று அதிகாலை இந்தக் கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கார…
-
- 0 replies
- 439 views
-
-
வெளிநாடு சிகிச்சை.? ஜெயாவுக்கு காத்திருக்கும் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம்.! தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வாரம் கடந்தும் அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 7 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலத்தில் பேசினார், மருத்துவர்களுக்கு நன்றி கூறினார், தண்ணீர் குடித்தார், வேக வைத்த ஆப்பிள் சாப்பிட்டார் என தினம் ஒரு தகவல் வந்தவாறு உள்ளது. அதே நேரம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், அவரை தற்போது உள்ள சூழ…
-
- 0 replies
- 439 views
-
-
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் உஸ்மான் சாலை. | படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. விதிமீறல் கட்டிடங்கள் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை…
-
- 0 replies
- 439 views
-