தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
24 JUN, 2024 | 02:40 PM ''தமிழகத்தில் சாதி வாரியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பிலுள்ளது என்றும், சாதி வாரியிலான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்'' என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லாததால் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்…
-
-
- 12 replies
- 566 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 09:46 AM எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை (24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இராமநாதபுரம்…
-
-
- 1 reply
- 371 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம்..! அதிரடி காட்டிய அண்ணாமலை..!! மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் மீதும் அதிரடி நடவடிக்கை பாய்ந்து வருகிறது. சமீபத்தில் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் க…
-
- 1 reply
- 537 views
-
-
திமுக மாணவரணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுத…
-
-
- 2 replies
- 647 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:09 PM இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்…
-
- 0 replies
- 414 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 11:39 AM இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், க…
-
-
- 9 replies
- 757 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 72 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததாக மருத்துவமனைகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தொலைதூர மற்றும் உள்புற கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மாவ…
-
-
- 57 replies
- 3.8k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 17 ஜூன் 2024 தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்த வி.கே. சசிகலா, தற்போது மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். என்ன செய்ய முயற்சிக்கிறார் வி.கே. சசிகலா? "அரசியலில் ரீ என்ட்ரி" - சசிகலா அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்த சசிகலா, அதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்படிப் பேசும்போது, அ.தி.மு.கவில் சாதி அரசியல் செய்வதாகவும் தன்னுடைய ம…
-
- 2 replies
- 632 views
- 1 follower
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (திங்கட்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசார…
-
- 1 reply
- 286 views
-
-
-
-
- 51 replies
- 2.5k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 16 ஜூன் 2024 திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள். ஜூன் 14-ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கூடியிருக்கும் பெண்கள் மொத்தமாக கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவ…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் "நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு…
-
- 1 reply
- 621 views
- 1 follower
-
-
15 JUN, 2024 | 03:57 PM 'அரசாங்க பாடசாலைகளிலும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளிலும் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கு பற்றினார். அந்த விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது, '' காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் .. என பள்ளி கல்வித்துறையில் ஏராளமான தி…
-
-
- 1 reply
- 420 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 14 ஜூன் 2024 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2017ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வில் கலந்துகொண்டு 121.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற திருநங்கை அனுஸ்ரீ தொடர்ந்த வழக்கில், மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கைகளுக்கான நலவாரியம், தொழில் தொடங்குவதற்கான நிதி, கட்டணமில்லா பேருந்து பயணம், கட்டணமில்லா கல்வி என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கல்வி ம…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 13 ஜூன் 2024 கோவையில் தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானையை முதுமலை முகாமில் வைத்து வனத்துறையினர் வளர்த்து வருகின்றனர். தாயைப் பிரியும் குட்டி யானைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? தாய் யானையைப் போல் வனத்துறையால் குட்டியை வளர்க்க முடியுமா? கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் மே 30-ஆம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 40 வயதான பெண் யானையையும், மூன்று மாதங்களேயான அதன் குட்டி யானையையும் வனத்துறையினர் ரோந்து பணியின் போது கண்டறிந்தனர். வனக்கால்நடை மருத்துவர்கள் குழுவினர், 5 நாட்கள் அந்த…
-
- 0 replies
- 809 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி வரும் வரலாறு! -சாவித்திரி கண்ணன் பாஜகவின் வளர்ச்சி சமீப காலமாக வேகமெடுத்துள்ளது தமிழ் நாட்டில்! ஒன்பது தொகுதிகளில் அதிமுகவை முந்தி, இரண்டாம் இடம் பெற்றுள்ளது. நோட்டாவுக்கும் கீழே ஓட்டுகள் பெற்ற பாஜக தற்போது லட்சங்களில் ஒட்டு பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளதன் பின்னணியை ஆதியோடந்தமாக ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை; தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 11.24% ஆகியுள்ளதெனினும், சில கூட்டாளிகளின் வாக்குகளை கழித்துப் பார்த்தால், 9 % மாகிறது என்பதே உண்மை. பாமகவைத் தவிர்த்து பார்த்தால், மிக பலவீனமானதே பாஜக. பாமகவும் சமீப காலமாக மிகவும் பலவீனப்பட்டே உள்ளது. இந்த நிலையில் சுமார் 18 சதவித வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்…
-
- 1 reply
- 524 views
-
-
12 JUN, 2024 | 03:09 PM தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தா…
-
-
- 7 replies
- 769 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலத்தில் கழிவறைக்குச் சென்ற இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் மயங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் விஷ வாயு கசிவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேரில் ஆய்வு செய்த, முதல்வர் பாதாள சாக்கடைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். என்ன நடந்தது? புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் செவ்வாய்கிழமை காலை கழிவறைக்கு சென்றபோது, மயங்…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி? தினமலர் சென்னை : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஆளுங்கட்சியான தி.மு.க., வேட்பாளரை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலை போல், இடைத்தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க.,வின் புகழேந்தி, உடல் நலக்குறைவால், ஏப்., 6ல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மனுத் தாக்கல் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு,…
-
- 0 replies
- 390 views
-
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி? தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகள் / கூட்டணிகள் 10% முதல் 18% வாக்குகளைப் பெற்றுவந்திருப்பதை மக்களவைத் தேர்தல்கள் உணர்த்தி வந்திருக்கின்றன. அந்த வாக்கு விகிதம் 20% தாண்டிச் சென்றதில்லை. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 25%ஐத் தாண்டிச் சென்றிருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% வாக்குகளையும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (நா.த.க.) 8.11% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. அதேநேரம், மாநிலத்தில் திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் இது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதிமுகவோடு இணைந்து பணி…
-
-
- 64 replies
- 2.9k views
-
-
இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை Vhg ஜூன் 11, 2024 இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழீழத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பான கோரிக்கையை தாம் அவரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் நேற்று (10-06-2024) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரண…
-
-
- 9 replies
- 759 views
-
-
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன? ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் ஈட்டியவர் வி.கே. பாண்டியன். அதன் காரணமாகவே, அவரை நவீன் பட்நாயக் தனது அலுவலக அதிகாரியாக நியமித்தார். சுமார் 12 ஆண்டு காலம் நவீன் பட்நாயக்கின் அலுவலக அதிகாரியாக திறம்பட செயல்பட்ட வி.கே.பாண்டியன், மாநிலத்தின் பல்வேறு துறை வளர்ச்சிக்கு …
-
-
- 2 replies
- 296 views
-
-
10 JUN, 2024 | 04:22 PM தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி எனும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த என். புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான அந்தத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பீகார்(1), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ,உத்தரகாண்ட்( 2), பஞ்சாப் (1), இமாச்சல் பிரதேசம்(3) ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் பதிமூன்று சட்டப்பேரவை …
-
- 0 replies
- 270 views
-
-
மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்ட…
-
- 0 replies
- 301 views
-