தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுமதிக்கக் கோரிய இந்திய திரைப்பட இயக்குநர் கௌதமன் கைது தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தற்போது தடை விதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வை நடத்தக் கோரி இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு மனு அளிக்க சென்ற போது இயக்குநரும், நடிகருமான கௌதமன் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 32 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை இந்த ஆண்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான கௌதமன் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மனு கையளிக்கச் சென்றார். பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் சென்ற அவர், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் க…
-
- 0 replies
- 566 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்! சசிகலா புஷ்பா அதிரடி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரு…
-
- 0 replies
- 382 views
-
-
காவிரி ஆற்றின் படுகைப் பகுதியில் மெதேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், இத்திட்டத்தால் விளை நிலங்கள் பாழாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மெதேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எரிவாயுத் தேவைக்காக மெதேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எ…
-
- 0 replies
- 673 views
-
-
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றச் செயல்களை மையமாக வைத்து 53 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோயம்புத்தூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது. கோயம்புத்தூரில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது. கோயம்புத்தூரில் முதலிடம் பிடிக்க பல…
-
- 0 replies
- 555 views
-
-
'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, மேல்சிகிச்சைக்காக அ…
-
- 0 replies
- 255 views
-
-
பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…
-
- 0 replies
- 417 views
-
-
திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை` வ கீதாஎழுத்தாளர் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக காலம் ஆட்சி செலுத்தியுள்ளது. திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொண்டால் அது தொடக்கத…
-
- 0 replies
- 467 views
-
-
தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்.. ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் அரசியலில் நிகழ்ந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வந்தாலும் இனி நிகழப்போகும் மாற்றம்தான் தமிழகத்தின் ஹாட் என்கிறார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா என்பது அந்தக் கட்சிக்குச் சம்பிரதாயமாக இருந்தாலும் பி.ஜே.பி அதனை அரசியலாகப் பார்க்கிறது. அதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகையும் தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். …
-
- 0 replies
- 847 views
-
-
இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை (24) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள்…
-
- 0 replies
- 362 views
-
-
கட்சி துவங்கி, கால் நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ம.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல், தோல்வியை தழுவி வருவதால், அக்கட்சி தொண்டர்கள் நொந்து போய் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலிலாவது, வெற்றியை ருசிக்க, கட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை உள்ளது. பொறுப்பு: தேசிய அரசியல், வெளி நாட்டு விவகாரங்களில் ஈடுபாடு காட்டும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இனிமேல், தமிழக அரசியலில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு துணையாக, மகன் துரை வையாபுரிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில்... நால்வருக்கு, குரங்கம்மை நோய் ? தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை, மகன், மகள் மற்றும் மேலும் ஒருவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில், 4 பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள்…
-
- 0 replies
- 358 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 21 ஆண்டுகாலக் கொடுங்கனவாகத் தொடர்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. தி.மு.க ஆட்சிக் காலத்தில், தன்மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் உடைத்த ஜெயலலிதாவால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மரணத்துக்குப் பிறகும் விடுதலை பெற முடியவில்லை. அதேபோன்ற ஒரு கடும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வெள்ளத்தின் முதல் சுழலில் தப்பிய ஓ.பி.எஸ்., இரண்டாவது சுழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார். ரெய்டுகள் சூழ்ந்த ஜூலை மாதத்தில், ‘ஏன் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு, ஓ.பி.எஸ் மீதான புகாரை, அவர் துணை முதல்வராக அங்கம் வகி…
-
- 0 replies
- 636 views
-
-
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 16 ஜூன் 2024 திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள். ஜூன் 14-ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கூடியிருக்கும் பெண்கள் மொத்தமாக கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவ…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI படக்குறிப்பு, பாடகி இசைவாணி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி புகார்களை அளித்து வருகின்றன இந்து அமைப்புகள். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்? பாடகி இசைவாணியால் பாடப்பட்டு, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவால் உருவாக்கப்பட்ட 'ஐ யாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' என்ற பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இந்தப் பாடலை உருவாக்கி, பாடியவர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் பல கா…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
சென்னை மக்களை மனம் திறந்து பாராட்டிய சச்சின்! ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை முதல் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை, எம்.ஆர். எப். நிறுவனம் ஸ்பான்ஷராக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, சச்சின் சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய சச்சின், "சென்னையில் பெய்த கனமழைக்கு பிறகு இப்பொழுதுதான் முதன்முறையாக சென்னை வந்துள்ளேன். நான் முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு மாற்றமும் எனக்கு தெரியவில்லை. பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் எதிர்கொண்ட விதமும் என்னை வியக்க வைத்தது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டபொழுது மக்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் இருந…
-
- 0 replies
- 700 views
-
-
சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்' இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல்…
-
- 0 replies
- 507 views
-
-
ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதா விட்டு சென்ற தமிழகம்: புள்ளி விவரங்கள் தரும் செய்திகள் கடந்த 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்த ஜெயலலிதா, விட்டு சென்ற தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன? இம்மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் எவை? இன்னும் முன்னேற வேண்டிய இடங்கள் என்ன? ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களின் வழியாக தமிழகத்தின் நிலவரத்தை பார்த்தால் அதிக நிறைகளும், சில குறைகளும் இருக்கின்றன. பொருளாதார குறியீடுகளை எடுத்து கொண்டாலும், சமுதாய குறியீடுகளை (social indicators ) பார்த்தாலும், தமிழ் நாடு மற்ற பல மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தெரிகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் 98.8 சதவீத குடியிருப்புகள் மின்சார இணைப்ப…
-
- 0 replies
- 466 views
-
-
சேலம்: சேலத்தில் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், திருமணம் நடந்த மறுநாளே மணப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த வாணியம்பாடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் 20 வயது பிரியங்கா. வாணியம்பாடியை அடுத்த குலாளர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (30). பிரியங்கா சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். மூர்த்தி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சமலை சித்தர் கோவிலில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் …
-
- 0 replies
- 3.1k views
-
-
‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க. தமிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகார…
-
- 0 replies
- 489 views
-
-
ஈழத் தமிழர் ஐ.நா. விவகாரம்: கோவையில் நாளை பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் 32 Views சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த வேளையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையில் இந்தியா வாக்களிக்காது புறக்கணித்தமையால், பிரதமர் மோடிக்கு எதிராக இந்தக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 6 நாடுகள், இலங்கைக்கு எ…
-
- 0 replies
- 449 views
-
-
அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை டிடிவி.தினகரன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகி களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பு, டி.டி.வி.தின கரனை துணைப் பொதுச் செயலா ளராக நியமித்தார். தினகரன் நியமனத்துக்கு கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தினகரனை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஜெ.தீபா அ…
-
- 0 replies
- 320 views
-
-
பன்னீர் அணியை பலமிழக்க செய்ய கோடநாடு அதிகார மையம் தீவிரம்! ஊட்டி, : பதவி, பண ஆசை காண்பித்து, பன்னீர்செல்வம் அணியை பலமிழக்கச் செய்யும் முயற்சியில், கோடநாடு அதிகார மையம் தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி, அ.தி.மு.க.,வில், சசிகலாவின் ஆலோசனையில், கோடநாடு எஸ்டேட் மேலாளர், அதிகார மையமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, இவரின் ஆலோசனை படியே, தேர்தல் பணிகள் நடந்தன.சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், கோடநாடு அதிகார மையம் பலமிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலாவின் உறவினர் தினகரன், கோடநாடு எஸ்டேட் அதிகார மையத்தை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். வ…
-
- 0 replies
- 318 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை மதிமுக நடத்தும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராக செயல்படுவதாலும், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளில் ஓரவஞ்சமாக நடந்து கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி காட்டும் மதிமுகவின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, தேசிய நீர்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமருக்கு எதிராக திருமயத்தில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு…
-
- 0 replies
- 402 views
-