தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10269 topics in this forum
-
கச்சத்தீவு குறித்து தமிழக சட்டமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தமிழக முதலமைச்சர், கச்சத்தீவை மீட்பது குறித்து கேள்வி கேட்பதற்கு தி.மு.க உறுப்பினர்களுக்கு அருகதை கிடையாது என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்திருந்த அவர், தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974 மற்றம் 1976ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா?…
-
- 0 replies
- 476 views
-
-
‘நாங்களும் தமிழர்கள் தான்... எமக்காகவும் பேசுங்கள்!' -அகதிகள் முகாமின் குரல்கள்... உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை; அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது. நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம். இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுக்கிறோம் அல்லது இதே காரணங்களுக்காக அரசு வன்முறையை ஏவும்போது கள்ள மெளனம் சாதிக்கிறோம். அன்பும், பாதுகாப்பும் மறுக்கப்பட்டவர்களை அகதிகள் எனும் புது அடையாளத்துடன், சொந்த மண்ணிலிருந்து பெ…
-
- 0 replies
- 528 views
-
-
' வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ். சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ். தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை …
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ செம்மலை கருணாநிதி குறித்து கூறிய கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக தகவல்களை தருகிறார். இலங்கையில் போர் நடைபெற்ற போது போரில் பொது மக்கள் உயிரிழப்பது இயல்புதான் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று பதிலடி கொடுத்தார். …
-
- 1 reply
- 668 views
-
-
' சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்! இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம். மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பா…
-
- 0 replies
- 490 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவ…
-
- 1 reply
- 509 views
-
-
தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது. தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர் எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது…
-
- 0 replies
- 442 views
-
-
570 கோடி யாருக்குச் சொந்தம்? தி.மு.க. நடத்தும் நீதிமன்ற யுத்தம்!அலசல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவ்வளவு? அன்புநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? திடீரென சிறுதாவூரில் 18 கன்டெய்னர்கள் ஏன் நின்றன... அதில், என்ன இருந்தன? அதன்பிறகு, அவை எங்கே மாயமாக மறைந்தன? திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 கன்டெய்னர்கள் யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள். ஊடகங்கள், போலீஸ், அரச…
-
- 0 replies
- 787 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ஹிலாரி என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முதலில் ஒருபெண் வேட்பாளர் ஆகியிருப்பது பெண்களுக்கு பெருமை என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹ…
-
- 0 replies
- 429 views
-
-
'ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!' - சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ' ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' என விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் …
-
- 28 replies
- 2.3k views
- 1 follower
-
-
கலைஞரின் மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில் ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள் தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் …
-
- 2 replies
- 3.6k views
-
-
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது என இந்திய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்ற வகையீடு ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அந்த…
-
- 0 replies
- 546 views
-
-
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெற…
-
- 0 replies
- 494 views
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு சென்னை பேரணியில் பங்கேற்று ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட படங்களுள் ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ…
-
- 17 replies
- 1.6k views
-
-
நளினி தொடர்ந்த வழக்கு... தமிழக அரசை பதிலளிக்க சொல்கிறது உயர் நீதிமன்றம்! சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், வருகின்ற 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதன் பின்னர், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு உத்தரவிட்டது. நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மன…
-
- 0 replies
- 354 views
-
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனுவை அளித்தார். காவிரி நீர் பிரச்சினை, மேகேதாட்டு அணை, முல்லை பெரியாறு அணை விவகாரங்கள், தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை முதலானவை அடங்கிய 29 அம்சங்களை உள்ளடக்கிய 96 பக்கங்கள் கொண்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்தார். டெல்லிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பயணம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் 29 தலைப்புகளில் 96 கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். 29 அம்ச கோரிக்கைகள் வருமாறு: 1. காவிரி மேலாண்மை வாரியம் தீர்…
-
- 1 reply
- 319 views
-
-
7,00,000+ வாசகர்கள் | 10,00,000+ தலைப்புகள் | ரூ.10,00,00,000+ விற்பனை புதிய தாள்களின் வாசனையுடன் வந்திறங்கிய புத்தகங்களுடன் நடந்த புத்தகக் காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், சென்னைத் தீவுத் திடலில் ஜூன் 1 தொடங்கி 13 நாட்கள் நடந்த 39-வது புத்தகக் காட்சி பதிப்பாளர்கள், வாசகர்கள், வணிகர்கள் என்று பலதரப்பினருக்கும் பலன் தந்தது என்றே சொல்ல வேண்டும். சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான புத்தகக் காட்சியில் 700க்கும் மேற்பட்ட பதிப்பாளர் களுடன் ஊடகங்களும் பங்கேற்றன. ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொ…
-
- 0 replies
- 319 views
-
-
-
சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை கத்தியால் குத்தி 150 பவுன் தங்கநகை, ரூ.16 லட்சம் கொள்ளையடித்த மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் மகாலட்சுமி நிழற்சாலை எம்.ஜி.ராமச்சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் மதியரசு (48). இவர் சொந்தமாக 5 மதுபானக் கூடங்கள் நடத்தி வருகிறார். அதேபோல வட்டிக்கு கடன் வழங்குவது, ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை செய்து வருகிறார்.மதியரசுவின் மனைவி செல்வி (45). இத் தம்பதிக்கு செல்வி திருமங்கை என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். மதியரசுவுடன் அவரது மைத்துனர் சரவணனும், அவர் மனைவியும் வசிக்கின்றனர். இவர்கள் அங்கு வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயக்கிழமை அதிகாலை வீட்ட…
-
- 0 replies
- 367 views
-
-
பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை! புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்…
-
- 0 replies
- 315 views
-
-
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கால் நீதித்துறைக்கு கெட்ட பெயர்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வேதனை ஹைதராபாத்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஹிந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட விதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கெடுத்துவிட்டது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் (லஞ்ச ஒழிப்பு) முன்னாள் தலைவரும், மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான சந்தோஷ் ஹெக்டே கூறினார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தோஷ் ஹெக்டே பேசியதாவது: ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனால் நீதித்துறைக…
-
- 1 reply
- 286 views
-
-
திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். இதனால் கட்சி தோல்வியடைந்ததும் கருணாநிதி ஸ்டாலின் தரப்பு மீது கோபமாக இருந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் ஸ்டாலின் தரப்பினர் சமூக வலைதளங்களில் ஸ்டாலினை முன்னிறுத்தியே பதிவிட்டு வந்துள்ளனர். இதனால் கருணாநிதி மீண்டும் கட்சியை தன்னுடைய முழுக்கட்டுபாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் தான…
-
- 0 replies
- 536 views
-
-
சென்னையில் தீனதயாளன் வீட்டில் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த வாரம் பொலிசில் சரணடைந்தார். பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு…
-
- 0 replies
- 448 views
-
-
13 வருடங்களுக்குப் பிறகு 'தற்கொலை குமார்' கைது தாய், மகளை கொன்று கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை அகதி 13 வருடங்களுக்குப் பிறகு , சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திண்டுக்கல் பகுதியில் வசித்து வந்தவர் துரை என்பவருடைய மனைவியான பூங்கோதை மற்றும் மகளான 3 வயது குழந்தை ஜனப்பிரியா ஆகிய இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு வந்த ஒரு கும்பல், 2 பேரையும் கொன்று, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை 2003ஆம் ஆண்டு கொள்ளையடித்தது. இது குறித்து பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கில் தொடர்ந்து மர்மமே நீடித்து வந்தது. …
-
- 0 replies
- 443 views
-
-
பிளாட்டினம் பூமி பிளாட்டினம் விளையும் பூமி தமிழகம்! விரைவில் புதிய சுரங்கம் ஏலம் தமிழகத்தில், விலை உயர்ந்த பிளாட்டினம் உலோகம் கிடைக்கும் இடத்தை, மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அந்தச் சுரங்கம் உட்பட, பல உலோகங்கள் கிடைக்கும், ஐந்து சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்திய நில அளவை துறையினர், தமிழகத்தின் பல இடங்களில், பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை விட பன்மடங்கு விலை உயர்வான பிளாட்டினம் என்ற உலோக பொருள் படிமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். துறைப்பாடியில்..இதுகுறித்து, இந்திய நில அளவை துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 10 புதிய கனிம சுரங்கங்களை கண்டறிந்து, மத்திய…
-
- 0 replies
- 574 views
-