Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு திமுக தயாராகித்தான் ஆக வேண்டும்: நாகநாதன் பேட்டி திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம…

  2. தமிழகத்தில் மகிந்த ராஜபக்ச கலாச்சாரம் மற்றும் வணிகத்துறை மூலம் கால் பதிக்க முயற்சிக்கிறார் அதை தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் ஒருபோதும் அனுமதிக்காது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் கூறியுள்ளார். அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலை காணொளில் பார்வையிடலாம். http://www.pathivu.com/news/32196/57//d,article_full.aspx

    • 0 replies
    • 368 views
  3. புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளார். புதுச…

  4. மிஸ்டர் கழுகு: ஆளும்கட்சியின் ஊழல் பட்டியல்! - கவர்னரை சந்திக்கும் ஸ்டாலின் கழுகார் உள்ளே நுழைந்ததும், தி.மு.க மாநாடு தொடர்பாக நம் நிருபர் அனுப்பிய கட்டுரையை வாங்கிப் படித்தார். திருப்பிக் கொடுத்தவர், ‘‘என்னிடமும் சொல்வதற்கு மாநாட்டு விஷயங்கள் சில உள்ளன. ஈரோடு தி.மு.க மாநாட்டை மத்திய, மாநில உளவுத்துறைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 24-ம் தேதி காலையிலிருந்தே, மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவது சம்பந்தமான அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்’’ என்றார். ‘‘எவ்வளவு கூட்டம் இருக்குமாம்?’’ ‘‘இந்தப் பிரமாண்டமான பந்தலை அமைத்தது பந்தல் சிவா. அவர் 60 ஆயிரம் நாற்காலிகளைக் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டக் கழகம் …

  5. தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: கசப்பை உணரும் விவசாயிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் போனதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளைந்த கரும்புகளை இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 அளிப்பதால், தனியாகக் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது…

  6. சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம…

  7. அமராவதி ஆற்றுப்படுகையை சுத்தம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்கு பதிவு. சென்னை: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உட்பட 13…

  8. கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ஆர்.பி.உதயகுமார், மேட்டூர் அணை நிரம்பவே நிரம்பாது. ஆனால், இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருப்பதால் தான் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றினாலும் நாங்கள் ஏற்போம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதன் கண் திருஷ்டி தான் முக்கொம்பு அணை உடைந்துள்ளது என்றார். மேலும் அவர் பேசுகையில், ஆளுங்கட்சியை முடக்கி மக்களுக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதிமுகவின் சாதனைகளை மறைக்க சில…

  9. பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள…

  10. நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி கண்டுபிடிப்பு November 4, 2018 1 Min Read நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கணினி அறிவியல் படித்து வரும் விருதுநகரை சேர்ந்த இனியாள் என்னும் குறித்த மாணவிஈய இதனைக் கண்டுபிடித்துள்ளார். அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி நீட்’தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் அனீற்றா …

  11. வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள் : மேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம். கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்ட…

  12. பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 அக்டோபர் 2024 அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் கைதாகி பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி 'தியாகம் செய்ததாக' முதல்வரே குறிப்பிட்டதும் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது. மோசடி வழக்கு ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டா…

  13. பிரபாகரனைச் சந்திக்க சென்றபோதே ராணுவம் என்னைச் சுட்டுக்கொன்றிருந்தால்... - வைகோ 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மதிமுக, மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நேற்று(வெள்ளி) கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களுக்கான மதிமுக செயல் வீரர்கள் கூட்டம், தருமபுரியில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் பார்க்க சென்றபோதே, இந்திய ராணுவம் என்னைச் சுட்டுக் கொன்றிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்க…

  14. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக சசிகலா பதவியேற்பு? - முதல் உத்தரவாக 2000 டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா | கோப்பு படம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படும் வி.கே.சசிகலா, இன்றே முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர். …

  15. பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன? சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு வேண்டும். சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று கொண…

  16. “அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!” நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில், ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர…

  17. தமிழகத்தில் தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்புக்கு தடை தமிழகத்தில் தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்பை வெளியிட எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அசாமுக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்திற்கு 3 கட்ட தேர்தல் மட்டும் முடிவடைந்துள்ளது. மேலும், 5 கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுத…

  18. ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர். சேவல் சின்னம் கேட்கிறார் தீபா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், …

  19. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்களா 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?! - பி.ஜே.பியின் அடுத்த அதிரடி சசிகலா அணியிலிருந்து ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆறு எம்எல்ஏ-க்கள் மாற சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களை அணி மாற்றும் வேலையில், பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த மனிதர் ஈடுபட்டுவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் அதிகார மோதல் வலுவடைந்துள்ளது. இதன்விளைவு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இருப்பினும், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி ஆட்சியை அமைத்துவிட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை, நிதிநிலை பட்ஜெட்டையும் தாக்கல்செய்துவிட்டது. மழை நின்ற பிறகும் …

  20. மதுரை: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், ஒளிந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மதுரை புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் திருமங்கலம் அருகே பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி சென்ற வழியில், ஆலம்பட்டி பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்குகளில், மதுரையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையம் பன்னா இஸ்மாயில் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுரை புதூர் பகுதியில், போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒர…

  21. செங்கோட்டை: செங்கோட்டை சைவ பிள்ளையார் கோவிலில் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. செங்கோட்டை ஹரிஹரா நதியின் கரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றால விநாயகர் ஆலயம். இதை சைவ பிள்ளையார் கோவில் என்று இப்பகுதியினர் அழைப்பார்கள். இந்த ஆலயம் செங்கோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆலயத்தில் நேற்று இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கங்காதரன் கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல் 7மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு மற்றும் மூலவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், கோவில் தங்க,வெள்ளி.பொருட்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் கண்டு திடுக்கிட்ட அ…

  22. 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின் மின்னம்பலம்2021-09-25 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்த…

  23. சி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றத்தில் ஒரு பயனும் இல்லை! : வைகோ TUESDAY, 08 OCTOBER 2013 08:41 இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்றிருப்பதால் ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றதில் துளியளவும் மகிழ்ச்சி இல்லை. விக்னேஸ்வரன் முதல்வரானாலும் தமிழருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை!. காரணம், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? இலங்கை வடக்கு மாகாண தேர்தல் உலக…

  24. சந்தன கடத்தல்' வீரப்பனின் நிறைவேறாத இறுதி ஆசை - எப்படி இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2021 தமிழ்நாடு அதிரடிப்படையால் `சந்தனக் கடத்தல்' வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. ` காடுகள் மற்றும் அவற்றையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கொண்டு செல்லப்படாததால்தான் வீரப்பன் என்ற நபர் உருவானார். தற்போதும் அதே சூழலில்தான் பழங்குடிகள் வசிக்கின்றனர்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பெ.சிவசுப்ரமணியம். என்ன நடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில்? 2004 அக்டோபர் 18. தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வ…

  25. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.