Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் இன்னும் பலர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தின் உரிமையை ஸ்டாலின் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணிச்சலான முடிவு எடுக்கக்கூடியவர் என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் திமுகவில் இண…

  2. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினியால் தொடரப்பட்ட வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு அனுமதியளிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றில்; மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின…

    • 0 replies
    • 406 views
  3. விக்கிரமன் கடந்த 1-ம் தேதி பிரபல எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் பிரீசர் பாக்ஸ் கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4-ம் தேதி மதியம் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘ராஜராஜன் சபதம்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர் பிரபல எழுத்தாளர் விக்கிரமன். ‘அமுதசுரபி’ மாத இதழின் முன் னாள் ஆசிரியரான இவர், கடந்த 1-ம்தேதி மதியம் தனது 88 வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் காலமானார். கழுத் தளவு தண்ணீர் சூழ்ந்த சென்னை - மாம்பலத்தில் இருந்த இவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்த முடியாமல் விக்கிரமனின் மீது அன்புகொ…

  4. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கேரள – தமிழக முதல்வர்கள் சந்திப்பு September 25, 2019 கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வரும் தமிழக முதல்வரும இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்…

  5. உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவுக – மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை! உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில் வழக்குத் தொடுத்தவர்கள் தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தென்னிந்திய மக்கள் உச்ச நீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வழக்…

  6. கபா லீசுவரர் ஆண்டு பங் குனித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று தேர்த்திருவிழா இவ்விழா சிவபெருமான் தேரில் சென்று தூங் கெயில் களை ஓரம்பினாலேயே அழித்தவன் அஃதாவது முப்புரங்களை அ ழிததவன் எனும் கதைகளின் கூத்து நிலை தேர்த்தட்டில் பெரு ருமான் கையில் வில்லேந்திய நிலையில் காணப்படுவார் இந்த வில்லின் அம்பாக இருப்பவர் திருமால் என்பதும் ஓர் கதையின் வழி காட்டப்படும் கருத்தும் உண்டு ஞாயிறும் திங்களும் இரு தேர் உருளைகள் பிரமன் தேர்ப்பாகன் எல்லாம் தேரினில் மீது உருவங்களாகக் காணலாமே இந்தத் தேரின் உயரம் 63 அடி உருளைகள் = உள்ளிருப்பன 2 (6 அடி விட்டம்) + வெளியில் 4 (8 அடிவிட்டம் ) இழுக்கும் வடம் மணிலா க்கயிறு 5 அங் குல தடிமன் இரு புறம் ஒன்று 500 அடி நீளம் …

  7. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின்குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் 23 JUL, 2025 | 01:32 PM கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதா…

  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவராக ஆயுதம் ஏந்தவில்லை. மாறாக எந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை அழிக்க சிங்கள இராணுவம் துடித்ததோ, அந்த ஆயுதத்தினை கொண்டு தமிழ் இனத்தினை பாதுகாக்கேவே ஆயுதம் ஏந்தினார். ஈழம் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கருத்தில் உருவான கூட்டாளி படத்தின் திரையிடல் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈழம் என்பது மூன்றெழுத்து வார்த்தையல்ல. அது ஒரு தேசிய இனத்தின் கனவு, உயிர், மூச்சு மற்றும் விடுதலை. தமிழீழ விடுதலைப்புலிகளில் தலைவர் வே.பிரபாகரனை தலைவனாக்கியது தமிழன் அல்ல. அவரை தலைவனாக்கியது சிங்களவர்களே. தேசிய தலைவரின் உயிருக்கு 10 லட்சம் ரூபா அறிவித்த போத…

  9. பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் நிலை என்ன? மின்னம்பலம் கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவே இல்லை. மார்ச் 23ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் விடுமுறை இன்னும் தொடர்வதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இந்திய அளவில் பெற்றோர்கள் மனத்தில் அலைபாயும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்ற பதற்றமும் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. ஆன்லைன் கல்வியிலும் மாணவர்கள் முழுமையான முறையில் சேரவில்லை என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நிதர்சன நிலை. இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை இன்று வரை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. நாடு முழுது…

  10. அப்போலோ மருத்துவமனையும் அரசியல் சரித்திரமும்...! செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..இந்தத் தளங்கள் எல்லாம் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் ராஜாங்கக் களங்கள். இதே அளவிற்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அன்றும் இன்றும் விளங்கி வருவது அப்போலோ மருத்துவமனை. உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் அரசியல் தலைவர்கள், அப்போலோவில் அட்மிட் ஆவார்கள். அதையொட்டி, அகில இந்திய அரசியல் மட்டுமல்ல.. தமிழக அரசியலும் தலைகீழாக மாறும். அப்படிப்பட்ட சில நினைவுகள்... எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் சகாப்தத்தில் இருந்துதான் தொடங்கியது. 1983 அக்டோபரில் தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனையில், 1984 அக்டோபர் 5-ம் தேதி, எம்.ஜி.ஆர் …

  11. பிரேத பரிசோதனை : ராம்குமார் தந்தை மனு தள்ளுபடி புதுடில்லி : சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இரு விதமான முடிவுகளை தெரிவித்தனர். இதையடுத்து 3-வது நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்தார். அவர், எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தவும் 27-ந் தேதிக்குள…

  12. 'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வதே நல்லது!' - தமிழக அமைச்சர்களின் மனநிலை புதிய முதல்வராக ஆளுநர் மாளிகையில் 5-ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். 'தற்போதுள்ள சூழலில் தலைமைப் பதவிக்கு வர விரும்பினார் எடப்பாடி. சசிகலாவின் சமாதானத்தால் அமைதியாகிவிட்டார். தலைமைக்கழக கூட்டத்திலும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்த ஜெயலலிதா, 2011-16ம் ஆண்டு ஆட்சியில் கோலோச்சியவர்களை ஓரம்கட்டியே வைத்திருந்தார். 2016 தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுக் கொடுத்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இதனால…

  13. சசிகலா சொன்னதும் பொய்யே...பொய்யே...

  14. 'ஜெயலலிதா பெயரில் மரம் நடுவிழா!' அரசு விளம்பரத்தின் சர்ச்சை கடந்த ஆண்டு இதே நாள் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக அரசு சார்பில் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார்கள். "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மரம் நடுவது வரவேற்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அரசு செலவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்பதை ஏற்க முடியாது. தலைமை செயலாளரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது" என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க.வும்…

  15. தமிழர்களை பொறுக்கிகள் என இழிவுபடுத்தி பேசி தமிழர்களுக்கு எதிராக தன்னுடைய வாழ்நாள் பெரும்பகுதியை செலவளித்து வரும்  சுப்ரமணியசாமி கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவிற்கு வருகை தருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் சார்பில் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சுப்ரமணிய சாமி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை கிழித்து எறிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தி சு.சாமிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறைனர் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20 பேர்களை கைது செய்துள்ளனர் .    http://dinaithal.com/tamilnadu/17443-cupramaniyacami-torn-banners-arrested-20-people-showed-black-flag.html

    • 0 replies
    • 473 views
  16. அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரி வழக்கு: டிடிவி தினகரனின் மனு தள்ளுபடி அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரிய டி.டி.வி. தினகரனின் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், அதனால் தேர்தல் நடவடிக்கை முடியும் வரை, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று டி.டி.வி. தினகரன் சார்பில் ஒர…

  17. மிஸ்டர் கழுகு: பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்! நமக்கு முன்பாகவே ஆபீஸுக்கு வந்து காத்திருந்த கழுகார், தன் லேப்டாப்பில் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் மாதவ ராஜ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். ‘அந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு பக்கம் ஒன்றிரண்டு காய்களே இருந்தன. ராஜாவே இல்லை. மறுபக்கம் ஒன்றிரண்டு காய்கள் மட்டும்தான் இல்லை. ராஜா, ராணி, குதிரைகள், யானைகள் என படை பட்டாளங்களோடு இருந்தன. முடிந்த விளையாட்டை வைத்து ஒரே ஆள் யோசித்துக் கொண்டு இருந்தான். இரண்டு பக்கமும் அவனே காய்களை நகர்த்தினான். சிரித்துக்கொண்டான். வெட்டினான். கைதட்டிக்கொண்டான். எல்லாக் காய்களும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. இதையும் …

  18. சென்னையை அடுத்த, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமை மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளதால், அங்குள்ளவர்கள், கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி மனு அளித்தால், அதை, அரசு பரிசீலிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி சிறப்பு முகாமில், இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை, மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, முகாமில் இருப்பவர்களை, வேறு சிறப்பு முகாம்களுக்கு மாற்றுவது என, அரசு பரிசீலித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உதவி இல்லாமல், என்னால் வாழ முடியாது. திருச்சி முகாமுக்கு அனுப்பக் கூடாது; கும்மிடிப்பூண்டி …

  19. தினகரனை வீழ்த்திய செங்கோட்டையன்! - எம்.எல்.ஏக்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணிக்குள் நடக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அணி. ‘தினகரனின் ஆதிக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டார்கள். சொத்துக் குவிப்பு வழக்கின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பும் சசிகலாவுக்குச் சாதகமாக வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் டெல்லி சென்றன. ‘எங்கள் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியச் சென்று ஆதரவு கொடுத்தனர். இதில், தன்னுடைய வலிமையைக் கா…

  20. சசி சிறையில், 'ரெய்டு' ஏன்? பரபரப்பு தகவல் அம்பலம் பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், முறைகேடுகள் தொடர்ந்ததால் தான், 'ரெய்டு' நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம்,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, போலீஸ் உயர் அதிகாரிகள், சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிஇருந்தார். இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணையும் நடக்கிறது. சசிகலாவுக்கு வ…

  21. சூழலைக் காக்க, சென்னைப் பெண் உருவாக்கிய “புதிய மனிதன்” – யுனிசெவ்வில் (UNICEF) வெற்றிபெற்றான்…. சூழல் மாறுபாடு குறித்த யுனிசெவ்வின் முதலாவது நகைச்சுவை (comics) பாத்திர உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 21வயது பெண் வெற்றிபெற்றுள்ளார். சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெவ் (unicef) அமைப்பும் கொமிக்ஸ் யுனைட்டிங் நேஷன்ஸ் (comics uniting nations) அமைப்பும் இணைந்து சர்வதேச அளவிலான போட்டி ஒன்றை நடத்தி இருந்தன. சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நகைச்சுவை (comics) கதாபாத்திரம் (comics ஒன்றை உருவாக்கும்படி போட்டியில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தப் போட்டியில் 99 நாடுகளைச் சேர்ந்த 2,900 பேர் பங்கேற்றனர்.…

  22. தமிழ்நாடு கோவில்களில் வைக்கப்பட்ட போலிச் சிலைகள்: ஜோடி சிலைகளை பிரித்து அமெரிக்கா அனுப்பியது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை திருடிய சிலை திருட்டு கும்பல், போலிச் சிலைகளை நிறுவியுள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடத்திய சிலைகளில் துணைவர், துணைவி சிலைகளை பிரித்து வெளிநாடுகளில் விற்றுவிட்டதால், கடவுளர்களின் துணைவியார், துணைவர் சிலைகளை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரே கோவிலை சேர்ந்த மூன்று பழங்கால சிலைகளில் …

  23. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்ய முடியாது என பொடா நீதிமன்றம் கடந்த 2006 ஆம் ஆண்டு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இதனை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. http://seithy.com/breifNews.php?newsID=121372&category=IndianNews&language=tamil

  24. 23 OCT, 2023 | 12:35 PM இலங்கை ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை தமிழ்நாட்டில் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் கைதுசெய்துள்ளனர். 39 வயது இம்ரான்கான் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 2021 முதல் தப்பியோடிக் கொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக இவரது நடமாட்டத்தை அவதானித்த இந்தியாவின் தேசிய விசாரணை முகவர் அமைப்பினர் தமிழ்நாட்டின் தேனிமாவட்டத்தில் இவரை கைது செய்துள்ளனர். ஆட்கடத்தல் தொடர்பான பாரிய சதி முயற்சிகளில் இவர் ஒரு முக்கிய புள்ளி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையர்களை அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந…

  25. 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை. இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.