Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 7 மணி நேர நரகமாக மாறிய சென்னை போக்குவரத்து நெரிசல்! கடந்த 10 நாட்களாக தினமும் கொட்டிவரும் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன்பு சென்னையில் பெய்ததா என்பது சந்தேகமே. ஒட்டுமொத்த சென்னையே மழைநீரின் வடிகாலாக மாறிவிட்டதோ என்று கூறுமளவிற்கு உள்ளது. மழை அவசியமான ஒன்றே... யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் 'மா மழை போற்றுதும்....' என்றும், 'பெய்யெனப் பெய்யும் மழை என்றும்...' நமது இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சிய மழை என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்த நிலை சென்னைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று(திங்கள்) பெய்த கனமழையால் சென்னை வாகன ஓட்டிக…

  2. கொட்டித் தீர்த்த மழை... கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை! 'பேய்ஞ்சு கெடுக்கும்... இல்லனா, காய்ஞ்சு கெடுக்கும்' என்று மழையைப் பார்த்து திட்டித் தீர்ப்பது நம்மவர்களின் வழக்கம். ஆனால், 'கொடுக்காட்டியும் திட்டுவானுங்க... கொடுத்தாலும் திட்டுவானுங்க' என்று நம்மைப் பார்த்து மழை சொல்லும் நிலைதான் நீடிக்கிறது தமிழகத்தில்! ஆம், கடந்த இரு வாரங்களில் பரவலாக பேய்மழைக் கொட்டித் தீர்த்துள்ளது தமிழகத்தில்! அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 90 சதவிகித நீரும் கடலுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறதே தவிர... அதை சேமித்து வைத்து பிற்காலத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை பயன்…

  3. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவும், பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் பொருளாளராக ஒ.பன்னீர்செல்வத்தையும், அவைத் தலைவராக மதுசூதனனையும் ஜெயலலிதா நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக பா.வளர்மதியும், அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், க…

  4. இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் மண்டை உடைப்பு காயமடைந்த மீனவர் வர்க்கீஸ் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்…

  5. சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான…

  6. “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! மரியாதைக்குறிய விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வணக்கம்! இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காக ஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட…

  7. சொந்தப்புத்திய கடன் குடுத்துட்டு, ‘செய்திகளை’ மட்டும் வெச்சிப் பாத்தோம்னா சென்னை அழிஞ்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு பீல் வருது. அரசியல்வாதிகளும், சமூக வலைத்தளங்களும் அடிக்கிற கூத்தப் பாத்தா, அல்ரெடி சென்னை அழிஞ்சே போயிட்ட மாதிரி தோணுது. உண்மையில, அங்க நியாயமா வடகிழக்கு பருவ காலத்துல எம்புட்டு மழ பெய்யணுமோ அந்தளவுக்குத் தான் (79 செ.மீ) பெஞ்சிருக்கு. நிலமே இல்லாட்டாலும் கிராமத்தான் மழயப் பாத்து சந்தோஷப்படுறான். ஆனா, பட்டணத்தானோட ரியாக் ஷன் எல்லாம் எப்பவுமே வேற மாரி இருக்கு. “சென்னை எப்பேற்பட்ட ஊரு. இங்க மழ பெய்யலாமா? பெஞ்சாலும் ரோட்டுல தண்ணி ஓடலாமா?”ன்னு நினைக்காங்க. மொத்தமா பந்தல்போட்டு, மழத் தண்ணியை கடலுக்கோ, வீராணம் ஏரிக்கோ கொண்டு போகச் சொல்றாங்க போல. செ…

  8. 'டாஸ்மாக்கை மூடு' பாடலைப் பாடியவர் தே.பா.சட்டத்தில் கைது! திருச்சி: மது ஒழிப்பிற்காக "டாஸ்மாக்கை மூடு' என்று பாடல் இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் கடையை உடைத்தது, அதன்பிறகு மதுவிலக்கை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மரணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடை உடைப்பு என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு கோரி போராட்டங்களை நடத்தின. இவை மட்டுமல்லாமல், "மூடு டாஸ்மாக்கை..!" என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவ…

  9. இலங்கை தமிழர் விடுதலை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம். சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடித விவரம்:இலங்கை, தமிழ் தேசியக் கூட்டணி தலைவர் சம்பந்தனிடம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக, இலங்கை அதிபர் சிறிசேன சொன்னதை நம்பி தான், தமிழர்கள் அவருக்கு ஓட்டளித்தனர். அதனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில், இலங்கை சிறைகளில், நீண்டகாலமாக வாடும் தமிழர்களை, விடுதலை செய்வதும் ஒன்று. இதற்கு, 1971ல், சிங்கள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த நிகழ்வு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்டது.அதன்படி, 12ம் தேதி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் சிறிச…

  10. சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவிலிருந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தோடியது பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னை நகரில் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, ரயில் பாதைகளின் கீழுள்ள பல சுரங்கப் பாதைகள் மழையில் மூழ்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட…

    • 3 replies
    • 1.1k views
  11. விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றது பாலாறு. பல ஆண்டுகளுக்குப்பின் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு கடலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலாறு என்றாலே வறண்ட மணல் படுகைகளும், மணல் கொள்ளையும்தான் கண்முன் வந்து நிற்கும். ஆற்றில் மீன் பிடித்தது, ஆற்றில் இறங்கி விளையாடியது, பாசனத்திற்கு நீர் பாய்ச்சியது எல்லாம் இளைய தலைமுறை காணாத ஒன்று. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் பெய்த மழையால் சில நாட்கள் பாலாற்றில் வெள்ளம் சென்றிருக்கின்றது. 2005-ம் ஆண்டு பெய்த மழையில் லேசான வெள்ளம் சென்றிருக்கின்றது. மற்றபடி எப்போதும் பாலாறு வறண்ட ஆறுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஒரேநாளில் 34 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கண்கொள்ள…

  12. முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்பு! [Wednesday 2015-11-11 20:00] கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது …

  13. பேருந்துகள் உடைப்பு- போலீஸ் தடியடி: அஜித் ரசிகர்களால் போர்க்களமான மதுரை! (வீடியோ) மதுரை: மதுரையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதோடு, 5 பேருந்துகளை உடைத்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் மதுரையில் உள்ள தியேட்டர்கள் வளாகங்கள் போர்க்களம் போல் காட்சி அளித்தது. நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் பேனர்கள் வைத்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். மதுரையில் ரசிகர்கள் பேருந்துகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உள்ள தமிழ் ஜெயா, திருநகரில் உள்ள மணின்பாலா உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரசிகர்களுக்கு என்று பி…

    • 8 replies
    • 515 views
  14. சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை விழுந்தது: 54-வது முறையாக விபத்து சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள், கிரானைட் கற்கள், மேற்கூரை விழுவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரை நடந்த 53 விபத்துகளில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை. சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்…

  15. அன்பார்ந்த!!! எனது திருவாரூர் நண்பர்களே!!! நமது மாவட்டத்தை பசுமையாகவும், சுகதாரமாகவும் வைக்க வாட்ஸ்அப்பில் '' திருவாரூர் -பசுமை தமிழகம்'' என்ற பெயரில் ஆரம்பித்து திருவாரூர் மாவட்டத்தை பசுமையுள்ள மாவட்டமாக்க இயற்கை ஆர்வலர்களாகிய திருவாரூர் இளைஞர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இந்தக்குழு தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்டத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு தமிழகத்தை பசுமை உள்ள மாநிலமாக மாற்றுவதே நமது குழுவின்(பசுமை தமிழகம்) நோக்கம். ஒவ்வொரு மாவட்டம் தோறும் 50 இலட்சம் மரங்கள் நடுவதே நமது பசுமை தமிழகம் குழுவின் இலக்கு... திருவாரூர் மாவட்ட பசுமைக் குழுவின் எண். 8883335220 ''வாழ்க தமிழ்'' ''வளர்க தமிழகம்''குறிப்பு: உங்களுக்கு குழுவில் இணைய விருப்பம் இல்லையென்றாலும் நீ…

  16. என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு ஆவேசம்! திருப்பூர்: "தில் இருந்தால் நேரடியாக பேச வேண்டும். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்" என ஹசீனா சையத்துக்கு எதிராய் குஷ்பு ஆவேசமாய் பேசினார்.நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, "ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை" என கருத்து தெரிவித்திருந்தார். குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ''காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற…

  17. குவார்ட்டர் பாட்டில் கொடுத்த மாணவி... திகைத்து நின்ற ஸ்டாலின்! சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து, தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுக்க பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார். இன்று (புதன்) காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின், அங்கிருந்து மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மாணவ மாணவ…

  18. பொறுக்கி கூட செய்யாத வேலையை போலீசார் செய்கிறார்கள்: மகஇகவினர் கண்டனம். http://www.nakkheeran.in/

  19. தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர்: மவுனம் கலைத்த கருணாநிதி. சென்னை: நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் 'நமக்கு நாமே' ரோடு-ஷோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் அவருக்கு ஏகோபித்த அன்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே பயணம் முடிந்ததும் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவார். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன நடந்தது என்பதை என்னிடம் முழு விபரமாக கூறுவார…

  20. நடிகர் விவேக்கின் மகன் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு நடிகர் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். இவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். விவேக்கின் மகன் பிரசன்னா குமார் மூளைக்காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவருடைய உயிர் பிரிந்தது. திரையுலகினர் பலரும் விவேக் மகனின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். http://tamil.thehindu.com/tamilnadu/நடிகர்-விவேக்கின்-மகன்-மூளைக்காய்ச்சலால்-உயிரி…

  21. சென்னையில் நடந்த விழா ஒன்றில், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசம் பிறந்த நாள் விழா மற்றும் தபால் தலை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ராமனைப் போல சில நீதிபதிகள் உள்ளனர். அந்தளவுக்கு நேர்மையாக இருக்கின்றனர். நெருப்பு போன்ற அவர்களைப் பற்றி யாராவது பேசினால், பேசியவர்களின் நாக்கு எரிந்துவிடும். சில நீதிபதிகள் ஓய்வுபெறுவதற…

  22. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் இருப்பு 90 சதவீதம் குறைந்துள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதிய மழை பொழியவில்லை. இதனால், சென்னை குடிநீருக்கான ஆதாரங்களாக விளங்கும் செம்பரம் பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழாவரம் ஏரி உள்ளிட்டவற்றில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைவாக இருக்கின்றன. அதேபோன்று சென்னையைச் சுற்றி அமைந்துள்ள போரூர் ஏரி உள்ளிட்ட சிறிய ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் மிகவும் குறைந்து வறண்டு போகும் நிலையில் உள்ளன. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 205 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 35 அடி …

  23. சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும். வெ.சுரேஷ் “கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல, கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான். ஊழல் செய்பவன் யோக்கியன் போல ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்”. மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், “நீங்கள் அத்தனைப் பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்ற பாடலில் வருவது. சிவாஜி கணேசனுக்காக கண்ணதாசன் எழுதியது. அப்போது இருவரும் காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தனர். மேலே சொன்ன வரிகள் தமிழ்நாட்டில் யார் இருவரைக் குறிக்கும் என்பது அன்றைய நாளில் அனைவரும் அறிந்ததே. இந்த வரிகளையே 70களில் சிவாஜி கணேசன் மற்றும் கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடு என்று சொல்லலாம். இது யார் பக்கம் நின்று யாரைச் சாடுகிறது …

  24. ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை! கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்று புதிய சாதனை(?) படைத்துள்ளது. 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான். இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ…

  25. பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி! தெருவில் வசிப்போர் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடு அடங்கிவிடுவோம். ஆனால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸ், இந்தச் சிந்தனையோடு நிற்காமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன... அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன? என்று தீவிரமாகச் சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி. 23 வயதே நிரம்பிய சினேகா, விஸ்காம் பட்டதாரி.சமூக அக்கறையும் பின்தங்கி உள்ளவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும் கொண்டவர். அதன் மூலம் கிடைத்த ஊக்கம் இன்று உணவு வங்கி தொடங்கி பல நூறு பேரின் வயிற்றுப் பசியை ஆற்றி வருகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.