Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து, வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடல் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை) சுமார் 8 மணி வரை , மழை இருந்தாலும் விமான சேவைகள் கடினமான சூழலில் இயக்கப்பட்டன, ஆனால் இடைவிடாத மழை விமான நிலையப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகக் கூறியது. ஆனால் அதற்குப்பின்னர் ஓடுபாதைகளில் தண்ணீர் சுமார் இரண்டடிக்கு உயர்ந்ததால், விமான ஓடுதளம் சுமார் மூன்று மணி நேரம…

  2. நடிகர் சித்தார்த்... மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்'! கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பல தரப்பில் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் நேற்றிரவு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார், அதில் அவரது வீட்டு …

  3. தொடர் மின்தடையால் இருளில் மூழ்கியது சென்னை: ஏடிஎம் சேவை முடங்கியதால் மக்கள் தவிப்பு இடம்: சென்னை தேனாம்பேட்டை - அண்ணா சாலை | படம்: ம.பிரபு போட்டோ கேலரி மழை தழுவிய அண்ணா சாலை சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகலில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டன. துணை மின்நிலையங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் துண்டிப்பும் ஏற்பட்டன. …

  4. செயற்கைக்கோள் படம்: உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும். கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தாம்பரத்தில் அதிகபட்சமாக 49 செ.ம…

  5. விடிய விடிய பெய்து வரும், வரலாறு காணாத மழையால், சென்னை நகரமே மிதக்கிறது. நகரின் எல்லா பக்கங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மற்ற பகுதிகளில் இருந்து, சென்னை துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், விடாமல் மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாகவும், நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், சென்னை சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஒட்டுமொத்த நகரமும், தண்ணீரில் தத்தளிப்பதால், தலைநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தெருக்களும், பிரதான சாலைகளும், வெள்ளத்தில் சிக்கியதால், மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அலுவலகங்களுக்கு செல்ல, வாகனங்களில் வந்தவர்க…

  6. கடும் மழையால், 137 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிவராத இந்து பத்திரிகை! இந்து பத்திரிகையின் 137 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இன்று வெளிவரவில்லை. கடும் மழை காரணமாக பிரிண்டிங் பிரஸ் இயங்கிய வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை இருந்ததால், பத்திரிகை அச்சிட முடியவில்லை என்று இந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமான ஆங்கிலப் பத்திரிகை இந்து. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை தற்போது சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று வெளிவரவில்லை. மறைமலை நகரில் உள்ள பிரிண்டிங் பிரஸ் இயங்கி வந்த பகுதிக்கு தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளத…

  7. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் பள்ளிவாசல்கள், தியேட்டர்கள்! சென்னையில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னை மாநரின் 80 லட்ச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் வெள்ள நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏராளமான பேர் தன்னார்வத் தொண்டர்களாக களமிறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வரு…

  8. நீச்சல் வீரர்கள், நிவாரண பொருட்களோடு, மீட்பு பணிக்காக சென்னை வருகிறது கடற்படை கப்பல்! சென்னை: மழையால் தத்தளிக்கும் சென்னை மக்களை காப்பாற்ற, நிவாரண பொருட்களோடு, இந்திய கடற்படை கப்பல் விரைந்து கொண்டுள்ளது. இன்று மாலை அது சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், மக்கள் தத்தளித்துள்ளனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் போக முடியவில்லை. இந்நிலையில் மக்களை மீட்டு காப்பாற்ற இந்திய கடற்படையின் ஐஎன்எஸ்i எரவத் கப்பல் இன்று மாலை சென்னை வருகிறது. விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் இருந்து அந்த கப்பல் புறப்பட்டு தற்போது சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளது. இன்று மாலை அக்கப்பல் சென்னை வந்தடையும். இந்த கப்பல…

  9. சென்னை விமான நிலையம் மூடப்பட்டது Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (02:28 IST) சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று விமான நிலைய இயக்குநர் தீபக் மிஷ்ரா தெரிவித்தார். சென்னைக்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் பெங்களூருக்கு அல்லது ஹைதராபாதுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. புதன்கிழமை காலை நிலைமை மறு பரீசலனை செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என்று அவர் தெரிவித்தார். விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் த…

  10. சென்னை மழை : 97 ஆண்டு கால சாதனை முறியடிப்பு! வடகிழக்கு பருவமழை யின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் மீண்டும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையில் இருந்து விடிய விடிய மழை பெய்தது.இன்னும் 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக 118 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1918-ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 சென்டி மீட்டர் மழை பெய்து இருந்தது. இதன் காரணமாக தற்போது 97 ஆண்ட…

  11. சிதம்பரம் மகன் தொடர்புடைய நிறுவனங்களில் வருமானவரி சோதனை சர்ச்சையில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் தொடர்புடைய சில நிறுவனங்களில் மத்திய அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செவ்வாய்க் கிழமையன்று சோதனை நடத்தின. ஒரு தனியார் கண் மருத்துவமனை உட்பட மூன்று நிறுவனங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்களின் மீதான வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக வருமானவரித் துறையும் ஃபெமா எனப்படும் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவும் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கார…

  12. தமிழகத்தில் இருந்து இத்தனை அவதூறு வழக்குகள் ஏன்?- அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி "ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்களே தவிர, இவை தனிநபருக்கு எதிராக இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்குகள்?" என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி. தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. …

  13. பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி! பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் காவல்துறையினர் கைது செய்து செய்தனர். இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்…

  14. சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். இந்த நிறுவனத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லட்டு கொடுத்து தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். அசோக் லேலண்டன் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழீழ உணர்வு தொழிலாளர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு லட்டு வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்தவக…

  15. மீடியாவை சாடும் சித்தார்த்தின் துணிச்சல்! சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவாக மழைபெய்துவருகிறது. இம்மழையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தேசிய உடகங்களே, மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை…

  16. நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது. திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர். பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத…

  17. விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பிரச்சனையில் சிக்கிய விகடன் கட்டுரை சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமை…

  18. மந்திரி தந்திரி! - 30 கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் 'மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த... 'ஜெய…

  19. 7 மணி நேர நரகமாக மாறிய சென்னை போக்குவரத்து நெரிசல்! கடந்த 10 நாட்களாக தினமும் கொட்டிவரும் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன்பு சென்னையில் பெய்ததா என்பது சந்தேகமே. ஒட்டுமொத்த சென்னையே மழைநீரின் வடிகாலாக மாறிவிட்டதோ என்று கூறுமளவிற்கு உள்ளது. மழை அவசியமான ஒன்றே... யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் 'மா மழை போற்றுதும்....' என்றும், 'பெய்யெனப் பெய்யும் மழை என்றும்...' நமது இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சிய மழை என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்த நிலை சென்னைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று(திங்கள்) பெய்த கனமழையால் சென்னை வாகன ஓட்டிக…

  20. கொட்டித் தீர்த்த மழை... கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை! 'பேய்ஞ்சு கெடுக்கும்... இல்லனா, காய்ஞ்சு கெடுக்கும்' என்று மழையைப் பார்த்து திட்டித் தீர்ப்பது நம்மவர்களின் வழக்கம். ஆனால், 'கொடுக்காட்டியும் திட்டுவானுங்க... கொடுத்தாலும் திட்டுவானுங்க' என்று நம்மைப் பார்த்து மழை சொல்லும் நிலைதான் நீடிக்கிறது தமிழகத்தில்! ஆம், கடந்த இரு வாரங்களில் பரவலாக பேய்மழைக் கொட்டித் தீர்த்துள்ளது தமிழகத்தில்! அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 90 சதவிகித நீரும் கடலுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறதே தவிர... அதை சேமித்து வைத்து பிற்காலத்துக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை பயன்…

  21. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவும், பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் பொருளாளராக ஒ.பன்னீர்செல்வத்தையும், அவைத் தலைவராக மதுசூதனனையும் ஜெயலலிதா நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக பா.வளர்மதியும், அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், க…

  22. இலங்கை கடற்படையினர் தாக்குதல்: ராமேசுவரம் மீனவர் மண்டை உடைப்பு காயமடைந்த மீனவர் வர்க்கீஸ் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவரின் மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதில் அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வர்க்கீஸ், மார்டோ, முருகேசன், மாடசாமி ஆகியஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்…

  23. சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர். விருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான…

  24. “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! மரியாதைக்குறிய விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வணக்கம்! இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காக ஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.