Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வைகோவை புறக்கணித்த திருமா! -மலைக்க வைத்த மாநாடு அழைப்பிதழ் புதுச்சேரி, புதிய துறைமுகத் திடலில் வருகிற 28 ம் தேதி, அம்பேத்கர் 125 ஆண்டு நிறைவு விழாவையொட்டி 'அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு' நடத்துகிறார் திருமாவளவன். ' பொதுசிவில் சட்ட மாநாட்டிற்கு ம.தி.மு.க நிர்வாகிகள் வந்திருந்தனர். வைகோவைப் புறக்கணித்துவிட்டு மாநாட்டை நடத்துகிறது வி.சி.க' என்கின்றனர் மாநாடு ஏற்பாட்டாளர்கள். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், மக்கள் நலக் கூட்டியக்கமாக ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு கருத்துக்களில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தாலும் கூட்டணி தொடர்வதையே தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். அண்மையில், காமராஜர…

  2. கொரோனா தடுப்பூசி : தமிகழகத்தில் இன்று ஒத்திகை! தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுதும், 190 இடங்களில், இன்று ஒத்திகை நடைபெற உள்ளது. இதன்படி சென்னை, பெரியமேட்டில் உள்ள, மத்திய மருந்து கிடங்கு, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் ஒத்திகை நடைபெறவுள்ளதுடன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந…

  3. ஏரல்:`எப்படித்தான் அந்தப் பாவிக்குக் கொல்ல மனசு வந்துச்சோ?!’ - எஸ்.ஐ பாலுவை நினைத்து உருகும் கிராமம் இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன் இறுதி ஊர்வலம் ``ஏரல் ஸ்டேஷன்ல இவருக்குதான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டுச்சு. சிகிச்சை முடிஞ்ச மறுநாளே டூட்டிக்கு கிளம்பிட்டார். ஊருலயும் சரி, ஸ்டேஷன்லயும் சரி அவர் அதிர்ந்துகூடப் பேசினதில்லை. ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயும் கறார் காட்டுனதில்லை” என்றனர் ஊர் மக்கள். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் பாலு. அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த பொன் சுப்பையாவும் இவரும் ஏரல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். (கடந்த 31-ம் தேதி) இரவ…

  4. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இந்த சந்தேகநபர்கள் 10 பேரும் 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்…

    • 0 replies
    • 481 views
  5. இன்றைய உண்ணாவிரதத்தின் மூலமாக, அ.தி.மு.க.,விலும், பொதுமக்களிடத்திலும், தங்களுக்கு உள்ள பலத்தை காட்டும் முயற்சியில், பன்னீர் அணியினர் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில், கூட்டம் அதிகம் குவியாமல் தடுக்க, சசிகலா தரப்பினர், எல்லா வகையிலும் சதி வேலைகள் செய்துள்ளனர். உண்ணா விரதத்தை தொடர்ந்து, லோக்சபாவில், ஜெ., மரண சர்ச்சையை கிளப்ப, பன்னீர் ஆதரவு, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கிஉள்ளார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர் கள் மற்றும் பொதுமக்களிடம், ஆதரவு கிடைத் துள்ளது. சசிகலா குடும…

  6. ‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’ அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை…

  7. ‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பெ…

  8. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை! July 24, 2021 தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். அதன்போது, “தலைநிமிரும் தமிழகம்” என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க…

  9. மிஸ்டர் கழுகு: ரயில் பயணங்களில்... தடக் தடக் போலீஸ்! ‘‘கோவையில் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்மீது எல்லோரும் பாய்ந்தார்கள். இதோ... கன்னியாகுமரி, கடலூர், சேலம் எனத் தன் பயணத்தை கவர்னர் தொடர்கிறாரே... யாரால் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைப் போட்டவாறு நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனவே... தி.மு.க கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்துகிறதே?” என்றோம். ‘‘தமிழகத் திட்டங்களை ஆய்வுசெய்ய கவர்னர் போகலாமா, கூடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். கவர்னரின் பயணத்தால் ஏற்படும் அரசியல் காரணங்கள் அல்லாத இதரக் குழப்பங்களைச் சொல்கிறேன். கேளும்!” ‘‘சொல்லு…

  10. யாரும் வாயை திறக்க கூடாது! குடும்பத்தினருக்கு சசி உத்தரவு 'தினகரன் தவிர, குடும்பத்தில் உள்ள யாரும் வாயை திறக்கக் கூடாது' என, சிறையில் இருந்து, சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் மவுனமாகி விட்டனர். இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெ., மரணத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. அதேபோல், சசிகலா குடும்பத்தினரும், வருமான வரி சோதனை உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டனர். இதற்கு, குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ள உரசல் தான் காரணம் என்பதை, சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தினகரன், திவாகரன், விவேக், திவாகரன் மக…

  11. சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா. படம்: இஸ்ரோ சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் 5 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்…

    • 0 replies
    • 699 views
  12. இளைஞரால் எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஜனவரி 2023, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் பெண்ணை எரித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெத்தாம்பாளையம் சாலையில் நேற்று மாலை காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆம்…

  13. மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை By T. SARANYA 28 JAN, 2023 | 04:40 PM (ஆர்.ராம்) தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்ப…

  14. தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்கள் பருவம் தப்பிப் பெய்த மழையால் சேதம் - அரசின் நிவாரணம் போதுமானதா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 பிப்ரவரி 2023, 02:51 GMT இந்த மாதத் துவக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிப்பெய்த மழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இழப்பீடு அறிவித்திருந்தாலும் அது போதாது என்கிறார்கள் விவசாயிகள். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பதைபதைப்பில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக…

  15. பட மூலாதாரம்,HRCE படக்குறிப்பு, நெல்லையப்பர் கோயிலில் கிடைத்த செப்புப் பட்டயங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பல பழங்கால செப்புப் பட்டயங்களும் செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன. இந்தச் செப்பேடுகளை எழுதிய மன்னர்கள் யார், இந்தச் செப்பேடுகள் சொல்லும் செய்திகள் என்ன? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுமார் 46,000 கோவில்களிலும் இருக்கக்கூடிய ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் ஆகியவற்றைத் தேடி எடுத்து, அவற்றைப் படித்து நூலாக்கம் …

  16. படக்குறிப்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் சென்னைக்கு 80 ஆண்டுகளாக குடிநீர் வழங்கி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், லிங்கேஷ் குமார். வே பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, கடந்த 80 ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும் நிலையில், மிக சுமூகமான முறையில், ஆந்திராவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. சென்னையின் குடிநீர் த…

  17. இலவசமும் சுயமரியாதையும் “ பெரியாரின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரிப்பது சுலபம்”, இலவசம் நாளொன்றுக்கு 27 ரூபாய் விவசாயிகளுக்கு; 2018-ல் விவசாயிகளின் தற்கொலைக்கான காரணம் இன்னும் போகவில்லை. புயலாலும், மழை பொய்த்ததாலும் விவசாயம் விவசாயிகளின் குடியை கெடுத்து விட்டது. விவசாய கடன் தள்ளுபடி இல்லை. விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் மூடி 6 வழிச் சாலை, 8 வழிச் சலை, மீத்தேன் வாயு, உயர் அழுத்த மின் கோபுரங்கள் என்று, கான்ட்ராக்டர்களுக்கும், மோட்டார் உற்பத்தி முதலாளிகளுக்கும், துணைபோகும் மந்திரிகள், அரசு ஊழிய உடம்புகள் அனைவரும் பெருக்க , வாழ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரோடு போடுவதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுக…

  18. டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகா…

  19. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு: தேர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 வீடுகள் தீ வைத்து எரிப்பு - 11 பெண்கள் உட்பட 70 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் தேர் மற்றும் 4 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இக் கிராமத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் மாரியம்மன் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றன…

  20. நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்த நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று வாதாடினார். விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் 30 நாட்கள் பரோல் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி பரோல் கோரி மனு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நளினி நேரில் ஆஜராவதில் சிக்கல் உள்ளது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இ…

    • 0 replies
    • 801 views
  21. வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு …

  22. 31 Mar, 2025 | 01:04 PM சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக கூறி ரம்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1984 ம் ஆண்டு உள் நாட்டு போர் காரணமாக சரவணமுத்துஇ தமிழ்செல்வி தம்பதியர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கோவையில் பல ஆண்டுகளாக தங்கியுள்ளார் இந்நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு கோவையில் அத்தம்பதியருக்கு ரம்யா என்ற…

  23. முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார். ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சி…

  24. படத்தின் காப்புரிமை Getty Images தமிழகத்திலிருந்து எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற 17 தமிழர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாகப் அவர்கள் பயணித்த கப்பலிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நைல் நதியில் மிதந்தவாறு எகிப்து நாட்டைச் சுற்றி பார்க்க 'ஏ சாரா' எனும் சொகுசு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாட்களோடு கடந்த வாரம் அஸ்வான் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று, லக்சர் நகரத்தை அடைந்தபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன். …

    • 0 replies
    • 333 views
  25. வைகோ| படம் க.ஸ்ரீபரத் சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சிவசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். திமுகவில் ஸ்டாலினுக்கு பட்டா பிஷேகம் நடத்த முயற்சிப்பதாக சொல்லி தனிக் கழகம் கண்ட வைகோ, 1996-ல் ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார். அதிமுக ஊழல் கட்சி, திமுக குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை முன்வைத்த அவருக்கு, சட்டப்பேரவைக்கு போக வேண்டுமா, நாடாளுமன்றத்துக்கு போக வேண்…

    • 0 replies
    • 815 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.