தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
திருச்சி சிறையில்... தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் திருச்சி மத்திய சிறைசாலையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள், தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) 10ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர்கள், உடனடியாக தங்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் எங்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை காலம் மேற்கொள்ளவில்லை. ஆகவே எங்களை விடுதலை செய்யும் வர…
-
- 0 replies
- 377 views
-
-
வீரப்பன் அண்ணன் மாதையன்: 34 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னணி என்ன? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 15 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு வனத்துறையை உலுக்கிய படுகொலை சம்பவம் அது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம். சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் கொங்குருபாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரம் உள்பட மூன்று பேர் வீரப்பனால் கொல்லப்படுகின்றனர். சந்தனக் கட்டைகளை கடத்தும் பணியில் இருந்த வீரப்பன் கும்பலைத் தடுக்க முற்பட்ட காரணத்தாலேயே இந்தப் படுகொலை நடக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக அதாவது 87 ஆம் ஆண்டு மே மாதம் தந்தக் கடத்தல் வழக்…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். 63 வயதாகும் திருமதி விஜயலட்சுமி உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் காலமானார். ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி வைத்தியசாலைக…
-
- 0 replies
- 377 views
-
-
வா.மணிகண்டன் (எழுத்தாளர்) மதமாற்ற கோஷம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில். மதச்சார்பற்ற நாடு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் அடித்து நொறுக்கப்படுகிறது. இது இந்துக்களின் தேசம் என்று பெருமையாக அறிவிக்கிறார்கள். பி.ஜே.பி.யின் எம்.பி.க்கள் பலரும் வெறியெடுத்துப் பேசுகிறார்கள். ஒரு பக்கம், அவர்களைக் கட்டுப்படுத்த லட்சுமண ரேகை வரைவதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. மறுபக்கம், நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் புன்னகையோடு! எதிர்கேள்வி கேட்பவர்களிடம், இதுவரை மதச்சார்பற்ற நாடு என்ற பெயரில், பிற மதத்தினர்தான் சலுகைகளை அனுபவித்தார்களே தவிர, இந்துக்கள் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை என்று சண்டைக்கு வருகிறார்கள். ‘அப்படினா, சட்டம் Anti conversion Law…
-
- 0 replies
- 377 views
-
-
‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனு…
-
- 0 replies
- 377 views
-
-
சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு? முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்' முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம்…
-
- 0 replies
- 377 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'காண்டாமிருக கொம்புகள் விற்பனைக்கு' — சமீபத்தில் ஆலைன்லைனில் வெளியான இந்த விளம்பரம், தமிழ்நாட்டில் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "வனத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டில் காண்டாமிருகக் கொம்பினை விற்க முயல்வதாக ஒருவர் கைது செய்யப்படுவது எங்களுக்குத் தெரிந்து இதுவே முதல்முறை," என்கிறார், திருச்சி மண்டல உதவி வனப் பாதுகாவலர் சாந்தவர்மன். இந்திய கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், தன்னிடம் உள்ள காண்டாமி…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா! தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியில் இருந்து விலகுவதாக சாந்தா ஷீலா நாயர் விளக்கம் அளித்திருக்கிறார். http://www.vikatan.com/news/tamilnadu/80011-shantha-sheela-nayar-resigns.art
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …
-
- 0 replies
- 377 views
-
-
தவெக கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்…
-
-
- 4 replies
- 376 views
-
-
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநரின் அங்கீகாரம் – நளினி மனு தாக்கல் 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையின்-தீர்மானத்/
-
- 0 replies
- 376 views
-
-
சேலம்: சேலத்தில் காவல் நிலையம் முன்பு 7 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் பைனான்சியர் சண்முகம் என்பவர் டீக்கடையில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாபு என்பவரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கன்டிஷன் ஜாமீனில் பாபு சிறையில் இருந்து வெளியே வந்தார். அதை தொடர்ந்து தினமும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பத்து நாட்களாக காலையில் கையெழுத்து போட்டு வந்தார். இவருக்கு பாதுகாப்பாக அவரது உறவினர்களும் அவருடன் வருவார்களாம். அதேபோல இன்று காலை 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு கையெழுத்து போடுவதற்காக, பாபு தன்னுடைய…
-
- 0 replies
- 376 views
-
-
அதிமுக அரசை வீழ்த்த தயாராகும் திமுக மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படு கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசிலும், அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்த, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.பழனிசாமி முதல்வரானார். அவரது அரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப்…
-
- 0 replies
- 376 views
-
-
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் கூடுதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற…
-
- 1 reply
- 376 views
-
-
எஸ்.மகேஷ் செல்போன்கள் சென்னையில் செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய இளைஞர்களை, சினிமா படக் காட்சியைப் போல விரட்டிச் சென்று எஸ்.ஐ பிடித்தார். சென்னை மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். செல்போனைப் பறித்துக் கொண்டு இளைஞர்கள் செல்வதை அதிர்ச்சியோடு பார்த்தபடி, `திருடன்... திருடன்’ என்று ரவி சத்தம் போட்டார். திருட்டு பைக் அதைக் கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ…
-
- 0 replies
- 376 views
-
-
தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டாண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையில், டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சில ஆவணங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் இன்று புகாரளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊழலை வெளிகொண்டுவந்தமைக்காக அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவித்து, இதை தி.மு.க-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்ததோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் ட…
-
- 1 reply
- 376 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடத்தப்படுகின்ற இந்த கருத்துக் கணிப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு கருத்துக் கணிப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைய சர்வதேச ரீதியாக வாழ்கிற தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 376 views
-
-
அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம்? பன்னீர்செல்வம் Vs சசிகலா..? (Video) #OPSVsSasikala தமிழக அரசியலில் யாரும் எதிர்பாரக்காத வகையில், பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் புலியாகப் பாய்ந்தது ஏன்? முதல்வராக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை அவரது பேட்டி ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் எடுத்த முடிவு திடீரென்னு எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பன்னீர் செல்வம் முடிவெடுதது விட்டார். சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பரிச்சயமான ஒரு முகம…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் செல்ல வேண்டாமென இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை! இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறுவதை தவிர்க்குமாறும், அவ்வாறு செல்லும் போது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமெனவும் தமிழக பொலிஸார் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி இராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒ…
-
- 0 replies
- 376 views
-
-
விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்! பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 376 views
-
-
தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற பங்கேற்பாளர்களை மிரட்டுவதாக புகார் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களைத் தரக்குறைவாக பேசுகிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பெரும்பாலான தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் இரவில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. அரசியல், சமூகம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரம…
-
- 0 replies
- 376 views
-
-
வேலூா் சிறையில்... உயிருக்கு ஆபத்தான நிலையில், முருகன்! வேலூர் மத்திய சிறையில் 14 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் அவசர மனு அனுப்பியுள்ளது. வேலூா் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தன்னை பிணையில் விடுவிக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து தண்ணீர் கூட அருந்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நிலை …
-
- 0 replies
- 376 views
-
-
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி! மின்னம்பலம் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோயில்களில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. தற்போது திருவிழாக் காலம் என்பதால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்பு உடையதாகவும்…
-
- 0 replies
- 376 views
-
-
படக்குறிப்பு, கடந்த மே - ஜூன் மாதத்தில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 23 நவம்பர் 2023, 03:10 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கு…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
ஜெ. வீடியோ ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாதது ஏன்?- தினகரன் விளக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாதது ஏன் என்பது குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஜெயலலிதா சாதாரணமாக டிவி பார்க்கும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்த காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் வெளியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் 7…
-
- 0 replies
- 376 views
-