Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையையொட்டி, நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திரளான நிர்வாகிகளும் கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியேறினர். மதியம் 1.30 மணியளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக …

  2. சந்தன கடந்தல் வீரப்பன் நினைவு தினத்தில் அன்னதானம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று அன்னதானம் நிகழ்ச்சி நடத்த அவரது மனைவி முத்துலட்சுமி ஏற்பாடுகளை செய்தார். ஆனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் "வீரப்பன் நினைவாக அவரது மனைவி முத்துலட்சுமி நடத்தும் அன்னதான நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=119001&category=IndianNews&language=tamil

  3. திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீரில் திணறும் வாகனங்கள். | படம்: க. ஸ்ரீபரத் சென்னை மாநகரப் பகுதியில் வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை நேரம் ஆகஆக வலுத்தது. விடிய விடிய அடைமழையாகப் பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதி…

  4. கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆம்புலன்சை ஜெ. பாதுகாப்புக்காக நிறுத்திய பெங்களூர் போலீஸ் பெங்களூர்: சிறையில் இருந்து வி.வி.ஐ.பி மரியாதையுடன் ஜெயலலிதா பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்னுக்கும் பின்னுக்கும், பல வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் இருந்த நிலையில் மிதமான வேகத்தில் ஜெயலலிதா கார் சென்றது. சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்கள் தன்னை பார்க்கவும், பூக்களை வீசவும் வசதியாக ஜெயலலிதா கார் மித வேகத்தில் பயணப்பட்டது. ஜீரோ டிராபிக், அதாவது, அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு சிக்னல்களை எரியவிட்டு ஜெயலலிதா பாதையில் மட்டும் பச்சை சிக்னல்கள் எரியவிடப்பட்டிருந்தன. கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு…

  5. போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெயலலிதா பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார். இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார். போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெய…

  6. சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் …

  7. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக்குவிப்…

  8. சென்னை: சென்னையில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில், லட்சத்தீவுகளை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை 11.30 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக…

  9. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011ஆம் ஆண்டு லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் ப…

  10. -பெங்களூர் விரைகிறார்கள் அதிமுகவினர் -ஜெயலலிதாவை வரவேற்க பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு தொண்டர்கள் குவிய வாய்ப்பு -சிறையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது பெங்களூர் போலீஸ் -ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி-ராம் ஜெத்மலானி -ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது-ராம் ஜெத்மலானி -தீர்ப்பு தேதியன்று சென்னையில் இருந்து ஜெயலலிதா வந்த சிறப்பு விமானம் பெங்களூரிலேயே நிற்கிறது -பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா -தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு ஜெ. கட்டளையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் -தமிழகத்தில் நடைபெற்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் -2-3 மாதத்…

    • 13 replies
    • 932 views
  11. ஜெயலலிதா நாளைய தினம் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஜாமீன் கோரி ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச …

  12. புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனு திடீரென வா…

  13. தேனி: மந்திர சொம்பு எனக் கூறி 3 லட்ச ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், தேவாரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 'சதுரங்க வேட்டை' படத்தில் நடிகர் இளவரசுவை இரட்டை தலை மண்ணுளி பாம்பு (இரட்டை மணியன் பாம்பு) மருத்துவ குணம் வாய்ந்தது எனக் கூறி, பணத்தை நாயகன் ஏமாற்றுவதைபோல இந்த வாரம் தேனி மாவட்டத்தில் ஒரு ஏமாற்றுவேலை நடந்துள்ளது. இங்கே நடந்த சம்பவத்தில் இளவரசுவிற்கு பதில் பணத்தாசைகொண்ட இருவர், மண்ணுளி பாம்பிற்கு பதிலாக மந்திர சொம்பு. என்ன நடந்தது என விசாரித்தோம்... தேவாரத்தை சேர்ந்த நாகராஜ், "மந்திர சொம்பு ஒன்று என்னிடம் உள்ளது. பித்தளை செம்பில் இடி தாக்கியதால் முழுவதும் இரிடியமாக மாறிய…

  14. காற்றில் பறக்கிறது தமிழ்நாட்டு அரசியல் (பன்னீர்) மானம் !!! https://www.facebook.com/video/video.php?v=746979372037033

  15. போங்கடா தமிழர்களா போங்கடா தமிழர்களா ஒரு ஊரிலெ இல்ல இல்ல ஒரு காட்டில ஒரு திருடன் இருந்தான் அவன் அந்த காட்டு வழியே போகிற வழிப்போக்கரைகளை தாக்கி கொள்ளையடித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் சாகும் தருவாயில் அவன் மகனை அழைத்து “மகனே நான் இறக்கப் போகிறேன் வாழும் காலம் வரை இந்த ஊர் மக்களின் யாயிலும் பல்லிலும் இருந்து விட்டேன் நீ என்ன செய்வாயோ என எனக்கு தெரியாது ஆனால் நான் இறந்த பிறகு இந்த ஊர் மக்க்|ள் என்னை நல்லவன் என்று சொல்ல வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு அவன் இறந்து விட்டான். மகனுக்கு இப்ப என்ன செய்து தந்தைக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பது என ஒரே குழப்பம். நெடு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் அவனும் அவன் தந்தை போலவே காட்டில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான் ஒரே…

  16. சுப்ரதா ராயும், ஜெயலலிதா ஜாமீன் மனுவும்... ஒரு திகில் எதிர்பார்ப்பு! டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில், டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இவர்களின் மனுவை விசாரித்தால் நிச்சயம் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்று கூறுகிறார்கள். காரணம், நீதிபதி தாக்கூர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது. சஹாரா இந்தியத் தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீனே கொடுக்க முடியாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் நீதிபதி டி.எஸ். தாக்கூர் என்பதால் ஜெயலலிதாவின் நிலை இவரிடம் போனால் மேலும் சிக்கலாகும் என்று கூறுகிறார்கள்…

  17. ‘சூப்பர் ஸ்டார் புகழை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல் ‘சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து விடுவீர்கள்’ ரஜினிகாந்துக்கு உதயகுமார் திறந்த மடல். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளார் என்றும் அவரை பாஜக தங்கள் கட்சிக்குள் கொண்டு வர தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. தமிழ் அமைப்புகள் ஏற்கனவே ரஜினி தமிழக அரசியலில் வரக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. தமிழ் நாட்டை தமிழினம் தான் ஆள வேண்டும் , தமிழர் அல்லாத ஒருவர் தமிழ் நாட்டின் முதல்வராக வரக் கூடாது என்றும் குரல் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் அணு உலைப் போராளி உதயகுமார் அவர்கள் ரஜினி ஏன் தமிழக அரசியலில் வரக் கூடாது என்று ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். தி…

  18. மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு பாதிப்பா? டெல்லி: தலைப்பை படித்து பார்த்தால், மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டதைப்போலத்தான் தோன்றும். ஆனால், ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிகழ்வு, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுடனும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடனும் பெரிதும் பொருந்திப்போகிறது என்பதே உண்மை. பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு கடந்த 2003ம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி சவுதாலா நீதிமன்றத்தில் ஜாமீன் …

  19. திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்... அக்டோபர் 10, 2014 முனைவர் சுப. உதயகுமாரன் நாகர்கோவில் திரு. ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன், சென்னை அன்பார்ந்த ஐயா: வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரி…

  20. விவசாயம் செய்ய எண்ணும் இளைஞர்களுக்கு நம்மாழ்வார் ஐயாவின் ஆலோசனைகள் https://www.facebook.com/video/video.php?v=10202797418325746

  21. உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை. கடந்த வாரம் பங்குச்சந்தையில் இந்த பிரச்சினை அப்படியே மெதுவாக உரசி சென்றது. ஆனால் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்த வில்லை. அதற்கு மேலும் பெரிதாகாது என்ற ஒரு அதீத நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. ஆனாலும் இது ஒரு நம்பிக்கை தான். இன்னும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. மீண்டும் இந்த பிரச்சினை வந்தால் பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு இந்த பிரச்சினையின் பின்புலத்தை அறிவதும் அவசியமாகிறது. அதனை இந்த கட்டுரையில் பகிர்கிறோம். 1842ல் பிரிட்டனின் காலனி பிடிக்கும் கொள்கையின் காரணமாக ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் கைக்கு…

  22. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்களாகின்றன.பொதுவாக, தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஆவணத்தில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வேலைகள். ஆனால் ஜெயலலிதாவின் செல்வாக்கை கருத்தில்கொண்டு, அவருக்கும், சசிகலா உள்ளிட்ட தோழிகளுக்கும் இந்த வேலைகளை செய்ய சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெ…

    • 4 replies
    • 1.3k views
  23. சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளதை அகற்ற முடியுமா?என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா எதிர்க்கட்சிகளால் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி. தமிழகத்தில் அமைதி நிலவுகிற போது, சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சிதைந்து விட்டது, அமைதி இழந்து விட்டது என்று எத…

  24. புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 14வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமார், திவாகர், செல்வக…

  25. புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.