தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது. குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே …
-
- 0 replies
- 384 views
-
-
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெயலலிதாவைப் பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார். வதோதர…
-
- 3 replies
- 3.7k views
-
-
காரைக்குடி: ஊழல் புகாரினால் தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வரும் தேர்தலில் இந்த பின்னடைவை பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளும் என்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிறந்தாள் வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "மோடியின் வெளிநாட்டு பயணம் இந்தியாவை உலக அரங்கில் மதிப்பு மிக்க நாடாக உருவாக்கியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை. அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அதை காரணமாக வைத்து த…
-
- 2 replies
- 520 views
-
-
பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் சில கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் ''ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தி. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்…
-
- 0 replies
- 456 views
-
-
ஜெயலலிதா ஜெயராம் இன்று இந்தியாவில் மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அதிகம் பேசப்படுகின்ற அரசியல் கதாபாத்திரமாக திகழ்கின்றார். தமிழக மக்களால் “அம்மா” என்ற அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், பிணையில் விடுதலையாவாரா? என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் மேலோங்கியுள்ளது. பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு எனினும் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் அவருடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை இன்று ஒத்திவைக்கத் தீர்மானித்தது. கர்நாடக மாநிலத்தில் தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறைக்கால விசேட நீதிமன்ற அமர்வி…
-
- 0 replies
- 666 views
-
-
அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை. தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து …
-
- 0 replies
- 597 views
-
-
'அம்மா'வுக்காக அனைத்து தியேட்டர்களும் இன்று மூடல்- மதுரையில் உணவகங்களும்.. சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை நான்கு காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து த…
-
- 0 replies
- 595 views
-
-
தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது தடவையாக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்தின் பயோடேட்டா இங்கே... ஓ.பன்னீர்செல்வம் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவர் தற்போது அ.தி.மு.க பொருளாளராக இருந்து வருகிறார். உள்ளாட்சி மன்றத்தில்.... 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். சட்டமன்றத்தில்.. 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். * வருவாய்த்துறை அமைச்சர் (2001 ம் ஆண்டு மே 19 முதல் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை) * தம…
-
- 2 replies
- 778 views
-
-
மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து மதுரை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை …
-
- 4 replies
- 1.4k views
-
-
பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதையடுத்து ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில், 23 ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி எண்.7402 வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு, அவரது உதவியாளர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடையை சாப்பிட்டார். மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலதா சற்ற…
-
- 0 replies
- 578 views
-
-
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி. ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து 'சோ' ராமசாமி கூறியுள்ளதாவது: இந்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானது அல்ல. அவருக்கு நிச்சயம் அனுதாபத்தைத்தான் இந்த தீர்ப்பு வழங்கும். தற்போதைய நிலையில் ஜெயலலிதா இல்ல அரசியல் களம் என்பது தமிழ்நாட்டுக்குத்தானே பின்னடைவே தவிர ஜெயலலிதாவுக்கு அல்ல. தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஜெயலலிதா முன்பு இருக்கின்றன. இவ்வாறு சோ ராமசாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்…
-
- 4 replies
- 3.2k views
-
-
ஜெயலலிதா... துக்கத்திலும், வேதனையிலும், அன்பிலும் இதுவரை 14 பேர் மாரடைப்பால் மரணம். சென்னை: தவறுக்கு தண்டனை கிடைத்து ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயுள்ளார். ஆனால் தங்களது அன்புக்கு கிடைத்த தண்டனையாக, அதை அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். கலங்கிப் போய் நிற்கிறார்கள், துடித்துப் போய் மரணத்தை முத்தமிடவும் முயல்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்குப் போன சோகத்தால் இதுவரை தமிழகம் முழுவதும் 14 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது. தங்களைப் பெற்ற தாய் மீது கூட அதிமுக தொண்டர்கள் இவ்வளவு அன்பாக அம்மா என்று உருகியிருக்க மாட்டார்கள். மாறாக ஜெயலலிதாவை அந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்கள், வயது வித்தியாசம் இல்லாமல் அம்மா என்று அழைக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மீது அதிமுக…
-
- 3 replies
- 1.7k views
-
-
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஜாமீன் மனு தாக்கல். | கோப்புப் படம்: எம்.பிரபு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நாளை (திங்கட் கிழமை) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். ”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர் நீதிமன…
-
- 1 reply
- 976 views
-
-
சென்னை, கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி ராயப்பேட்டையில் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது இந்த தாக்குதல் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் 5 பி…
-
- 0 replies
- 544 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப…
-
- 0 replies
- 690 views
-
-
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்-டி-குன்கா வரலாறு போற்றும் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றார். தண்டனை பெற்றவர் மேல்நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம். ஆனால், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியான அண்ணா தி.மு.க.வினர் அராஜக வன்முறையில் இறங்கினர், கடைகளை உடைத்து நொறுக்கினர், பேருந்துகள்- வாகனங்களைத் தாக்கித் தீவைத்துக் கொளுத்தினர். வணிக நிறுவனங்கள் கற்களை வீசிப் பொருள் சேதம் ஏற்படுத்தினர். ஒரு பாவமும் அறியாத பொதுமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகினர். இவை அனைத்தையும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்த அநீதியும் நிகழ்ந்தது. குற்றங்களுக்குத் துணைபோனது. முதல் அமைச்சர்தான் …
-
- 0 replies
- 461 views
-
-
ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்! சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 க…
-
- 4 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க கோரியும். தமிழக தமிழர்களை “Tamil Chauvinist groups” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி இன உணர்வுடன் செயல்படும் தமிழர்களை “தமிழின வெறியர்கள்” என்ற பொருள்படும்படி இந்த அரசாணை கண்டித்தும். நீதிபதி திரு.மிட்டல் அவர்களே திரும்பிப்போ என முழங்கும் உரிமை எழுச்சி போராட்டம் ஒன்று நேற்று நடை பெற்றது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு தொடர்பான அரசாணை தீயிட்டு எரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்த்தேச மக்கள் கட்சி செந்தமிழ்க்குமரன் தலைமையிலான தமிழ்த்தேச மக்கள் கட்சியினர் 35 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். http://www.pathivu.com/news/34155/57/35/d,article_full.aspx
-
- 0 replies
- 377 views
-
-
தியாக தீபம்' தீலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் ,ராகவன், மதன் ஆகியோர் கல்லூரி வளாக விடுதியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை இன்று மேற்கொண்டனர். http://www.pathivu.com/news/34137/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்து அருகில் உள்ளவெங்கடேசுவரா திருமண மண்…
-
- 0 replies
- 728 views
-
-
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்தனர். கைது செய்து தற்போது சென்னை கோயம…
-
- 0 replies
- 680 views
-
-
நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா கிளம்பி சென்றுள்ள நிலையில் அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை ஐநா சபையில் மோடி உரையாற்ற உள்ளார். இன்று ஜெர்மனில் தங்கி அங்கு ஓய்வெடுத்தப் பின்னர் நியூயார்க் புறப்படுகிறார். இந்நிலையில் குஜராத்தில் அவர் முதல்வராக இருந்த போது நடைப்பெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமெரிக்க நீதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். இதுத் தொடர்பாக நடைப்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பலியானார்கள். இது நடைபெற்றபோது குஜராத் முதல்வராக மோடி இருந்தார் என்பதால், கலவரத்துக்கு காரணம் மோடிதான் என்று கு…
-
- 0 replies
- 410 views
-
-
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு மாபெரும் தமிழர் நீதிப் பேரணி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நீதிப் பேரணிக்கு மக்கள் திரளாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து கொண்டுள்ளனர் .மேலதிக தகவல் விரைவில் தொடரும் .... (facebook)
-
- 16 replies
- 996 views
-
-
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது. அந்தவைகையில் நாளை (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/34094/57//d,article_full.aspx
-
- 1 reply
- 705 views
-
-
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தமிழர் பேரணி! நாள்: செப்டம்பர் 24, 2014 பேரணி தொடங்கும் இடம்: இராஜரத்தினம் விளையாட்டரங்கம் எதிரில், எழும்பூர், சென்னை நேரம்: மாலை சரியாக 3 மணி பேரணி நிறைவடையும் இடம்: மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் மாளிகை எதிரில், எழும்பூர், சென்னை. மத்திய அரசை வலியுறுத்தும் 5 அம்ச கோரிக்கைகள்; 1. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்காதே! : 2. இந்திய அரசே! ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக் குழுவை இங்குள்ள ஈழத் தமிழரிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்! 3. சிங்களப் படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!. வங்கக் கடலில் பாரம்பரிய மீன்பிடியை மீட்டுக் கொடு! …
-
- 1 reply
- 528 views
-