Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை கிழக்குகடற்கரை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த நாசரின் மகன் உள்ளிட்ட சிலர் பயணித்த கார் எதிரே வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பொலிஸார் கூறுகையில்: “விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 3 பேர் சம்பவ…

  2. தமிழருவி மணியன்.| கோப்புப் படம். பாஜக கூட்டணியில் தமிழக முதல்வர் வேட்பாளருக்கு வைகோ தான் தகுதியானவர். விஜயகாந்த் கறைபடியாதவர் என்று என்னால் சொல்ல முடியாது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நீங்கள் விரும்பிய பாஜக கூட்டணி அமைந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே? இலங்கைத் தமிழின அழிப்புக்கு உதவிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும். திமுக, அதிமுகவிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜக கூட்டணிக்கு பாடுபட்டேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. காங்கிரஸ் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை மக…

  3. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளைத் தொடர்ந்து கனிமொழியும் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி 2ஜி வழக்கு தொடர்பாக மே 26ம் தேதி தயாளு அம்மாள், கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாளு அம்மாளுக்கு திடீரென உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கனிமொழிக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிற்பகல…

  4. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனி மரியாதை அளிக்கப்பட்டது. இவர்களை வரவேற்று பேசிய பாஜகவின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடும்போது ‘உங்கள் மனைவி பிரேமலதா வந்திருக்கிறார்களா? எனக் கேட்டு அவர் அமர்ந்திருந்த இடத்தை பார்த்தார். பிரேமலதாவும் எழுந்து ராஜ்நாத்தை கைகூப்பி வணங்கினார். அதேபோல் நரேந்திர மோடியும் தனது ஏற்புரையின்போது, ‘விஜயகாந்த் ஜி, எங்கே உங்கள் மனைவி பிரேமலதா ஜி?’ எனக் கேட்டு அனைவரின் முன்னிலை யிலும் தனி அங்கீகாரம் அளித்துப் பாராட்டினார். அப்போதும் கூட்டத்தினரி டையே அமர்ந்திருந்த பிரேமலதா எழுந்து நின்று மோடியை வணங்கினார். இந்தக் கூட்டத்தில் என்.ஆர். க…

    • 4 replies
    • 2.1k views
  5. கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு நேற்று மாலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று மாலையில் தயாளு அம்மாளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ரனர். அவரது உடல் நல பாதிப்பு குறித்த விவரம் தெரியவில்லை. அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. -தற்ஸ் தமிழ்-

  6. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மு.க. ஸ்டாலின் ராஜினாமா...? சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலக முன்வருவதாகவும், அவர் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபோது தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்ப…

  7. விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணன் 1,45,915 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 4,06,232 ஓட்டுகள் பெற்றார். வைகோ 2,60,317 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் ரத்தினவேல் 2,41,089 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 38,439 ஓட்டுகளும், மார்க்.கம்யூ., வேட்பாளர் சாமுவேல் ராஜா 20,107 ஓட்டுகளும் பெற்றனர். http://election.dinamalar.com/detail.php?id=8571

    • 9 replies
    • 802 views
  8. சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் முடங்கிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்வேன் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்திருந்தார். தற்போது பாஜக தமிழக தலைவர்கள் பலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில், சீமான் அமைதி காத்து வருவதாக ஈழ தமிழர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் வெளிப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் சீமானின்…

  9. தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர மற்ற 38 தொகுதிகளில் டெபாசிட் தொகையை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் 4.4 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரஸýக்கு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. ஒரு வேட்பாளர், தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் 1 பங்குக்கு அதிகமாக பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச். வசந்தகுமார் சுமார் 2.50 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இவரைத் தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 38 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். எஸ்.எஸ். ராமசுப்பு (திருநெல்வேலி), சாருபாலா தொண்டைமான் (…

  10. மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 16-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் அறிவித்திருந்தனர். அதன்…

    • 0 replies
    • 1k views
  11. உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது. தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் …

  12. ஜூ.வி. மெகா சர்வே ரிசல்ட்! 12 நாட்கள்... 90 நிருபர்கள், புகைப்படகாரர்கள்... தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் சுற்றிச் சுழன்று 25,247 பேரை சந்தித்து எடுத்த மாபெரும் கருத்துக்கணிப்பு இது! 16-வது நாடாளுமன்றத் தேர்தல் திருவிழாவை முன்னிட்டு நாம் இதுவரை எடுத்துவந்த கருத்துக் கணிப்புகளின் வரிசையில் இதுதான் மெகா சர்வே. சுமார் 25 ஆயிரம் மக்களின் நாடித்துடிப்பை அறிவதன் மூலமாக தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை இதன் மூலமாக உணர முடிகிறது. அந்த மெகா சர்வே ரிசல்ட் இப்போது உங்கள் பார்வைக்கு... நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது மக்கள் மனதைப் படம் பிடிக்கும் கருத்துக் கணிப்புகளை 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து வாசகர்களுக்கு வெளியிட்டு வருகிறோம். இவை மக்கள் மனதைப் பட…

  13. சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான மலைச்சாமி, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 1999 ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார். அந்த பதவிக்காலம் முடிவடைந்ததும், அதிமுகவில் சொல்லிக்கொள்ளும்படியான பொறுப்பில் ஏதும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜனதா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் மோடி ஆட்சிய…

  14. புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் விருந்தில் ராகுல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து, அவரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆகப்போவதில்லை. அவர் வருகிற 17 ஆம் தேதியுடன் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் மன்மோகன் சிங் நேற்று தமது அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்று…

  15. கூடங்குளம் அணு உலையில் விபத்து: 6 பேர் காயம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வால்வில் ஏற்பட்ட கசிவால், சுடு நீர் 6 பணியாளர்கள் மீது பட்டது. இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. இவர்கள் அனைவரும் முதலில் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த ஆறு பேரில் ராஜன், பவுல் ராஜ், செந்த…

  16. யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம். அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள். வழிகாட்டும் ஒளி ரூபாய் நோட்டின் முன்பக்கத் தில் இடதுபுறம் உள்ள பூ வேலைப் பாடு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது. நோட்டின்மீது வெளிச்சம் படும்படியாக வைத்துக்கொண் டால், நல்ல நோட்டாக இருந்தால் அதில் அந்த ரூபாய் நோட்டுக் கான எண் தெரியும். பூ வேலைப் பாடுக்கு அருகில் உள்ள வெள்ளை வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் எண்ணும் நீரோட்ட வடிவில் தெரியும். வெளிச்சத்துக்கு எதிராக இதை நன்கு பார்க்…

    • 0 replies
    • 1.9k views
  17. தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் சொல்படி திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான் செய்த செலவை திருப்பித் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அந்த இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர் நட்பு காதலாக மாறியது. இருவரும் சுமார் 2 ஆண்டுகளாக பூங்கா, திரையரங்கம், ஷாப்பிங் மால்கள், கோயில், குளங்கள் என சந்தோஷமாக சுற்றினர். காதலன் தன் அன்பின் அடையாளமாக காதலிக்கு பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கினாராம். இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை…

  18. சென்னை: மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முடிவு செய்யப்படும் என்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாத காலம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்த தேர்தலில் வாக்களித்த பின்னர், 27ஆம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஜெயலலிதா கவனித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் (16ஆம் தேதி) வெளிவர உள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையம்…

  19. நெல்லை: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை! எக்ஸிட்போல் முடிவால் வேதனை!! நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் அருணாசலம் வயது 40. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அருணாசலம் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், ராகுல்காந்தியின் வெற்றி வாய…

  20. (கோப்புப் படம்) முதல்வர் சித்தராமையா தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது: கன்னடர்கள் தங்கள் தாய் மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது. தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர் கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயிரைவிட உயர் வாக நினைக்கிறார்கள். அவர் களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப் படுத்…

  21. இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்ப…

  22. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…

    • 0 replies
    • 598 views
  23. மிஸ் கூவாகம் 2014: விஜயவாடா சாதனா தேர்வு – ராதிகா சரத்குமார் கிரீடம் சூட்டினர். விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் விஜயவாடாவை சேர்ந்த சாதனா ''மிஸ் கூவாகம் 2014" பட்டத்தை வென்றார். விழாவில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கேற்று கூவாகம் அழகிக்கு கிரீடம் சூட்டி பாராட்டினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் திருநங்கைகள் வழிபடும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. சித்திரை திருவிழா. உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் கூடுவது வழக்கம். 18 நாட்கள் திருவிழா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்த…

  24. நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இறங்கி விளையாடிய கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது. கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக நேற்று நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.